“சாரி சாரி. நான் பார்க்கவே இல்லை. ஏதோ நினைச்சுட்டு இருந்தேன்.” என்றுவிட்டு சஞ்சனா சொன்னதை செய்தாள் சாதனா.
சாதனாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள் சஞ்சனா.
சோகம் தெரிந்தது.
“என்ன சாது? ஏதாவது பிரச்சனையா? என்ன பிரச்சினை சொல்லு.” என்று கேட்டாள் .
“அதெல்லாம் ஒன்னும் இல்லை சஞ்சு . வெளியே ரொம்ப காத்து அடிச்சிட்டு இருந்தது. அதை தான் பார்த்துட்டு இருந்தேன். வேற ஒன்னும் இல்லை .” என்றாள்.
“நிஜமா எதுவும் இல்லையா?” என்று அவள் கண்களை பார்த்து கேட்டாள் சஞ்சனா.
“இல்லை சஞ்சு.” என்று விட்டு மீண்டும் சமையல் வேலையில் இறங்கினாள் சாதனா.
சப்பாத்தி போட்டு ஹாட் பாக்ஸில் வைத்து எடுத்து வந்தாள் சாதனா.
மூவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர். அவரவர் தட்டு எடுத்து வைத்துக்கொண்டு அதில் 2 சப்பாத்தி நவரத்ன குருமா எடுத்து ஊற்றிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர். முதலில் சாப்பிட்டது விக்ரம்தான்.
“எனக்கு பயங்கர பசி.” என்று சொல்லிவிட்டு ஒரு துண்டு சப்பாத்தி குருமாவில் தொட்டு வாயில் வைத்தான். அவன் முகம் மாறியது. அவன் முகம் போன போக்கை பார்த்ததும் புரிந்துகொண்டாள் சஞ்சனா. அவள் .தட்டிலிருந்த சப்பாத்தி குருமாவை வாயில் வைத்தாள்.
குருமாவில் சுத்தமாக உப்பு இல்லை. காரம் அதிகமாக இருந்தது. விக்ரம், சஞ்சனா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்,
ஆனால் சாதனா இவர்களை கவனிக்காமல் தன் தட்டில் கை வைத்தபடி ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தாள்
“சாது சாது” என்று சஞ்சனா கூப்பிட்டது காதில் விழவில்லை. சாதனாவின் தோளைத் தொட்டு குலுக்கினாள் சஞ்சனா.
சாதனா சுயநினைவுக்கு வந்து
“என்ன? என்ன சஞ்சனா?” என்று கேட்டாள்.
“என்ன யோசிச்சிட்டு இருக்க?” என்று கேட்டாள் சஞ்சனா.
“ஒன்னுமில்ல.” என்றபடி தட்டில் இருந்த சப்பாத்தி குருமாவை ஒருவாய் சாப்பிட்டாள் சாப்பிட்டதும் குருமாவின் காரம் தெரிந்தது.
“அய்யோ உப்புக்கு பதிலா காரத்தை ரெண்டு தடவை போட்டுட்டேன் போல இருக்கு. சாரி சஞ்சனா. சாரி விக்ரம்.” என்றுவிட்டு எழுந்து சென்று அங்கே இருந்த ஜாம் பாட்டிலுடன் வந்தாள்.
“இன்னிக்கு ஒரு நாள் ஜாம் தொட்டு சாப்பிடலாம். ஓகேவா?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. சாப்பிடலாம்.”
என்று விட்டு மூவரும் சாப்பிட்டு முடித்தனர்.
“சாது உனக்கு என்ன பிரச்சனை? என் கிட்ட சொல்ல மாட்டியா?” என்று மீண்டும் கேட்டாள் சஞ்சனா.
“அது… அது… வந்து…” என்று சொல்ல தாங்கிக் கொண்டிருந்தாள் சாதனா. அப்போது விக்ரமின் கைப்பேசி ஒலித்தது. எடுத்து பேசினாள்.
“சொல்லுங்க கார்த்திக்.” என்றான் விக்ரம்.
சிறு இடைவெளிக்குப் பிறகு
“அப்படியா? சரி நான் நேர்ல வரேன்.” என்று விட்டு தொடர்பைத் துண்டித்தான்.
