மதுவினும் இனியாள் – 7
அத்தியாயம் 7:
ஜான் சிரிப்பதை ஹேரி அமைதியாக கைகட்டி பார்த்து கொண்டிருந்தான்.
சிரித்து முடித்துவிட்டு ஹேரியிடம் “டேய் உன்ன திருடன்னு சொன்னதுக்கப்புறமும் நீ அவகிட்ட டேட்டிங் கேட்ருக்க. இன்னைக்கு நம்ம ஸ்கூல் வாட்சப் குரூப்ல கன்டென்ட் இதான். தி கிரேட் ஹேரி ரிச்சர்ட முதல் முறையா ஒரு பொண்ணு அவாய்ட் பண்ணிருக்கா. ஆனா ஹேரி அவள தொடர்ந்து போய் நிறைய பல்ப் வாங்கிருக்கான். இதை போட்டாதான் எம் மனசு குளிர்ந்த மாதிரியே நம்ம குரூப்ல இருக்க பசங்க, பொண்ணுங்க மனசு குளிரும். இந்த 15 வருசத்துல எத்தனை பேர் சாபம் கொடுத்திருப்போம். அதெல்லாம் இன்னைக்கு பலிச்சிடுச்சு” என்றான்.
“ரொம்ப பண்ணாத ஜே. பொண்ணுங்க சரி. பசங்க உங்களுக்கு என்ன”
“ம். எந்த பார்ட்டிக்கு போனாலும் அழகான பொண்ணுங்க முதல்ல உன்னதான சூஸ் பண்ணும். நீ வேலைக்கு ஆகமாட்டேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் எங்க பக்கம் திரும்புவாங்க. அப்பல்லாம் எங்களுக்கு எவ்வளவு வயிறு எரிஞ்சிருக்கும். அது மட்டுமா நீ எவ்வளவு பொண்ணுங்கள அவாய்ட் பண்ணிருக்க. அந்த பொண்ணுங்களோட சாபம் சும்மா விடுமா ”
“டேய். அவங்க என்ன சூஸ் பண்ணிருக்கலாம். ஆனா எல்லா பொண்ணுங்களையும் பிக்கப் பண்றது நீங்கதான. இப்பவரையும் நா சும்மாதானடா இருக்கேன்”
“அது உனக்கு கெமிக்கல் ரியாக்சன் ஒத்து வரலம்ப. அதுசரி, இன்னைக்கு பாத்த பொண்ணுட்ட மட்டும் உனக்கு எல்லா ரியாக்சனும் ஓகேனு தோணுதா”
“அதெல்லாம் எனக்கு தெரியல. ஆனா மடு பேபி கூட இருக்கும் போது என்னோட தனிமை, வெறுமை காணாம போயிடுது. மனசு ஹாப்பி ஆயிடுது. அவ என்ன அவாய்ட் பண்றானு தெரிஞ்சும் பின்னாடியே போயிருக்கேன், மேனர்ஸ் இல்லாம அவளை திரும்ப திரும்ப டேட்டிங்கு போர்ஸ் பண்ணிருக்கேன்னு இப்ப நினைக்கும் போது ஆச்சரியமா இருக்கு. ஆனா அசிங்கமா இல்ல. என்னோட மடு பேபிட்டதான கேட்ருக்கேன்னு தோணுது ஜே. ஆனா எனக்கு என்ன வருத்தம்னா எனக்கு அவ மேல இவ்ளோ ஸ்ட்ரோங் பீலிங் வந்த மாதிரி அவளுக்கு என் மேல தோணல தெரியுமா”
“அது அப்படியில்ல ஹேரி . நம்ம கல்ச்சர்ல நம்ம பீலிங்ச பிரீயா விட்றோம். ஆனா அவங்க நிறைய கட்டுப்பாடுகளோட வளந்திருக்காங்க. அதான் அவ்ளோ சீக்கிரம் வெளில வர முடியல. சரி இப்ப என்ன செய்ய போற. அதும் நாளைக்கு நீ நியூயார்க் கிளம்பனும் கிளைன்ட் மீட்டிங்குக்கு. நீதான் வேற போயாகனும். அப்பதான் ப்ராஜெக்ட் கட்டாயம் நமக்கு கிடைக்கும்” என்றான் ஜான்.
