அடுத்த நாள் காலை எழுந்த சூர்யா பகபகவென சிரிக்க.. ‘எதுக்கு சிரிக்கிறிங்க..?” என்று திலகா கோபிக்க..
‘அதுக்காகத்தான் மஞ்சள் போட்டன்ற மாதிரியே வந்து நிக்கிறயே.. இப்போ இன்னும் ஈசியா கண்டுபிடிச்சிடுவாங்க..” என்று சொல்ல..
தன் முயற்ச்சி தோல்வியாகவே.. ‘என் புருசன்.. நான் சந்தோசமா இருக்கேன்.. யார் கண்டுபிடிச்சாலும் எனக்கு கவலையில்ல போங்க..” என்று முறுக்கிக்கொள்ள..
மனைவியை அணைத்தவன்.. ‘இன்னைக்கு திங்கக்கிழமை.. நான் ஹாஸ்பிட்டல் போகனும்.. இப்படியெல்லாம் பேசி சூர்யாவை சூடாக்கக்கூடாது..” என்று இறங்கிய குரலில் கெஞ்ச..
‘என் வெக்கத்தை விட இதுதான் ரொம்ப கேவலமா இருக்கு..” என்று திலகவதி சிரிக்க..
‘இது வேலைக்காகாது..” என்று சூர்யாதான் பின்வாங்கி குளிக்கப்போனான்.
——————————————————————————-
ஆதவன் இங்கேயே வரயிருப்பதால்.. மாடியில் ஒரு ரூம்போட்டு அங்கே திலகவதிக்கு டெய்லரிங் அறையை அமைத்துகொடுத்து.. திலகவதியின் முன்னிருந்த டெய்லரிங் அறையை சோனு தியாவிற்க்கான அறையாக மாற்றியிருந்தான் சூர்யா.
அமெரிக்க மண்ணைவிட்டு தன் தாய்மண்ணிற்கே மீண்டும் வந்த ஆதவன்.. ஆறுமாதம் வரை எந்த பணிக்கும் செல்லாமல்.. தன் குடும்பத்தோடு இன்பமாய் கழித்தான்.
நிற்க்க நேரமில்லாமல் சந்தோசத்தோடு உழைக்கும் திலகவதியின் தொழில் திறமை ஆதவனை ஈர்க்க.. திலகவதியிடம்.. உன்னோட டிசைனிங்ல்லாம் தனித்துவமா ரொம்ப அழகாயிருக்கு.. சோரூம்.. ரெடிமேட் கடைகளுக்குன்னு மொத்தமா தைச்சி கொடுக்கலாமா..? ஹெல்ப்புக்கு பத்துல இருந்து எத்தனை பேர் தேவையோ ஆள் போட்டுக்கலாம்.. ஆர்டர் பிடிக்கிறது நான் பார்த்துக்கிறேன்.. என்று சொல்ல..
டிசைனிங்.. கட்டிங் பண்றதெல்லாம் நான் பார்த்துக்குவேன் மாமா.. கணக்கு வழக்கெல்லாம் கீர்த்தி அக்கா பார்த்துக்குவாங்கன்னா பரவால்லையா இருக்கும் என்று திலகவதி ஆர்வத்தோடு சொல்ல.. கீர்த்தியும் சந்தோசத்தோடு சம்மதிக்க.. இரண்டு தெரு தள்ளி ஒரு கிரௌன்டை விலைக்கு வாங்கியவன்.. மிகப் பெரிதில்லை என்றாலும் சிறிதாகவும் இல்லாமல் ஐந்தாயிரம் சதுரடிக்கு கட்டடம் கட்டி.. திலகம் டெய்லர்ஸ் என்ற பெயரோடு திலகவதியின் தொழிலை இன்னும் பெரிதாக்கினான்.
ஒரு காலத்தில் இதுபோல் கம்பெனிக்கு சம்பளத்திற்கு வேலைக்கு சென்று வந்திருந்த திலகவதிக்கு.. தற்போது இது நம்முடையது என்ற நினைப்பே அத்தனை சந்தோசத்தை கொடுக்க உற்ச்சாகத்தோடும் சந்தோசத்தோடும் உழைத்தாள்.
