இரவு ஒன்பது மணியாகவே.. படுக்கப் போகும் போது திலகவதியை சாப்பிட சொல்லத்தான் நினைத்தார் கமலம். ஆனாலும் சாப்பிட்டு சூர்யா வருவதற்க்குள் தூங்கிவிட்டால் என்ன செய்வதென்றும்.. மகன் வரும்வரை காத்திருந்தால்தான் அவனுக்கும் வீட்டில பொண்டாட்டின்னு ஒருத்தி சாப்பிடாம இருப்பாங்கிற நினைப்பு வரும்.. என நினைத்து எதுவும் சொல்லாமல் அமைதியானார்.
இரவு பத்தரை மணிபோல் சூர்யா வர.. திலகவதியை அதிசயமாய் பார்த்தபடி உள்ளே போனான். கால்மணி நேரமாகியும் சூர்யா வராமல் போகவே.. முகம் கழுவ இத்தனை நேரமா என யோசித்திருந்தாள்.
குளித்து வந்தவன் சாப்பிட அமர்ந்து.. ‘நீ சாப்பிட்டியா..?” என்றான். இல்லை.. என்பதுபோல் தலையசைத்தாள்.
‘ஏன் சாப்பிடலை..?” என்று கோபமாக கேட்டதும்.. திலகவதி பயந்துவிட.. அவளின் முகத்தை பார்த்தவன்.. ‘எனக்காக எதிர்பார்க்காதே.. அம்மா சாப்பிடற டைம்க்குள்ள நான் வரலன்னா.. இனிமே எப்பவும் அம்மாவோடவே சாப்பிடனும் புரியுதா..?” என்றான் கோபமாகவே.
சரியென தலையசைத்து சாப்பிட அமர.. என்றுமில்லாமல் இன்று ஆறு தோசை சாப்பிட்டான் சூர்யா. இட்லி தோசை எதுவாகினும் நாலுக்கு மேல் சாப்பிடமாட்டானே.. ஒரு வேளை மதியம் சாப்ட்டிருக்க மாட்டானோ..? என யோசித்திருந்தாள்.
உண்மையில் சூர்யா மதியம் சாப்பிடவில்லைதான். தன் அம்மாவிற்க்காகத்தான் சாப்பிட்டேன் என சொல்லியிருந்தான்.
இன்று காலையிலிருந்து அரைமணிநேரம் கூட சூர்யா ஓய்வெடுக்கவில்லை. ஆக்சிடன்ட் கேஸ்.. இரு குழந்தைகள்.. நான்கு பெரியவர்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.. பிக்னிக் சென்று வரும்வழியில் விபத்தாகிவிட.. ஒரு குழந்தைக்கு பெரிதாய் அடி.. இரண்டு ஆப்ரேசன்.. இரண்டு பெரியவர்களுக்கும் ஆப்ரேசன் செய்ய வேண்டியிருக்க.. மற்றவர்களுக்கு தையல் போடுவதும்.. அதோடு பழைய பேசன்ட்டுகளை பார்வையிடுவதென மிகவும் களைத்து போயிருந்தான்.
சாப்பிட்டு வந்தவன் சத்தென பெட்டில் சரிய.. கதவை தாழிட்டு லைட்டை அணைத்து திலகவதியும் அவளின் வழக்கமான இடத்தில் படுக்க.. அவள் சூடியிருந்த ஜாதி மல்லியின் மணம் சூர்யாவின் களைப்பை போக்கி புத்துணர்வு கொடுக்க.. அம்மாதான் மிரட்டி பூ வைக்க சொல்லியிருப்பாங்களாயிருக்கும் என நினைத்து அவளையே பார்த்திருக்க..