“தெரியல. அவ அவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்லும்போது டிஸ்டர்ப் பண்றது தப்புனு தெரியுது. அதான் இந்த ட்ரிப்ப யூஸ் பண்ணிக்கலாம்னு பாக்கறேன். இந்த ஒன் வீக்ல என் பீலிங் என்னனு அனலிஸ் பண்ணி பாக்க போறேன். திரும்பி வரும்போது என் மைண்ட் என்ன சொல்லுதோ அதுபடி முடிவு எடுக்கறேன்”
“சரி நீ முடிவு எடுக்கும்போது எடு. ஆனா உன்னையே அலறவிட்ட அந்த கியூட் ஏஞ்சல நா அவசியம் பார்க்கணுமே. அவளை எங்க பாக்கலாம்”
“அதெல்லாம் எனக்கு சரியா தெரியல ஜே. ஆனா ஆன்சைட்க்கு வந்துருக்கதா சொன்னதால IT ஜாப்னு தெரிஞ்சிது. கிளேட்டன்லதான் வீடு எடுத்து தங்கிருக்கா. அங்க உள்ள இந்தியன் ரெஸ்டாரண்டுக்கு அடிக்கடி போவா போல. அந்த ஷாப்ல ஒரு பையன் வேலை பாக்குறான். அவன் மேல மடு பேபிக்கு பாசம், மரியாதை இருக்கு”
“ஓ IT யா.சூப்பர். அப்ப ஈஸியா கண்டுபிடிச்சிடலாம் மேட். டோன்ட் ஒர்ரி. நீ US ல இருந்து வரும்போது அவ டீடைல் தரேன்”
“அவள எதுவும் டிஸ்டர்ப் பண்ணிடாத ஜே”
“ஹே எனக்கு தெரியாதா. நா பாத்துக்கறேன். இப்ப போய் தூங்கலாம் வா”
“நோ ஜே. எனக்கு தூக்கம் வரும்னு தோணல. பாஸ்கெட் பால் விளையாட போறேன். நீயும் வா”
ஹேரிக்கு அதிக மகிழ்ச்சியோ, துக்கமோ ஒன்னு பாஸ்கெட் பால் விளையாடணும் , இல்ல ஸ்விம் பண்ணணும் . ரெண்டுமே மிகவும் பிடித்த பொழுதுபோக்கு ஹேரிக்கு.
அவன் வீட்டில் கார்டெனில், பாஸ்கெட் பால் கோர்ட்டும், ஸ்விம்மிங் பூலும் உண்டு. ஹாலின் ஒரு பக்க பிரெஞ்சு விண்டோவை ஓபன் பண்ணினால் கார்டெனுக்கு போய்விடலாம்.
இப்பொழுதும் அப்படித்தான் ஜானை இழுத்து கொண்டு விளையாட சென்றான்.
ஜான் ” டேய் நாளைக்கு உனக்கு பிளைட் இருக்கு. தூங்கலாம் வா. நா வேற இன்னைக்கு டயர்ட். உன் வேலையும் சேர்த்து நான்தான் பாத்துருக்கேன். என்னையாவது தூங்க விடுடா” என்று புலம்பியவனை இழுத்து கொண்டே சென்றான் ஹேரி .
ஹேரியின் அனைத்து கம்பெனி வேலைகளையும் கோ ஆர்டினேட் செய்வது ஜான் தான். ஹேரியின் வலது கை போன்றவன் ஜான். ஹேரி அவன் பேரன்ட்ஸ் வீட்டைவிட்டு வந்ததிலிருந்து இருவரும் ஒரே வீட்டில் தான். பிறகு அவன் கேர்ள் பிரெண்டோடு லிவினில் இருப்பதால் வேறு வீட்டுக்கு சென்றுவிட்டான். இப்பொழுதும் சிட்டியில் அவனுக்கு ஒரு வீடு உண்டு. அங்குதான் அமெலியாவோடு வசிக்கிறான்.
