நிஜம் – 22
இனி அங்கே தன் பேச்சு எடுபடாது என புரிந்தவராக கடைசி முறையாக அன்புக்கரசியை பார்த்தவர்,
“அன்பு இந்த தேனிலவு எல்லாம் தேவையா?….” என கேட்க,
“நான் எந்த நிலவ கண்டேன்? எனக்கு தேனும் தெரியாது, நிலவும் தெரியாது. என்னமோ அஞ்சாறு நிலவுக்கு போயிட்டு வந்த மாதிரி என்னை கேட்கறீங்க? நான் பாக்க்கறதெல்லாம் நம்ம வீட்டு மொட்டை மாடி நிலவத்தான்….” என்று அன்பு கேட்டதும் கப்பென்று வாயை மூடிக்கொண்டார் முத்துவேல்.
தாயின் பேச்சில் வெடித்து வந்த சிரிப்பை மென்றவனாக வாசுதேவகிருஷ்ணன் நிற்க மருதுவேலோ வாயே திறக்கவில்லை.
“ஹ்ம்ம், அப்ப போய்த்தான் ஆகனுமா?…” என்று மீண்டும் கேட்க,
“கூறுகெட்ட மனுஷன், அதுக போறதுக்கு இந்த மனுஷனுக்கு வயிறெரியுது…” என்று பல்லை கடித்த அன்புக்கரசி,
“ஹ்ம்ம், என்னமோ கேரளாவாம், தண்ணி வீடாம். எனக்கும் தான் ஆச. ஆனா நான் நினைச்சா ஆச்சா? கூட்டிட்டு போற மகராசனுக்கு மனசு இருக்கனுமில்ல. எம்புள்ளைங்களாச்சும் பாத்துட்டு வரட்டும். நாலு இடம் போனாத்தான் பொண்ணுங்களுக்கு வளவுசுளிவு தெரியும்…” என்றவர்,
“நீங்க உக்காருங்க. உங்களுக்காக பக்கோடா பண்ணிருக்கேன். சூடா பொரிச்சு கொண்டுவாரேன்…” என முத்துவேலை பேசவிடாமல் அன்புக்கரசி அடுக்களை பக்கம் திரும்ப,
“அன்பு, நான் வருவேன்னு தெரியுமா உனக்கு?…” என ஆவலாய் கேட்டார் மகன்களை மறந்து.
“ஆனாலும் அப்பா அப்பப்ப நம்மளை மறந்துடறார். பின்றார் போ. பாரேன் அம்மா தேடிருப்பாங்களோன்னு நினைக்கிறதை…” என மருதவேலின் காதை கடித்தான் வாசுதேவகிருஷ்ணன்.
“நீ வேற அத்தை வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டதால அம்மா கோவமா இருக்காங்கன்னு வந்தவரு. இப்ப கோவம் போயிருச்சான்னு பார்ப்பாரா இருக்கும்…” என்று மருதுவும் சொல்ல,
“நீ கூட அ-னா ஆ-வன்னா சொல்ல ஆரம்பிச்சுட்டடா அண்ணா…” என்று வாசு கிண்டல் செய்ய,
“என்னது? ஏன் நான் பேசுவேனே?…” என மருது புரியாமல் பார்க்க,
“அந்த அ-னா ஆ-வன்னா இல்லை. இன்னைக்கு நீ பேசின பாரு. வாழ்க்கை பாடத்துல அ-னா ஆ-வன்னா…” என்றவனின் விளக்கத்தில் தம்பியை முறைத்தான் மருதவேல்.
“சரி விடு. அங்க பார்ப்போம்…” என சொல்லி பெற்றோரை பார்க்க,
“என்னமோ போங்க, மனசு கிடந்து அடிச்சுக்குச்சு. அதான் உங்களை நினைச்சு புள்ளைங்களுக்காச்சும் செஞ்சு குடுப்போமேன்னு தான் செஞ்சேன். இன்னும் போட ஆரம்பிக்கலை. நல்லவேளை வந்துட்டீங்க…” என வேகமாய் சென்றிட முத்துவேல் முகத்தில் மத்தாப்பூ பூக்கள்.
