இருவருமே அவர் பார்த்து வளர்ந்த பிள்ளைகள் தான். திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஆளுக்கொரு துருவமாய் இருந்தது, அவர்களைப் பெற்றவர்களை விட வளர்த்த அவருக்கு அதிக வருத்தம் தந்தது.
அந்த வருத்தத்தை பலமுறை நிலாவிடமும், சரணிடமும் மனத்தாங்கலுடன் தெரிவிப்பார். இப்போது இருக்கும் சூழ்நிலையில், இந்த விபத்திற்குப் பிறகு இருவரும் தங்கள் வாழ்க்கையில் தவறான எந்த முடிவையும் எடுக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினார்.
அதோடு ஷானவி சிபியை நெருங்க முயல்வதும், அவன் அதை தவிர்ப்பதும் என்று அவரே சிலமுறை அவரே கண்டிருக்கிறார். அன்று அதை சரியாக புரிந்து கொள்ளாமல், சிபியை தவறாக நினைத்தவர், இன்று அவனின் செயலை மிகவும் சரியான கோணத்தில் புரிந்து கொண்டார்.
சிபிக்கு இப்போது இருக்கும் இந்த மனக்கிலேசத்தை மாற்ற ஷானவியால் மட்டுமே முடியும் என்பதையும் உணர்ந்தார். அது இப்போது இருக்கும் இந்த ஷானவியால் முடியாது, குறும்புத்தனம் மிகுந்த அருந்தவாழு ஷானவியால் மட்டுமே முடியும் என்பதையும் உணர்ந்தார்.
அவளுக்குத் தெளிவு வரும் வகையில், சிபியின் கோபத்தையும், இப்போது அவன் இருக்கும் நிலையையும் ஷானுவிடம் கூறி அவளை யோசிக்க வைத்தவர், போறபோக்கில் “சிபி அவன் லவ் பண்ண பொண்ணை விட்டுட்டான்னு உனக்கு யார் சொன்னா….? அவன் யாரை விரும்பினான்னு உன்கிட்ட சொன்னானா..? நீயா எதையாவது யோசிச்சு கிறுக்குத்தனம் பண்ணாத… ஹ்ம்ம் கொஞ்சம் யோசிச்சா உனக்கே புரியும்..!” என்று அவர் தலையில் வெடியைக் கொளுத்திப் போட்டுவிட்டு சென்றார்.
அவர் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டவள், கடைசியில் கூறியதைக் கேட்டதும், மனம் சொல்ல முடியாத வலியைத் தொட்டது. ஆனால் மல்லி ஏதோ பொடிவைத்து பேசியதுபோல் இருந்ததே… ஒருமுறை யோசியாமல் செய்த தவறை இந்தமுறையும் செய்யக்கூடாது… என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள் மூளையைக் கசக்கினாள்.
தனக்கு இன்பார்மர் வேலை பார்த்த ஆகாஷ் கூட இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே என நினைத்துவிட்டு, யாரிடம் கேட்டால் சரியான பதில் கிடைக்கும் என்று நிதானமாக் யோசித்தவளின் மூளையில் பளிச்சென்று பல்ப் எரிய, தன் கையில் இருந்த போனில் வித்யாவை அவசரமாக அழைத்தாள்.
அவளது அவசரம் புரியாத வித்யாவின் அலைபேசியோ தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக கூறி அவளை மேலும் வெறுப்பேற்றியது… இரண்டு முறை அழைத்து பார்த்துவிட்டு உர்ரென்று நின்றிருந்தவளின் காதில் குழந்தைகளுடன் கணவன் பேசிச் சிரிப்பது தேனாய் வந்து விழுந்தது.
அவனைப் பார்க்கும் இடத்தில் வந்து நின்றுக் கொண்டவள், அவன் மேல் இருந்த கோபத்தையெல்லாம் விட்டுவிட்டு, முதன் முதலாய் மனைவியாய், காதலியாய் தன் கணவனை ரசிக்க ஆரம்பித்தாள் திருட்டுத்தனமாய்.
எதிரே இருந்த டீப்பாயின் மேல் கால்கள் இரண்டையும் தூக்கி வைத்துக்கொண்டு, குழந்தைகளோடு குழந்தையாக அமர்ந்து போகோ சேனலில் பீமின் வீர சாகசங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் சிபி.
