அத்தியாயம் — 6
‘சித்தா… சித்தா..” என்று சோனு விடாமல் கதவை தட்டிக்கொண்டே இருந்தாள்.
‘வந்துட்டேன்.. வந்துட்டேன்.. “ என்றபடி கதவைத்திறந்தான் சூர்யா. ‘சித்தா.. நீங்க இவ்ளோ நேரம் தூங்கினதுக்கு நான் உங்களை பனிஸ் பண்ணபோறேன்.. இன்னைக்கு நீங்க ஹாஸ்பிட்டல் போகக்கூடாது..” என்றாள் கறாராக.
‘அச்சோ.. இது ரொம்ப பெரிய பனிஸ்மெண்ட்.. ப்ளீஸ்டா பொண்ணுமா.. வேற பனிஸ்மெண்ட் வேண்ணா கொடு.. ஆனா நான் இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போயே ஆகனும்..” என்றான் கெஞ்சலாக.
‘ம்ஹ_ம்.. விடாத சோனு.. நாம எவ்ளோ தூரத்தில இருந்து வந்திருக்கோம்.. நம்மளை விட உங்க சித்தாக்கு ஹாஸ்பிட்டல்தான் முக்கியமான்னு கேளு..” என எடுத்துக்கொடுத்தாள் கீர்த்தி.
‘அண்ணி ப்ளீஸ்.. நான் வேண்ணா இன்னைக்கு முடிஞ்சவரைக்கும் சீக்கிரம் வரப்பார்க்கிறேன்.. நீங்க பொண்ணுமாகிட்ட சொல்லுங்க..” என்று கெஞ்சினான்.
‘யார் சொன்னாலும் நான் ஒத்துக்கமாட்டேன்.. எனக்கு உங்களோடதான் இருக்கனும்..” என்று பிடிவாதமாய் சொன்னாள் சோனா.
உன்னை மாதிரியே ஒரு குட்டிப்பாப்பாக்கு ஏழு வயசுதான் ஆகுது. சர்ஜரி முடிஞ்சி.. இன்னைக்குத்தான் அவங்களை டிஸ்ஜார்ஜ் பண்ணனும்.. நான் இன்னைக்கு போகலைன்னா.. நாளைக்கு சன்டே கழிச்சி அப்புறம் மன்டேதான் அந்த பாப்பா வீட்டுக்கு போகமுடியும்.. ஏற்கனவே அந்த பாப்பா பதினைஞ்சு நாள் பக்கம் ஹாஸ்பிட்டல்லதான் இருக்கு.. பாவம் இல்ல அந்த பாப்பா..?” என்று சோனாவிடம் முட்டிபோட்டு கெஞ்சவும்..
பிறகுதான் மனமிறங்கியவளாய்.. ‘சீக்கிரம் வந்திடனும்…‚” என்று ஆர்டர் போல் சொன்னாள். தினமும் வீடியோ காலில் பேசும் குழந்தைகளுக்கு நேரில் பார்க்கவும் சூர்யாவை விட்டு அகலமுடியவில்லை.
‘பர்மிசன் கொடுத்ததுக்கு தேங்க்ஸ் பொண்ணுமா.. கண்டிப்பா சீக்கிரம் வந்திடறேன்..” என்று சோனுவிற்கு முத்தமிட்டு சூர்யா கிளம்பவும்.. தியா முகத்தை சுருக்கி போகவேண்டாம் என்பதுபோல் வேகமாய் தலையாட்டினாள். ‘குட்டி பொண்ணுமா.. ம்ம்…” என்று முத்தமிட்டு தியாவையும் சிரிக்க வைத்த பின்பே கிளம்பினான்.
