Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை சேருமா 15 2

“வேறு என்ன பண்ண  அண்ணா” என்றாள் மாயா..

“நாளைக்கு ரியா வந்து நிற்பாளே காசு கேட்டு நான் நாளைக்கு என்ன பண்ண போறேன், அதுக்குள்ள பணத்தை  ரெடி பண்ணி ஆகணுமே” என்று புலம்ப..

 “இதுக்கு ஒரு வழி  இருக்கு  மாயா மேம்,,”. என்றான் பார்த்திபன்..



Advertisement

 “என்ன அண்ணா? அது “.

Advertisement

“நான் வேணா அக்னி கிட்ட கேட்டு பார்க்கவா”..

Advertisement

“ஐயோ அவர்கிட்ட  மட்டும் வேண்டுவே வேண்டாம் அண்ணா”…

Advertisement

” சொன்ன கேளு டா இந்த லால் எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருக்கான்  நீ எங்க போனாலும் யாரும் உனக்கு பணம் தர மாட்டாங்க” என்று பார்த்திபன் மறுபடியும் கூற.

மாயாவுக்கு இவர்கிட்ட பணம் வாங்குவது  நான்,, ரியாவுக்கு கம்பெனி விக்க கூட சொல்லலாம்.. ஆனால் அக்னி கிட்ட மட்டும் நான் போய் நிக்க மாட்டேன்..

இது என் அப்பா உருவாக்கின சொத்து, இந்த கம்பெனியை யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று மனதில் நினைத்தவள்.. யாரிடம் பணம் கேட்கலாம்,யாரிடம் பணம் கேட்கலாம் என்று யோசித்துக்கொண்டே  இருக்க டக்கென்று  என்று அவளின் சீனியர் கிஷோர் ஞாபகம் வந்தது அவன் மிகப்பெரிய கோடீஸ்வரனாக அவளுக்கு தெரிந்திருக்க அவரிடம் கேட்டு பார்க்கலாமா உதவி என்று நினைத்தவள்..

 உடனே  கிஷோர் நம்பரை தேடிப் எடுத்தவள்,, அவனுக்கு போனில் அழைக்க.

 நீண்ட நேரம் அழைப்பு போய்க்கொண்டே இருந்தது.. பிறகு “ஹலோ” என்று கிஷோர் போனில் கூப்பிட..

” ஹலோ நான் மாயா சார் என்னை ஞாபகம் இருக்கா”?. என்றாள்..

 “மாயா” என்று மனதில்  நினைத்தவன் மாயா மறக்கக்கூடிய ஆளாடி நீ  என்று மனதில் நினைத்தவன்..

 “மாயா  வா, மாயா  எப்படி இருக்க பேபி டால்?”… என்றான் கிஷோர்..

 “நான் நல்லா இருக்கேன்,, எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் கிஷோர்” என்றாள்..

 “என் பேபி டால்  கேட்டு நான் இல்லைன்னு சொல்லுவேனா என்ன வேணுமுன்னாலும் கேளு மாயா”..

 “எனக்கு ஒரு 150 கோடி தேவைப்படுது  உங்களால் ஏற்பாடு பண்ணி தர முடியுமா? நான் சீக்கிரம் கொடுக்க முயற்சி பண்றேன் ” என்றாள் மாயா..

 “என்ன மாயா இவ்ளோ பெரிய அமௌன்ட்  எதுக்கு உனக்கு தேவைப்படுது”  என்றான் கிஷோர்..

 கிஷோரிடம்  சுருக்கமாக சொல்லி முடித்தாள்,,  அக்காவுக்கு பணம் கொடுப்பதாகவும், உலகநாதன் உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிடல் இருப்பதாக சொல்ல,,

 கிஷோர் உடனே “நான் பணம் ஏற்பாடு பண்ணிட்டு உனக்கு கால் பண்றேன்” என்று போனை வைத்தான்..

 மாயா நிம்மதி உற்றாள்,  எப்படியே கிஷோர் பணம் ஏற்பாடு பண்ணி கொடுத்து விடுவான்.. ரியா பிரச்சனையை முடித்து விடலாம் அடுத்து  கிஷோருக்கு பணம் புரட்டுவதை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்..

 இரண்டு மணி நேரத்தில் கிஷோர் பணத்தை ஏற்பாடு பண்ணியவன் மாயாவுக்கு அழைத்து பணம் ரெடியாக இருப்பதாக வந்து  வாங்கிக்கொள் என்று லொகேஷன் ஷேர் செய்ய..

” சரி கிஷோர்” என்று பணம் வாங்க கிளம்பினாள்  மாயா..