ஆனால் ஹேரியின் பங்களாவில் ஜானுக்கென்று ஒரு லிவிங் ஏரியா, கிட்சேன், பெட்ரூம் அனைத்தும் உள்ள ஒரு பெரிய சைஸ் ஸ்டூடியோ ரூம் உண்டு. பாதி நாட்கள் அவனும் ஹேரியுடன் தான் இருப்பான்.
இன்றும் அப்படித்தான் தங்கி ஹேரியிடம் மாட்டிக்கொண்டான்.
இங்கு மது,வீட்டிற்கு வந்தவள், ரெபிரேஷ் ஆகிவிட்டு மீனாட்சியிடம் சிறிது நேரம் வம்பளந்து கொண்டிருந்தாள்.
மதுவின் வீடு உள்ளே வந்தால் ஒரு லிவிங் ஏரியா, லிவிங் ஏரியாவிலேயே ஒரு ஓபன் கிட்சன், ஒன் பெட்ரூம் உண்டு.
கிச்சனில் சமைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் வீக்கெண்டில் வாங்கி வைத்திருப்பாள்.
மீனாட்சியிடம் பேசி முடித்துவிட்டு பிரிட்ஜில் இருந்து பாலை எடுத்து காய்ச்சி குடித்துவிட்டு படுக்க சென்றாள்.
படுத்தவுடன் தான் இவ்வளவு நேரம் இல்லாத ஹேரியின் நினைவு வந்தது.
பாவம் காரம் அதிகமாக சாப்பிட்டானே , எப்படி இருக்கிறானோ தெரியவில்லையே. பேசாம போன் நம்பர் கேட்ருக்கலாமோ? ம்கூம் சரிப்பட்டு வராது. ஏற்கனவே டேட்டிங் கேட்டவன்கிட்ட, எந்த டச்சப்பும் இல்லாம இருக்கதுதான் நமக்கும் நல்லது, அவனுக்கும் நல்லது.
இருந்தாலும், இந்த ஊர்ல இத்தாலி, சீனா, இங்கிலிஷ் பொண்ணுங்கன்னு மாடல் மாதிரி பொண்ணுங்க ரோட்ல நடமாடுது. எல்லாரையும் விட்டுட்டு என்னட்ட ஏன் டேட்டிங் கேட்டான்.
ஒரு வேல நம்மளும் அழகாத்தான் இருக்குமோ. நம்ம ஒர்த் நமக்குத்தான் தெரியல போல.
ம்கூம் அப்படி இருக்காது. இத்தன வயசுக்கு அவன் இருக்க சார்மிங்க்கு எல்லா பொண்ணுங்களோடையும் டேட்டிங் போய்ட்டு அலுத்து போயிருப்பான். அதான் ஒரு சேஞ்சுக்கு இந்திய பொண்ணான நம்ம கேட்ருக்கான் போல என்று நினைத்தாள்.
ஆனால் அந்த நினைவே அவளுக்கு கசந்து வழிந்தது. புரண்டு புரண்டு படுக்கையில் படுத்தவள் , ச்ச சும்மா அவன பத்தி ஏன் நினைச்சுகிட்டு. இன்னையோட அவன மறந்துரு மது என்று உறங்க முயன்று உறங்கியும் விட்டாள்.
காலையில் லேட்டாக எழுந்தவள், அவசரமாக ராகி கஞ்சியை மட்டும் வைத்து ப்ரெக் ஃபாஸ்டை முடித்து கொண்டு , ட்ரெயின் ஏறி சிட்டியில் இருக்கும் அலுவலகம் வந்தாள்.
அவள் odc கு சென்றபோது அங்கு 6 பேர் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தார்கள். வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களோடு ஊர்வசியும் அமர்ந்திருந்தாள்.
அவளும் மதுவோடு இந்த ப்ரொஜெக்ட்டுக்காக ஒன்றாக சென்னை அலுவலகத்திலிருந்து வந்தவள். அவள் உறவினர்கள் மெல்பெர்னில் இருப்பதால் அவர்கள் அருகிலேயே ஒரு ஸ்டூடியோ ரூமில் தங்கியிருக்கிறாள். ஜனனி அளவுக்கு இல்லையென்றாலும் அவளும் ஒரு நல்ல தோழிதான் மதுவுக்கு.
