அத்தியாயம் – 11
மழையில் நனையும் பனி மலரை போலே
என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே
உலகை தழுவும் நள்ளிரவை போலே
என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே
எனை மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்
மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ… லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்தை தேன் வார்த்ததே மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…
விமானம் வானத்தில் மிதந்தது. அதில் காதலர்கள் இருவரும் காதலில் மிதந்தார்கள். வந்த வேலையெல்லாம் (நேர்முகத் தேர்வுக்குத்தானே வந்தார்கள்!!) முடிந்து பெங்களூர் திரும்பல். ரம்யாவின் சீட் பெல்ட்டாக ரித்விக்கின் கை. முன்பும் இதே நெருக்கத்தில் அவனோடு உட்கார்ந்திருக்கிறாள் ரம்யா. ஆனால் இப்போது நிலமையே வேறாயிற்றே.
அவளது ரோஜாக் கரங்களை தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டு கேட்டான். “ரம்யா….I love you so much. I will love you forever. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம். சாய்ங்காலா என் லவ்வ ரிஜெக்ட் பண்ணீட்டு….. ராத்ரி எப்படி? ஆறு மணி உளகடே என்னாச்சு?” கைக்குள்ளிருந்த ரோஜாப் பூக்களை முத்தமிட்டான்.
ரித்விக்கின் கைகளை இதழால் நனைத்தாள். “ரித்து. நீ காதல்னு சொல்றப்போ எனக்கு உள்ள சந்தோஷமா இருந்தாலும்….. பயம்தான் வந்துச்சு. நீ என் கூட இருக்கும் போது வர்ர சந்தோஷம்… நீ இல்லாதப்ப வருத்தமாகும்னு புரிஞ்சது. நீ இல்லாமப் போயிருவியோங்குற பயத்துல உங்கிட்ட உறுதிமொழி வாங்கனும்னு தான் தோணுச்சு.”
“அந்த பயத்துலதான் காதலைச் சொல்லத் தோணலை. அதுக்குதான் நானும் கேட்டேன். ஆனா நீயும் சொல்லலை. அப்ப நீ முழிச்சது… நான் அழாம இருந்தது பெரிய விஷயம். ஆனாலும் முகத்தை மறைக்கிறது ரொம்பக் கஷ்டமா இருந்தது. உன் பக்கத்துல உட்காந்தா கண்டிப்பா அழுதிருப்பேன். அதுவும் உன்னையைக் கட்டிப்புடிச்சிக்கிட்டே. அதுனாலதான் கார்ல முன்னாடி போய் உக்காந்தேன்.” நேற்றைய தன் நிலையை எடுத்து உரைத்தாள் பெண்.
ரம்யாவின் முகத்தில் விழுந்த முடியை விரலால் ஒதுக்கினான். அவ்வளவு மென்மையாக அவன் இதற்கு முன் எதையும் கையாண்டதில்லை. என்ன? நேற்றா? ஹி ஹி. இது மென்மைங்க. மென்மை. “ரம்யா….எனக்கும் அழுகே பந்த்து. தும்ப கஷ்டா பட்டு அழாம இருந்தேன். அது சரி. பிராமிஸ்னு சொன்னியே. நானு குடுக்கலையே? அது எப்பக் கெடைச்சது?”
“தெரியலடா. ஆக்சிடெண்ட் ஆனப்புறம் ரொம்பவே டிஸ்டர்பா இருந்தேன். அப்ப பயத்துல உங்கிட்டதான் ஒட்டனும்னு தோணிச்சு. அது ஏன்னு எனக்குத் தெரியலை. அப்புறம் ஆட்டோல போறப்போ என்னைப் பாதுகாப்பா வெச்சிருந்தியே…. அப்பதான் நீ என்னை கஷ்டப்பட விடமாட்டன்னு தோணிச்சு. உன்னோட நெருக்கம்… உன்னோட வாசம்… உன்னோட சுவாசம்…. எல்லாத்தையும் புதுசு புதுசா ரசிச்சேன். நீ எனக்கு வேணும்னு… எப்படியாவது வேணும்னு தோணுச்சு. ஆனா என்னோட கேள்விகளுக்கு இன்னமும் நேரடியான பதில் நீ சொல்லலை. ஆனா பிரச்சனைன்னு வந்தா அது உனக்கு மட்டுமல்ல நம்ம ரெண்டு பேருக்கும்னு காதல் உணார்த்திச்சு. உங்கம்மா அழுதாங்கன்னா அத எப்படிச் சமாளிக்கிறதுன்னு நம்ம ரெண்டு பேரும் யோசிப்போம். ஒரு வழி கண்டுபிடிப்போம்னு ஒரு முடிவுக்கு வந்தேன். அப்பவே நீ என்னோட ரித்துவாகிட்ட.
