ஒரு முடிவின் துவக்கம்..
அத்தியாயம் – 30
தற்போதுதான் தத்தி தத்தி நடைபயின்று கொண்டிருக்கும் பதினோரு மாத மஞ்சரி கத்திக்கொண்டே இருக்க.. ‘மாறா எதாவது செய்து அழுகையை அடக்கப்பாரு..” என்று ராஜன் பரிதவிக்க..
‘கீழ விடச்சொல்லி அழறா ராஜய்யா..” என மாறன் சலிக்க..
‘அச்சோ கல்லு குத்திடும்.. மண்ணு சறுக்கிடும்.. கால் புண்ணாகிடும்டா ராஜாத்தி..” என்று ராஜன் விளக்க.. எதற்க்கும் அசராதவளாய் மாறனிடமிருந்து கீழே தாவ முயற்ச்சித்து முடியாதவளாய்.. ‘ஊ..ஊ..” என தனது பணியினை துவக்கினாள் மஞ்சரி.
மாறன் கிசோர் முரளி என ஆண்கள் அனைவரும் ஒரு மரத்தடியில் குழந்தைகளோடு போராடிக்கொண்டிருக்க..
அங்கே அமுதா.. நிவேதா.. சோபனா.. ராகவி.. அனைவரும் பக்கத்து மரத்தடியில் அமர்ந்து கதை பேசியபடி.. குழந்தைகளோடு ஆண்கள் படும்பாட்டை ரசித்துக்கொண்டிருக்க..
ராஜன் இராமன் கிசோர் முரளி என அனைவரும் மஞ்சரிக்கு மிகவும் பிடித்த யானை சவாரிக்கு குனிந்து பார்த்துவிட்டனர்.. யார்மேலயும் அமராமல் கத்திக்கொண்டே இருக்க.. நிவேதாவின் நான்கு வயது மயிலம்மாவும்.. சோபனாவின் மகனும் மஞ்சரியின் அழுகையை அடக்க ஆன முயற்ச்சிகளை செய்து பார்த்துவிட்டாள்.. எதுவும் வேலைக்காகவில்லை.
மஞ்சரியைப்பார்த்து தற்போது நிவேதாவின் ஐந்துமாத மகனும் அழ ஆரம்பிக்க..
‘அப்படியே அவங்காயாவைப் போலவே அடம்பண்றா..” என்று ராஜன் மாறனிடம் கிசுகிசுக்க.. கணவனின் பேச்சை புரிந்த தேவி..
‘ஏங்க இந்த குழந்தை அழுகையையாவது கொஞ்ச நேரத்தில அடக்கிடலாம்.. அந்த குழந்தை ஆரம்பிச்சா அவ்ளோதான்..” என்று தேவியும் அமுதாவிற்கு பயந்து ராஜனிடம் கிசுகிசுக்க..
‘என் அத்தையை வம்பிளுக்கத்தான் கோவிலுக்கு வந்திங்களா..?” என்று மாறன் முறைக்க..
‘அங்க என்ன சத்தம்..?” என்று நந்தினி குரல் கொடுக்க..
‘எங்களுக்குள்ள ஆயிரம் நடக்கும்.. அதெல்லாம் உனக்கெதுக்குடி..?” என்று மாறன் குரல்கொடுக்க..
‘என்ன..?” என்று நந்தினி மீண்டும் குரல் கொடுக்க..
‘பேசிட்டிருக்கோம் பொண்டாட்டி..” என்று பயந்தவனாய் வடிவேல் பாணியில் மாறன் பதில் கொடுக்க.. பெரும் குரலெடுத்து சிரித்தார் ராஜன்.
இவர்களின் செல்ல சண்டையை ரசித்துக்கொண்டே பொங்கல் வைத்து முடித்த நந்தினி..
‘மாமா பூஜை ஆரம்பிக்கலாமா..?” என்று ராமுவிடம் கேட்க..