ஹாஸ்பிட்டல் சென்றதும் தன் கடமைகளையெல்லாம் முடித்துவிட்டு.. தனது தனிப்பட்ட அறையில் அமர்ந்தவன்.. ஊனமுற்றோர் விடுதிக்கும் முதியோர் இல்லத்திற்கும் போயே மூனுமாசம் பக்கம் ஆகுது.. தன் முகத்தை பார்த்துவிட்டால் அங்கிருக்கும் குழந்தைகளின் ஆர்ப்பரிப்பும்.. முதியோர் இல்லத்தில் வசிக்கும் பெரியவர்களின் அன்பான பார்வையும் சூர்யாவை அத்தனை சந்தோசப்படுத்தும்.. வழக்கமாய் கொடுக்கும் பணத்தை மாதாமாதம் அனுப்பிவிடுகிறோம்தான்.. ஆனாலும் அங்கிருப்பவர்கள் தன் வரவை எதிர்பார்த்து காத்திருப்பார்களே என யோசித்திருந்தான். மருத்துவமணையிலிருந்து நேராக அவ்வில்லங்களுக்கு செல்வது அவனின் வழக்கமல்ல.. வீட்டிற்கு சென்று தன்னை சுத்தப்படுத்திய பின்னரே புது உற்சாகத்தோடு கிளம்புவான்..
இன்று இல்லத்திலுள்ள குழந்தைகளை பார்க்கும் எண்ணம் தோன்ற டைம் பார்த்தான்.. பனிரெண்டைத்தான் காட்டியது.. மருத்துவமணையில் முக்கியபணி முடிந்துவிட்டது.. நம்ம சோனுகுட்டியும் சீக்கிரம் வரசொன்னா.. வீட்டிற்கு போய் சோனு தியாவையும் கூட்டிட்டு போலாம் என நினைத்து கிளம்பினான். அரைமணிநேர கார் பயணத்திற்கு பிறகு காரைவிட்டு இறங்கியவன் திடுக்கிட்டான். ஏனென்றால் அவன் இறங்கிய இடம் பிரசாத்தின் வீடாகும். இங்கு ஏன் வந்தோம் என நினைத்தவன் அவசரமாக மீண்டும் காரில் ஏறி வேகமாக கிளப்பினான் காரை.
காரில் போகும்போதும்.. இந்த ஆதவன் நேத்துதான பிரசாத் வீட்டுக்கு கொஞ்ச நாளைக்கு போகவேணாம்னு சொன்னான்.. என நினைத்து.. ‘ச்சே..” என்று தலையை குலுக்கிக்கொண்டான்.
அப்படியே போனாலும் எதைத்தேடி அங்க போறேன்னு யோசிக்க சொன்னானே.. என்று சற்று நேரம் யோசித்தவனுக்கு எதுவும் பிடிபடாமல் போகவும்.. அமைதியாக வீடு வந்து சேர்ந்தான்.
‘பொண்ணும்மா… எப்படி நான் சொன்னபடியே சீக்கிரம் வந்துட்டேன்..” என்று சோனுவை தூக்கிக்கொண்டான். ‘தித்தா..” என்று தூக்கசொல்லி தியா கையை நீட்டவும்.. ‘ஆதவா.. இந்த சின்ன பொண்ணுமா என்னை சித்தான்னு கூப்பிட்டுச்சிடா..” என்று சந்தோசித்தான்.
‘அப்படியா..‚” என்று ஆச்சரியப்பட்டவன்.. ‘என்னடா.. சீக்கிரம் வந்திட்ட..?” என்றான் ஆதவன்.
‘என்னோட டீன் சீக்கிரம் வரசொல்லி ஆர்டர் போட்டாங்க.. அதுனால சீக்கிரம் வந்திட்டேன்.. “ என்று சிரித்தபடியே சோனாவை பார்த்து சொன்னான்.
‘ஈவ்னிங் அம்மாவை கூட்டிட்டு வெளில போறோம் சூர்யா..? நீயும் வரியா..?” என்றான் ஆதவன்.