“ம்க்கும், நீயும் தான் இருக்கியே. பாரு அவருக்கு சந்தோஷத்தை…” என மீண்டும் அண்ணனை வாரினான்.
முத்துவேல் சென்று அந்த சோபாவில் அமர்ந்து கொள்ள வாசுதேவகிருஷ்ணன் அபூர்வாவை பார்த்து “அவருக்கு சாப்பிட ஏதாவது எடுத்து வை” என்று வாயசைக்க உடனே பலகாரங்களை எடுத்து கொண்டுவந்து வைத்தாள் அபூர்வா. அதில் தேன்மிட்டாயும் அடக்கம்.
“உங்களுக்கு பிடிக்கும்னு தான் அம்மா செஞ்சாங்க மாமா…” என்று வேறு அபூர்வா சொல்ல பதில் சொல்லமுடியாமல் மனைவியை பார்க்க அன்புக்கரசியோ கருமமே கண்ணாக வெங்காய பக்கோடாவை எடுக்க பதம் பார்த்துக்கொண்டு இருந்தார்.
“இவளுக்காக ஒரு தேன்மிட்டாய வாங்கிட்டு வந்துட்டு, இப்ப இவ என் மானத்தை வாங்கிட்டா” என மனதினுள் அன்புக்கரசியை வைதவர் அதில் ஒன்றை எடுத்து வாயில் போட்டு சுவைக்கவும் மறக்கவில்லை.
மேலும் ஒரு அரைமணிநேரம் போல இருந்தவரிடம் வீட்டை பற்றி சொல்ல சொல்லி அபூர்வா கணவனிடம் சொல்ல,
“இப்பத்தான் அவரே மனசு இறங்கின மாதிரி தெரியுது. இப்ப பார்த்து வீட்டை பத்தி சொன்னா கோபம் அதிகமாகிடாதா? அம்மாட்ட கேட்டுப்போம். போய்ட்டு வந்து ஒருநாள் நேர்ல போயி சொல்லிடுவோம்…” என்று சொல்லிக்கொண்டிருக்க அபூர்வாவை தேடி உள்ளே வந்த அன்புக்கரசியிடம்,
“அம்மா, வீட்டை பத்தி இப்பவே அப்பாட்ட சொல்லனுமா? ஊருக்கு போய்ட்டு வந்து சொல்லட்டுமா?…” என கேட்டான் வாசுதேவகிருஷ்ணன்.
“நீ என்ன நினைக்கிற?…” என மகனிடம் கேட்க,
“போய்ட்டு வந்தே சொல்லலாமேன்னு தோணுது. இல்லைன்னா இதுக்கும் சேர்த்து சண்டை போடுவார். ட்ரிப்பே கேன்சல் ஆனாலும் ஆகிடும். இப்ப தான் அண்ணனுக்கும் போகனும்னு ஒரு எண்ணம் வந்திருக்கு…” என சொல்ல,
“அப்ப அப்படியே செஞ்சிரு. இதுக்கு என்கிட்ட கேட்கனுமாக்கும்?…” என்றவர் அபூர்வாவையும் வாசுதேவகிருஷ்ணனையும் மாறி மாறி பார்த்தவர்,
“உங்களுக்கு ஒன்னும் சங்கட்டமில்லையே?…” என கேட்கவும் அவரின் கையை பிடித்துக்கொண்ட அபூர்வா,
“என்னத்தை இதெல்லாம்? இப்படியெல்லாம் நீங்க நினைக்காதீங்க. இதுதான் எங்களுக்கு சங்கடமா இருக்கும்…” என சொல்ல,
“இப்பத்தான் கல்யாணம் ஆகிருக்கு. கூடவே பெரியவனையும் கூட்டிட்டு போகனும்னு…” என்றவருக்கு எப்படி சொல்வதென்றே தெரியவில்லை.