மதுவை பார்த்த ஊர்வசி, “ஹே மது என்ன லேட் இன்னைக்கு. சத்யன் வந்து ரெண்டு தடவை உன்ன கேட்டுட்டு போய்ட்டார்”
“ஏனாம் என்னவாம் அவருக்கு”
“என்னனு தெரியல, உனக்குத்தான் தெரியணும். உங்க ரெண்டு பேருக்கு நடுவுல நா வரலப்பா”
“அவ்ளோதான ஊரு, சொல்லிட்டல்ல . நா பாத்துக்கிறேன் விடு”
“அம்மா தாயே, நீங்க ரெண்டு பெரும் என்ன வேண்ணா அடிச்சிக்குங்க. இடையில ஊரு,ஊருனு என்ன ஏலம் விடாத” என்று சொல்லிவிட்டு அவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள் ஊர்வசி.
மதுவும் அவள் சீட்டில் அமர்ந்து அவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். சிறிது நேரம் சென்று மதுவை திரும்பி பார்த்த ஊர்வசி, “மது உன் டிரஸ் இன்னைக்கு சூப்பர். செம அழகா இருக்க”
இன்று வெள்ளிக்கிழமை ஆதலால் மது தலை குளித்துவிட்டு முடியை விரித்து விட்டிருந்தாள். அவளுக்கு wavy ஹேர்.நடு வகிடெடுத்து இரு பக்கமும் இரு டிக் டாக் கிளிப் மட்டும் மாட்டியிருந்தாள்.அதுவும் முடி ஈரமாக இருந்ததால் , சீப்பு வைத்து சீவ கூட இல்லை.ட்ரைனில் வரும்போதே காய்ந்து முடி அலையலையாக முதுகு முழுவதும் அழகாக விரிந்திருந்தது.
லெமன் எல்லோ கலரில் பிரில் லேயர் லேயராக கொடுத்து நல்ல லாங் ஸ்கிர்ட் தரையில் புரளும்படி அணிந்திருந்தாள். மேலே நல்ல ப்ளாக்கில் ஜெர்ஸி கிராப் டாப் போட்டிருந்தாள். கழுத்தில் எதுவும் போடாமல் காதில் மட்டும் பிளாக் கலரில் கொஞ்சம் பெரிய சைஸ் ஏரிங்ஸ் போட்டிருந்தாள். நெற்றியில் சின்ன பிளாக் கலர் கடுகு சைஸ் பொட்டு அவள் மச்சத்தோடு போட்டியிட்டது. மற்றபடி முகத்தில் துளி மேக்கப் கிடையாது. சன் ஸ்க்ரீன் மட்டும் யூஸ் பண்ணியிருந்தாள்.
ஊர்வசி கூறியதற்கு மது, “அட அத ஏன் ஊரு கேக்குற. ஏன் இன்னைக்கு லேட்டுன்னு கேட்டியே , சென்ட்ரல் ஸ்டேஷன்ல வேல பாக்குற ஒரு செக்யூரிட்டி அம்மா என்ன நிறுத்தி வச்சிட்டு இதத்தான் கேட்டுட்டு இருந்தாங்க. இந்த டிரஸ் எங்க வாங்குன. ரொம்ப அழகா இருக்க. இந்தியால எந்த ஊரு நீ. பிளா பிளா…இப்படி”
“ஏண்டி நின்னு பதில் சொல்ற அளவுக்கு உனக்கு பொறுமை கிடையாதே. அப்புறம் என்னாச்சு”
“பதில் சொல்லியிருக்க மாட்டேன். எஸ்கேப் ஆயிருப்பேன்.பட் அவங்க என்ன நிறுத்தியதே ஸ்கர்ட் ரொம்ப லென்த்தா இருக்கு. எஸ்கலேட்டர்ல மாட்டிக்க போகுது. பாத்து போம்மான்னு சொல்லத்தான் நிறுத்தினாங்க. அதனாலதான் அவங்க கேள்விக்கெல்லாம் நின்னு பொறுமையா பதில் சொல்லிட்டு வந்தேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சத்யன் அங்கு வந்து சேர்ந்தான்.
