பூ – 9
அனைவரும் கிளம்பி வெளியே சுற்றி பார்க்க செல்ல அபி வாசுவை தன்னருகிலேயே வைத்துக்கொள்ள பார்த்தாள் ஆதவை வைத்து.
“ஆதவ் இங்க வா…” என அவனை அழைத்து தூக்கிக்கொண்ட ஷ்ரவன்,
“அபி, நீ அடிக்கடி வந்திருக்க தானே? அத்தைக்கும் மாமாவுக்கும் பர்ஸ்ட் டைம். சோ கூட்டிட்டு போ. ஆதவை நாங்க பார்த்துக்கறோம்…” என்று சொல்லிவிட்டான்.
“ஆமா அபி. நாங்களும் வரோம். அவங்களை விடு. பேசிட்டு வரட்டும். நாம முன்னால போவோம்…” என்று அமலா சொல்ல அபியால் பேசமுடியவில்லை.
அன்று இரவே நீலகண்டனுக்கு உடலுக்கு முடியாமல் போய்விட்டது. அந்த குளிர் எப்போதுமே ஒத்துக்கொள்ளாது அவருக்கு.
எப்போதும் இங்கே மகனை பார்க்க என வந்தால் ஒருநாள், மிஞ்சி போனால் அடுத்த நாளில் பகலிலேயே கிளம்பிவிடுபவர் மகன், மருமகளுடன் கூட இரண்டு நாள் இருக்கலாம் என்றுதான் அவரும் வந்திருக்க முடியாமல் போய்விட்டது.
போட்டிங் சென்று வந்ததில் இருந்து லேசாய் உடல் கொதிக்க ஆரம்பிக்க அமலாவும், ஷ்ரவனும் பதறிவிட்டனர்.
“ஷ்ரவா நாங்க கிளம்பறோம். அப்பாவுக்கு இங்க இருக்க முடியாது…” என்று அமலா சொல்ல,
“ம்மா, இருங்க இங்க டாக்டர்ஸ் இருக்காங்க…” என்று அபி பேசினாள்.
“நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?…” என அவளை அதட்டிய ஷ்ரவன்,
“நானும் வரேன்ம்மா. கிளம்புவோம்…” என்றதுமே உடனடியாக கிளம்ப தயாராகினார்கள் அனைவருமே.
அரைமணி நேரத்தில் கிளம்பிக்கொண்டிருக்க சங்கர் வந்துவிட்டான் அங்கே மனைவி, மகனை கூட்டிக்கொண்டு செல்வதற்கு.
“வாங்க அத்தான்…” என ஷ்ரவன் அழைத்ததும்,
“என்னடா எங்க கிளம்பிட்டு இருக்கீங்க?…” என்று வந்து அமர்ந்தான்.
“சங்கர், மாமாவுக்கு லேசா காய்ச்சல் அடிக்குதுப்பா. இங்க இருந்தா இன்னும் அவருக்கு ஒத்துக்காது. அதான் ஊருக்கு கிளம்பிட்டு இருக்கோம்…” என அமலா சொல்லிக்கொண்டிருக்க,
“எடுத்துட்டேன். போகலாம்…” என்று வந்து நின்றாள் வாசு. அவளின் பின்னே அபியும்.
“நீங்க எங்க கிளம்பறீங்க?…” என ஷ்ரவனையும், வாசுவையும் பார்த்து கேட்க,
“வாங்கண்ணே. ஊருக்குத்தான். மாமாவுக்கு முடியலைல…” என வேகமாக சொல்லியவள்,
“இருங்க, உங்களுக்கு குடிக்க காபி கொண்டாறேன்…” என உள்ளே போக போனாள்.
“நில்லும்மா…” என்று அவளை நிறுத்திய சங்கர் நீலகண்டனை உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தவன்,
“உனக்கு லீவ் இல்லையே ஷ்ரவா, கிளம்பறேன்னு சொல்ற?…”
“அவனே கிளம்பறேன்னு சொல்றான். உங்களுக்கு என்ன? விடுங்களேன்…” என அபி சொல்லவும் அவளை ஒரு பார்வை பார்த்தவன்,
“உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு…” என்று சொல்லிவிட்டு,
“இங்க வந்து ஒன் வீக் ஆகலை. அதுக்குள்ளே இத்தனை லீவ்? அத்தியாவசியத்துக்கு லீவ் போட வேண்டியது தான். இப்ப ஏன்? மாமாவை நாங்க பார்த்துக்க மாட்டோமா?…” என கேட்க,
“இல்லை அத்தான்…” என ஷ்ரவன் தயங்க,
“நான் கூடவே இருந்து பார்த்துக்கறேன். போதுமா? ஆதவ்காகவும், நீ கூப்பிட்டியேன்னும் தான் ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு தான் வந்தேன்…”
“அப்போ…” என்று அபி ஆரம்பிக்க,
“இப்போ நாம கிளம்பறோம். அவ்வளோ தான்…” என்று அழுத்தமாய் முடித்துக்கொண்டான்.