‘இன்னும் மஞ்சுவோட மாமன் வரலையேம்மா..” என்று இராமு சொல்ல..
‘அப்பா எக்சாம் முடிஞ்சதும் குமார் கூட்டிட்டு வந்திடுவான்தான..?” என ராஜனிடம் நந்தினி கேட்க..
‘அடியேய்.. ஒருமணிநேரமா குழந்தை அழுதிட்டிருக்கா.. வந்து சமாதானம் செய்டி.. பூஜை அப்புறம் பார்த்துக்கலாம்..” என்று மாறன் சொல்ல..
‘எத்தனை பேர் சமாதானம் செய்தாலும் மனோஜ் வராம அவ அழுகை நிக்காது..” என நந்தினி அசால்ட்டாய் சொல்ல..
தனது ஏழாம் வகுப்பு அரையாண்டு தேர்வை முடித்து வந்துகொண்டிருந்த மனோவைப் பார்த்ததும் தன் அழுகையை நிறுத்தி.. ‘மண்ணு..” என அப்போதுதான் சிரித்தாள் மஞ்சரி.
‘டோய் மஞ்சுக்குட்டி..” என்று சொல்ல தாவிக்கொண்டுபோனாள் தன் மாமனிடம். அப்பாடா என்றானது மாறனுக்கு..
‘மண்ணு..” என கீழ காண்பிக்க.. ‘மஞ்சுக்குட்டிக்கு நடக்கனுமா..?” என கொஞ்சிக்கொண்டே தன்னிரு கால்களின் மேல் மஞ்சுவை நிற்க்க வைத்து மஞ்சுவின் கைகளை பிடித்துக்கொண்டு மனோ நடக்க ஆரம்பிக்க..
இது தெரியாம போச்சே என்று மாறனும் ராஜனும் அசடு வழிய..
‘மண்ணு..” என்று முளைத்தும் முளையா தன் பால்பற்க்களை ‘ஈஈஈ..” எனக் காட்டி சிரித்தவள்..
‘மண்ணு..” எனக் கோபத்தோடு காண்பித்தாள் மாறனையும் ராஜனையும். இருவரையும் கோபமாக பார்த்த மனோ..
‘என் மஞ்சுக்குட்டிய அழ வச்சவங்களை சாமிக்கிட்ட சொல்லிடலாம்..” என தேற்ற.. வெற்றி பெற்றவளாய் சிரித்தாள் மழலை.
ராஜனின் முதல் பேரக்குழந்தையின் காதனிவிழாவிற்கு ஊரே திரண்டிருக்க.. மாறனின் குலதெய்வ கோவிலில் பூஜைமுடித்து பிறந்த முடியை காணிக்கையாக்கி.. காது குத்துவதற்க்காக தனது மாமன் மடிமீது மஞ்சரி அமர்ந்திருக்க.. ஒற்றைக்காதை குத்தியதும் வீரென கத்திய மஞ்சரிக்கு அவளின் மாமன் கன்னத்தில் முத்தம் வைத்ததும்.. கப்பென அவளின் அழுகை நின்றிட.. மறுகாதை குத்தியதும் திரும்பவும் கத்தியவளுக்கு மீண்டுமொரு முத்தம் பதித்து.. அவளின் வாயினில் சாக்லெட்டை திணிக்க.. சிரித்துக்கொண்டே அழுகையை நிறுத்திய மஞ்சரியைப் பார்த்து அதிசயித்துப் போயினர் அனைவரும்.
‘ராஜய்யா.. மனோவைத்தவிர மஞ்சரி யாருக்கும் அடங்கமாட்றா.. உங்க மகன் என்னவோ பண்றான் என் மகளை..” என்றான் பெருமையோடு.
‘ஆமாம் மாறா.. சோபிமகனும் நிவேதா மகளும் எத்தனை சாக்லெட்டை கொடுத்தாங்க.. வாங்கி வாங்கி தூரவீசிட்டு.. இப்போ மனோ கொடுத்ததும் சிரிப்பை பாரேன்..” என்று ராஜனும் பெருமையடைய..