“அம்மா, நானா தான் அவனை கூப்பிட்டேன். நீங்க சும்மா இருங்க…” என வாசு சொல்ல அவனை விடுத்து அபூர்வாவிடம் திரும்பியவர்,
“பெரியவன் வாசுவை மாதிரி இல்லைம்மா. எங்கனாலும் எங்க கூடவே வருவான், போவான். வியாபாரம் தெரிஞ்ச அளவுக்கு மனுஷங்களை தெரியாது. வேற எதுவும் தெரியாது. அப்படியே அவனை உருவாக்கி விட்டுட்டாரு உன் மாமனார்…”
“இப்பவும் உங்க கூட ஏன் அனுப்பறேன்னா அவனுக்கு தனியா போக தெரியாது. நிஜமாலுமே கூட்டத்தோட எம்புட்டு சவடாலா வேணாலும் இருப்பானே தவிர தனியானா பச்சை பிள்ளை மாதிரி மலைச்சு போயிருவான். வந்தவளும் பாவம் அப்பிராணி…”
பேச பேச அவரின் குரலில் அத்தனை தர்மசங்கடமும் ஒரு இயலாமையும் கூடவே இருந்தது.
“வாசுவுக்கானா அவன் அண்ணனும், அண்ணன் பொண்டாட்டியும். நீயும் அதை ஏத்துக்கும் போது தான் மனசு நெம்பி தள்ளுது. இந்த ஒருவாட்டி அவனுக்கு காமிச்சு குடுத்தா அடுத்து அவனே போக பழகிருவான். புத்தி மட்டும் கற்பூரம் மாதிரி…” என சொல்ல,
“இத்தனை நீங்க சொல்லனுமாத்தை? இப்பன்னு இல்ல, எப்பவும் நாங்க ஒன்னாவே தான் போவோம். நீங்க இதை எல்லாம் நினைக்கவே கூடாது…” என்றவள்,
“போய் மாமாவுக்கு தேன்மிட்டாய் குடுங்க…” என்று கிண்டல் பேச,
“ஏன் குடுக்காம? பாரு வாய் மொத்தத்திலையும் திணிச்சு வீட்டுக்கு கூப்பிட்ட மனுஷனை வாயை திறக்கவிடாம பன்றேன்…” என்று சொல்லிவிட்டு செல்ல சிரிப்புடன் அவரை பார்த்திருந்தவள் திரும்பி கணவனை பார்க்க அவன் ஏதாவது பேசுவான் என நினைத்து நின்றாள்.
பார்த்தவன் பார்த்தபடியே அந்த அறையை விட்டு வெளியேற எதிர்பார்ப்புடன் நின்றவளுக்கு கடுப்பாகி போனது. காலையில் இருந்து அந்த வம்பு செய்துவிட்டு இப்பொழுது கண்டுகொள்ளாததை போல செல்ல அவனை முறைத்துக்கொண்டே வெளியே வந்தாள்.
“கிளம்பு அன்பு. அதான் அவங்க முடிவு பண்ணிட்டாங்களே? வீட்டு பெரியவங்கட்ட கேட்டு முடிவெடுக்கனும்னு எண்ணமில்லை. இனி இங்க பேச என்ன இருக்கு? நல்லபடியா போயிட்டு வரட்டும்…” என்று அன்புக்கரசியை அழைக்க அவருக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை.
“அம்மா இன்னைக்கு இங்க இருக்கட்டும் அப்பா. நாளைக்கு நாங்க கொண்டு வந்து விடறோம்…” என சொல்ல,
“என்னது இன்னைக்கு இங்கயா? அதான் நீங்க எல்லாரும் ஊருக்கு போறீங்கல்ல. அப்பறம் எதுக்குடா அன்பு?…” என முத்துவேல் பதற,
“நாளைக்கு தான போறோம். அதான் இன்னைக்கு எங்க கூட இருக்கட்டும்…” என வாசுதேவகிருஷ்ணன் சொல்ல பல்லை கடித்தவர்,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் கூட்டிட்டு போறேன்…” என்று வம்படியாக நின்றார்.