“எனக்கு ஒரு காபி மட்டும் குடும்மா…” என்று வாசமல்லியிடம் சொல்லியவன்,
“ஷ்ரவா ஒரு ட்ரைவர் அரேன்ச் பண்ணு. மாமா வந்த காரை கொண்டுவந்து விட்டுட்டு வரட்டும்…” என சொல்லிவிட்டு அமர்ந்தவன் மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருக்க ஷ்ரவன் மொபைலுடன் நாதனுக்கு அழைக்க சென்றான்.
“நாதன், ஒரு ட்ரைவர் வேணும். ஹ்ம்ம். இப்பவே. ஒரு அரைமணி நேரத்துல…” என்று சொல்லிவிட்டு அவரிடம் கன்பார்ம் செய்துவிட்டு உள்ளே வரும் பொழுது அபி பேக்குடன் வந்துகொண்டு இருந்தாள்.
“என்ன இது?…” என கேட்க,
“பார்த்தா தெரியலை. ஊருக்கு கிளம்பறோம்ல. அதான் லக்கேஜ்ஜ கார்ல வைக்க சொல்லி சொன்னார் உன் அத்தான்…” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு.
“ஹ்ம்ம்…” என வழிவிட்டவன் பின் அவளின் பின்னே சென்றான்.
“இங்க வா, உன்கிட்ட பேசனும்…” என அழைக்க காரில் கொண்டுவந்ததை வைத்துவிட்டு ஷ்ரவனுடன் வர சற்று தள்ளி வந்து நின்றவள்,
“சொல்லுடா என்ன பேசனும்?…” என்றாள் விட்டேற்றியாக.
“என்ன ட்ரை பன்ற அபி நீ? ஏன் இப்படி எல்லாம் பிஹேவ் பன்ற?…” என்று பொறுமையாக கேட்டான்.
“எப்படி பிஹேவ் பன்றேன்? நான் எப்பவும் போல தான் இருக்கேன்…” என தோளை குலுக்க,
“ம்ஹூம், அதுதான் பிரச்சனையே. முன்னாடி இப்படி இருந்த சரி. இப்பவும் இப்படியென்னா? எப்போ தான் நீ வளருவ?…” என்றவனின் பேச்சில் அத்தனை முறைப்பு முறைத்தாள்.
“என்னை பத்தி இப்படி பேசறதை ஸ்டாப் பண்ணு ஷ்ரவா. என்கிட்டே என்ன தப்பு இருக்குன்னு இப்படி பேசற. உன் போலீஸ் புத்தியை அங்க மட்டும் வச்சுக்கோ…” என்று அபி பேச,
“போலீஸ் புத்தியை உன்கிட்ட காமிக்கனும்னு நினைச்சிருந்தா வாசுவை எனக்கு பேச சொல்லி நீ வீட்டுல பேசினப்பவே விசாரிச்சிருந்திருப்பேன்…”
“விசாரிச்சு? இப்பவும் நான் சொன்ன பொண்ண தான கல்யாணம் செஞ்சுக்கிட்ட?…” என்று சவாலாய் பார்க்க,
“நீ லூஸா அபி? விளையாட்டுக்கு பண்ணினதை எல்லாம் சேலஞ்சா எடுத்துக்கிட்டு?…”
“என்னைபத்தி தெரிஞ்சும் சேலஞ்ச் பண்ணினது நீ? அதை விடு. வாசுவை ரொம்ப பிடிச்சது போல?…”
“தாலி கட்டின பொண்டாட்டின்னு வரப்போ யாருக்குத்தான் பிடிக்காது?…” என்றான் அவனும் கொஞ்சமும் குறையாத மிதப்புடன்.
