நின் அழைப்புகள் யாவும் நினைவடுக்குகளில் நிறைந்து விட்டதடா…!
காலம் கடந்தாலும் கடக்க இயலாதே கயவனது நேசத்தை!
*****
உப்புமாவை உண்ட படி, பாவையுடன் கதைக்கத் தொடங்கினான் வம்சி கிருஷ்ணா.
“சாப்புடுறீங்களா? சரி நான் அப்பறம் கூப்புடுறேன்.” என கிருபாஷிணி அழைப்பைத் துண்டிக்க எத்தனிக்க, “சாப்பிடும் போது பேசக் கூடாதுன்னு ரூல்ஸ் எதுவும் இல்லைங்க.” என்றான் சிரிப்புடன்.
தயக்கம் மேலிட, அவனை ஒதுக்கவும் இயலாமல் பேச்சைத் தொடரவும் இயலாமல் கிருபாஷிணி தான் குழம்பிப் போனாள்.
அவனோ அப்போது தான் “எப்படிங்க ஆக்சிடென்ட் ஆச்சு?” என்ற கேள்வியையே கேட்டான்.
“அட அப்பவே கேட்டு உங்களை ஸ்ட்ரெஸ் பண்ண வேணாம்ன்னு தான் கேட்கலங்க.” என வம்சி விளக்கம் கூற,
“உங்களை விட நான் வயசு கம்மியா தான் இருப்பேன் வம்சி. வாங்க போங்கன்னு கூப்பிட்டு என்னை ஏதோ ஆண்ட்டி ரேஞ்சுக்கு ஃபீல் பண்ண வைக்கிறீங்க.” தன்னை மீறி அவனுக்கு உரிமை கொடுத்து விட்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.
“ஹா ஹா… உன்னைப் போய் ஆண்ட்டின்னு சொன்னா, நான் ஆன்டி இந்தியனா ஆகிடுவேன் பாஷிணி.” என மறுநொடியே அழைப்பை ஒருமைக்கு மாற்றியவனது பெயரைக் கேட்டு அவளுக்குள் மின்னல் மழை சொல்பேச்சுக் கேளாமல் மேனியெங்கும் பரவியது.
“என்… என்ன? பா… பாஷிணியா…?” தேவையே இன்றி தடுமாறிப் போனாள் கிருபாஷிணி.
அவனோ ரசனையுடன் “ம்ம். உனக்கு இந்த பேர் சூட் ஆகும். அதான்… பிடிக்கலைன்னா கூப்பிடல.” என்றான் மென்மையுடன்.
ஃப்ளர்ட் செய்வதற்கான வழிகளையும் அவன் கையாளவில்லை. அவனது அழைப்பும் பேச்சும் அவளை சங்கடப்படுத்தவும் இல்லை. ஆனாலும் ஒரு வித நெருடல் ஏற்படுவதை அவளால் தடுக்க இயலவில்லை.
எல்லாம் அந்த கான்டராக்ட் காதல் மூலமாக ஏற்பட்ட அவனுடனான முதல் சந்திப்பே இந்த தயக்கத்திற்கு காரணமென்று புரிந்து கொண்டவள், அமைதி காத்தாள்.
“இங்க பாரு. நான், நீ வேலை பாக்குற காலேஜ்ல தான் அட்மிஷன் போடப் போறேன். ஆனா நீ அங்க வேலை பாக்குறது சுத்தமா பிடிக்கல. வேற வேலைக்குப் போய்டு” என்றாள் எரிச்சலுடன்.
ஆடவனுக்கு சுருக்கென தைக்கத்தான் செய்தது. ஆனாலும் எதிர்வினை ஆற்றாமல், “ம்ம்… ஓகே” என்றவன், கதவை மூடிக்கொண்டு, கண்ணை இறுகி மூடித் திறந்து அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
—–
அடுத்த மூன்று நாட்களும் கிருபாஷிணியின் உடல்நிலை தேறவே கரைந்தது. வம்சியும் அவளை அழைக்கவில்லை.
அவளுக்கோ இருப்பு கொள்ளவில்லை. ‘ஏன் அவன் கால் பண்ணல?’ என்ற அற்பத்தனமாக கேள்வி அவளை ஊடுருவிட,
‘அவனைப் பத்தி யோசிக்கிறதை விட்டுட்டு வேலையைப் பாரு கிருபா…’ என தன்னைத் தானே அதட்டிக் கொண்டாள். கூடவே அவனது ‘பாஷிணி’ என்ற அழைப்பு மனதினை மயிலிறகால் வருடுவது போன்று இதத்தைத் தந்தது.