“அப்ப நீங்களும் இருங்க. இருந்தே கூட்டிட்டு போங்க. யார் வேண்டாம்ன்னா?…”
“கடையை உங்கப்பனா அடைப்பான்?…” என மீண்டும் முத்துவேல் பேச,
“இவரு ஒருத்தரு, எப்பப்பார்த்தாலும் சரியானதை சரியா சொல்லிட்டு அதை நம்மட்ட கேள்வியா வேற கேட்பாரு…” என்று முணுமுணுத்தவன்,
“எங்கப்பா தான் அடைப்பாரு. இப்ப என்னன்றீங்க?…” என்று கேட்க அதில் திகைத்தவர் “ஆமா, நாந்தான அடைக்கனும்” என நினைத்து கோவத்தில் உளறியதை புறம் தள்ளியவராக,
“அன்பு…” என அழைக்க,
“அதான் தங்கச்சி ராத்திரிக்கு சாப்பாடு அனுப்பறேன்னு சொன்னால்ல. அன்பை தேடுவீங்களா நீங்க?…” என்று நொடிக்க,
“இவ என்னடி இவ புரியாம பேசற. தேடாமத்தான் மத்தியானம் தூங்காம கூட கடைக்கு பையன்களை பார்த்துக்க சொல்லிக்குடுத்துட்டு வந்தேனாக்கும்?…” என சட்டென கேட்டுவிட்டு, தான் அவசரப்பட்டு வார்த்தையை விட்டதை உணர்ந்து நாக்கை கடித்தார்.
பிள்ளைகள் கவனித்தனரா என பார்க்க அவர்கள் கவனித்தனர், ஆனால் அன்புக்கரசி தான் கவனித்தும் கவனிக்காததை போல ஏதோ வேலையில் இருக்க,
“எல்லாரும் மூஞ்சியை பார்க்குதுங்க. இவளுக்கு காது கேட்டுச்சானே தெரியலையே?…” என புலம்பியவராக மனைவியை பார்க்க,
“என் மனசு புண்ணா கிடக்குது நேத்து எம்புள்ளைங்களை கண்ணீரும் கம்பலையுமால அனுப்பி வச்சேன்….”
“அதுதான் முடிஞ்சு போச்சே அன்பு…” என முத்துவேல் சொல்ல,
“டேய் அண்ணா, பாரேன் அப்பாவை. வார்த்ததைக்கு வார்த்தை அன்பு அன்புன்னு அம்பு விடறதை. அம்மா தான் அதை கிளீன் போல்ட் ஆக்கிடறாங்க…” என வாசு இங்கே கவுண்டர் கொடுக்க அவன் எங்கே தம்பியின் பேச்சை கேட்டான்?
முத்துவேல் எப்போது கோபமாகி தன்னை கையுடன் இழுத்து செல்வாரோ என்ற யோசனையுடன் நின்று கொண்டிருந்தான்.
“பேசிட்டு பேசிட்டு உங்களுக்கு உடனே முடியுதா? எனக்குல காதுக்குள்ள இன்னும் கேட்டுட்டு இருக்குது…” என்று மூக்கை உரிந்தவர்,
“விமலா…” என அழைக்க,
“மாத்தரை போட்டியா? படபடன்னா வருது?…” என மருமகளுக்கு முன்பு முந்தியிருந்தார் முத்துவேல்.