‘குட்டிமாங்களை கூட்டிட்டு இல்லத்துக்கு போலாம்னு பார்த்தேன் ஆதவா.. அங்க போயே மூனுமாசம் பக்கம் ஆகுது..” என்று சூர்யா சொல்ல..
‘நீயாவது மூனுமாசம் இல்லத்துக்கு போகாம இருக்கிறதாவது..?” என்று நம்பாத பார்வை பார்த்தான் ஆதவன்.
‘உண்மைதான் ஆதவா.. இந்த திலகவதி டென்சன்ல ஹாஸ்பிட்டல் தவிர்த்து வேற எங்கையும் போறதில்ல..” என்று தன்னை மறந்து சூர்யா சொல்ல..
ஓ.. கதை இத்தனை ஸ்ட்ராங்கா போகுதா என நினைத்தவன்.. ‘இல்லத்துக்கு நாளைக்கு போய்க்கலாம்.. இன்னைக்கு பார்க்குக்கு போலாம்.. சோனுக்கு அங்க ரொம்ப பிடிக்கும்..” என்றான் ஆதவன்.
‘சரி.. இல்லத்துக்கு நாளைக்கே போகலாம்..” என்று விட்டுகொடுத்தவன்.. ஒரு பத்து நிமிசத்தில ரெப்ரஸ் ஆகிட்டு வந்திடறேன் என்று தனதறைக்குள் போனான். அனைவரும் கிளம்பி அருகில் உள்ள பூங்காவிற்கு சென்றனர். வீட்டில் இருந்து கிளம்பும்போது சூர்யாவின் முகத்தில் இருந்த சந்தோசம்.. பூங்காவிற்கு வந்து ஒரு மணிநேரத்திலேயே காணாமல் போனது.
‘சூர்யா.. ஏன் இப்படி டல்லடிக்கிற..? என்று கீர்த்தி கேட்கவும்.. ‘ஒன்னுமில்ல அண்ணி..” என்று மழுப்பினான். அங்கு ஜோடி ஜோடியாய் இருந்த காதலர்கள்.. புதுமனத்தம்பதிகள் என்று அவர்களிடமே சூர்யாவின் கண்கள் நிலைத்திருந்தது.
தன் மகனின் பார்வையை உணர்ந்த கமலம்.. ‘நீயும் கல்யாணம் பண்ணியிருந்தா உன் பொண்டாட்டிகூட இப்படி சந்தோசமா இருந்திருக்கலாம்..” என்று சொல்லி ஏமாற்றமாய் ஒரு பெருமூச்சை வெளியனுப்பினார்.
தன் அம்மாவின் பேச்சை கண்டுகொள்ளாத சூர்யா.. ‘பிரசாத் உயிரோட இருந்திருந்தா திலகவதியும் சந்தோசமா இருந்திருப்பாங்க இல்ல..? பாவம்டா அவங்க.. இந்த மாதிரி சந்தோசம்னா என்னன்னே அவங்களுக்கு தெரியாது..” என்று ஆதவனிடத்தில் தானாய் புலம்பினான்.
அதிசயமாய் தன் தம்பியை பார்த்தவன்.. அவன் சொல்வதை பெரிதாய் காட்டிகொள்ளாமல் ‘சூர்யா.. தியாவை கொஞ்சம் பிடி..” என்றான்.
சூர்யா.. தியாவை ஆதவனிடத்திலிருந்து வாங்கி தன் மார்போடு புதைத்துக்கொண்டவன்.. ‘பிரசாத் எந்த சந்தோசத்தையுமே அனுபவிக்காம நாட்டுக்காகவே உயிரை விட்டுட்டான்.. ஆனா பிரசாத் மாதிரியான தன்னலமில்லா ஆர்மிமேனோட பாதுகாப்பில இருக்கிற நமக்கெல்லாம்.. அவங்களோட இழப்புக்கான சோகம்.. ஒரு நாள் பரபரப்பான நியூசோட முடிஞ்சிடுது..