அந்த இதம் மீண்டும் மீண்டும் வேண்டுமென அடம்பிடித்த மனதை அடக்கத்தெரியாமல் கதி கலங்கிப் போனாள்.
இருக்கும் அழுத்தம் போதாதென்று ஆடவனது நினைவு வேறு கொல்கிறதே! என நொந்து போனவள், அலுவலகத்தில் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.
கதவு திறக்கப்படும் ஓசை கேட்டும் அவள் நிமிரவில்லை. இத்தனை நாட்கள் ஏற்பட்ட சந்திப்பின் பலனாக அவனது பிரத்யேக ரோஜா மணம் கொண்ட பெர்ஃபியூம் வாசம் அவளுக்கு பழகிப் போனது.
நிமிராமலேயே வம்சி என அறிந்து கொண்டவள், தனது நிலையை மாற்றாமல் அமர்ந்திருக்க, “என்னாச்சு பாஷிணி? தலை வலிக்குதா? ஏன் இப்படி உட்காந்து இருக்க.” எனக் கேட்டவனது குரலில் பதற்றம் தெரிந்தது.
அதற்கும் நிமிராமல், “எனக்குத் தலைவலிச்சா என்ன வலிக்கலைன்னா உங்களுக்கு என்ன?” என எரிச்சலாய் கேட்டாள்.
அவன் பதில் பேசாமல் மௌனம் காக்க, அவனிடம் இருந்து பதில் வராமல் போனதில் மெல்லத் தலையை நிமிர்த்தினாள்.
கூர்பார்வையால் அவளை அளவெடுத்துக் கொண்டிருந்தவனின் அழுத்தம் நிறைந்த விழிகளுக்குள் அவளும் ஒரு நொடி புதைந்து போனாள்.
“இஸ் எவெரிதிங் ஆல்ரைட் பாஷிணி?” தலை ஆட்டி அவன் கேட்ட விதத்தில், அனைத்தும் சரியாகி விட்டது போலொரு பிரம்மை அவளுள்!
எதிர்வினை ஆற்றத் தெரியாமல், முகம் இறுக அவனை உணர்வற்றுப் பார்த்தாள்.
அவளை யோசனையுடன் ஏறிட்டவன், “எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா பீச்ல வாக்கிங் போவேன்…” என ராகமாய் கூறி நிறுத்த,
ஒரு கணம் சிந்தித்தவள், “உங்க பைக்லயே போகலாம். திரும்பி ஒன் அவர்ல என்னை ட்ராப் பண்ணிடுங்க. வேலை இருக்கு” என்றாள் கண்டிப்புடன்.
இருவரும் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வண்டியில் பயணப்பட்டனர். கிருபாஷிணியின் அலுவலகத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் தான்.
மாலை நேரக் காற்று வெப்பமும் குளிரும் கலந்து முகத்தில் மோத, இன்று மெரூன் நிற ஷிபான் புடவை உடுத்தி இருந்தாள்.
முந்தானையை ஒற்றையாக விட்டிருந்தவள், ஒரு கையால் புடவையை மெல்லத் தூக்கிப் பிடித்துக் கொள்ள, அவள் அணிந்திருந்த செருப்பு வேறு அவளது நடையை தடை செய்தது. கடற்கரை மணலில் செருப்புடன் நடப்பது கடினம் அவளுக்கு. அதில் அவள் நின்று நின்று நடக்க, “ஸ்லிப்பரை கழட்டிக்கோ பாஷிணி.” என்றான் அக்கறையுடன்.
“ம்ம். ஸ்லிப்பரை கழட்டுனா புடவைல மண்ணாகிடுமேன்னு பார்த்தேன்.” என்றவள், பின் செருப்பைக் கழற்றிக் கொள்ள, ஒரு கையால் புடவையையும் ஒரு கையில் செருப்பையும் வைத்துக் கொண்டு நடந்தாள்.
“ஸ்லிப்பரைக் குடு. நான் வச்சு இருக்கேன். நீ சேரியை பிடிச்சுக்கோ.” என்றபடி அவளது செருப்பை கையில் வாங்கிகொண்டவனைக் கண்டு பேந்த பேந்த விழித்தாள்.
