“ஏன்டா ஆதாரம் கேட்டா சேதாரத்தைப் பற்றிப் பேசுற?”
“இப்ப என்ன பொண்ணுதானப்பா வேணும்?”
“அஹான்பா!”
“அம்மாஆஆஆ… இங்க வாங்க” என்று சத்தமாகக் கத்தி அழைக்க…
ராஜாங்கம் பதறிப்போய், “ஏன்டா கத்துற?” என்று மகனின் வாயை மூடுமுன்… “இதோ வந்துட்டேயிருக்கேன்” என்று கிச்சன் சிங்கில் கைகழுவி முந்தானையில் துடைத்தபடி வந்து, “எதுக்குடா கூப்பிட்ட? சீக்கிரம் சொல்லு. நிறைய வேலையிருக்கு” என்று நிற்க நேரமில்லாமல் அவசரப்படுத்தினார்.
“நாம எப்ப பொண்ணு பார்க்கப் போகலாம்” என்று தகப்பனிடம் கண்சிமிட்ட… அவரோ புரியா பார்வை பார்க்க… “நிஜமாவாடா? நைட் கேட்டதுக்கு முடியாதுன்னு சொல்லிட்டியா. பொண்ணுகிட்ட என்ன காரணம் சொல்றதுன்னு ஒரே தவிப்பா போயிருச்சி.”
“இப்ப அப்பா பேசுற வரை நானும் அந்த முடிவுலதான்மா இருந்தேன். அப்பா விருப்பத்தைக் கேட்ட பிறகு முடிச்சிரலாம்னு முடிவே பண்ணிட்டேன்” என்றான் புன்னகை முகத்துடன்.
‘முடிச்சிட்டு முடிவு பண்ணிட்டேன் சொல்றியேடா.’ கோலி சோடா பாட்டிலுக்குள் அடைபட்ட கோலிக்குண்டு நிலைமை தற்பொழுது ராஜாங்கத்திற்கு.
“எப்படிங்க? எவ்வளவு பிடிவாதமா உதயா தவிர யாரும் என்னை நெருங்க முடியாது சொன்னான். பத்தே நிமிஷம் பேசி அவனை மாத்தியிருக்கீங்கன்னா… ஹையோ சூப்பர்ங்க. என் புருஷன் எவ்வளவு புத்திசாலி” என்ற பாராட்ட… அவரோ ஈயென இழித்து அசடுவழியப் பார்த்தார்.
“ஆமாம்மா. அந்த புத்திசாலித்தனத்துக்காகவே பொண்ணு பார்க்கப் போறோம். அப்பாவுக்குப் பேசி முடிக்கிறோம்” என்று கெத்தாய் சொல்ல…
“ஏய்! என்னடா உளர்ற? பொண்ணு பார்த்தது உனக்கு. பிடிக்கலன்னு சொல்லிட்டல்ல அத்தோட விடு. அதை விட்டுட்டு உங்கப்பாவுக்குப் பார்க்கச் சொல்ற? நைட் ஏதோ கோபத்துல சொல்றன்னு பார்த்தா, என் கழுத்துலயே கத்தியை வைப்பியா?” என்று காளி அவதாரம் எடுத்திருக்க…
“நான் ஒண்ணும் கத்தியை வைக்கல. உங்க ஆத்துக்காரர்தான் பொண்ணு பார்க்க எப்பப் போகலாம்னு கேட்டாப்ல. நானும் பொண்ணுக்காக நீங்க சொன்ன அத்தனை குவாலிபிகேஷனையும் சொல்லி…”
“ஐயையோ!” ராஜாங்கம் வாயில் கைவைக்க…
வந்த சிரிப்பை அடக்கி, “எனக்கும் அப்பாவுக்கும் ராசி நட்சத்திரம் எல்லாம் ஒண்ணுதானம்மா? ஜாதகம் பையன் எனக்குப் பொருந்திச்சின்னா… அப்பாவுக்குப் பொருந்தாதா என்ன? இன்னைக்கு வெள்ளிக்கிழமை நல்ல நாள்ன்றதால போய்ப் பார்த்து, முடிஞ்சா அப்படியே நிச்சயம் பண்ணிரலாம்னு முடிவு பண்ணிட்டேன். பொண்ணு பார்த்தது நீங்க. சோ, அவங்க அட்ரஸ் உங்ககிட்டதான் இருக்கும். அதுக்காகதான் உங்களைக் கூப்பிட்டேன்” என்றான் கூலாக.