வந்தவன் மதுவிடம் “ஏ சில்வண்டு. இப்படி மாரியாத்தா மாதிரி மேக்கப் போடத்தான் லேட்டாச்சா உனக்கு. இன்னைக்கு எத்தன பெரு கண்ணு இந்த மெல்பர்ன் சிட்டில நொள்ளையாச்சோ. சரி அதை விடு. ஒரு முக்கியமான மெயில் அனுப்ப சொன்னேனே. அதை செய்யாம இவ்ளோ லேட்டா வந்ததுமில்லாம கத வேற அடிச்சிட்டு உக்காந்துருக்க” என்றான்.
அதற்கு மது அவனிடம் நல்ல பிள்ளையாக “அண்ணாஆஆ , உடம்ப பாத்துக்குங்க அண்ணா. வயசானாலே இப்படித்தான் பிபி வரும். இப்ப பாருங்க கண்ணு வேற தெரியாம போச்சி.போய் நல்லா செக் பண்ணி பாருங்க அண்ணா .நா மெயில் அனுப்பிட்டேன். அப்படியே நல்ல டாக்டரா பாத்து கண்ணையும் செக் பண்ணிடுங்க அண்ணா ஆஆ …”என்று ராகமிழுது கொண்டிருந்தாள்.
ஊர்வசி வேலையை நிறுத்திவிட்டு இருவரையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
ஐயோ இந்த அராத்துக்கிட்டு வந்து வாய குடுத்தோமே, நமக்கு வேணும் என்று நொந்து கொண்ட சத்யன் “ஏய், என்ன லந்தா, 2கே கிட் ன்ற திமிரு. ஒழுங்கா சத்யான்னு கூப்பிடு பிசாசு. ஆஸ்திரேலியால it கம்பனில உக்காந்துட்டு அண்ணா, பெரியார்னு சொல்லிக்கிட்டு” என்று சொல்லிக்கொண்டே கிளம்ப பார்த்தான்.
“அண்ணா. நா ஆஸ்திரேலியா வந்தாலும் பக்கா தமிழ் பொண்ணு. 2கே கிட்டுன்னாலும் மரியாதை தெரிஞ்சவ. அதனாலதான் 80ஸ் கிட்டானா உங்கள மரியாதையா அண்ணா னு கூப்பிடறேண்ணா” என்ற மது தொடர்ந்தாள்.
“இவ்ளோ நாள் பொண்ணு தேடுனதுக்கு ஒரு கண் டாக்டரை பார்த்திருந்திங்கன்னா இந்நேரம் கண்ணு பவர் ஆகி பொண்ணையும் கண்டுபிடிச்சிருப்பிங்க. என்ன மாதிரி அழகா 2 குழந்தையும் இருந்துருக்கும்” என்றாள்.
அதற்கு சத்யன் ” எல்லாம் சரிதான் தங்கம், உன்ன மாதிரி பொறந்தா அது குழந்தை கிடையாதுடா. அதுக்கு பேரு குட்டி சாத்தான். உன்ன மாதிரி ஒரு குட்டி சாத்தான சமாளிக்கிறதுக்கு நா காலம் முழுசும் பிரம்மச்சாரியாவே இருந்துடுவேன்டா கண்ணு” என்று சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த ஊர்வசியிடம் ஹை பை கொடுத்தான்.
இருவரையும் முறைத்த மது ஊர்வசியிடம் ” ஊருஊ. ஊரு விட்டு ஊரு வந்து வெளிநாட்டுக்காரருக்கு சப்போர்ட் பண்றியா. திரும்ப என்னோட சென்னைலதான் வந்து செட்டில் ஆகணும். தெரியுமில்ல” என்றாள்.
அதற்கு ஊர்வசி அவளை பார்த்து திரு திருவென முழித்து கொண்டிருந்தாள்.
சத்யன் தான் மதுவிடம் “அவ எதுக்கு உன்னோட சென்னை வர்றா. அவளுக்கு நா அடுத்த ப்ராஜெக்ட் இப்பவே ரெடி பண்ணிட்டேன். இங்கவே ஒரு pr மாப்பிளையை பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். அவளை இங்கவே செட்டில் பண்ணிவிடறேன். இது எங்க ஆத்தா மங்கம்மா மேல சத்தியம்” என்றான்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு மது சத்யனிடம் “ஆமாண்ணா. உங்க ஆத்தா மங்கம்மா இன்னும் உயிரோடு இருக்காங்களா” என்று கேட்டாள்.