“நாளைக்கு அதுக சிரிச்ச முகமா ரயில் ஏறுறத பார்த்தாலே எனக்கு போதும். அதுக்கு குடுத்து வைக்கலையா?…” என்று கேட்க,
“அப்பா அம்மா தான் சொல்றாங்கல்ல. நீங்களும் இருங்கன்னு சொன்னாலும் கேட்கலை…” என இளையமகன் சொல்ல,
“எல்லாரும் சேர்ந்துட்டு அவளுக்கு கொம்பு சீவுறானுங்க. இருக்கட்டும் பாத்துக்கறேன். இவ பழைய அன்பாகட்டும், அப்பறம் வச்சிக்கறேன்.” என நினைத்தவராக,
“சரி சரி, புலம்பாத. நாளைக்கு எப்படி வருவ?…” என கேட்க,
“நாளைக்கு நாங்க வருவோம்ப்பா. ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணணும்ல. நாளைக்கு காலைல வரோம்…” என மருதவேல் சொல்ல,
“இம்புட்டு நேரம் வாயில என்ன கொழுக்கட்டை வச்சிருந்தியா?…” என்று பெரியமகனிடம் பாய,
“இப்ப கூட மனுஷனுக்கு நினப்பு எல்லாம் கொழுக்கட்டை மேலதான் இருக்கு போல…” சன்னமான குரலில் தான் அன்புக்கரசி சொன்னார். ஆனால் கேட்ட முத்துவேலோ அரண்டு போனார்.
“நினைப்பேனா கொழுக்கட்டையை” என்பதை போல பார்த்தவர் எதுவுமே பேச முடியாத தன்னிலையை வெறுத்தவராக,
“நாளைக்கு ஆஸ்ப்பத்திரி போறதா சொன்னியே. அங்க போகாம எப்படி வருவ?…” என கேட்க மருதவேல் பதில் சொல்லும் முன் அன்புக்கரசி,
“அங்க போய்ட்டு எனக்கும் பார்த்துட்டு அங்க வரோம். அப்படியே ரயிலேத்தவும் போவோம்…” என சொல்ல,
“இவளை ரயிலேத்த கூட்டிட்டு போய் அப்படியே அவனுங்க கூட்டிட்டு போனாலும் போயிருவானுங்க.” என நினைத்தவராக,
“அங்க எல்லாம் அலைய வேண்டாம். அவங்க என்ன சின்ன பிள்ளைங்களா?…” என்று முத்துவேலும் சொல்ல இருவரும் அப்பொழுதே பிள்ளைகளை அனுப்பவதை போல சண்டையிட்டு நிற்க,
“போதும், நாளைக்கு தான ஊருக்கு. இப்பவே ஏன் ஆரம்பிக்கறீங்க?…” என வாசுதேவகிருஷ்ணன் சொல்லவும்,
“சரி சரி பார்த்து சூதானமா போயிட்டு வாங்க. நான் கிளம்பறேன்…” என முறுக்கிக்கொண்டு திரும்பி செல்ல,
“ராத்திரிக்கு எங்க சாப்பிடுவீங்க? இருங்க தோசை ஊத்தறேன். சாப்புட்டு போவீங்களாம்…” என அன்புக்கரசி சொல்ல,
“இப்பவேவா? பக்கோடா வேற சாப்பிட்டேனே அன்பு…” என்று தான் சொல்லியிருப்பார்.
“சரி கிளம்புங்க. மத்தியானமும் சமைக்கலை. இப்பவாச்சும் என் கையால செய்யலாம்னு பார்த்தேன். ஹ்ம்ம். தங்கச்சி சாப்பாட்ட ஒத்த நாளு சாப்பிட்டதுக்கே இந்த பாடா? அன்பு உன் நிலைமை இனி இதான்டி…” என்று சொல்லி புடவை தலைப்பை வாயில் வைத்துக்கொண்டு தலையை தொங்கப்போட முத்துவேலுக்கு தான் தலை சுற்றியது.
“சரி வை. சாப்பிட்டே போறேன்…” என சொல்லி சென்று சாப்பிட அமரவும் வேகமாய் அபூர்வாவிடம் திரும்பியவர்,
“லட்சுமி போயி அடுப்ப பத்த வை. மாமா வந்தா என்னமோ தோசை ஊத்துவேன்னு சொன்னியே. அதை ஊத்தி கொண்டு வா…” என்றவர் வேகமாய் தண்ணீரை பிடித்து தம்ளரில் ஊற்ற,
“நீ தான ஊத்துறேன்னு சொன்ன? இப்ப எதுக்கு அந்த பொண்ணை சொல்ற?…” என யாருக்கும் கேட்காத குரலில் முத்துவேல் மனைவியிடம் கிசுகிசுக்க,