“விளையாட்டை வினையாக்கிட்டியேடா பாவி. கோலி சோடாவை உடைச்சி நொறுக்காம விடமாட்டாளே! நல்லா செய்றடா நீ. என் மருமகள் வரட்டும். அப்பயிருக்கு உனக்கு” என்று பல்லைக்கடிக்க…
“அவள் வந்தாலும் உங்களை சப்போர்ட் பண்ணமாட்டா. ஒன்லி இந்த சபரி மச்சானுக்குதான் முழு ஆதரவும். இப்ப என் அம்மாவுக்கு பதில் சொல்லுங்க?”
“ஹ்க்கும் ரொம்ப முக்கியம்.” மெதுவாக முனக…
“அப்ப நான் முக்கியமில்லையா?” என்று ஆரம்பித்து, முப்பத்திரெண்டு வருடக் கதையை சரளா சரம் சரமாகத் தொடுத்து, வார்த்தைகளால் கணவரின் கழுத்தை நெறித்தார்.
[the_ad id=”6605″]
தகப்பனை சிறிது தவிக்கவிட்டு, “அம்மா போதும். இதுதான் சமயம்னு அப்பாவை ஓவரா திட்டுறீங்க. அப்பா விளையாட்டுக்குப் பேசியிருப்பாங்கன்னு தெரியும். தெரிஞ்சே உங்க பழைய கதையெல்லாம் தூசு தட்டியெடுத்துத் திட்டுறதெல்லாம் அதிகம்மா.”
“அதுக்குள்ள ஏன்டா நாட்டாமை பண்ண வந்த? எனக்கே எப்பவாவதுதான் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்குது. அதை சரியா பயன்படுத்திக்க வேண்டாமா?”
“ஏய்! என்ன ரெண்டு பேருக்கும் என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது?”
“ம்… கொஞ்சம் வயசாயிருச்சின்னு தெரியுது” என்று தாயிடம் ஹைபை கொடுத்தான்.
“இவன்கிட்ட பொண்ணு பார்க்கப் போறதைப் பற்றி இல்லாம, பொண்ணை மட்டும் விசாரிக்கலைன்னு சொல்லுங்க பார்ப்போம்?
“அ..அது ஜஸ்ட் ஃபன்னுக்காக.”
“நீங்க பன்னு திங்கதான் லாயக்கு. பொண்ணு பார்க்கக் கிடையாது.”
“டேய் மகனே! இவள் என்னை ரொம்ப டேமேஜ் பண்றா. பொண்ணு பார்க்கப் போறோம். தூக்குறோம்” என்றார் வீராவேசமாக.
“அப்பா தூக்குறோம் இல்ல தூக்குறீங்க. இப்ப உங்க பிரச்சனையை விட்டுட்டு, என் விஷயத்துக்கு வாங்க. அம்மா பொண்ணை மறுக்கக் காரணம் கிடைச்சிருச்சா?”
“ம்… கிடைச்சிருச்சிடா. அதைச் சொன்னா அவள்னு இல்ல எவளும் உன்கிட்ட வரமாட்டா.”
“ஏன்மா கேன்சர்னு சொல்லப் போறீங்களா?”
“சேச்சே அவ்வளவு காஸ்ட்லி நோயை எப்படிச் சொல்வேன்.”
“அதைவிட கம்மி நோயா!” என்றான் ஆச்சர்யமாய்.
“எய்ட்ஸ்னு சொன்னா பத்தாதா” என்றார் அசால்டாய்.
“அம்மாஆஆ..” என்றலறி, “அப்பா இந்த அம்மாவை எங்க பிடிச்சீங்க? உட்கார்ந்த இடத்திலிருந்தே வெடி வைக்கறாங்க.”
“அதெல்லாம் ஒரு திறமை. நீ எப்படா மருமகளைக் கண்ணுல காட்டப்போற?”