“எங்கடா மது. அவங்க 5 வருசத்துக்கு முன்னாடியே, முதல எனக்கு பாத்த பொண்ணு என்ன ரிஜெக்ட் பண்ண அதிர்ச்சி தாங்காம, போய் சேந்துட்டாங்கடா ”
“விடுங்கண்ணா உங்கள கல்யாணம் பண்ணிக்கிற பாக்கியம் அந்த பொண்ணுக்கும் இல்ல, உங்க கல்யாணத்த பாக்கிற பாக்கியம் நம்ம ஆத்தாவுக்கும் இல்ல”
என்று பேசி கொண்டிருந்தவர்களை வழக்கம் போல புரியாமல் பார்த்து கொண்டிருந்தாள் ஊர்வசி.
சத்யன் இவர்கள் ப்ரொஜெக்ட்டுக்கு லீடர். இது மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய ப்ரொஜெக்ட்டை பார்த்து கொள்கிறான். ஆன்சைட்டில் 6 வருடங்களாக இந்த கம்பெனியில் வேலை பார்த்து வருகிறான். கோயம்புத்தூரை சேர்ந்தவன். கடந்த 5 வருடங்களாக பெண் தேடி வருகின்றனர். 32 வயதாகிவிட்டது.
மது இங்கு வந்த நாளாக அவனை அவள் அண்ணா என்று அழைப்பதும், அவன் மறுப்பதும் எப்போதும் நடப்பதுதான்.
இன்று ஒரு முடிவாக ஊர்வசி அவர்களை பார்த்து ” ஹலோ, இப்ப இங்க என்ன நடக்குது, நீங்க ரெண்டு பெரும் சண்டை போட்டுட்டு இருந்திங்க. நியாபகம் இருக்கா”என்று கேட்டாள் .
அதற்கு இருவரும் சேர்ந்து அவளை ஒரு மாதிரியாக பார்த்தனர்.
சத்யன் அவளிடம்,”ஆமா , நாங்க சண்டை போட்டுப்போம்,அப்புறம் சேந்துப்போம்.அதுக்காக ஊர்காரங்கள விட்டு குடுக்க முடியமா”
“நீங்க கோயம்புத்தூர். அவ தஞ்சாவூர். நா சென்னை. அப்படி பாத்தா நானும் உங்க ஊர்க்காரிதான”
“யாரு நீயா. சொந்தகாரங்க வீட்ல இருக்கன்னு பேரு . ஒரு நாளாவது வீட்டுக்கு கூப்பிட்டிருக்கியா. ஒரு வாய் சோறு போட்ருக்கியா . இல்ல உன் கசின் சிஸ்டர் பூஜாவோ கூஜாவோ இருக்காளே. அவளை இன்றோ பண்ணிருக்கியா. இதே என்ற மது தங்க மயிலு , ஒரு நல்ல சாப்பாடு சமைச்சா என்ன விட்டுட்டு சாப்பிட மாட்டா. அவளுக்கு மட்டும் உன்ன மாதிரி ஒரு கசின் இருந்தா இன்றோ என்ன, கல்யாணமே பண்ணி வச்சிருப்பா எனக்கு தெரியுமா” என்று நீளமாக பேசிவிட்டு மூச்சு வாங்கி கொண்டிருந்தான்.
அதற்குள் மது சத்யனை பார்த்து “ஐயோ விடுங்கண்ணா, வயசாயிடுச்சின்னாலே இப்படித்தான். பொசுக்கு பொசுக்குனு கோவம் வரும்” என்றாள்.
அதற்கு அவன் மதுவிடம் “ஏய், குட்டி பிசாசு . யாரை பாத்து வயசாயிடுச்சின்னு சொல்ற ” என்று ஆரம்பித்தான்.
ஐயையோ மறுபடியும் முதல்ல இருந்தா என்று ஊர்வசி எழுந்து ரெஸ்ட் ரூமை நோக்கி ஓடி கொண்டிருந்தாள்.
(வருவாள்…)