‘ஆனாலும் என் முறைப்பொண்ணு இல்லாததுதான் பெரிய குறையா இருக்கு.. லாவி இல்லாம நெறக்கலயில்ல ராஜய்யா..?” என மாறன் வருந்த..
‘நேத்தோட எக்சாம் முடிஞ்சிடுச்சாம் மாறா.. நான்தான் நைட் டைம்ல கிளம்பவேணாம்னு சொல்லிட்டேன்.. இப்போ காலைல கிளம்பியிருப்பா..” என்று ராஜன் சொல்ல..
மாறனுக்கு அழைப்பு வர.. ‘ஹேய் லாவி.. இப்போதான் உன்னைப்பத்தி பேசிட்டிருந்தோம்.. கிளம்பிட்டியா..?” என கேட்க..
‘கிளம்பிட்டேன் மாமா.. ஈவ்னிங் வந்திடுவேன்..” என்றாள் லாவன்யா.
அனைவரும் விருந்துண்டுகொண்டிருக்க.. அமுதா மட்டும் தன் வீட்டிலிருந்து எடுத்து வந்த இட்லியை சாப்பிட்டுகொண்டிருந்ததை மிகுந்த வேதனையோடு ராஜன் பார்க்க.. கணவனை உணர்ந்த தேவி..
‘நந்தினியோட வளைகாப்பனைக்கே.. நாம கொண்டு வந்த சாப்பாட்டை அவங்க சாப்பிடல..” என்று சொல்ல.. தெரியும் என்பதாய் ராஜன் வேதனையோடு தலையசைக்க..
‘ஏதும் அறியா ஒரு ஏழைப்பொண்ணுக்கு.. இரண்டு வருசமா வாழ்க்கைன்னா இதுதான்னு காமிச்சிட்டு.. இத்தனை வருசம் நிராதரவா விட்டுட்டு.. இப்போ எதுக்கு இப்படி பார்த்திட்டிருக்கிங்க..?
மாமா மிரட்டினதால ஊரைவிட்டு போனதாக்கூட இருக்கட்டும்.. நமக்கு கல்யாணம் ஆகவும்தான உங்க வாழ்க்கைல இருந்து மொத்தமா விலகனும்னு முடிவெடுத்திருப்பாங்க..? வேற ஒரு பொண்ணா இருந்தா கைக்குழந்தையோட வந்து ஊரையே நாரடிச்சிருப்பாங்க..
இருபத்தஞ்சி வருசமா வாழ்க்கையோட தனியா போராடியிருக்காங்க.. இத்தனை வருசம் கழிச்சு.. பத்திரமாத்து பத்தினிதெய்வமா நந்னியோட வரவும்தான இத்தனை பரிதாபம்..?
உங்களால மொத்தமா வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கிறாங்க.. அவங்க கண்ணு முன்ன நாம குடும்பமா வாழ்ந்துட்டிருக்கோம்.. இந்த நிலைமைல அவங்க இந்த அளவுக்கு தேறிவந்ததே பெரிய விசயம்..
எந்த தனிமை அவங்களை துரத்துச்சோ.. அந்த தனிமைதான் இப்போ அவங்களை அரவணைக்குது.. அதையும் கெடுக்கப்போறிங்களா..?” எனக் கேட்க.. வேதனையோடு ராஜன் கண்கலங்க..
கம்பீரம்.. கன்னியம்.. சுயம்.. தன்மானம்னு இதெல்லாம்தான் அவங்களை நிமிர்வோடு வாழவச்சிட்டிருக்கு.. இப்படி பரிதாபப் பார்வைப் பார்த்து திரும்பவும் அவங்களை தோற்க்கடிச்சிடாதிங்க..” என்று கோபத்தோடு சொல்ல..
‘தேவி.. ” என்றார் கண்ணீரோடு இறங்கிய குரலில்.