இன்றும் சோர்ந்தே தெரியுறானே..? இன்னும் அவங்களையே நினைச்சிட்டிருக்கானோ என எண்ணியவள்.. நேற்றுபோல் தன் கையை கேட்பானோ என எதிர்பார்த்திருக்க.. பத்து நிமிடத்திற்க்கு மேலாகியும் அவனிடமிருந்து சத்தமில்லாமல் போக.. மெல்ல திரும்பிப் பார்த்தாள். அடித்துப் போட்டவன் போல் அத்தனை களைப்பாய் தூங்கிக்கொண்டிருந்தான் சூர்யா.
அடுத்தடுத்து வந்த நாட்களும் சூர்யாவிற்க்கு பிசியாகவே செல்ல.. திலகவதியும் சூர்யா மிரட்டும் அளவிற்க்கு இப்பொழுதெல்லாம் எந்த தவறும் செய்வதில்லை. திலகவதியின் மனதினில்தான் பல கவலைகள்.. ம்ம் நாளொன்றுக்கு ஒரு முறையாவது நினைப்பாள் சூர்யாவிடம் பேசவேண்டு என்று.
ஆனால் அவன்தான் சாப்பிட்டு வந்ததும் சமத்தாக தூங்கிவிடுகிறானே.. அதோடு எப்படி ஆரம்பிப்பதென்று இவளுக்கும் புரியவில்லை. சொன்னால் என்ன சொல்வானோ என பயம் ஒரு பக்கம் இருந்தாலும்..
பிரசாத்தின் உறவிற்க்கு பிறகு அவளின் உடல் உபாதையை கல்யாண வாழ்விற்க்கு தான் பொருத்தமானவளில்லை நினைப்பை கொடுத்திருக்க.. அதோடு நான் கலங்கப்பட்டவள் உனக்கு பொருத்தமானவளில்லை என்றும் அவளின் மனம் சொல்ல.. இன்று எப்படியாவது உண்மையை விளக்கி.. சூர்யாவின் வாழ்வை சரிசெய்ய வேண்டும் என்ற உந்துதல் நாளுக்கு நாள் அதிகமானது..
இன்று சீக்கிரம் வந்தானென்றால் எப்படியாவது பேசிவிடலாம் என ஒவ்வொரு நாளும் நினைத்தாள். அவளின் நேரம் அந்த வாரம் முழுதும் அவன் வீட்டிற்கு வர பத்தரை பதினொன்று என இருக்க.. களைத்திருப்பான் என அமைதியாகிவிடுவாள்.
இதோ இன்னைக்காவது சீக்கிரம் வருவானா என கமலத்தோடு கார்டனில் அமர்ந்து கேட்டையே பார்த்திருந்தாள். இன்றும் லேட்டாகத்தான் வந்தான். ஆனால் கொஞ்சம் பரவாயில்லை என்பதுபோல் ஒன்பது மணிக்கே வந்திருந்தான்.
அவன் சாப்பிடும் வரை அமைதிதாய் நின்றிருந்தவள்.. ரூமிற்க்கு வந்ததும்..
‘இனிமே தினமும் நீங்க இந்த நேரத்துக்குத்தான் வருவிங்களா..?” என்று தயக்கமாய் கேட்டாள். சூர்யா ஆச்சரியமாய் திலகாவைப் பார்க்க.. நிறை பேச நினைத்திருந்தவளுக்கு.. சட்டென எல்லாம் மறநதுபோக..
‘இல்ல.. சோனுகிட்டயும்.. தியாகிட்டையும் பேசியே ஓருவாரமாகுது.. அதான்..” என்று சமாளித்தாள் தயக்கத்தோடு.
‘இதுக்குத்தான..? ம்ம் நான்கூட என் பொண்டாட்டிக்கு என்மேல அக்கறை வந்திடுச்சோன்னு பார்த்தேன்..” என்றான் ஏக்கமாக. திலகா சங்கடமாய் உணர..
‘நீ சங்கடப்படாத.. நான் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன்.. இன்னைக்கு ரொம்ப டையர்டா இருக்கு.. ஆதவன்கிட்ட நாளைக்கு பேசலாம்..” என்றான்.