“இல்ல பரவாயில்லை வம்சி. நான்…” என அவள் பேச வர, “ப்ச், வாக்கிங் வந்தா ஸ்ட்ரெஸ் குறையும்ன்னு கூட்டிட்டு வந்தா, இங்க வாக்கிங் போறதே உனக்கு ஸ்ட்ரெஸ் ஆகிடும் போல பாஷிணி.” எனக் குறும்புடன் நகைத்ததில், அவள் லேசாய் முறைத்தாள்.
இருந்தும் அவன் தனது காலணியைத் தூக்கிக்கொண்டு வந்தது சங்கடமாக இருந்தது. ‘ஸீரோ ஈகோயிஸ்டிக் பெர்சனா? இல்ல… அப்படி நடிக்கிறானா?’ என்ற திடீர் பயம் வேறு முளைத்தது.
வெளிறிய பெண்ணவளின் தோற்றம் அவனது கவனத்தை சிதைக்க, “என்னம்மா… சடனா முகம்லாம் ஒரு மாதிரி ஆகிடுச்சு.” எனப் புருவம் சுருக்கி வினவ, தலையை ஆட்டி விட்டு முன்னே நடந்தாள்.
அவளைக் குழப்பத்துடன் பார்த்தபடி, அவளுடன் நடந்து கடல் அலைகளுக்கு அருகில் சென்று விட்டான்.
இருவரும் அலைகளை சில நொடிகள் வெறித்திருக்க, அவள் தான் பேச்சை ஆரம்பித்தாள்.
“உங்க வீட்ல கல்யாணம் பண்ணிக்க ஃபோர்ஸ் பண்றதுனால, ஒரு வருஷத்துக்கு காதலியா நடிக்க யாரையாவது தேடுறீங்களா?” எனக் கேட்டாள் அவனை மேலும் கீழும் பார்த்தபடி.
அவளது கேள்வியே முதலில் புரியாமல் விழித்தவன் புரிந்தபின் வாய்விட்டு சிரித்து விட்டான்.
“ஒரு வருஷத்துக்கு காதலின்ற பாயிண்ட் ஓகே தான்ம்மா. ஆனா நடிக்க தேடல. உண்மையான காதலைத் தான் தேடுனேன். ஐ மீன் ஒரு வருஷத்துக்கு மட்டும். உனக்கு ஏன் இந்த விபரீத டவுட் பாஷிணி.” என்றான் சிரிப்பை நிறுத்தாமல்.
அவனது ‘ம்மா’ என்ற அழைப்பு பாஷிணியைத் தாண்டி மனதினுள் கலவரம் செய்ய, அதனை ஒதுக்கியவள்,
“லவ் ஃபெயிலியரா அப்போ?” யோசனையுடன் கேட்டவளிடம், “சே சே…” என மறுப்பாக தலையாட்டினான்.
“அப்போ உங்களுக்கு தீராத வியாதி ஏதாவது இருக்கா. ஒரு வருஷத்துல செத்துப் போய்டுவீங்களா?” எனக் கேட்டாள் விழிகளை உருட்டி.
“எதே? ஹா ஹா…” என வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவன், “விட்டா நீயே என்னை கடல்ல தூக்கிப்போட்டு, போட்டு தள்ளிடுவ போலயேம்மா.” என்று பரிதாபத்துடன் கேட்டான்.
அவளோ மூக்கைச் சுருக்கி முறைத்து விட்டு, “அப்பறம் ஏன்ப்பா, கான்டராக்ட் காதலி, ஒரு வருஷம்ன்னு அதையே பிடிச்சுட்டு தொங்குறீங்க” என இடுப்பில் கையை வைத்து அவனை முறைத்தாள்.
அவளது உரிமைக் கோபம் அவனை ரசிக்க வைத்தது.