  பார்த்திபன் நானும்  கூட வருவதாக சொல்ல,, “அண்ணா என் பிரண்ட்ஸ்  தான் அண்ணா, நானே போயிட்டு வந்துருவேன் நீங்க கம்பெனி வேலைய பாத்துக்கோங்க அந்த காசெல்லாம்  எடுத்து வைங்க நாளைக்கு ரியாக்கு கொடுத்தாகணும்” என்று மாயா பார்த்திபனிடம் சொல்லி விட்டு,,

 தனியே  காரை ஓட்டிக்கொண்டு சென்றாள்..

 மாயாவுக்கு  சிறிது நேரம் சென்று பார்த்திபன்  போன் பண்ணி இருந்தான்  “மாயா நீ போற லொகேஷனை  அனுப்பு காசு அதிகமா கொண்டு வர இல்லையா ஒரு சேப்டிக்காக” என்றான் பார்த்திபன்…

” சரி அண்ணா” என்றவள் உடனே பார்த்திபனுக்கு  லொகேஷனை  அனுப்பி வைத்தாள்…

 கிஷோர் அனுப்பியது  அவனுடைய கெஸ்ட் ஹவுஸ் அட்ரஸ்..

 மாயாவின் மீது தீராத மோகம் கொண்டவன்  கிஷோர்.. அவளிடம்  எத்தனையோ முறை தனியே  வெளியில் செல்ல கேட்டிருக்கிறான் அவளோ தனியா எல்லாம் வர முடியாது,, பிரண்ஸ்சோட வேனா வருகிறேன்  என்று பலமுறை மறுத்திருக்கிறாள்,,  இன்று ரியா பிரச்சினை முடித்து விடலாம் என்று இவள் நினைத்திருக்க.

 இவளை முடிக்க கிஷோர் நினைத்து விட்டான்..

 தனக்கு  உதவியா கிஷோருக்கு எப்படியாவது  சீக்கிரம் பணத்தை திருப்பிக் கொடுத்திட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே கிஷோர்  கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்து சேர்ந்தாள் மாயா..

 காவலாளி இவளுக்காகவே காத்திருந்தது போல கதவை திறந்து விட்டு கதவை மூடிவிட்டு வெளியே சென்று கதவை மூடிவிட..

கிஷோரின்  வாசல் உன் காரை  நிறுத்தியவள்.. கீழே இறங்கி வாசலில் முன் நின்று “கிஷோர் கிஷோர்” என்று அழைக்க..

 கதவு திறந்தே  இருக்க,, “உள்ளே வா மாயா” என்றான்,  உள்ளிருந்தபடியே   அவன் குரல் கொடுக்க..

 வீட்டில் உள்ளே வந்தாள் மாயா..

” வா மாயா,  வா உட்காரு மாயா” என்று யாரிடமோ போனில் பேசிக் கொண்டே வந்தான் கிஷோர்….

 “நான் அப்புறம் பேசுறேன், என் பிரண்டு வந்து இருக்கா” என்று போனை கட் செய்தவன் மாயாவை   பார்த்து “எப்படி இருக்க” என்றான்..

 “நான் நல்லா இருக்கேன்” என்றவள்..

 “நீ எப்படி இருக்க கிஷோர்,, கல்யாணம் ஆயிடுச்சா?” என்றாள்..

 “இல்ல மாயா  பாத்துட்டே இருக்காங்க” என்றவன்..

 “ஏதாவது சாப்பிடறியா  மாயா”. என்றான்

” இல்ல வேண்டாம் கிஷோர்,,” என்றவள்… ” நீ பணம் கொடுக்குறதுக்கு  நான்  ஏதாவது டாக்குமெண்ட்  சைன் பண்ணனுமா”  என்றாள் மாயா..

 “வேண்டாம்  மாயா உனக்கு எப்போ  திருப்பி கொடுக்க முடியுமோ திருப்பி  கொடு பணத்தை நான் வாங்கிக்கிறேன் என்றவன்.. உள்ளே சென்று இரண்டு பேக்குகளில் பணத்தை எடுத்துக் கொண்டு வர..

 பணத்தை வாங்கி சரி பார்த்தவள்.. “சரி கிஷோர் நான் கிளம்பறேன” என்றான் …

 “இரு மாயா உன்னை பார்க்க ஒருவன் இலங்கையில்  இருந்து வந்துட்டு இருக்கான், வர்ற நேரம் தான், அவனை  பார்த்துட்டு போ” என்றான் கிஷோர்..

  “யாரு” என்று மாயா  கேட்க..

“நான் தான் மாறன் பேபி டால்” என்று வந்து நின்றான் கதவின் பக்கத்தில் மாறன்..

