சூரனை வதம் செய்த திருச்செந்தூர் தான் அவர்களின் முதல் ஷூட்டிங்க் ஸ்பாட். ஷஸ்டி கவசம் முதல் முருகப் பெருமானின் அனைத்துப் பாடல்களையும் சாருகேஷி பாட, சிவகுரு அந்தக் குரலில் மயங்கித்தான் போனார்.
அடுத்த பதினைந்து நாட்களும், முருகக் கடவுள் வாசம் செய்யும், அறுபடை வீடுகளுக்குப் பயணித்து, ஒருவழியாக அனைத்து வேலைகளையும் முடிக்க, சாரு சென்னை வந்தப்பின் இரண்டு நாட்களில் ரெக்கார்டிங்கின் ஃபைனல் செட்டப்பை முடித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து சிவகுருவும், புகழும் கிளம்பியிருந்தனர்.
புகழ் அவளுடன் இருந்த இரண்டு வாரத்தில் மூன்று முறை சென்னை சென்று வந்திருந்தான். சிவகுருவும் ஒருமுறை போய் வந்திருந்தார். வசந்தாவிற்கு எதுவும் தெரிய வேண்டாம் என்ற எண்ணம் தான் அவர்களை இவ்வாறு யோசிக்க வைத்தது.
ஊரிலிருந்து வந்த அன்று சாருவைச் சீண்டியது தான், அதன் பிறகு அவளுக்கு புகழ் எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை. சாருவுக்கே இது அதிசயம் தான். முதல் நாள் அவன் பேசியதில், எப்படி இந்த இரண்டு வாரங்களைக் கடத்தப் போகிறோம் என்று எண்ணிப் பயந்தவளுக்கு, புகழின் நடவடிக்கை முதலில் நிம்மதியைக் கொடுத்தாலும், தொடர்ந்த அவனது அலட்சியத்தில் ஒரு வித வலி உருவாவதை உணர்ந்து கொண்டாள். எதனால் இந்த வலி வேதனை என்று அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு, அவள் சிறு குழந்தை அல்லவே.
தன்னையும் அறியாமல் அவனை விரும்ப ஆரம்பித்து விட்டாள் என்று புரிந்து கொண்டாள். ஆனால் புகழ் இவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் தன் வேலையை மட்டும் பார்ப்பதைக் கவனித்தவள், ஒருவேலை அவன் தன்னைச் சும்மா சீண்டியிருப்பானோ, காதல் போல் எதுவும் இல்லையோ.. நானாக அவன் மேல் காதலை வளர்த்துக் கொண்டேனோ எனப் பலவாறாக யோசித்துத் தனக்குள்ளே குழம்பிக் கொண்டாள்.
இப்படியே நாட்கள் கடக்க, சாரு சென்னை செல்லும் நாளும் வந்தது. இப்போது அவளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு விஷ்வநாதனை ஊரில் தங்களுடனே வைத்துக் கொள்ளலாம் என செல்வம் தம்பதியினர் யோசித்தனர். அவரின் வயதை முன்னிட்டுத்தான் இந்த யோசனை.
ஆனால் அதற்கு விஸ்வநாதன் ஒத்துக் கொள்ளவே இல்லை. பல வருடங்களாக பிரிந்து, பல கஷ்டங்களைக் கடந்து இப்போது தான் சேர்ந்து வாழ்கின்றனர். அப்படி இருக்க அவர்களுக்கு இடைஞ்சலாக தான் ஏன் இருக்க வேண்டும் என அவரும் யோசித்து மறுத்துவிட்டார்.
ரெஜினா முகத்தைத் தூக்க, ‘இல்லம்மா.. சாருவுக்கு இந்த வருஷம் படிப்பு முடியுது, அடுத்து மேல்படிப்புக்கு எப்படியும் வேற ஊரு போய்டுவா, அப்போ வேறவழியில்லாம ஹாஸ்டல் தான விட முடியும். அப்போத் தனியா போகட்டுமே, கொஞ்ச நாளைக்கு நான் அவ கூட இருந்துட்டு வர்ரேன்’ என சொல்லிவிட, அவர்களுக்கும் அதுவே சரியெனப்பட, தாத்தாவும், பேத்தியும் சென்னை வந்துவிட்டனர்.
