Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனின் தாலாட்டு இவள் 💜

அசுரனின் தாலாட்டு இவள் 💜 22



திலீப் திவ்யா திருமண பேச்சு ஆரம்பித்து ஒரு வாரம் சென்று இருக்க அன்று ஒரு நாள் இளவரசி கோகிலாவிடம் “அண்ணி பாப்பா குழந்தைக்காக ரொம்ப ஏங்குறா… ஆனா வாசு கொஞ்ச நாள் போகட்டும் அப்டினு தள்ளி போடுறான்… குழந்தைங்களை பாத்தா ஏக்கமா பாக்குறா… நேத்து என் பிரெண்டோட பேரன் முதல் பர்த்டேக்கு போய் இருந்தோம்…. அந்த குழந்தையை ஏக்கமா பாக்க ஆரம்பிச்சிட்டா… ஓரமா போய் உட்காந்தவ கண் கலங்கிட்டே இருந்தது… வாசு என்ன பண்றான்னு தெரியல அண்ணி… எனக்கும் அவருக்கும் கூட வீட்டுல குழந்தை இருந்தா நல்லா இருக்குமே அப்டினு தோண ஆரம்பிக்குது… ஆனா இதை வாசு கிட்ட கேட்க கஷ்டமா இருக்கு…” என்று கவலையாக கூறினார்…

அந்த பக்கம் கோகிலாவோ “இளா வாசு எது செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும் விடு… வாசுவுக்கு எப்போ குழந்தை பெத்துக்கனும்னு தெரியும்… நீ பாப்பாவை பாத்துக்கோ அது மட்டும் போதும்… அவளோட ஞாபகம் குழந்தைங்க பக்கம் போகாம பாத்துக்கோ… அதுக்கு அப்பறம் வாசு பாத்துப்பான்… நீயும் கவலை படமா இரு… உனக்கே வாசு மூணு வருஷம் கழிச்சு தானே பிறந்தான்… அது மாதிரி பாப்பாவுக்கும் ஆகலாம்… அதனால கவலை வேண்டாம் பாத்துக்கலாம்… நீ கொஞ்ச நேரம் தூங்கி எந்திரி… நான் அப்பறம் பேசுறேன்” என்று கூறி வைத்து விட்டார்….

இதை அங்கு வந்த சைந்தவியும் கேட்டு விட அவளுக்கு அழுகை தான் வந்தது… அவர்களின் ஆசையை கூட நிறைவேற்றி வைக்க முடியவில்லையே என அவளுக்கு கஷ்டமாக இருந்தது…. சைந்தவி ஓடி சென்று இளவரசியின் மடியில் தலை புதைத்து அழுக ஆரம்பித்து விட்டாள்… அவளின் அழுகையை பார்த்து இளவரசி பயந்தே விட்டார்…

“பாப்பா என்ன ஆச்சு… உனக்கும் வாசுவுக்கு எதோ சண்டையா உன்னை திட்டிட்டானா…. எதுக்கு டா இந்த அழுகை…” என்று பரிதவிப்போடு கேட்டார்…



Advertisement

அவள் எதுவும் கூறாமல் அமைதியாக அழுது கொண்டே இருந்தாள்… அப்போது சக்ரவர்த்தி வாசு இருவரும் வீட்டிற்கு வர சைந்தவியின் அழுகையை பார்த்து வேகமாக அவளிடம் ஓடி வந்தனர்… வாசு வேகமாக அவளிடம் “அம்மு என்ன ஆச்சு… எதோ பிரச்சனையா… வயிறு வலிக்குதா… தலை வலிக்குதா…” என்ன வேணும் என்று பதட்டமாக கேட்டான்…
அழுது கொண்டு இருந்தவள் அவனை பார்த்து “நான் என்ன கேட்டாலும் தருவியா மாமா… சொல்லு நான் என்ன கேட்டாலும் தருவியா…..” என்று அழுகையுடனே கேட்டாள்….

அவனோ அவள் கேட்க வருவதை புரிந்து கொண்டு அமைதியாகி விட அவளோ எதுவும் பேசாமல் அறைக்கு சென்று விட வாசு முக இறுக்கத்துடன் வெளியேறி விட்டான்….
இளவரசி கண்ணீருடன் சக்ரவர்த்தியின் தோள் சாய்ந்தவர் “பாப்பாவுக்கு வேணுங்கிறத எல்லாத்தையும் அவ கேட்குறதுக்கு முன்னாடி செய்யுறவன் இந்த விசயத்துல ஏன் இப்படி பண்றான்…. எந்த விசயத்துலயும் அவளை அழுக வைக்காதவன் இந்த விசயத்துல அழுக வைக்குறான்…பாவம் பாப்பா…” என்று அவரும் அழுது கொண்டே கூறினார்…

சக்ரவர்த்தி இளவரசியிடம் “விடு அரசிம்மா தம்பி எது பண்ணாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்… நீ கவலை படாத… வாசுவுக்கு என்ன ஆசையா பாப்பாவை அழுக வைக்க… பாப்பா அழுதா அவளை விட அவனுக்கு தான் வலிக்கும்…. வாசுவே இதை பாத்துப்பான்… நீ வீட்டுலயும் குழந்தை பத்தி பேச்சை எடுக்காத… எல்லாம் நல்லதே நடக்கும்…” என்று கூறினார்….