திலகா படுக்கப்போக.. ‘ஒரு நிமிசம் எழுந்திரு.. ஸ்கைப்ல எப்படி கால் பண்ணனும்.. கால் வந்தா எப்படி அட்டன் பண்ணனும்னு நான் சொல்லி தரேன்..” என்றான்.
‘நீங்க சொல்லி கொடுத்தாலும் எனக்கு புரியாது..” என்று முகம் சுருக்க..
‘பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கதான..? கொஞ்சம் கவனிச்சினா ஈசியா கத்துக்கலாம்.. வா…” என்றான்.
எழுந்து உக்கார்ந்தாள். சூர்யாவும் சொல்லி கொடுத்தான்தான்.. ஆனால் திலகவதிக்கு புரிந்தாற்போல் தெரியவில்லை. அதோடு அதை கற்றுக்கொள்ளும் விருப்பமும் அவளிடத்தில் இல்லை என்பது அவளின் முகத்திலேயே தெரிந்தது. இது வேலைக்காகாது என நினைத்தவன்..
‘உன் டெய்லரிங் கிளாஸ் எப்படிபோகுது..? எல்லாம் தைக்க கத்துக்கிட்டியா..?”
‘ஏற்கனவே கிளாஸ் போய்ட்டிருந்ததால பிளொஸ்.. சுடிதார்ல்லாம் மூனு மாசத்திலயே தைச்சி கத்துகிட்டேன்.. அந்த மேம்.. உனக்குள்ள நியை டேலன்ட் இருக்கு.. ஆர்யா ஒர்க் கத்து கொடுக்கிறேன்.. அது கத்துகிட்டா நிறைய சம்பாதிக்கலாம்னும் சொன்னாங்க.. இப்போ இரண்டு மாசமா ஆர்யா ஒர்க்தான் கத்துகிட்டிருக்கேன்.. இன்னும் கொஞ்ச நாள்ல முழுசா கத்துக்குவேன்..” என்றாள் ஆர்வமாக.
‘நிறைய சம்பாரிச்சி என்ன பண்ணபோற…?”என்றான் இவனும் ஆவலாக.
‘உங்ககிட்டதான் பணம் கொடுப்பேன்.. உங்களுக்கு பாரமா இல்லாம இருக்கனும்னு தோணுது..” என்று திலகவதி தன் மனதை மறையாது சொல்லி சூர்யாவின் முகம்பார்க்க.. அது அவ்வளவு கோபத்தை காட்டியது.
‘எங்கையாவது புருசனுக்கு பொண்டாட்டி பாரமா இருப்பாளா..? இல்ல.. கட்டின பொண்டாட்டியை பார்த்துக்க முடியாத அளவுக்கு நான் வக்கில்லாதவனா..?” என்று கோபமாக கேட்டான். அச்சோ கோபப்படுறானே.. எதாவது செய்திடுவானோ என நினைத்த திலகவதியின் கண்கள் குளமாக.. அதை காண சகிக்காமல் தன் முகத்தை ஜன்னல் புறம் திருப்பினான் சூர்யா.
பத்து நிமிடம்போல் இருவரும் அப்படியே நின்றிருக்க.. சூர்யாவை சமாதானம் செய்ய நினைத்து.. ‘உங்க பிரெண்டோட பொண்டாட்டிக்கு நல்லது பண்ணலாம்னு நினைச்சி.. உங்க வாழ்க்கையை நீங்க பாழாக்கிக்கிட்டிங்க..” என்று மெதுவாக சொன்னாள்.
கட்டுக்கடங்காத கோபம் வர.. ‘நீ என்னோட பொண்டாட்டி… முதல்ல அதை மனசில வை..‚” என்று வீடே அதிரும் படி அந்த கத்து கத்தினான் சூர்யா.