அப்புறம் எப்படி நீ தனியா தூங்குறது? ஆனா உண்மையச் சொல்றேன்….. உன் கிட்ட எப்படிக் காதலைச் சொல்றதுன்னு தெரியாமதான் முத்தத்தால சொன்னேன். அது… முத்தத்துக்குப் பதில் முத்தம்… அதுக்குப் பதில் முத்தம்னு நடந்து மொத்தமும் நடந்துருச்சு. Well…. I liked it. I expressed my love in the best possible way and you reciprocated as a man. I am fine with it. டேய்…. உன்னால என்னை விட்டு எங்கயும் போக முடியாது.” மிரட்டினாள் காதல் பொங்க,
ரம்யாவின் கன்னத்தை ஒரு கையால் தாங்கிக் கொண்டு கட்டை விரலால் இதழ்களை வருடினான். அட…. அதென்ன…அப்படித்தான் பூ பூக்குமா? வெட்கப்பூ..! ஒ ரம்யாவின் முகமாற்றத்தைச் சொன்னேன். படக்கென்று ரித்விக்கின் விரலைக் கடித்து விட்டாள்.
“டேய்…. இது ஃப்லைட்…. எத்தனை பேர் இருக்காங்க. ஒழுங்கா என்னோட கேள்விக்குப் பதில் சொல்லு. அப்புறம் மிச்சத்த வெச்சுக்கலாம். உங்கப்பா கிட்ட சண்ட போட்டுட்டு வந்துருவ. உங்கம்மா அழுதா என்னடா செய்வ?” போலி மிரட்டல் விடுத்தாள் ரம்யா.
“ம்ம்…. சொல்றேன். அம்மா அழுதா…… ம்ம்ம்….. நாம அவங்கள அப்படி அப்படியே ஏத்துக்க தயாரா இருக்கோம். ஆனா ஏன் நம்மள மாதிரியே அவங்க ஏத்துக்க தயாரா இல்லை. நான் உன்னை காதலிக்கிறதுனால, அவங்க என்னை வெறுக்குற மாதிரி ஆகுமா.? நான் என் வாழ்க்கையை அவங்க ஆசிர்வாதம் இல்லாம தொடங்க நினைக்கல, அவங்க என்னைப் புரிஞ்சி நம்மள ஏத்துக்கனும், அவங்க என்னைப் புரிஞ்சி ஏத்துக்குற வரைக்கும், நான் என் அன்ப அவங்களுக்கு புரிய வச்சிட்டே இருப்பேன். அதுவும் இல்லாம அவங்களுக்கான அக்கறையும், அன்பும் எப்பவும் எங்கிட்ட கிடைக்கும் என்பதை சத்தியமா அவங்க ரெண்டு பேர் மனசும் ஏத்துக்கும்.”
“எனக்கு அவங்க வேனும் ஆனா அதுக்காக உன்னை லூஸ் பண்ண முடியாது. முதல்ல நான் உன்னை எனக்கு தக்க வச்சிக்குறேன். அப்புறம் என்னைப் பெத்தவங்களையும் கொண்டு வந்துடுறேன்..” என நீளமாகப் பேச,
“இத இத இதத்தான் நான் அப்ப எதிர்பார்த்தேன். என் மனசும் எதிர்பார்த்துச்சு.. இப்ப எப்படி உனக்கு பதில் தெரிஞ்சதோ. அதே மாதிரி எனக்கும் தெரிஞ்சது மாமா.” என்றாள் கிள்ளை மொழியில்.
“என்ன மாமாவா?” என்றான் ஆச்சரியமாக
“ஆமாண்டா மாமா…. எங்கப் பக்கம் அப்படித்தாண்டா சொல்லுவோம்..” முத்துக் கொட்டிச் சிரித்தாள் ரம்யா.
“மாமா எல்லா பேடா…. ரித்துன்னு கூப்பிடு. அது போதும். நீ மாமான்னா எனக்கு பயந்து வருது” கையெடுத்துக் கும்பிட்டான்.
“மாமா வேண்டாமா… சரி. பேர் சொல்லியே கூப்புடுறேன். ஆனா… அப்பா, அம்மா இருக்குறப்பவும் ரித்துன்னு தான் கூப்புடுவேன் பரவாயில்லையா?” புருவம் உயர்த்தினாள் பெண்..
“சரி… சரி…. கூப்பிட்டா சரி தான்.” இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். சிலிர்த்தார்கள். பின்னே… ரம்யாவின் கன்னத்தில் முத்தம் வைத்தானே.
“Execuse me sir. PDA not allowed inside the flight sir” விமானப் பணிப்பெண் பணிவுப் பெண்ணாகச் சொன்னாள்.
பொய்யாக ஆச்சரியப்பட்டாள் ரம்யா. “Sorry. I didnt know PDA is not allowed inside the flight. My husband doesnt understand all these things. He is always misbhevous and playful. I will ensure he is controled at leaset inside your flight. Is that fine?”
“Thatz fine madam.”
“Thank you” என்று சொல்லிவிட்டு விமானப் பணிப்பெண்ணிற்கு கோவமும் அதை மீறிய பொறாமையும் வரும் வகையில் ரித்விக்கின் இதழ்களில் மெத்தென்று ஒரு முத்தமிட்டாள் ரம்யா.
தொடரும்…
கதையல்ல. ரம்யா ரித்விக்கின் இனிய வாழ்க்கை.
பின்குறிப்பு
எச்சில் பண்டம் விலக்கு
அதில்
முத்தம் மட்டும் விலக்கு
இதுவரை முத்தமிடாதவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி ரித்விக் எழுதிய தமிழ்க்கவிதை.