Advertisement

இரவு உணவை கூட உண்ணாமல் அழுது கொண்டே உறங்கிவிட்டாள்…. வாசுவும் வெளியில் சென்றவன் நீண்ட நேரம் வீட்டிற்கு வரவில்லை… இளவரசி சக்ரவர்த்தி இருவரும் வாசுவும் சைந்தவியும் உண்ணாமல் இருப்பதால் அவர்களும் உண்ணவில்லை…. நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வந்த வாசு இன்னும் உறங்காமல் இருக்கும் தன் பெற்றவர்களை பார்த்து “ம்மா இன்னும் தூங்கலையா நீங்க… சாப்பிட்டீங்களா…” என்று கேட்டான்… ஆனால் இளவரசியோ அமைதியாகவே இருக்க “அம்மா உங்களை தான் கேட்டேன்… நான் பேசுறது கேட்குதா இல்லையா… ” என்று கேட்டான்…

Advertisement

அவர் அமைதியாகவே இருக்க சாப்பிட்டார்களா என்று பார்க்க டைனிங் டேபிள் சென்று பார்த்தான்.. அங்கு செய்து வைத்தது அப்படியே இருக்க ஒரு பெரு மூச்சு விட்டவன் “அம்மா அப்பா ரெண்டு பேரும் இப்ப சாப்பிட வருவீங்களா மாட்டீங்களா…” என்று சற்று கோவமாக கேட்டான்…

 

இருவருமே அமைதியாக இருக்க இருவருக்குமான உணவை தட்டில் போட்டு வந்தவன் இருவருக்கும் தானே ஊட்டி விட்டான்…

Advertisement

இருவருக்கும் கண்களில் கண்ணீர் வலிந்தது… இருவருக்கும் ஊட்டி முடித்தவன் கை கழுவி விட்டு வந்தவன் “ம்மா ப்பா கண்டிப்பா இதை பத்தி உங்க கிட்ட ஒரு நாள் சொல்றேன்… இதை பத்தி மட்டும் கேட்காதீங்க ம்மா.. கண்டிப்பா இதை சரி பண்ணிடுவேன்”…. என்னை நம்புங்க என்று கூறினான்…

இளவரசி எதுவும் பேசாமல் அறைக்கு சென்று விட சக்ரவர்த்தி தான் அவன் தோளை தட்டி குடுத்து “நாங்க நம்புறோம் வாசு… ஆனா எதுவா இருந்தாலும் சீக்கிரம் சரி பண்ணிடு… பாப்பாவும் இன்னும் சாப்பிடல… அழுதுட்டே தூங்கிட்டா… போய் சமாதானம் பண்ணு… மறக்காம நீயும் சாப்பிடு” என்று கூறி அவரும் உறங்க அறைக்கு சென்று விட்டார்….

தனக்கும் சைந்தவிக்கும் ஒரு தட்டில் உணவை போட்டு கொண்டு மேலே சென்றவன் அங்கு அழுது அழுது முகம் வீங்க தூங்கி கொண்டு இருந்தவளை பார்த்து அவனின் நெஞ்சம் எல்லாம் பதறியது… தட்டை அங்கு இருக்கும் டேபிளில் வைத்தவன் மெதுவாக அவள் அருகில் சென்றான்…

அவள் நெற்றில் அழுத்தமாக முத்தமிட்டவன் “அம்மு எந்திரி.. சாப்பிட்டு தூங்கு…” என்று மெல்லிய குரலில் கூறினான்…. அவள் அவன் வந்தது உணர்ந்தும் கண்ணை திறக்காமல் கண் மூடியே படுத்து இருந்தாள்…

அவள் கருவிழி அசைவிலேயே அவள் உறங்கவில்லை என அறிந்த வாசு “அம்மு.. நீ தூங்கலைனு தெரியும் எனக்கு… எந்திரி அம்மு… என் கூட நீ பேச வேண்டாம் சாப்பிட்டு மட்டும் தூங்கு.. எந்திரி டா…” என்று கெஞ்சல் குரலில் கேட்டான்…

அவன் பேச பேச கண்ணை இன்னும் இறுக்கி மூடியவள் அவன் பேச்சையும் கேட்காமல் காதை தன் கையால் பொத்தி கொண்டாள்.. அவளின் அந்த சைகை அவனை பலமாக தாக்கியது…

“அம்மு நான் பேசுறது உனக்கு பிடிக்கலயா… என்னை விட குழந்தை தான் முக்கியமா அம்மு… சொல்லு அம்மு… நான் உனக்கு முக்கியம் இல்லையா….” என்று கொஞ்சம் கோவம் கலந்த குரலில் கேட்டான்…

அவள் அமைதியாக இருக்க அவளை தூக்கி அமர வைத்தவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் கொண்டு வந்த உணவை ஊட்டி விட்டு தானும் கொஞ்சம் உண்டு விட்டு தட்டை கொண்டு போய் கீழே வைத்து விட்டு வந்தவன் பால்கனியில் நின்று போய் நின்று கொண்டான்…

சைந்தவிக்கு மேலும் மேலும் அழுகை தான் கூடியது…. அவளின் அழுகை அதிகமாகி கேவலாக வெடித்தது… மேலும் அவளின் அழுகையை பொறுக்காதவன் “அம்மு ஒரு வாரம் எனக்கு டைம் குடு அம்மு… அதுக்கு அப்பறம் நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்… என்னை நம்பு அம்மு… நமக்கு கண்டிப்பா குழந்தை வரும்… தயவு செஞ்சு அழுகாத அம்மு.. என்னால தாங்க முடியல… எனக்கு இங்க எல்லாம் வலிக்குது அம்மு..” என்று நெஞ்சை காட்டி கூறினான்…

அவள் எதுவும் கூறாமல் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்… வாசு மன பாரத்துடன் அவளை தட்டி குடுத்து உறங்க வைத்தவன் தான் உறங்காமல் அவளையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தவன் எப்போது உறங்கினான் என்று தெரியாமல் அவளை அணைத்து கொண்டு அவனும் உறங்கி இருந்தான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!