சென்னையில் அவளின் நாட்கள் சற்று கடுமையாகத்தான் சென்றது. தன் மனதில் தோன்றிய இந்த ஆசைகளை அவளால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அந்த ஆசைக்கு சொந்தக்காரனோ அதுபற்றி அவளிடம் வாயையும் திறக்கவில்லை, அவனைப் பார்ப்பதே அரிதாகியிருந்தது.
இரண்டாவது வாரத்தில் ஒருநாள் ரெக்கார்டிங்க் செட்டப்பிற்காக சாருவை வரச் சொல்லியிருக்க, ஒருவேளை அவன் வந்திருப்பானோ என்ற ஆர்வத்தில் சென்றவளுக்கு அங்கு கிடைத்தது ஏமாற்றமே. தன் ஏமாற்றத்தை வெளியில் காட்டாமல் வேலையை முடித்து வர பெருமளவில் கஷ்டப்பட்டுவிட்டாள் சாருகேஷி.
விட்டால் போதுமென்று வெளியில் வர, அப்போது ஒரு கவருடன் நின்றிருந்தான் செல்வின். ‘என்ன’ என்பது போல் பார்க்க, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அந்தக் கவரை அவளிடம் கொடுத்தான். சாருவால் அதை வேண்டாமென்றும் மறுக்க முடியவில்லை. காரணம் அதைக் கொடுத்தது சிவகுரு என்றிருந்தான் செல்வின்.
அவனிடம் ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்கு வந்தவளுக்கு அதைப் பிரிக்கக் கூடப் பிடிக்கவில்லை. அன்றிரவு வேலையெல்லாம் முடித்து உறங்கலாம் என்றிருக்க, புகழின் எண்ணில் இருந்து அழைப்பு வர, அவளோ அதை எடுக்காமல் அந்த போனையே வெறித்திருந்தாள்.
இத்தனை நாள் எதிர்பார்த்து ஏமாந்து போனது மனதைக் கனக்க வைக்க, பார்த்தது பார்த்தபடியே இருந்தாள். இப்போது அழைப்பு இரண்டாவது முறையாக வர, எதற்கு இப்படி விடாமல் அழைக்கிறான், எடுக்கலாமா வேண்டாமா.? என மூளை பட்டிமன்றம் நடத்த, அந்த அழைப்பும் நின்றுவிட்டது.
இப்போது தொடர்ந்து மெசேஜ் வந்து விழும் சத்தம், அதைப் பார்த்தவள் வேகமாக, வாட்ஸபில் சென்று பார்க்க, அனைத்தும் புகழிடமிருந்து தான், அதுவரை இருந்த ஏக்கமும், ஏமாற்றமும் மெல்ல மெல்ல கரைய அதை ஓபன் செய்து பார்த்தவளுக்கு என்ன உணர்வு என்றேப் புரியவில்லை.
அனைத்தும் அவளும் அவனும் மட்டும் இருக்கும் புகைப்படங்கள். ஒவ்வொன்றிலும் இருவரும் அவ்வளவு பாந்தமாக பொருந்திருந்தனர். கிட்டத்தட்ட ப்ரீ வெட்டிங்க் சூட் போலான புகைப்படங்கள். இது எப்போது எப்படி எடுக்கப்பட்டது என்று கூட ஞாபகம் இல்லை. காரணம் இருவரும் சேர்ந்த போல இருந்தது கூட ஞாபகம் இல்லை. முகம் முழுவதும் சிவப்பு ஏற, கண்ணில் ஒரு மயக்கம் கூடவே தன்னால் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது அவள் முகத்தில்.
இரசனையாக அந்தப் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே “என்னாச்சு பேபி.. ஆர் யூ ஓக்கே..” என டெக்ஸ்ட் மெசேஜ் வர,
“நோ.. ஐம் நாட் ஓக்கே.. யூ ஆர் சீட்டர்..” என இவளும் பதிலுக்கு அனுப்ப,
“வாட்.. வாட் டு யூ மீன்.. சீட்டர், மீ.. ஓகே.. ஐம் எ சீட்டர். பட் யூ ஆல்வேஸ் தீஃப். யூ ஆர் தீஃப்ட் மை லிட்டில் ஹார்ட்.” என அனுப்பவும்.