“சஞ்சு கந்தனுக்கு உடம்பு சரி இல்லையாம். கார்த்திக் என்னை கூப்பிட்டாங்க. நான் போய் பார்த்துட்டு வர்றேன்.” என்று விட்டு தன் பெரிய ஜாக்கெட்டை எடுத்து அணிந்துகொண்டு காரில் சென்றான்.
இப்போது சஞ்சனா சாதனாவை பார்த்தாள்.
“அப்போ இதுதான் உன் சோகத்துக்கு காரணமா?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை.” என்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் சாதனா.
எனினும் விக்ரம் கந்தனை பார்க்கச் சென்றது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. இனி கந்தனை பற்றிய தகவல் அவளுக்கு கிடைத்துவிடும் என்று நினைத்து சிறிது தெளிவானாள்.
படுக்கையில் பாதி தூக்கத்தில் இருந்தான் கந்தன். அவனுக்கு பக்கத்தில் கையில் மாத்திரை சுடுதண்ணீர் உடன் அமர்ந்திருந்தான் கார்த்திக். கார்த்திக்கின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான் விக்ரம்.
“ சுசுகந்தா மெடிசன் எடுத்துக்கோ.” என்று கையில் வைத்திருந்த டம்ளரை டேபிள் மீது வைத்து விட்டு சுகந்தன்தோள் மீது கை வைத்து குளிக்கு எழுப்பினான் கார்த்திக்.
அவன் “என்ன? என்னடா? என்னடா கார்த்திக்?” என்று கண்களை திறந்து பார்த்தான்.
சுகந்தன்கண்களில் முதலில் பட்டது விக்ரம்தான்.
“ஹாய் விக்ரம். வாங்க. நீங்க எப்ப வந்தீங்க?” என்று கேட்டான் சுகந்தன் சோர்வுடன்.
“இப்போதான் வந்தேன். உங்களுக்கு இவ்வளவு ஃபீவர் இருக்கு. நீங்க ஏன் எனக்கு போன் பண்ணவே இல்ல.” என்று சிறிது வருத்தமாக கேட்டான் விக்ரம்.
“இல்லை. சாதாரண காய்ச்சல் தான். சரியா போயிடும். இதுக்கு எதுக்கு உங்களை டிஸ்டப் பண்ணிக்கிட்டுன்னு நினைச்சேன்.”
“என்னடா? சாதாரண காய்ச்சலா? ரெண்டு நாளா எவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்க!” என்றான் கார்த்திக்.
“நீங்களாவது எனக்கு போன் பண்ணி இருக்கலாம் இல்ல?” என்று கேட்டான் விக்ரம் கார்த்திக்கை பார்த்து.
“நான் போன் பண்றேன்ன்னு தான் சொன்னேன். இவன்தான் வேணாம்னு சொல்லிட்டான்.”
“அப்படியா சொன்னீங்க கந்தன்? நான் உங்கள பிரதர் மாதிரி பாத்துட்டு இருக்கேன். ஆனால் நீங்க என்னை அப்படி பார்க்கல போல இருக்கே?” என்றான் சிறு வருத்தத்துடன்.
“அப்படி இல்லை விக்ரம். சரியா போய்டும்ன்னு நினைச்சேன். சின்ன விஷயம் தானே.” என்றான்.
“சரி முடிஞ்சதை விடுங்க. டாக்டர் கிட்ட போனீங்களா?”
“போனேன் டாக்டர் வைரல் ஃபீவர்ன்னு சொல்றார். சரியா போக 1 வீக் ஆகும். டெம்பரேச்சர் அதிகமானா மெடிசன் எடுக்க சொல்லி இருக்காங்க. நான் மெடிசன் வாங்கி வச்சிருக்கேன். அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல. சரியா போயிடும். இவன்தான் தேவையில்லாம உங்களை கூப்பிட்டு கஷ்டப்படுத்துகிறான்.”
“அதெல்லாம் சரிதான். ஆனால் நீ இப்படி தூங்கிட்டு இருந்தா யாரு டெம்பரேச்சர் பார்த்து உனக்கு மெடிசன் கொடுப்பா?” என்று கேட்டான் கார்த்திக் அக்கறையாக.
“இந்த ரெண்டு நாள் நான் கொடுத்தேன். நாளைக்கு நான் நியூயார்க் ஆபீஷியல் டிரிப் போகணும். ரொம்ப இம்பார்ட்டெண்ட். போயே ஆகணும். பேக்கிங் எல்லாமே பண்ணியாச்சு. ஆனா நீ இருக்கிற நிலைமையை பார்த்தால் எனக்கு போக பயமா இருக்கு. அதனாலதான் இவரை கூப்பிட்டேன்.” என்றான் தான் செய்ததை நியாயப்படுத்தும் விதமாக கார்த்திக்.