“கண்ணுல படட்டும்பா. அப்புறம் பார்த்துக்கலாம். மும்பையை விட்டு போகக்கூடாது சொல்லிட்டு வந்தேன். என் பேச்சைக் கொஞ்சமாவது கேட்டாளா. கையில சிக்குவாள்ல அப்பயிருக்கு” என்றவனுக்குள் சின்னதாகக் கோபம்.
“ஹலோ! ஹேய் கேர்ள் நில்லு” என்று ஒருவன் சூர்யாவை அழைக்க…
சட்டென கோபத்தில் திரும்பியவள், “என்ன வேணும் உனக்கு?” என்றாள்.
“நீயும் சிங்கிள் நானும் சிங்கிள். நாம மிங்கிளாக என்ன செய்யணும்?” என மலையாளத்தில் கேட்டு அசட்டுத்தனமாகச் சிரித்தான்.
‘உன் கால்ல கிடக்கிற செருப்பைக் கழட்டி உன்னை நீயே அடிச்சிக்கோ. உனக்குப் பிடித்திருக்கும் பைத்தியம் முதற்கொண்டு எல்லாமே சரியாகிரும்.’ நினைத்ததை வெளியே சொல்ல முடியாமல், “அதை என் புருஷன்கிட்ட கேட்டுச் சொல்றேன்” என்று பல்லைக்கடித்தபடி சொன்னாள்.
“புருஷன்னு சொன்னா நாங்க நம்பிருவோமா? உன்னைப் பார்த்தாலே தெரியுது சிங்கிள்னு. சொல்லு எப்ப மிங்கிளாகலாம்?”
“முதல்முறையா பேசுறவங்ககிட்ட மரியாதையா பேசிப்பழகு. வா போ பேசுற” என்றாள் குரலுயர்த்தி.
“அது பேசலாமேங்க. முதல்ல எனக்குப் பதில் சொல்லுங்க. ஒரு மாசமா உங்களைச் சுத்துறேன்ங்க. ரிசல்ட் தெரிஞ்சா நல்லாயிருக்கும்ங்க.”
“ம்… குட். மரியாதை தெரிஞ்ச பையனாதான் இருக்கிற. போயிட்டு… இல்ல அப்படியே போயிரு. இன்னொரு டைம் பின்னாடி சுத்தாத” என்று எச்சரிக்க…
“இப்படிப் பட்டுன்னு போ சொல்லக்கூடாதுங்க.”
“வேற என்னடா சொல்லணும்? என்ன கட்டிப்பிடிக்கணுமா? இல்ல கிஸ் பண்ணணுமா? இல்ல இரண்டுமேவா…” அவளின் வேகக்குரலில் அவன் அதிர… “இதே நேரம் உன் அக்காவையோ, தங்கையையோ யாரோ ஒருத்தன் இப்படித்தான் கேட்பான். அவனைப் பொருத்தவரை உன் அக்கா, தங்கை யாரோதான? இப்ப நீ என்கிட்ட கேட்கிற மாதிரி. நாம செய்யுறதோட விளைவு நம்ம குடும்பத்துல பிடிக்கும். போ… போய் கேட்டுப்பாரு வெளிய சொல்ல முடியாமல் தனியா உட்கார்ந்து அழுதுட்டிருப்பா.”
திடீரென்று பின்னாலிருந்து கைதட்டல் ஓசை கேட்டதும், சிங்கிள் பாய் மிங்கிளாக முடியாமல் ஓடிவிட்டான்.
அந்த கைதட்டல் ஓசையில் சூர்யாவிற்கு மும்பையில் நடந்தது நினைவு வர, “சபரி மச்சான்!” உதடுகள் உச்சரிக்க, கண்களில் மின்னல் வெட்ட, மனதில் புதுவித உற்சாகம் பிறக்க அனைத்தையும் அடக்கித் திரும்பிப் பார்த்தபடி, “மச்…” ஆரம்பித்தவள் அப்படியே நிறுத்தினாள்.
ஏமாற்றம் என்பது இதுதானோ! சபரியை எதிர்பார்த்தவள் முன் யாரோ ஒருவன் வந்து நின்றான்.