தன்னை சமன்படுத்திய தேவி.. ‘இப்போதான் லாவண்யாகிட்ட நல்லா பேச ஆரம்பிச்சிருக்காங்க.. மஞ்சரிய கூட்டிட்டு வரப்போகன்னு மனோகிட்டயும் நல்லாதான் பேசறாங்களாம்.. உங்ககிட்டயிருந்து மட்டும்தான் மொத்தமா தள்ளியிருக்க நினைக்கிறாங்க..” என்று சொல்ல..
ராஜன் தலைகுனிய.. ‘எத்தனை நம்பிக்கையிருந்திருந்தா.. கல்யாணத்துக்கும் முன்னமே உங்களோட வாழ்ந்திருப்பாங்க..? எத்தனை அன்பை காட்டியிருந்திங்கனா.. உங்களோட இவ்ளோ பெரிய துரோகத்தை மன்னிச்சி.. இந்த தேவி புருசனை மறக்கவேண்டி அவங்களுக்கு அவங்களே தண்டனை கொடுத்துக்கிட்டு.. நல்ல சாப்பாடு கூட சாப்பிடாம இருந்திருப்பாங்க..?
இத்தனை வருசமா அவங்க வாழ்ந்த வாழ்க்கையை எனக்கு இப்போ நினைச்சாலும் கண்ணைகட்டுது.. இத்தனை வருசமா உங்களை மறக்க முடியாம தோத்திட்டிருந்தவங்க… இப்போதான் தன்தோல்விய மறந்து உங்களை ஜெயிக்க ஆரம்பிச்சிருக்காங்க… அதுக்கான மாற்றம்தான் இப்போ அவங்க வாழ்ற வாழ்க்கை.. இனியாவது அவங்க ஜெயிக்கட்டும்.. வாங்க..” என்று சொல்லி ராஜனின் கைபிடித்து அழைத்துசென்றார்.
சற்று நேரத்தில் பெரிய கேக்கோடு வந்த சரவணன்.. ‘மேம் அப்பாயின்மண்ட் ஆர்டர்..” என்று சொல்லி அமுதாவின் காலில் விழுந்தவன்.. ‘இன்னைக்கு நீங்க என்னை ஆசிர்வதிச்சாதான் எழுவேன்..” என்றான் உரிமையாக.
விசயம் புரிந்த அமுதா .. ‘தீர்க்காயுசா இருப்பா.. முதல்ல எழுந்திரி..” என்றார் சந்தோசத்தோடு.
‘என்ன சரவணா..?” என்றாள் சோபனா..
‘ப்ளஸ் டூ குவாலிபிகேசனை வச்சி ஸ்டாப்செலக்சன் எழுதியிருந்தேன்.. வேலை கிடைச்சிடுச்சி.. மேம்தான் கைட் செய்தாங்க.. ” என்றான் உற்சாகமாக.
‘சூப்பர் சரவணா.. வாழ்த்துக்கள்..” என்றாள்.
‘தேங்ஸ்க்கா..” என்றான்.
சரவணனிற்க்கு.. வேலை கிடைத்த விசயம் அனைவருக்கும் பரவ.. அனைவருமே பெருமையாய் பார்த்தனர் அமுதாவை.
‘சரவணா.. சின்னைய்யா அம்மாகிட்டல்லாம் ஆசிர்வாதம் வாங்கிக்க..” என்று குமார் சொல்ல.. சரவணன் ராஜனிடம் செல்ல..
தன் காலில் விழ வந்தவனை தடுத்த ராஜன்.. ‘யார் கால்லயும் விழுந்து.. உன்னை நீயே கீழ்படுத்திக்கக்கூடாதுன்னு உன் மேம் சொல்லிருக்காங்கதான..? உன் மேம் தவிர.. வேற யார் கால்லயும் விழாத..” என்றார் சந்தோசமாக.
‘வாவ்.. அம்மும்மா.. கலக்கிட்டிங்க போங்க..” என்று சந்தோசித்தாள் ராஜநந்தினி.