சூர்யாவின் கத்தலில் உடல் நடுங்கிய திலகவதி நின்றிருந்த இடத்திலேயே அமர்ந்துகொள்ள.. கமலம் தன் அறையில் இருந்தபடியே.. ‘சூர்யா…” என்று குரல் கொடுத்தார்.
பிறகுதான் அம்மாவின் நினைவு வந்தவனாக.. பதறியபடியே தன் அம்மாவின் அறைக்கு வந்தவன்.. ‘அம்மா.. நீங்க இன்னும் தூங்கலையா..?” என்றான் குரலிறக்கி.
‘திலகா உன் பொண்டாட்டிதானான்னு முதல்ல நீ மனசில வை.. அப்பதான் உன்னால அவகிட்ட ஒரு புருசனா நடந்துக்க முடியும்.. அவளுக்கும் நாம சூர்யாவோட பொண்டாட்டிங்கிற நினைப்பு அவளுக்கும் வரும்.. அதவிட்டுட்டு தேவையில்லாம அவகிட்ட கத்துறது மிரட்டுறதுன்னு செய்திட்டிருக்காத..” என்று கோபமாய் சொல்லியவர் நீ கிளம்பலாம் என்பதுபோல் அவனின் பதிலுக்கு காத்திராமல் திரும்பிப் படுத்தார்.
தன் அம்மாவின் பேச்சை ஒரு நிமிடம் யோசித்தவன்.. ம்ம்.. கணவன் மனைவியாய் வாழவில்லையென்றாலும் எனக்கான உரிமையை அவள் உணரும்படி செய்ய வேண்டும் என்ற முடிவிற்க்கு வந்தவனாய்.. தன் அறைக்குள் வந்தான். முழங்காலில் தலைகவிழ்த்து கீழே உக்கார்ந்திருந்தாள்.
‘திலகா.. வா தூங்கலாம்…” என்றான் கட்டளையாக.
அவள் அமைதியாக இருக்கவும்.. ‘நான் சொல்றதை கேக்கமா இருந்து.. என்னை எதாவது தப்பு பண்ண வச்சிடாத.. ஒழுங்கா வா..” என்று மிரட்ட..
சூர்யாவின் பேச்சில் பயந்து உடனே எழுந்து வந்து கட்டிலில் படுத்தாள். தன் அன்னை சொன்னதை நினைத்தவன்.. ம்ம்.. அம்மா சொல்றதுபோல இத்தனை கேப் இருக்கிறதுனாலதான உன் புருசன் நான்ங்கிற நினைப்பு உனக்கு வரல..? முதல்ல இந்த கேப்பை குறைக்கிறேன் என நினைத்து..
‘இருந்தாலும் நான் சொன்னதும் நீ வரலையில்ல.. அதுக்கு ஒரு சின்ன பனிஷ்மெண்ட் கொடுத்தே ஆகனும்…‚” என்று சன்னக்குரலில் திடமாய் சொல்ல..
முதுகாட்டி படுத்திருந்தவளின் உடல் பயத்தில் விறைப்பாக.. அவளருகில் புரண்டவன்.. மனைவியின் இடையை தன் கைகளால் வளைத்து.. ‘இப்படியே தூங்கு.. அதுதான் உனக்கு நான் கொடுக்கிற தண்டனை..” என்று கண்மூடினான்.
பதறியவள்.. ‘எனக்கு இப்படி படுத்தா தூக்கம் வராது..” என்று கெஞ்ச..
‘எனக்கு இப்படித்தான் தூங்கனும்.. தூக்கம் வரும்வரை முழிச்சிட்டிரு.. காலைல லேட்டா எழுந்துக்கலாம்…” என்றான் கண்மூடிய நிலையிலேயே உறுதியாக.
திலகவதி அசைந்து கொண்டே இருந்தாள். ‘ப்ம்ச்.. இப்ப எதுக்கு நெளிஞ்சிட்டே இருக்க..? இப்படியே நெளிஞ்சிட்டு இருந்தின்னா.. நடுவில இருக்கிற கொஞ்ச கேப்பையும் குறைச்சிடுவேன்..‚” என்று எச்சரித்தான்.