“சூப்பர்ங்க. ரொம்ப நேரமா உங்களைத்தான் பார்த்துட்டிருந்தேன். பிரச்சனை அதிகமானா என்ட்ரி குடுக்கலாம்னு வெய்ட் பண்ணிட்டிருந்தேன். பரவாயில்லங்க நீங்களே விரட்டிட்டீங்க” என்றான் அனைத்துப் பற்களையும் காட்டியபடி.
அவளோ ஏமாற்றத்தை மறைத்து, எதுவும் பேசாது திரும்பி நடந்தாள்.
[the_ad id=”6605″]
“ஏங்க பேசிட்டிருக்கேன். கண்டுக்காம போனால் எப்படி? ஏங்க உங்களைத்தான்.” எவ்வளவு அழைத்தும் அவள் நிற்காமல் செல்ல, கையில் கிடைத்த பொருளைப் புன்னகையுடன் பார்த்து பேண்ட் பாக்கெட்டில் போட்டபடி நடந்தான்.
அன்று ஞாயிறு! கம்ப்யூட்டர் க்ளாஸ் இல்லாததால் சற்று தாமதமாகவே விழித்து, துணிகளைத் துவைத்து இதர வீட்டு வேலைகளை முடித்து பத்து மணிபோல் வெளியே வர… கொரியர் வந்திருப்பதாக ஒருவன் வந்து நின்றான்.
“கொரியரா? எனக்கா? என் அட்ரஸ் யாருக்குமே குடுக்கலையே. ஏன் எனக்கே இந்த அட்ரஸ் ஞாபகமில்லையே” என்றெண்ணி இது தனக்கானதல்ல என்று மறுத்தாள்.
“உங்களுக்கு வந்ததுதான். அட்ரஸெல்லாம் சரியாயிருக்கு” என்று கொடுக்க… சில நிமிட வாக்குவாதத்தில், “மேம் அந்த சார்தான் குடுத்துவிட்டாங்க. எதாயிருந்தாலும் அவர்கிட்ட கேட்டுக்கோங்க.” பார்சலை அவள் கையில் திணித்துச் சென்றுவிட்டான்.
தூரத்தில் நின்றிருந்தவன் முகம் தெரியாமல் போக, கையிலிருந்ததை அவன் முகத்தில் வீசியெறிய வந்தவள் அவன் முகம் பார்த்து நிதானித்து, “என்ன இது?” என்றாள் கோபமாக.
“திறந்து பார்த்தா தெரிஞ்சிரப்போகுது” என்றான் அலட்சியமாக.
“எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். இதை முதல்ல பிடிங்க. இன்னொரு டைம் பின்னாடி வரக்காரணம் கண்டுபிடிக்காதீங்க. வர வர புது டெக்னிக்கெல்லாம் கண்டுபிடிக்கிறாங்க” என்று முனகியபடி நடக்க…
“ஹலோ மேம்! வெய்ட் வெய்ட். இது என்னோடது இல்ல. உங்களுக்குச் சேர வேண்டிய, உங்களுக்குச் சொந்தமான பொருள் அதிலிருக்கு. வேணும்னா வச்சிக்கோங்க. இல்லன்னா தூக்கித் தூரப்போடுங்க. தங்கம் இருக்கிற விலையில் ஒரு கோல்ட் செயின் கிடைச்சா அவன் லக்கிதான். எப்படியோ போ” என்பதாய் விலகல் தன்மையுடன் பேச…
தூக்கிப்போடப்போன கைகள் அந்தரத்திலேயே நிற்க, “நீங்க என்ன சொன்னீங்க?” எனக்கேட்டாள்.
“நான் ஏதோ சொன்னேன். நீங்க கீழ போடுங்க. அதை எடுக்கிற லக்கி பெர்சன் யாருன்னு பார்த்துட்டே போறேனே” என்று சற்றுத் தள்ளியிருந்த டீக்கடையில் உட்கார…
“சார் செயின்னா சொன்னீங்க?”
“அப்படித்தான் சொன்னதா ஞாபகம்.”