“கல்யாணம் பண்ணும் போது இப்படி சொல்லலையே…”
“இங்க பாரு அபி, நான் பொறுமையா பேசிட்டு இருக்கேன். குடும்பத்துக்குள்ள ஏன் இப்படி ஒரு குழறுபடி பண்ண பார்க்க? நீயும் இதே குடும்பத்துல தான் வாழ்ந்துட்டு இருக்க…” என்றான் பல்லை கடித்தபடி. அப்போதும் அபி அலட்சியமாக நின்றாள்.
“உன் குணம் என்னைக்கு மாறும்? சின்ன சின்ன விளையாட்டு விஷயம் கூட நான் அமைதியா போய்ட்டேன். இது என்னோட வாழ்க்கை. இப்பவும் வாசுவை சங்கர் அத்தான் வார்த்தைக்காக, என்னோட பேரன்ட்ஸ்க்காக கல்யாணம் பண்ணேன். இப்ப அவளை எனக்கு அவ்வளோ பிடிக்குது. ஆனா நீ?…”
“இதை சொல்லத்தான் கூட்டிட்டு வந்தியா?…” என அபி கண்டுகொள்ளாத பாவனையுடன் பார்க்க ஷ்ரவனுக்கு சிரிப்பு தான் வந்தது அவளின் பேச்சினால்.
“ஓகே, மூணு நாள் இருந்த. உன் இஷ்டத்துக்கு எல்லாரையும் ஆட்டி வைச்ச. இப்ப கிளம்பிட்ட. இங்க நானும் வாசுவும் மட்டும் தான். என்ன பண்ணிட முடியும் உன்னால?…” என்று கேட்க அவனை முறைப்புடன் பார்த்தாள் அபி.
“இப்படி ஒரு அற்ப சந்தோஷமா? சரி சந்தோஷப்பட்டுட்டு போ. உன்னோட சந்தோஷம் உண்மை கிடையாது. நிரந்தரமும் இல்லை…”
“இருந்துட்டு போகட்டும். நான் இப்படித்தான். என்னன்ற? நான் சந்தோஷமா இருக்கனும். எனக்கு எதுல சந்தோஷமோ அப்படித்தான் நான் இருப்பேன்…”
“உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு. ஆதவ்க்கு ஒரு நல்ல எதிர்காலத்தை, இந்த உலகத்தோட நல்ல பழக்கவழக்கத்தை சொல்லிக்குடுக்க கூடிய ஒரு இடத்துல இருந்துட்டு இப்படித்தான் பேசுவியா?…”
“ஏன் நான்தான் சொல்லி குடுக்கனுமா என்ன? அவனுக்கு அப்பான்னு இருக்கார்ல அவரும் சொல்லிக்குடுப்பார் தானே?…” என்றாள் விட்டேற்றியாக.
“திஸ் இஸ் டூ மச். உன்னை இத்தனை மோசமா நான் நினைக்கவே இல்லை அபி. என்னதான் பிரச்சனை உனக்கு?…”
“ஆனா மோசமா நினைச்ச தான? அப்படியே இருந்துக்கறேன். பிரச்சனை என்னன்னு தெரிஞ்சு நீ என்ன பண்ண போற? போடா…”
“சங்கர் அத்தான் ரொம்ப பாவம். அவரோட நல்ல குணங்கள் உன்னோட சின்ன சின்ன தவறுகளையும் மாத்தும்னு நினைச்சேன். நீயும் விரும்பறன்னு தெரிஞ்சதும் வீட்டுல சொல்லி பேச வச்சு உன்னோட விருப்பத்தை நிறைவேத்தினா நீ என்னோட வாழ்க்கையில கேம் ஆடறியா?…”
“யார் கேட்டா உன்கிட்ட எனக்கு அவரை கல்யாணம் பண்ணி வைன்னு? அவர் பாவமா?…” என கோபமாய் பார்க்க,
“எஸ், அப்கோர்ஸ். அவர் தான் பாவம். நீ இப்படி இவ்வளோ மாறி போவன்னு தெரிஞ்சிருந்தா…”
“தெரிஞ்சு ஒன்னும் ஆக போறதில்லை. இப்ப நான் அவரோட வொய்ப். என்னோட வாழ்க்கையை எனக்கு வாழ தெரியும். அவருக்கு கஷ்டம் குடுக்கறதும், சந்தோஷம் குடுக்கறதும் என்னோட இஷ்டம்…”