———————————–
ஐந்து வருடங்களுக்கு பிறகு..
லாவண்யாவிற்கு திருமணம் முடிவானதும்.. நான்கு வருடங்களுக்கு பிறகு லாவண்யாவோடு அமுதா வீட்டிற்கு வந்தார் தேவி. சண்டையேது போடுவார்களோ என்ற பயத்தோடுதான் வந்தார்.
தேவியின் நினைப்பிற்க்கு மாறாக.. ‘லாவிக்குட்டி.. வா.. வா..” என்று சந்தோசமாக வரவேற்ற அமுதா.. ‘வா தேவி..” என்றார் இயல்பாக.
ஆச்சர்யமடைந்தவராய் உள்ளே போனார் தேவி. அமுதாவின் புதிய அறையை இன்றுதான் நோட்டமிட்டார்.
தேவியின் மனமறிந்து.. ‘மாறன்தான் எல்லாம் செய்தாப்ல.. லாவி சொல்லிருப்பாளே..” என்றார் பெருமையாக.
‘ம்ம் சொன்னா.. நேர்ல பார்க்க இன்னும் அழகாயிருக்கு..” என்றார் தேவி.
‘உக்காரு..” என்றதும்.. என்ன விசயம் என்பதுபோல் அமுதா தேவியைப் பார்க்க.. தேவி லாவண்யாவைப் பார்க்க..
‘சரி.. நான் வெளில போறேன்..” என்று லாவண்யா வெளியேற எத்தணிக்க..
‘வெளில போகவேணாம் லாவி இங்கையே உக்காரு..” என்று லாவண்யாவிடம் சொன்னவர்.. ‘எதுன்னாலும் லாவண்யா முன்னாடியே பேசு..” என்றார் தீர்க்கமாக.
சற்று நேர அமைதிக்குப் பிறகு.. ‘லாவிக்கு கல்யாணம் செய்யப்போறோம்.. மாறன் சொன்னாப்லயா..?” என்று தேவி கேட்க..
ஆமாம் என்பதாய் தலையசைத்தார் அமுதா.
‘அடுத்தவாரம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க உறுதி பண்ண வராங்க..” என்று சொல்லி தயங்க.. தம்மை அழைக்க வந்திருக்கிறாள் என்ற விசயத்தை புரிந்துகொண்ட அமுதா.
‘டீ குடிக்கிறியா..?” என்றார்.
‘நீங்க தருவிங்களோ மாட்டிங்களோன்னு குடிச்சிட்டுதான் வந்தேன்..” என்று தேவி சொல்ல.. முறைத்த அமுதா..
‘டீ கூட குடுக்கமாட்டன்னு என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும் என்கிட்ட எதை எதிர்பார்த்து வந்த..?” என்று சிறு எரிச்சலோடு கேட்க..
தேவிக்கும் கோபம் வந்தாலும்.. முயன்று அடக்கியவராய்.. ‘எனக்கு எதுவும் செய்யலன்னாலும்.. லாவிக்கு செய்விங்கன்னு எதிர்பார்த்து வந்தேன்..” என்று சொல்ல..
லாவண்யா என்றதும் கோபம் குறைய.. முகமும் இலகுவானது. இருவருமே சற்று நேரம் அமைதி காக்க..
‘உன்மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல தேவி.. அந்த நேரம் உன்மாமனாரைப் பார்க்க நான் வராமலிருந்திருந்தா லாவண்யா மனசில அதுவே பெரிய வேதனையா தங்கிடும்னுதான் அன்னைக்கு வந்தேன்.. லாவண்யாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்தான்.. அதுக்காக ராஜனோட இரண்டாந்தாரமா என்னால சபையில வந்து உக்கார முடியாது..” என்றார் உறுதியாக.
தேவியின் முகம் வாட.. ‘என் மாப்பிள்ளையும் நந்துவும் நான் இல்லாத குறையை போக்கிடுவாங்க..” என்றார் தன்மையாக.