ஆறு மாதத்திற்க்குப் பிறகு ஒரு மாதம் இந்தியாவில்.. ஒருமாதம் சவுதியில் என்று ஆதவனுக்கு பணி வாய்ப்பு கிடைக்கவும் அதனை வீட்டினரிடம் சொல்ல.. கமலம் சூர்யா கீர்த்தி திலகவதி என்று அனைவரும் மறுத்தும்.. ஐம்பது வயசு வரைக்குமாவது சம்பாதிக்கனும்.. மாசம் இரண்டு லட்சம் சம்பளம்.. வாய்ப்பு கிடைக்கும்போது எதுக்கு விடனும்..? என்று பிடிவாதமாய் கிளம்பிவிட்டான் சவுதிக்கு.
கடந்த நான்கு வருடமாக ஒரு மாதம் இங்கே.. ஒரு மாதம் அங்கே என ஆதவனின் பணி என்பதால்.. இரண்டு நாட்களுக்கு முன்தான் இந்தியா வந்தான்.
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்க்காக சோனா படித்துக்கொண்டிருந்தாள்.. சூர்யா தூங்கிவிட்டானா என பார்த்தவள்.. கணவன் தூங்கிக்கொண்டிருக்கவும்.. மெல்ல எழுந்து ஹாலுக்கு வந்த திலகவதி..
‘சோனு.. இவ்ளோ படிச்சா தலை வலிக்கும்.. போய் படு..” என்று சொல்ல..
‘டைம் பத்துதான் ஆகுது சித்தி.. இன்னும் கொஞ்சம் பார்க்க வேண்டியதிருக்கு..” என்று சோனா சொல்ல..
‘நிறைய படிச்சா மூளை குழம்பி படிச்சதும் மறந்திடும்..“ என்று சொல்லும்போதே சூர்யா வெளியே வந்திருக்க.. சோனா தன் சித்திக்கு சைகை காட்ட..
‘அது.. அது ஒன்னுமில்ல.. டீ வேணுமா சோனுன்னுதான் கேட்டேன்..” என்று அசடு வழிய..
‘ஒன்பது மணிக்கு மேல உன்னை வெளில வரக்கூடாதுன்னுதான சொல்லியிருக்கேன்..?” என்று கோபமாய் கேட்க..
‘தூக்கம் வரலன்னுதான் வந்தேன்..” என்று முனுமுனுக்க..
சமையலறையிலிருந்து டீயோடு வந்த கீர்த்தி சோனாவிற்க்கு கொடுத்து..
‘திலகா சொன்னாலும் சோனா படிக்காம தூங்கமாட்டா.. நீ போய் தூங்கு சூர்யா..” என்று கீர்த்தி சொல்ல..
‘எழுதினா கை வலிக்கும்.. விளையாடினா சத்து வரும்னு பிரகாசையும் படிக்க விடாம செய்து யூ கேஜ் முடிக்கிற வரைக்கும் எ.பி.சி.டி கூட ஐடி‡பை பண்ணத் தெரியாம இருந்திருக்கான்.. ஸ்கூல்லயிருந்து தினமும் ஒரு கம்ப்ளைன்ட் வரும்.. சோனு தியா சொல்லிக்கொடுக்கப்போய் இப்ப கொஞ்சம் பரவால்லையா இருக்கான்.. குழந்தைங்க படிச்சா இவளுக்கு எப்படியிருக்குமோ தெரியல..” என்று கடுகடுக்க..
‘சோனு கண்ணைப் பாருங்க.. ஒரு படி அரிசி உள்ள கொட்டலாம்.. காலைலயும் நாலு மணிக்கே எழுந்திடறா.. இப்போ மணி பத்தாகுது.. இப்படி தூக்கம் கெட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும்..? பகலெல்லாம் படிக்கிறது பத்தாதா..? இதுல இது சாப்பிட்டா தூக்கம் வந்திடும்.. அது சாப்பிட்டா ஒத்துக்காதுன்னு ஒழுங்கா சாப்பிடறதும் இல்ல.. எப்படி இளைச்சிப் போயிருக்கா பாருங்க..” என்று திலகா குரலுயர்த்த..
‘அப்போ நாங்க எல்லாருமா சேர்ந்து குழந்தைங்களை கொடுமைப் பண்றோம்.. நீதான் காப்பாத்துறியா..?” என்று சூர்யா திட்ட..
‘இல்லையாப் பின்ன..?” என்று தாமதமின்றி பதில் கொடுக்க..
‘அப்படியே போட்டேன்னா நாலு..” என்று கோபமாய் திலகவதி அருகே வர..