அவளுக்குத் தெரியும் அது செயின் அல்ல என்பது. இருப்பினும் வேகமாக ஒருவித எதிர்பார்ப்புடன் அதை பிரிக்க… அவனோ அவளின் முகபாவனையை பார்த்துக் கொண்டிருக்க… அந்த பார்சலில் வாட்சைக் கண்டதும், “நன்றி முருகா” என்று நொடி நேரம் கடவுளை வேண்டியவள் கண்கள் பனிக்க இதழ்கள் புன்னகைத்திருந்தது.
“ஹலோ! எடுத்துத் தந்தது நான். நன்றி கடவுளுக்கா? நன்றி கெட்ட உலகமடா” என்று வானத்தைப் பார்த்து கைதூக்கினான்.
“சாரி சார். தேங்க்யூ சோ மச்” என்றவள் குரல் உணர்ச்சிவசப்பட்டிருந்தது.
“ஏற்றுக்கொள்ளப்பட்டது. யார் பிரசென்ட் பண்ணினது? இவ்வளவு எக்ஸைட் ஆகுறீங்க? செயின்னு சொன்னானே வாட்ச் இருக்குதேன்னு கூட கேட்கலை?” அவன் கேட்கும் எதையும் கவனிக்கும் நிலையில் அவளில்லை. செயின் கழுத்தை விட்டு விழாது என்பது அவளுக்கு நிச்சயம். வாட்ச் நன்றாக ஓடுகிறதா என பரிசோதித்துக் கொண்டிருந்தாள்.
“இருக்கிறதுலயே காஸ்ட்லி வாட்ச்ங்க. அவ்வளவு சீக்கிரம் ரிப்பேராகாது. ஏங்க? ஹலோ! மேம்! ம்கூம்… வேற உலகத்துக்குப் போயிட்டாங்க போல. காத்திருப்போம்” என நினைத்து அமைதியாக அமர்ந்தான்.
ஏழெட்டு நிமிடங்கள் கழித்தே சுற்றுப்புறம் உணர்ந்து திரும்பவும் அவனுக்கு நன்றி சொல்ல… எழுந்து அவளருகில் வந்தவன் கைநீட்டி, “ஃப்ரண்ட்ஸ்” என்றான்.
அவள் யோசனையாய் அவன் முகம் பார்க்க, நட்புக்கரம் நீட்டி புன்னகையுடன் நின்றிருந்தான்.
[the_ad id=”6605″]
“கை குலுக்கினா கொரோனா வைரஸ் அட்டாக்காகுதாம். சோ, நம்ம நாட்டுப் பண்பாடைக் கடைபிடிக்கலாமே” என்றவள் “நாம நட்பாகுறதுக்கு முன்னாடி ஒரு கண்டிஷன்” என்க.
“சொல்லுங்க?”
“திடீர்னு ஒருநாள் வந்து காதல் கல்யாணம்னு பிதற்றக்கூடாது. அப்படி ஒரு எண்ணமிருந்தா இதோட நாம சந்திக்க வேண்டாம். என்ன சம்மதமா?”
“ஹாஹா என்னங்க நீங்க… நான்லாம் பிடிச்சிருந்தா நேரே சொல்லிருவேன். உங்களை நட்பாக்க மட்டுமே பிடிச்சிருக்கு. நட்புக்குள்ள கள்ளத்தனம் வரவே வராதுன்னு வாக்குக் குடுக்கிறேன்ங்க.”
“நானும் நம்புறேன்ங்க” என்று மென்மையாக அவள் சிரிக்க…
கை குவித்து “நான் ப்ரித்விராஜ்” என்றான்.
“அப்ப சம்யுக்தைக்காக வெய்ட்டிங்கா? இல்ல ஏற்கனவே தூக்கியாச்சா?”
“ஹா..ஹா அதெல்லாம் வீட்டுல உள்ளவங்க சம்மதத்தோட தூக்க ரெடி பண்ணியாச்சிங்க” என சத்தமாகவே சிரித்தான்.
“சூப்பர். நான் சூர்யோதயா சபரிநாதன்! சொல்லி முடித்ததும்தான் தான் உளறியதை உணர, அதிர்ந்து, தவித்துக் கலங்கி நின்றாள்.