“சுகந்தன்நீங்க என்கூட நம்ம வீட்டுக்கு வாங்க. நம்ம வீட்ல இருந்து உடம்பை சரி பண்ணிக்கிட்டு திருப்பி வரலாம்.” என்றான் விக்ரம்.
“அதெல்லாம் வேண்டாம் விக்ரம். அத்தைக்கு வேற என்னை கண்டாலே பிடிக்காது. எதுக்கு தேவையில்லாம அவங்க முன்னாடி போய் அவங்கள டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு?” என்றான் சுகந்தன்தயக்கத்துடன்.
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. அத்தை இப்போ ரொம்ப மாறிப் போயிட்டாங்க. உங்களப் பற்றி எந்த குறையும் சொல்றது கிடையாது. அதைவிட முக்கியமா அவங்க இப்போ வீட்ல இல்ல. அவங்க தங்கச்சி வீட்டுக்கு போயிருக்காங்க. அதனால இந்த காரணத்தை சொல்லிட்டு நீங்க அங்க வரலன்னு சொல்ல முடியாது.” என்றான் விக்ரம் தெளிவாக.
“வேண்டாம் விக்ரம். அங்க இருக்கிற மத்தவங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ?” என்றான் சாதனாவை மனதில் நினைத்து.
“சாதனாவை தானே சொல்றீங்க. அவங்க எதுவும் சொல்லாம நான் பார்த்துக்கிறேன். ஒருவேளை சஞ்சனாவை சொல்றீங்களா? அவள் உங்களை ஒரு அண்ணன் மாதிரி தான் பார்க்கிறாள். நீங்க அங்க வந்தா அவள் சந்தோஷப்படுவாள்.” என்றான் விக்ரம்.
“இல்லை இல்லை. எனக்கு சஞ்சனாவை நல்லாவே தெரியும். நானும் அவளை இன்னொரு தங்கையை போல தான் பார்க்கிறேன்.”
“சரிடா. ஒரு பிரச்சனையும் இல்ல. நான் இப்போ கேக்கறதுக்கு பதில் சொல்லு. ஒன்னு விக்ரம் சொல்றதை கேட்டு அவர்கூட போ. இல்லன்னா நான் இந்த நியூயார்க் ட்ரிப் கேன்சல் பண்றேன். என்ன சொல்ற?” என்று கேட்டான்.
“வேண்டாம்டா. நீ போயிட்டு வா. நான் விக்ரம் கூட வீட்டுக்கு போறேன்.” என்று ஒரு முடிவுக்கு வந்தான் கந்தன்.
“வாங்க மாமா வாங்க.” என்று சஞ்சனா அழைக்க சுகந்தன்தயங்கியபடி உள்ளே வந்தான்.
முதன் முறை வீட்டுக்கு வந்தபோது சாதனா அவனை வெளியே போக சொன்னது ஞாபகம் வந்தது.
“கொஞ்ச நேரம் சோபாவில் உட்காருங்க. நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்.” என்றுவிட்டு வேகமாக மாடிக்கு சென்றான் விக்ரம். அதற்குள் பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்தாள் சஞ்சனா.
கந்தனை பார்த்து
“இப்போ உடம்பு எப்படி இருக்கு?” என்று கேட்டாள்.
“இப்போ கொஞ்சம் பரவாயில்லை.” என்று ஒரு பேச்சுக்கு சொன்னான் கந்தன்.
“ஆனா உங்க முகத்தை பார்த்தா அப்படி தெரியல. ரொம்ப டல்லா இருக்கீங்க. முன்னாடியே விக்ரமுக்கு சொல்லி இருக்கலாம் இல்ல? எங்களையெல்லாம் நீங்க உங்க சொந்தமா நினைக்கவே இல்லை அப்படித்தானே?” என்று வருத்தத்துடன் கேட்டாள் சஞ்சனா.
“அப்படியெல்லாம் இல்லை சஞ்சனா. சரியா போயிடும்னு பார்த்தேன்.”
“சரி அதைவிடுங்க. இப்போ வந்துட்டீங்க இல்ல. அதுவே போதும்.” என்றாள் சஞ்சனா.