“வாட்.. நோ.. இட்ஸ் ராங்க். யூ ஆர் த தீஃப். யூ ஜஸ்ட் ஸ்டோல் மை ஹார்ட் அன்ட் டிசப்பியர்ட்.” என அவளும் பதிலுக்கு அனுப்ப, இருவருக்கும் தங்களைப்பற்றி அறிந்து கொண்டதில் நிம்மதி, கூடவே புன்னைகயும். இருவர் முகத்திலும் ஒரு வாடா புன்னகை. இப்போது அவன் மீண்டும் போன் செய்துவிட்டான்.
மெசேஜில் நீண்ட நாள் பழக்கம் போல பேசிக் கொண்டாலும், போனில் அப்படி பேச முடியும் போலத் தோன்றவில்லை. அதனால் அமைதியாக இருக்க, “ப்ளீஸ் கால் அட்டென்ட் பண்ணு, உங்கிட்ட பேசாம எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் போல,” என மெசேஜ் வர,
இதற்கு அவள் பதில் அனுப்பவில்லை. கிட்டத்தட்ட அவனைப் போலத்தானே அவளது நிலையும், பிடிப்பது போலத்தான் அவனுக்கு இருந்தது. ஆனால் அவளுக்கோ பைத்தியமே பிடித்திருந்ததே, இதை எப்படி சொல்ல அவனிடம்.
இப்போது மீண்டும் அவனிடமிருந்து ஒரு மெசெஜ் “நீ பேசவில்லை என்றாலும் பரவாயில்லை, உன்னிடம் கொடுத்த கவரையாவது பிரித்துப்பார்..” என்றிருக்க, கவரா எது என யோசித்தவள், காலையில் செல்வின் தன்னிடம் கொடுத்தது ஞாபகம் வர, வேகமாக அந்தக் கவரை கையில் எடுத்தவள், “இது நீங்களா கொடுத்தீங்க.” என்ற மெசேஜைத் தட்ட,
“ம்ம்.. இந்த பார்சலை ஓப்பன் செஞ்சதும் எனக்கு கால் பண்ணுவன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நீ கூப்பிடலன்னதுமே புரிஞ்சது நீ இன்னும் அந்த கவரைத் திறந்து பார்க்கலன்னு. அதான் நானே கால் பண்ணேன்..” என நீண்ட விளக்கமாக ஒரு குறுஞ்செய்தி வந்து விழ, அவனுக்குப் பதிலேதும் சொல்லாமல் வேகமாக அந்தக் கவரைப் பிரித்திருந்தாள்.
பிரித்தவளின் பார்வை அதிலேயே நிலைத்திருக்க, கண்கள் இரண்டிலும் நீர் அருவியாகக் கொட்ட, அது ஒரு பட்டுப்புடவை, அத்தனை வழுவழுப்பு புடவையில். பார்த்ததுமே தெரிந்தது அதன் தரம், உடல் முழுவதும் வானவில்லின் வண்ணங்கள், வேறெந்த டிசைனும் இல்லை. முந்தானை முழுவதும் சந்தன நிறம், அதில் சாருவின் பெற்றோரின் புகைப்படத்தை நெய்திருந்தனர்.
மிகவும் சவாலான வேலைதான். எப்படியும் இதற்கு சில மாதங்கள் வேலை எடுத்திருக்கும் என அவளுக்குப் புரிந்தது. புடவையை கசங்காமல் எடுத்து மென்மையாக வருடியவள், அதைத் தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள். அந்த உணர்விலிருந்து வெளிவர சில நிமிடங்கள் தேவைப்பட்டது பெண்ணுக்கு.