பிரசாத்தோட அம்மாப்பாக்குன்னு பார்த்தா.. மகனோட இழப்பு ஈடுகட்ட முடியாத இழப்புதான்னாலும் அவன் இறந்ததுக்கு அப்புறமும்.. அவன் உயிரோட இருந்தா அவங்க அப்பபாம்மாவை எப்படி பார்த்துக்குவானோ.. அதை ஈடுகட்ற மாதிரி பிரசாத்தோட இழப்பீட்டு பணம் அவன் அப்பாம்மாவை கடைசி வரைக்கும் மத்த விசயங்களுக்காக கஷ்டப்பட வைக்காது…” என்று சுற்றிவளைத்து நீளமாக பேசியவன்.. சற்று நேரம் கழித்து..
‘ஆனா.. திலகவதி.. எந்த பாவமும் அறியாத ஒரு சின்ன பொண்ணுக்கு.. பிரசாத்தோட அப்பாம்மாக்கு மாதிரி வெறும் சாப்பாடு மட்டும் போதுமா..?” என்று கண்கலங்கி தன் முகத்தை ஆதவனிடத்திலிருந்து திருப்பிக்கொண்டான்.
‘ஃ பீல் பண்ணாத சூர்யா.. திலகவதின்னு இல்ல.. எத்தனையோ பெண்கள் இந்த நாட்ல இளம் விதவையாவும்.. ஒரு சில பேர் புருசன் இருந்தும் எந்த ஒரு யூசும் இல்லாம.. தான் பெத்த பிள்ளைகளுக்காக வாழ்க்கையை கசப்போட நகர்த்திட்டுதான் இருக்காங்க.. ஏன்..? நம்ம அம்மாவே நம்ம அப்பா போனதுக்கப்புறம் நம்மளை கஷ்டப்பட்டுத்தான வளர்த்தாங்க..? அவங்களுக்கெல்லாம் காசு பணம் கொடுக்கிறதை தவிர நம்மால வேற என்ன பண்ணமுடியும்..?” என்று சூர்யாவை ஆதவன் தேற்ற முயற்ச்சிக்கவும்…
‘நீ சொல்ற மாதிரி இளம்வயசு விதவங்களுக்காக நானும் வருத்தப்படுறேன்தான்.. ஆனா.. ஒரு மனுசன் விதி வந்து செத்துபோய் ஒரு பெண் விதவையாகறதுக்கும்.. நாம செத்துடுவோம்னு தெரிஞ்சே பொண்டாட்டி.. பெத்தவங்க.. பெத்த குழந்தைகள்னு யாரையும் நினைக்காம.. நாட்டுக்காக சண்டை போட்டு ஒரு ஆர்மிமேன் சாகறதுக்கும்.. ஆயிரம் வித்தியாசம் இருக்கு ஆதவா..” என்று திலகவதி மீதான தன் ஒட்டுமொத்த வலியையும் கண்ணில் காட்டி பேசினான் சூர்யா.
‘சரி.. சரி.. நீ வருத்தப்படாத.. நீ சொல்றது நூறு பர்சென்ட் உண்மைதான். நான் ஒத்துக்கிறேன்..” என்று தன்மையாய் சொன்னான் ஆதவன்.
‘இப்படி சும்மா ஒத்துக்கிட்டா போதுமா..? இப்படி ஓடி.. ஓடி சம்பாரிச்சி என்ன பண்ணபோறோம்..? நம்மகிட்ட காசு பணம் இருந்து என்ன யூஸ்..? வாழ்றது ஒரு வாழ்க்கைன்னாலும் ஆர்மில இருக்கிறவங்க நாட்டுக்காக துணிஞ்சே சாகறாங்க.. நம்மளால அது முடியலைன்னாலும்.. அவங்களோட குடும்பத்தில இருக்கிறவங்க சந்தோசமா வாழறதுக்கு நம்மால என்ன முடியுமோ அதையாவது பண்ணனுமில்ல..?” என்று கோபமாக கேட்டான்.