‘ம்ம்..” என்று பெருமூச்சிழுத்து.. ‘ஏற்கனவே முடிவெடுத்திட்டிங்க போல.. இனி அதுலயிருந்து மாறிட்டிங்கனா.. கிழக்க உதிக்கிற சூரியன் மேற்க்க இல்ல உதிக்கும்..” என்று அமுதா மனமறிந்து சொல்ல..
‘என்னை புரிஞ்சிக்குவல்ல லாவண்யா..?” என்று இலகிய குரலில் அமுதாகேட்க..
‘அமுதாம்மாவை கஷ்டப்படுத்த வேணாம்.. அவங்களுக்கு இதுல விருப்பமிருக்காதுன்னு லாவி சொன்னா.. நான்தான் கேட்டு பார்ப்போமேன்னு வந்தேன்..” என்றார் தேவி.
‘அதான..? என் லாவிகுட்டி என்னை புரிஞ்சிக்காம இருப்பாளா..?” என சந்தோசித்து..
‘இருடா.. உனக்கு மட்டும் டீ வச்சி தரேன்..” என்று அமுதா தேவியைப் பார்த்தவாறே சிரிப்போடு சொல்ல..
‘உங்க விசயத்தில நான் என்ன செய்தாலும் கடைசியா நீங்க தான ஜெயிக்கிறிங்க..? இப்பவும் நானே தோத்துப்போறேன்.. டீ வைங்க குடிக்கிறேன்..” என்று முறைப்போடு தேவி சொல்ல.. தேவியின் முறைப்பிற்கு சிரிப்பை பதிலாய் தந்த அமுதா டீ கொடுக்க.. டீயைக் குடித்ததும் தேவி கிளம்ப..
‘அமுதாம்மா.. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க..” என்று லாவண்யா அமுதாவின் காலில் அடிபணிய.. சற்றும் எதிர்பார்க்காத அமுதா.. ‘தீர்க்காயுசா இருடா..” என்று சந்தோசத்தோடு வாழ்த்தி.. நந்தினிக்கு போலவே நெற்றிமுத்தம் வைத்து கன்னம் நீவி திருஷ்டி கழித்து நிறைந்த மனதோடு அனுப்பிவைத்தார்.
———————————————–
லாவண்யா ஜித்தேந்திரனின் திருமணம் முடிந்து இரண்டுநாள் முடிந்திருக்க.. மதுரையிலிருந்து இன்றுதான் அனைவரும் கள்ளக்குறிச்சி வந்திருந்தனர். இன்று மாலையே வரவேற்ப்பு நிகழ்ச்சியிருப்பதால் அனைவரும் ஓய்வெடுத்துக்கொண்டிருக்க.. மாறன் ராஜன் மட்டும் வழக்கம்போல் பேச்சுவார்த்தையில் ஆழ்ந்திருக்க.. முறைப்போடு அவர்களிடம் வந்து நின்றாள் லாவண்யா.
‘ஓய்.. கல்யாணப்பொண்ணு என்ன முறைப்பு..? போய் ரெஸ்ட் எடு.. அப்போதான் ஈவ்னிங் கொஞ்சம் ப்ரஸ்சாயிருக்கும்..” என்று மாறன் அக்கறையோடு சொல்ல..
‘எல்லாரும்தான மாமா டையர்டா இருக்கோம்..? நீங்களும் போய் கொஞ்சநேரம் படுங்க..” என்றாள்.
நந்தினியையும் மாறனையும் இரண்டு நாட்களுக்கு ராஜன் இங்கேயே தங்க சொல்லியிருக்க… ஹாலில் உள்ள சோபாவில் மனோவின் நெஞ்சின்மீது மாறனின் செல்லமகள் படுத்துறங்கியிருக்க.. நந்தினியும் மாறனின் ஒன்றரைவயது கமலேசும் தண்டபானியின் அறையில் உறங்கிக்கொண்டிருந்தனர்.