முழுதாக பத்து நிமிடங்கள் கழிந்து விட, இப்போது மீண்டும் புகழ் அழைத்திருந்தான். இந்த முறை ஒரு ரிங்கிலேயே எடுத்தவள் “Thanks.. Thanks.. Thanks..” என விடாமல் சொல்லிக் கொண்டிருக்க,
“ஹேய்.. ஸ்டாப்.. ஸ்டாப்.. நான் ஹலோ கூட சொல்லல,” எனக் கத்தினாலும் அவளுக்கு கேட்கவில்லை, விடாமல் சொல்லிக் கொண்டே இருக்க, “ப்ச்” என்று சத்தமாக ஒரு முத்தம் ஒன்றை அவன் வைக்க, அதில் பெண்ணவளின் சத்தம் பட்டென்று நிற்க, “உன் வாயை இப்படித்தான் அடைக்கனுமா.. சூப்பர்ல்ல..” என்று சிரித்தவன், “நீ தேங்க்ஸ் சொல்லனும்னு எல்லாம் நான் உனக்கு செய்யல, எனக்கு அது தேவையும் இல்ல.” என்றவனின் குரல் தேங்கி நிற்க,
அவன் கொடுத்த சத்தமான முத்தத்தில் உடலெங்கும் ஒருவகை மின்சாரம் பாய, விழிகள் மயக்கத்திற்கு செல்ல உடல் முழுவதும் அப்படியே நடுங்கிவிட, இப்போது என்ன நடந்தது என இவள் புரிந்து கொள்ளும் முன்பே, அவன் தொடர்ந்து பேச, சாருவுக்குத்தான் என்ன செய்வது என்றேத் தெரியாமல் உடலெங்கும் சிவந்து செம்பருத்தியாகிப் போனாள்.
பதிலேதும் பேசாமல் சாரு அமைதியாக இருக்க, “இன்னும் என்ன கோபம்… ஏன் ஒன்னுமே பேசமாட்டேங்குற..” என்ற புகழின் ஆதங்கக் குரலில், அவளால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
“கோபம்ன்னு நான் எப்போ சொன்னேன், ஆதங்கம் தான். நீங்க எங்கூட பேசவே இல்லை. நீங்க பேசாம எனக்கு ரொம்ப கஷ்டமாப்போச்சு. எதுவோ எங்கிட்ட இல்லாத ஃபீல். எதுலயும் கான்சென்ட்ரேட் பண்ண முடியல, நான் நானாவே இல்ல..” என்று சொல்லி முடிக்கும் முன்னே அவளது குரல் அழுகையில் தேய்ந்திருந்தது.
“ஹேய்… என்னடா.. என்ன.. ஏன் அழறா.. ப்ளீஸ் நீ அழுதா எனக்கு தாங்காது. உன்னை சமாதானம் செய்றதுக்கு நான் பக்கத்துலயும் இல்லடா.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ பேபி… நீ அழுதா நான் போன் கட் பன்றேன்..” என அவன் கெஞ்சியும் மிஞ்சியும் பேச,
“இல்ல.. இல்ல.. நான் அழல..” என வேகமாக முகத்தைத் துடைத்துக் கொண்டு நீங்க இங்க இல்லையா.? பெங்களூர் போயிட்டீங்களா..” என ஏமாற்றமாகக் கேட்க,
“ம்ம்.. சென்னைல இல்ல, அப்புறம் பெங்களூர்லயும் இல்ல.. நான் சைனா வந்துருக்கேன். ஒரு கான்ஃபெரன்ஸ் இங்க. என் ஹெட் என்னையும் இழுத்துட்டு வந்துட்டார். வந்து ஒன் வீக் ஆச்சு, கிளம்பவுமே ஒன் வீக் ஆகிடும்..” எனச் சோகமாகச் சொல்ல,
“ஓ..” என்று சுரத்தே இல்லாமல் சொன்னவள், தன்னுடைய படிப்பைப் பற்றியும் சொல்லிவிட்டு, பிஜி சைல்ட் ஹெல்த் எடுப்பதாகச் சொல்ல,
“ம்ம்.. குட் டிசிசந்தான். பிஜிக்கு எங்க அப்ளை பன்ற,” எனவும்,
“இன்னும் ப்ளான் பண்ணல, மாமா மதுரை இல்லைன்னா திருவனந்தபுரம் மென்சன் பண்ண சொன்னாங்க..” எனவும்,
“ஓ… ஏன் மேடம் பெங்களூர் எல்லாம் வரமாட்டாங்களா..?” என இழுவையாக இழுக்க,
“பெங்களூர் ஓக்கே தான். ஆனா அங்க யார் இருக்கா..? இவ்ளோ ரிஸ்க் எடுத்து வரதுக்கு…” என அவளும் ராகம் போட்டு இழுக்க,
“ஓ.. ஓகோ… மேடம்க்கு எங்களை எல்லாம் பார்த்தா, ஆள் மாதிரி தெரியல போல. உங்க மாமா மாதிரி பார்த்துக்கலன்னாலும், அவரை விட கொஞ்சமே கொஞ்சம் பத்திரமா பார்த்துப்போம். நம்பி வரலாம்..” என்று கிண்டலாகப் பதில் சொன்னாலும், அதில் இருந்த ஏக்கமும், தவிப்பும் அவளுக்கு புரியத்தான் செய்தது.