பின், மெல்ல முகம் மாறியவன், “நான் ஒரு வருஷத்துல ஆஸ்திரேலியா போக போறேன்ம்மா. ஐ.இ.எல்.டி.எஸ்க்கு ப்ரிப்பேர் ஆகிட்டு இருக்கேன். அங்க ப்ரொபஸர் ஜாப்க்கு ஆப்பர்ச்சுனிட்டி இருந்துச்சு. ஆனா, பாஸ்போர்ட்ல ஒரு சின்ன ப்ராப்ளம். சோ இத்தனை நாளா இழுத்தடிச்சு இப்ப தான் சரி ஆச்சு. விசாவும் கிடைச்சுட்டா, சீக்கிரமே கிளம்பிடுவேன். ஆனா அங்க போய்ட்டா திரும்பி இந்தியா வர்ற ஐடியா எனக்கு இல்ல. அட் தி சேம் டைம்… அங்க இருக்குற கல்ச்சர்ல எனக்கு உடன்பாடு இல்லை. கல்யாணம் பண்ணிக்கவும் இன்டரஸ்ட் இல்லை. ஆனா காதலிக்க ஆசையா இருந்துச்சு.
அதான், இங்க இருந்து போறப்ப ஒரு லவபிள் லைஃப் இருந்தா நல்லா இருக்கும்ன்னு ஒரு தாட். சோ…” என தோளைக் குலுக்கியவனை ‘ஆ’ வெனப் பார்த்தாள்.
“இந்த மாதிரி விளக்கத்தை நான் எங்கயும் கேட்டதில்லைப்பா!” என வாயில் கை வைத்துக் கொண்டவள், அவன் கூறிய விளக்கத்தை பெரியதாக எண்ணவில்லை. காதல் தோல்வி, வியாதி என என்னன்னவோ எண்ணி விட்டாள். அவனோ சப்பென முடித்து விட்டதில் மனதில் ஒரு பாரம் இறங்கியது போன்று லேசானது.
“இப்ப தான் அப்படி யாரும் கிடைக்கலையே… என்ன பண்ண போறீங்க” என்றாள் சிறு ஆர்வம் தலை தூக்க.
அவனோ அவளை ஓரக்கண்ணில் பார்த்தபடி, “நீ மனசு வச்சா…” என ஆரம்பிக்கும் போதே அவளது முறைப்பை உணர்ந்து, “என்ன பண்றது முரட்டு சிங்கிளாவே ஃபிளைட் ஏற வேண்டியது தான். லைஃப்ல நினைக்குற எல்லாம் நடந்துடுமா என்ன?” இறுதி வரி மட்டும் விரக்தியுடன் வந்தது.
அந்த விரக்தியை உணராது போனவள், “சரி… மனசு வைக்கிறேன்” என்றாள் அவனைப் பாராமல்.
அலைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவன், சட்டென திரும்பி “பாஷிணிம்மா… இப்ப என்ன சொன்ன?” என ஆர்வமாகக் கேட்க, அவளோ நேரம் செல்ல செல்ல அவனது அழைப்புகளில் உருகிக் கொண்டிருந்தாள்.
“உங்க கான்ட்ராக்ட் காதல்ல வேற எந்த உள்குத்தும் இல்லை தான?” அவன் புறம் அதிகமாய் ஈர்க்கப்படுவதில் தன்னைக் காத்துக்கொள்ள அவன் மீது சந்தேகப்பார்வை வீசிட,
தலையை மட்டும் ஆட்டியவளிடம், “நீ ஏற்கனவே குழப்பத்துல இருக்கம்மா. அதே குழப்பத்துல முடிவு எடுக்கறன்னா இது வேணாம். நம்ம ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்.” என்றான் கனிவுடன்.
அவன் மீது சட்டென ஏற்பட்ட மரியாதை நிமித்தம் புன்னகையுடன் பார்த்தவள், “ஹலோ வம்சி கிருஷ்ணா… நீங்க சொன்ன டர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ எல்லாம் கேட்டுட்டு இதை லவ்ன்னு வேற ஒத்துக்க சொல்றீங்களே. நீங்க சொன்னது எல்லாம் ப்ரெண்ட்ஸ்ன்ற உறவுமுறைக்கு தான் கரெக்ட்டா இருக்கும்.” என சிரிப்பை அடக்கிக்கொண்டு வாரினாள்.
“கலாய்க்காத பாஷிணி. எனக்கும் ரொமாண்ட்டிக்கா லவ் பண்ண ஆசை தான். ஒருவேளை நம்ம ரிலேஷன்ஷிப் லைஃப் லாங் போச்சுன்னா பரவாயில்ல. ஆனா, உனக்குன்னு ஒரு லைஃப் இருக்கு. அது இந்த ரிலேஷன்ஷிப்னால சின்ன அளவுல கூட அஃபக்ட் ஆகிடக் கூடாது. என் சுயநலத்துக்காக எந்தப் பொண்ணையும் யூஸ் பண்ணிக்க கூடாதுன்ற எச்சரிக்கையோட தான் ஆட் குடுக்க நினைச்சேன். மத்த பொண்ணுங்களுக்கே அவ்ளோ யோசிக்கும் போது நீ…” என ஆரம்பித்தவன், “உன்னோட சூழ்நிலையை எனக்கு சாதகமா பயன்படுத்தி உன் மனச கலைச்சுடுவேனோன்னு பயமா இருக்கு. உனக்கு என் ரூல்ஸ் எல்லாம் தெரியும்ல.” என்று நிறுத்தினான்.