சிட்டாய் ஓடியவள் ஆதவனிடம் போய் நின்றாள். திலகவதி ஓடுவதைப் பார்த்து சோனாவும் கீர்த்தியும் சிரிக்க.. சூர்யாவிற்க்கும் சிரிப்பு வர.. ஆதவனும் சிரிப்போடு தனதறையிலிருந்து வெளியே வர.. ஆதவன் பின்னோடு வந்தவளைப் பார்த்தவன்..
‘உன் மாமன் உன்னை எவ்ளோ நேரம் காப்பாத்துவான்.?” என்று தன் சிரிப்பை மறைத்து பொய்க் கோபத்துடன் கேட்க..
‘உங்க கோபம் போறவரைக்கும் காப்பாத்துவார்.. இதோ இப்பவே போய்டுச்சிபோல.. லேசா சிரிப்பு வருதுதான..?” என்று திலகவதி சிரிக்க..
‘என்னடா பிரச்சனை..?” என்று ஆதவனும் சிரிப்போடே கேட்க..
‘ஒருத்தரையும் படிக்க விடமாட்றா ஆதவா.. இவ தொல்லை தாங்க முடியாம நம்ம தியாவும் ரக்சுவும் பாதி ஹோம்வெர்க்கை ஸ்கூல்லையும்.. மீதியை இவ கடைலயிருந்து வரதுக்குள்ளேயும் அவரமா முடிக்கிறாங்க.. எங்கையாவது இப்படி ஒரு அம்மா இருப்பாளா..?” என்று கடுப்பாக கேட்க..
‘நம்ம ரக்ஷிதா ஒன்னாவதுதான் படிக்கிறா.. அதுக்கே அவ்ளோ புக்கு குடுக்குறாங்க.. நான் சொன்னாலும் கேக்காம மிஸ்சுங்களுக்கு பயந்துட்டு ஒருநாளைக்கு எவ்ளோ எழுதறா.. வேற ஸ்கூல் மாத்துங்க..” என்று ஆதவன் பக்கத்தில் இருக்கும் தைரியத்தில் வாயடிக்க..
‘இவளை..” என்று சூர்யா கோபத்தோடு நெருங்க..
‘தூங்காம என்னடா செய்திட்டிருக்கிங்க..?” என்று கமலம் குரல்கொடுக்க..
அருகே யாருமில்லாததால்.. ‘ம்மா..” என்று சூர்யாவின் மகளும் தூக்கத்திலேயே அழைக்க..
‘ரக்சு கூப்பிடறா வா..” என்று சூர்யா திலகாவை அழைக்க..
‘திட்டமாட்டேன்.. கையை பிடிச்சி முறுக்கமாட்டேன்னு சொல்லுங்க.. அப்போதான் வருவேன்..” என்று திலகவதி பேரம் பேச..
‘எல்லாமும் செய்வேன்.. எப்படியும் தூங்க வந்துதான ஆகனும்..? அப்போ இருக்கு உனக்கு..” என்று சூர்யா தன் மகளை தூங்கவைக்க போக..
‘என்னை திட்டுனிங்க.. சோனுவை படிக்க விடமாட்டேன்..” என்று திலகவதி சூர்யாவை மிரட்ட.. திலகவதியை முறைத்தவாறே சூர்யா உள்ளே போனான்.
‘சோனு அவரூம்க்கு போய் கால் மணிநேரமாகுது..” என்று கீர்த்தி சிரிக்க..
‘காலைல அம்மாவை குளிக்க வைக்கிறது.. குழந்தைகளை ஸ்கூல்க்கு ரெடி செய்றது.. சாங்காலம் ஐஞ்சு மணிவரைக்கும் கடைல நிக்கிறதுன்னு இரண்டு பேருமே டைர்யா இருப்பிங்க.. சூர்யா ஒன்னும் பண்ணமாட்டான்.. போய் படு திலகா..” என்ற ஆதவன் ‘நீயும் வா…” என்று கீர்த்தியை அழைத்து போக..
மகள் விழித்திருந்தால்தானே இவள் சூர்யாவிடமிருந்து தப்பிக்க முடியும்.. எனவே தம் கொலுசு சத்தத்தில் ரக்ஷிதா எழுந்துகொள்வாள் எனத் தெரிந்தும் ஜல் ஜல் என்ற சத்தமெழுப்பியபடி உள்ளே போனாள்.