சூர்யாவின் அருகாமையை தாங்க முடியாமல்.. சற்று நேரத்திலேயே மீண்டும் அசைந்தாள். அவன் சொன்னவாறே கொஞ்சம் நெருங்கினான். அவள் பயத்தில் மீண்டும் நெளியவும்.. அவனின் மொத்த உடலும்.. அவளின் உடலோடு உரசியிருக்கும்படி நெருங்கிப்படுக்க அவ்வளவுதான்.. பிறகு நெளிவாளா என்ன..? சிலையாகிப்போனாள்.
சூர்யா சீக்கிரம் உறங்கியிருந்தான். திலகவதிக்குத்தான் பெரும் அவஸ்தையாகிப் போனது.. நண்பனோட பொண்டாட்டின்னு சொன்னதுக்கே இந்த பாடு படுத்துறானே.. இன்னும் இவனை வேற கல்யாணம் பண்ணிக்க சொன்னா என்ன செய்வானோ என்ற பயத்திலும்.. அவனின் இறுகிய அணைப்பிலும் வெகுநேரம் விழித்திருந்தவள் நள்ளிரவைத் தாண்டித்தான் உறங்கினாள்.
காலையில் திலகவதி எழும்போதும் சூர்யாவின் கை.. இன்னமும் அவளை வளைத்துதான் இருந்தது. அவனின் கையை எடுத்துவிட முயற்ச்சிக்கவும்.. தூக்கத்திலேயே இன்னும் இறுக்கமாக அணைத்து அவளின் பக்கத்தில் வந்தான்.
‘நான் பாத்ரூம் போகனும்.. என்னை விடுங்க..” என்றாள். அவள் சொன்னவுடன் சூர்யா விழித்துக்கொண்டான். ஆனால் கேட்காதது போல் கண்மூடியிருந்தான்.
இரண்டுமுறை சொல்லிப்பார்த்தும் அவன் விழிப்பதாக தெரியவில்லை. அவனின் கையில் லேசாக பிராண்டினாள். மனதிற்குள் சிரித்தவன் கண்மூடியே இருந்தான்.
பிறகு அவனின் முதுகில் பிராண்டினாள்.. அதற்கும் பதிலில்லை.. மீண்டும் அவனின் கையை எடுக்க முயற்சிக்கவும் சற்றே தன் அணைப்பை பலமாக்கி.. பிறகு விடுவித்து.. ‘எதுக்கு எலிமாதிரி அங்கையும் இங்கையும்; பிராண்டிட்டிருந்த..? சூர்யா கையை எடு.. நான் பாத்ரூம் போகனும்னு சொல்லியிருந்தா.. நான் அப்பவே விட்டிருப்பேன்…” என்றான் சன்னசிரிப்போடு.
முழிச்சிட்டுத்தான் ஆட்டம் காட்டிட்டிருந்தானா என கடுப்பாக நினைத்தாலும்.. அதை வெளிக்காட்டி வம்பை விலைக்கு வாங்கவேணாம் என நினைத்து.. விட்டால் போதுமென பாத்ரூமிற்க்குள் ஓடினாள்.. முதல் முறையாய் பெண்ணை அணைத்தபடி இரவை கழித்ததால்.. காலைப்பொழுது இனிதாக தோன்ற.. மிகவும் சந்தோசமாக உணர்ந்தான். கூடவே நேற்றிரவு தன் அம்மா சொன்னதை நினைத்தவன்.. ம்ம்.. இன்னைக்குத்தான் அணைச்சிப் பிடிச்சி தூங்கியிருக்கேன்.. இன்னும் அவளுக்கு புருசனா மாறதுக்குள்ள.. என நினைக்க சிரிப்போடு சிறு வெக்கமும் தொற்றிக்கொண்டது.