‘கண்டிப்பா பண்ணனும்..‚ உனக்கு எதாவது ஐடியா இருந்தா சொல்லு.. இந்த விசயத்தில நானும் உனக்கு ஹெல்ப்பா இருக்கேன்..” என்று ஆதரவுக்கரம் நீட்டினான் ஆதவன்.
ஆதவனின் பேச்சில் சற்று நிம்மதியானவன்.. ‘திலகாக்கு எதாவது நல்லது பண்ணனும்..‚ அதுக்கப்புறம்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்..” என்று உறுதியாய் சொன்னான் சூர்யா.
‘அது ஒரு பெரிய விசயமில்ல சூர்யா.. இங்கதான் விதவை.. அப்படி இப்படின்னுட்டு இருக்காங்க.. வெளிநாட்ல எல்லாம் மறுமணம் சாதாரணம். ஆனா மறுபடி கல்யாணம் பண்ணிக்க திலகவதி ஒத்துக்கனுமே..? அதுதான் ரொம்ப முக்கியம் ‚ அப்படி திலகவதி ஒத்துக்கிட்டாங்கன்னா.. நான் திலகாக்கு மாப்பிள்ளை பார்க்கட்டுமா..?” என்று சூர்யாவை உற்று நோக்கினான் ஆதவன்.
‘வெளிநாட்டு மாப்பிள்ளையெல்லாம் வேணாம்.. நீ சொல்றமாதிரி மறுமணம் அங்க சாதாரணம்.. அதனால அங்க பார்த்து கல்யாணம் பண்ணிவச்சா… கொஞ்ச நாள் கழிச்சி அவன் திலகவதியை விட்டுட்டு.. வேற கல்யாணம் பண்ணிக்கவும் சான்ஸ் இருக்கு.. அவங்களுக்கு மாப்பிள்ளை பார்க்கிற விசயத்தை நான் பார்த்துக்கிறேன்.. ஆனா.. பிரசாத்தோட அப்பாம்மாதான் இதுக்கு ஒத்துக்குவாங்களா..? மாட்டாங்களான்னு தெரியலை..” என்று கவலைபட்டான்.
இவர்கள் இருவரும் சண்டையிட்டு கொள்கிறார்கள் என்று நினைத்த தியா.. அழ ஆரம்பிக்கவும்.. ‘அச்சோ சின்ன பொண்ணுமா.. சாரிடா.. வாங்க.. அங்க போய் விளையாடலாம்..” என்று அருகில் உள்ள ஊஞ்சலில் போய் ஊக்கார்ந்து ஆடி.. தியாவை சந்தோசப்படுத்தி..
‘ஆதவா.. இந்த பேச்சை இதோடு விடு.. இப்போதைக்கு குழந்தைங்களோட சந்தோசமா இருக்கலாம்..” என்று முடித்துக்கொண்டான்.
அடுத்தநாள் இல்லத்திற்கு போகலாம் என்றெண்ணியவனால் போகமுடியாமல் அவனின் மருத்துவப்பணி அழைக்க.. அடுத்து வந்த பத்துநாட்களும் சூர்யாவின் நாட்கள் பிசியாகவே செல்ல.. குழந்தைகளுடன் கூட நேரம் செலவிடமுடியாமல் போனது.
அன்று பார்க்கில் பேசியதற்க்குப்பிறகு ஆதவனும்.. சூர்யாவும் திலகவதி பற்றி பேச்சே எடுக்கவில்லை. இரண்டு வாரம் தன் குடும்பத்தோடு சந்தோசமாய் இருந்துவிட்டு மீண்டும் ஆறு மாசம் கழிச்சி வரேன்.. என்று சொல்லி ஆதவன் அமெரிக்கா சென்றுவிட்டான்.