 மாயாவுக்கு மாறனைப் பார்த்ததும் பேச்சு வரவில்லை.. அவன் எப்படிப்பட்டவன் என்று மாயாவுக்கு தெரியுமே,, பொம்பளை என்று பேப்பரில் எழுதி இருந்தாலே அதை கசக்கி தின்று விடும் ஆள் அவன்..

“எவ்வளவு நாள் ஆச்சு பேபி டால், உன்னை பார்த்து”  என்று மாயாவின் அருகில் வந்து மாறன் அமர..

மாயாவுக்கு மனதில் இந்த இடம் சரியில்லை என்று தோன்ற  உடனே கிளம்பு என்று மனம் சொல்ல..

 “எனக்கு பணம் வேண்டாம் கிஷோர்” என்றவள்  வேகமாக தன் போனை எடுத்துக் கொண்டு கிளம்ப..

 “அப்படியெல்லாம் உன்னை விட முடியாது, பேபி” என்ற மாறன்  மாயாவின் கையை பிடித்துக் கொண்டான்..

 “மாறா கையை விடு” என்றாள் மாயா..

 “விடுறதுக்கா  உன்னை இலங்கையிலிருந்து பார்க்க வந்திருக்கிறேன்..

நான் இந்தியா வந்தது உனக்காக தாண்டி” என்றான் கோணல்  சிரிப்போடு..

 மாயா  கிஷோரை பார்த்து “இது சரியில்லை கிஷோர்” என்றாள்..

 “எல்லாம் சரிதான் வாடி” என்று மாறா  மாயாவை  இழுக்க..

மாயா உடனே தன் போனை எடுத்து பார்த்திபனுக்கு அழைக்க முயற்சி பண்ண..

 அவளின் போனை புடுங்கி தூக்கி எறிந்தான்  மாறன்..

 “டேய் என்னை விடுங்கடா” என்று மாயா கத்த..

 “உன்னை  காலேஜிலே வைத்தே முடிச்சி இருக்கணும் டி,, உன் அப்பன் எங்களை தடுத்துட்டான்,, எங்க  நோக்கத்தை உங்க அப்பன் தெரிஞ்சு கிட்டு, எங்களுக்கு செக் வச்சுட்டான்,,  உன்னை எங்க  பக்கத்திலேயே  வர விடல, உன் அப்பன்.. இல்லைன்னா  உன்னை நாங்க காலேஜிலேயே வைத்து முடித்திருப்போம்” என்று இருவரும் சிரிக்க..

 மாயா  மாறன்  கையில் இருந்து போராட,,  ” மச்சி நான்  தான் ஃபர்ஸ்ட்”  என்றான் கிஷோர்..  ..

 “டேய்  இவளுக்காக  பாரின் ப்பிகரை  எல்லாம் விட்டுட்டு வந்து இருக்கேன் டா இலங்கையிருந்து… அதனால, நான் தான் என் பேபி டாலை   தொடுவேன்” என்றவன்  மாயாவின் உதட்டை பிடித்து இழுத்தான்  மாறன்..

 “சீ”  என்று அவளின் முகத்தை திருப்பிக் கொண்டாள் மாயா..

  “சீ எல்லாம் சொல்லக்கூடாது மாயா”  என்றவன் அவளை தூக்கி கிஷோரிடம்   போட,,

 அவளை வேட்டையாடும் மிருகம் போல் பிடித்துக் கொண்டான் கிஷோர்..

 “டேய் என்னடா என்கிட்ட தூக்கிப்போட்டுட்ட இவளை” என்றான் கிஷோர்,,

 “உன்னால தானடா   இவ நமக்கு  கிடைச்சிருக்க,, அதனால  ஃபர்ஸ்ட் நீ,, செகண்ட் நான்”  என்று மாறன் டீல் பேச…

 “தேங்க்ஸ் மச்சி” என்று மாயாவை தோளில் தூக்கி போட்டுக் கொண்டவன்.

 “அரை மணி நேரத்தில் வந்துடுவேன்டா,,  அப்புறம் நீ கன்டினூவ் பண்ணு” என்றான் கிஷோர்..

“டேய் வாடா சேர்ந்தே  இவளை முடிக்கலாம்” என்று இருவரும் மாடிக்கு செல்ல..

 மாயா கிஷோரின் தோளிலிருந்து குதித்து போராட,,.

“ரொம்ப ஆடாத பேபி டால், இன்னும் ஒரு வாரம் நீ இங்கே நான் வா ” என்று இருவரும் சிரித்துக் கொண்டே  அவளை  இழுத்துச்  செல்ல…

 திடீரென்று கிஷோரின் வீட்டு  முன்   வாகல்  கதவின் மேல் டம் என்ற சத்தம் கேட்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!