ரக்ஷிதா தூங்கியிருந்தபோதும்.. திலகவதிக்காக ‘ஏய்.. மெல்ல வாடி..” என்று கிசுகிசுக்க.. ‘நல்லவேளை ரச்சுகுட்டி தூங்கலபோல..” என்று தைரியமாய் கட்;டிலேறினாள்.
பிரகாஷ் கமலத்தோடு தூங்க.. இவர்களறையில் சுவற்றோடு ஒட்டியவாறு ஒரு சிறிய கட்டிலும்.. அதை ஒட்டியவாறு பெரிய கட்டிலும் இருக்க.. சிறிய கட்டிலில் மகள் தூங்க.. மகளின் அருகில் திலகவதி படுக்க.. பெரிய கட்டிலில் சூர்யா படுப்பது எனதான் இவர்களின் வழக்கமாய் இருக்க..
‘எழுந்து உக்காரு.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..” என்று சூர்யாவின் குரல் கோபமாய் ஒலிக்க..
‘பாப்பா தூங்கிட்டாளா..?” என்று கேட்டவளின் முகத்தில் கணவனை எப்படி சமாளிப்பது என்ற பாவனை தெரிய..
மனைவியின் முகவாட்டத்தில் சூர்யாவின் கோபம் வழக்கம்போல் பனியாய் விலக.. கணவனின் முகத்தை பார்த்தவள் நிம்மதியோடு.. ‘இ..இ..” என்று இளிக்க..
‘சோனு பெரிய பொண்ணானத்துக்கப்புறம் இப்படித்தான் டிரெஸ் பண்ணனும்.. பெரியவங்களோட இப்படி பேசக்கூடாது.. போன வருசம் பாலா வந்திருந்தப்ப நம்ம ரக்ஷிதா போலவே சோனுவும் பாலா மடியில உக்காரும்போது.. அவ சின்ன குழந்தை.. அவளை மாதிரி நீ பண்ணக்கூடாது.. நீதான் பெரிய பொண்ணாய்ட்டல்ல..? பதினொன்னாவது படிக்கிறதான..? இப்படி மத்தவங்க மேல உக்காரக்கூடாதுன்னு.. சோனு மனசு நோகாம எத்தனை தன்மையா சொன்ன..?
நாளெல்லாம் கடையில நின்னாலும் நைட் சாப்பாடு நாலுபேருக்கும் நீயே ஊட்டிவிடறது.. சனிக்கிழமையானா எண்ணை தேய்ச்சி குளிக்கவைக்கிறது.. சோனுக்கு பீரியட் டைம்ல இதை சாப்பிடு வலி சரியாய்டும்.. தினமும் கொஞ்சம் வெந்தயம் சாப்பிடு.. வலியே வராதுன்னு ஒவ்வொரு விசயத்திலயும் பார்த்து பார்த்து செய்ற.. அண்ணியை விட நாலு குழந்தைகளையும் நீதான் நல்லா பார்த்துக்கிற.. எல்லா விசயத்திலயும் சரியா இருந்திட்டு.. குழந்தைகள் படிப்பு விசயத்தில மட்டும் ஏண்டி இப்படி இருக்க..? படிப்பு ரொம்ப முக்கியம் திலகா.. சின்ன பிள்ளையாட்டமா இப்படி செய்யாதே..” என்று சூர்யா மன்றாடி கேட்க..
‘குழந்தைங்க விழுந்து விழுந்து படிக்கும்போது பாவமா இருக்குங்க..” என்று இவள் கண்கலங்க..
‘ஏய்.. இதுக்குபோய் அழுவியா..? லூசு..” என்று மனைவியை அணைத்தவன்..
திலகவதிக்கு படிக்க பிடிக்காது என்று சூர்யாவிற்க்கு தெரியும்தான்.. அதற்க்காக குழந்தைகள் படிப்பதை கூட தாங்க முடியாமல் கண்கலங்கும் அளவிற்க்கு இருப்பாளென்று இன்றுதான் தெரிய.. ‘படிப்புன்னா இவ்ளோ பயமா உனக்கு..?” என்று சிறுபிள்ளையிடம் கேட்ப்பதுபோல் கேட்க..
ஆமாம் என்பதுபோல் பாவமாய் தலையசைத்தவள்.. ‘சோனு ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கிறா.. பாவம்..” என்றாள் மீண்டும்.