அவனை விழி அகல பார்த்திருந்தவள், “அதென்ன நான் ரொம்ப ஸ்பெஷல்?” அவன் கூறிய அனைத்தையும் விடுத்து, இந்த வார்த்தையில் தொக்கி நின்றாள்.
வம்சியே அக்கேள்வியில் தடுமாறிப்போனான். “ஸ்பெஷல்ன்னா… ம்ம்… நம்ம நிறைய தடவை மீட் பண்ணிருக்கோம். ஐ ஹோப் நமக்குள்ள நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருக்கு. அண்ட் எனக்கு உன்னைப் பிடிக்கும். உன்னோட நிமிர்வு. வேலைல இருக்குற நேர்மை. பொறுப்பை தட்டிக்கழிக்காத குணம். எல்லாமே! சோ, நீ எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் தான் பாஷிணி.” என்றான் ரசனை மிகுந்த குரலில்.
மனதினுள் குளுகுளு சாரலடித்தது கிருபாஷிணிக்கு. இதென்ன டீன் ஏஜ் பெண் போல, இத்தனை உற்சாகம், இத்தனை ஆர்வம்!
இருந்தும் கெத்தை விட்டுக்கொடுக்க விரும்பாதவள், “எப்படி எப்படி? ஒரு வருஷம் உங்க கூட கான்டராக்ட் போட்டு லவ் பண்ணுனா, என் மனசு கலஞ்சுடுமா என்ன? சான்ஸே இல்ல வம்சி. நீங்க சொன்னதை நான் ஒரு லவ்க்கான அடிப்படையாவே பார்க்கல. ப்ரெண்ட்ஸ்க்கான ரூல்ஸா தான் பாக்குறேன்.” என்றாள் விடாப்பிடியாக.
பெருமூச்சை இழுத்து விட்டவன், “சரி நீ எப்படி வேணாலும் நினைச்சுக்கோ. ஆனா எனக்கு இது கான்டராக்ட் லவ் தான்” என அவனும் அவன் பிடியில் இருந்து மாறாமல் கூற, “ஹொவ் எவர்… உங்க மனசை நான் கலைச்சுறாம பார்த்துக்கோங்கப்பா.” என்றாள் குறும்புடன்.
அக்கூற்றில் திகைத்துப் பின், “என்னை அப்போ அப்போ ஷாக் ஆக வைக்கிறம்மா நீ.” என சிரித்தான் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு.
அதில் அவளுக்கும் புன்னகை மலர்ந்தது. சில நொடிகள் மீண்டும் கடலை வெறித்தவன், “ஜோக்ஸ் அபார்ட்… நிஜமா உனக்கு ஓகே வா பாஷிணி?” ஆழ்ந்த குரலில் எதிர்பார்ப்புடன் அவள் முகம் பார்த்தான் வம்சி கிருஷ்ணா.
என்னவோ அவனைப் பார்க்கவே குறுகுறுத்தது. இருந்தும் பிடிவாதமாக அவனது விழிகளை ஏறிட்டவள், “உங்க ரூல்ஸை சிவியரா ஃபாலோ பண்ணுவீங்கன்னா, ஓகே…” எனக் கண்டிப்பாகக் கூறினாள்.
“கண்டிப்பா நான் பேச்சு மாற மாட்டேன்ம்மா…” என்றவனின் உறுதி தெறித்த வார்த்தைகள் அப்போது அவளுக்கு கர்வத்தைக் கொடுத்தது.
இதே கர்வம்… இதே சிலிர்ப்பு… இறுதி வரை அவனது விதிமுறைகளில் நிலைத்து நின்று விட்டால் இருக்குமா என்ற விளைவினை அறியாது, புத்தம் புது நேச உணர்வில் திளைத்திருந்தாள் கிருபாஷிணி.