“அப்போ என்னோட வாழ்க்கையை நீ முடிவு பண்ணாத. வாசுக்கிட்ட உன் பேச்சை குறை. அவ பாவம். உன்னை நம்பறா. அவளுக்கு உன்னை பத்தி எதுவும் தெரியாது…”
“இப்ப அவளுக்கு நான் என்னடா கெடுதல் பண்ணேன்? நல்லது தான் பண்ணேன். நீ தான உனக்கு நல்லா படிச்ச, புடிச்ச பொண்ணா கல்யாணம் பண்ணி உருக உருக காதலிச்சு அப்படி ஒரு வாழ்க்கையை வாழனும்னு. இப்போ வாழேன்…” என்று நக்கலாக சொல்லியவள்,
“நம்மளோட வாழ்க்கை நாம எதிர்பார்க்காத மாதிரி, நம்மோட ஆசைப்படி அமையாம போய்ட்டா எப்படி இருக்கும் தெரியுமா?…” என்று பார்க்க,
“இப்பவும் தப்பான ரூட்ல போற. அமையற வாழ்க்கையை எப்படி வாழனும்னு தெரிஞ்சுக்கிட்டாலே போதும். வாழ்க்கையை சந்தோஷமா ஈஸியா ஜெயிச்சிடலாம். அதுக்கு புத்தின்னு ஒன்னு வேணும். நல்ல மனசு வேணும். எதையும் நேர்மறையா யோசிக்கிற பக்குவம் வேணும்…”
“என்னை லூஸுன்னு சொல்றியா?…”
“அதான் ஆரம்பிக்கும் போதே சொல்லிட்டேனே. போய் ஒரு நல்ல டாக்டரை பாரு. மிச்ச வாழ்க்கையாவது நிம்மதியா வாழலாம். உன்னோட நிம்மதிக்கு மட்டுமில்லை, உன்னை சுத்தி இருக்கறவங்க நிம்மதிக்கும் நல்லது…” என்றவன்,
“என்னால முடிஞ்சது இந்த மூணு நாள் நீ ஆடிட்ட. சந்தோஷமா இருந்தியா? அது போதும் எனக்கு. எப்பவாச்சும் வந்து போற உனக்காக நான் ஏன் டென்ஷன் ஆனேன்னு தான் எனக்கு தெரியலை. வருஷமெல்லாம் வாசு என் கூட தான் இருக்க போறா. இந்த மூணு நாள் ஒன்னும் குறைஞ்சிடாது…”
“என்னை நீ தப்பா புரிஞ்சுகிட்ட ஷ்ரவா. நான் உன் நல்லதுக்கு தான்…” என அபி பேச,
“இதுக்கு தான் டாக்டரை பாருன்னு சொல்ல வந்தேன். உனக்கு உன்னையும் சந்தோஷமா வச்சுக்க தெரியாது. மத்தவங்க உன்னை விட சந்தோஷமா இருந்தாலும் பொறுக்காது. இது உன்னோட அடிப்படை குணம். அது மாறாதுன்னு தெரிஞ்சு போச்சு. அப்போ நான் தானே சுதாரிக்கனும்…”
“இப்படி பேசி பேசி தான்…”
“அப்படித்தான் பேசுவேன் அபி. தப்பா சொல்லலையே. என்ன பண்ண போற? வாசுவுக்கு இங்க்லீஷ் சொல்லி குடுப்பியா? ஐ நோ, யூ வாட் டெல் வாசு. என்ன பார்க்கற? என் பொண்டாட்டிக்கு என்ன சொல்லி குடுக்கனும்னு எனக்கு தெரியும். இனி நானும் இப்படியே பேசிக்கறேன். அவ்வளோ தானே?…”
ஷ்ரவன் பேச பேச அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டு இருந்தது அபர்னிதா மட்டுமல்ல, வாசமல்லியும் தான்.
“உன்னை நினைச்சா ரொம்ப வருத்தமா தான் இருக்குது அபி. என்ன செய்ய? இப்பவும் சொல்றேன். உன் மேல கோபம் இருந்தாலும் அக்கறை என்னைக்கும் போகாது…”
“உன் அக்கறை ஒன்னும் எனக்கு தேவை இல்லை. என் வாழ்க்கையை எனக்கு பார்த்துக்க தெரியும்…” என்று அவள் எடுத்தறிந்து பேச,