‘பாலா நல்லா படிக்கவும்தான நல்ல வேலைல இருக்கான்..? பெரிய வீடு கட்டியிருக்கான்.. உங்கம்மாக்கு எவ்ளோ நகை செய்து போட்டுருக்கான்.. வீட்ல சும்மா இருக்க கஷ்டமா இருக்குன்னு உன்கூட வேலைக்கு வரேன்னு உங்கம்மா சொன்னதும்.. நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும்மா.. இனி நீ ஜாலியா இருன்னு உன்னோட வேலைசெய்ய கூட மறுத்திட்டானாம்.. அவன் கஷ்டப்பட்டு படிக்கலன்னா இதெல்லாம் வருமா..?” என்று புரிய வைக்க..
‘அதான் மாமாவும் நீங்களும் நிறைய சம்பாரிக்கறிங்களே.. குழந்தைங்களுக்கு அது போதாதா..? எதுக்கு இப்படி கஷ்டப்படனும்..?” என்று இவள் வாதாட..
‘லூசு.. படிக்கிறது பணம் சம்பாதிக்க மட்டுமில்ல.. அவங்கவங்களுக்குன்னு ஒரு லட்சியம் இருக்கும்.. லட்சியம் வெற்றியடையறதுக்கான முதல் படியே ஒழுக்கமும் படிப்பும்தான்..” என்று திலகவதிக்கு புரியும் விதத்தில் சொல்ல..
‘என்ன லட்சியமோ..?” என்று முனுமுனுக்க..
‘சரி உன்பேச்சுக்கே வரேன்.. நானும் ஆதவனும் நிறைய சம்பாதிச்சும்.. உனக்கெதுக்கு ஆதவன் பெரிய கடைகட்டி கொடுத்தான்..?” என்று கேட்க..
‘அது.. எனக்கு டெய்லரிங் ரொம்ப பிடிக்கும்னு மாமாக்கு தெரிஞ்சதால.. என் சந்தோசத்துக்காக கட்டி கொடுத்தார்..” என்று பெருமையாய் சொல்ல..
‘ம்ம் உன் சந்தோசத்துக்காகத்தான் கட்டி கொடுத்தான்.. மத்தபடி நீ பெருசா சம்பாதிக்கனும்னு இல்ல.. புரியுதா..? இப்போ உனக்கு டெய்லரிங் பிடிக்கிறமாதிரி.. சோனாக்கு என்னை மாதிரி டாக்டராகனுமாம்.. டாக்டராகனும்னா நிறைய படிக்கனும்.. பெரிய பொண்ணுமா விரும்பித்தான் ஹார்ட்வொர்க் பண்றா.. அவளுக்கு கஷ்டமா இருக்கும்னு நீயா நினைச்சிட்டு அவளை படிக்க விடாம தொல்லை செய்திட்டுருக்க.. படிக்கிறது உனக்கு கஷ்டம்ன்னா எல்லாருக்கும் அப்படியே இருக்குமா..? லூசு லூசு..” என்று மனைவியின் நெற்றியை முட்ட..
ஏதோ கொஞ்சம் புரிய.. ‘ம்ம்.. ஐடியா.. இனி ரக்சுகுட்டி தூங்கும்போதே நானும் தூங்கிடறேன்.. அப்பதான் சோனுவை தொல்லை செய்ய மாட்டேன்..” என்று சொல்ல..
‘அதெல்லாம் முடியாது.. ரக்சு குட்டி ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கிடுவா.. நீயும் அவளோடவே தூங்கிட்டினா என் நிலைமை என்னாகுறது..?” என அணைத்தவனின் அணைப்பு.. திலகாவிற்க்கு அன்பும் காதலும் நிறைந்த ஆழ்கடலில் முங்கிய உணர்வை கொடுக்க..
‘நீங்க திட்டுவிங்கன்னு பயந்திட்டே உள்ள வந்தா இப்படி பண்றிங்க..” என்ற மனைவியின் சிணுங்கல் அலையின் ஓசைபோல் அழகாய் கணவனை ஈர்க்க..
சின்ன சின்ன இதழொற்றலோடு ஆர்பரிப்பில்லாத அலைபோல் மனைவியை இசைத்தவன்.. பின்னே ஆழிப்பேரலையாய் மாற.. அலையின் அணைப்பிற்க்காகவே காத்திருந்த கரை போல்.. தன்னை நாடிய கணவனுக்கு ஏமாற்றாமல் அமுதம் கொடுத்து அமைதிப்படுத்தி.. தானும் பூத்தாள் புத்தம் புதுமலராய்.
இனி எல்லாம் சுபம் சுபம் சுபமே…