“ம்ம் நீங்க இன்னும் ஒரு சிக்ஸ் மந்த்ஸ் தான் இருப்பீங்க, பிறகு அப்ராட் போயிடுவீங்க. அப்புறம் நான் மட்டும் தான அங்க இருக்கனும், அதுக்கு நான் இங்கையே இருந்துக்கலாம்..” என அவளும் மறைமுகமாகத் தன் ஆசையைச் சொல்ல,
“அட.. இந்த இன்ஃபர்மேசன் எல்லாம் மேடம்க்கு யார் கொடுத்தது..” என்றவன், “அப்ராட் போற ஐடியா எல்லாம் இல்லடா, அப்பாவுக்கு அதுல இன்ட்ரெஸ்ட். அம்மாவுக்கு என் மகன் ஃபாரின் ரிட்டன்னு சொல்லிக்கனும். சோ அவங்க ஆசை அதை நான் செய்யனும்னு எதிர்பார்க்குறாங்க..” எனவும்,
“ம்ம் அங்கிள் தான் சொன்னார். பிலிப்பைன்ஸ்ல தான் சீட் இப்போ அவைலபிள்ன்னு சொன்னாரே.. அங்க கஷ்டமா இருக்குமே..” என்று அவளும் சொல்ல,
“டேட் கனடா தான் போகச் சொன்னார். பட் எனக்கு இது பெஸ்டா தோனுச்சு. நமக்கு நீயர் கன்ட்ரி வேற, எதுவும் பிரச்சினை என்றாலும், ரொம்ப லேட்டாகாம வந்துடலாம்ல.. நான் எல்லாம் யோசிச்சு தான் இதை சூஸ் பண்ணேன். என்றவன், “உனக்காகவும்..” என்ற வார்த்தைகளைச் சேர்த்துச் சொல்ல,
“அங்கிள் சொன்னதுமே இதுதான் ரீசனா இருக்கும்னு புரிஞ்சது, ஆனாலும்..” என்று இழுக்க,
“புரியுது..” என்றவன் “உன் கைல இருக்குற இந்த புடவைதான் நம்ம மேரேஜ்ல முகூர்த்தப் புடவை. நம்ம மேரேஜ்ல உன் பேரன்ட்ஸ் இல்லன்னு ஃபீல் பண்ணிடக் கூடாதுன்னு தான் இந்தப் புடவையை ஆர்டர் செஞ்சேன்..” என மேலும் உருகியவன், குழைந்தக் குரலில் “மேரேஜ் செஞ்சிக்கலாமா ஸ்வீட்டி..” கேட்க, அந்தக் குரல் காதுகளில் ஒலித்தது, ஏதோ அவன் பக்கத்தில் அமர்ந்து, அவள் காதுகளில் உதடுரசப் பேசுவது போல் தோன்ற சிலிர்த்துப் போனாள் பெண்.
“என்னாச்சு.. மேடம் பதில் சொல்லமாட்டீங்களா.?” என்றாண் அதே குரலில்.
“இனியும் இவனிடம் பேசினால் தன்னை ஒருவழி செய்து விடுவான்’ என்று புரிய, “ஒழுங்க ப்ரபோஸ் பண்ணாம கேட்டா அதுக்கு நான் எப்படி பதில் சொல்ல, அட்ப்புறம் இப்படி போன்ல கேட்டா கண்டிப்பா நோ தான். தைரியம் இருந்தா நேர்ல வந்து கேளுங்க டாக்டர், அப்போ நான் பதில் சொல்றேன். இப்போ பை..” என்றவள், அவனை சீண்டிவிட்டு, அடுத்து அவன் பேசும் முன்னே வைத்துவிட்டவளின் முகம் முழுக்க வெட்கத்தின் பளபளப்பு.
இந்தப் பக்கம் புகழோ.. “ஏய்.. வைக்காத ஹேய் பேபி. ப்ளீஸ்..” என்ற வார்த்தைகள் காற்றோடு போக, ‘ஷிட்’ என்றவனின் முகமும் முதன்முதலாக வெட்கத்தில் மிளிர்ந்தது.