(ஏன்பா டாக்குடரு உனக்கு எவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்து வச்சிருக்கேன்…. நீ என்னடான்னா சோட்டா பீம் பார்த்துட்டு இருக்க…. உன் குழந்தை பார்க்க வேண்டியதை நீ பார்த்துட்டு இருந்தா, நான் இந்தக் கதையை படிக்கிற மக்களுக்கு என்ன பதில் சொல்றது..? உன்னை ஹீரோவா போட்டு நான் படுற பாடு இருக்கே… அப்பப்பா முடியலடா சாமி….
ஹுஹும் இனி இவனை நம்பி பிரயோஜனம் இல்ல, நம்ம சிங்கத்தை களம் இறக்கிட வேண்டியதுதான்.. ‘Lets starts singam dance… ஹீஹீ நம்ம சிங்கத்தோட ஆட்டம் ஆரம்பம்….)
சரணின் இரட்டையர்கள் இருபுறமும் அமர்ந்திருக்க, அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும், சரியான பதில்களைக் கூறி அவர்களது சிகையைக் கலைத்து விளையடியவனின், சிகையை தன் கையால் கலைத்து விடத் தூண்டிய ஆசையை அடக்க பெரும்பாடு பட்டுப் போனாள் பாவையவள்.
இத்தனை வருடங்கள் பார்த்து பழகியவன் தான் என்றாலும், இன்றுதான் முதன் முறையாகப் பார்ப்பது போல் தன் கணவனையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனோ இது எதையும் கவனிக்காமல் டிவியில் கவனத்தை பதித்திருந்தான். அப்போது மீண்டும் ஷானுவின் போன் அலற… அதை எடுத்தவள் சிபி தன்னைக் கண்டு கொள்ளாத கோபத்தை அங்கு காட்டினாள்.
“என்னடி…. உன் டார்லிங் கூட இருக்கவும் எங்களை எல்லாம் மறந்துட்ட போல… மறுபடியும் சகுனி வேலை பார்க்கனுமா உனக்கு….? கால் பண்ணா கூட எடுக்க மாட்டேங்குற..?. என்ன மேட்டர்…? ஒரே ஜாலியோ ஜிம்கானதானா..? ஹனிமூன் ட்ரிப் எப்போ..? எந்த ப்ளேஸ் சூஸ் பண்ணிருக்கீங்க….?” – ஷானவி.
“ஹே போதும்… போதும் நிறுத்து….. என்ன தான் ஆனாலும் உன்னோட வில்லி புத்தி போகுதா பார்த்தியா…. உனக்கு திருந்துற ஐடியாவே இல்லையா..? உன் தொல்லை விட்டு இப்போதான் கொஞ்சம் என் டார்லிங்கோட நிம்மதியா இருந்தேன்… உடனே உனக்கு மூக்குல வேர்த்துடுச்சு…. பர்ஸ்ட் திருந்துடி….? பாவம் எங்கண்ணன்…. எப்படி உன்னை சமாளிக்கப் போறாரோ தெரியல…?- வித்யா
“என்ன வார்த்தை சொல்லிட்ட மச்சி… நான் திருந்திட்டா உலகம் என்னத்துக்கு ஆகுறது சொல்லு…. அதோட எல்லாரும் நல்லவங்களா போயிட்டா அந்த காட் பாவமில்ல, பிறகு நரகத்துல வேலை செய்றவங்களுக்கு என்ன வேலை இருக்கும், அதோட சொர்க்கத்துல இருக்குறவங்க ஓவர் டைம் ட்யுடி பார்க்கணும்… தேவையா இது… சொல்லு…? – ஷானவி
“அப்போ நீ நரகத்துக்குத்தான் போகப்போறன்னு உனக்கே கன்பார்மா தெரியுது அப்படித்தானே… ஹாஹா…. சூப்பர் மச்சி…. உன்னை மாதிரி எல்லாரும் இருக்க மாட்டாங்க டி….? – வித்யா
“ஹா..ஹா… நீ சரியா சொன்ன மச்சி…” – ஷானு
ஹேய் நிறுத்து… நிறுத்து… நீ சிரிக்கிறதே சரியில்லையே… என்னடி…. ஏதோ வில்லங்கம் இருக்கு போலயே நீ சிரிக்குறதுல… சொல்லிட்டு சிரி எரும… வழக்கம்போல எனக்குத்தான் பல்ப் கொடுத்தியா….” – வித்யா
“ஹாஹா மச்சி…. நான் கெட்டவன்னா…. உன்னையும் கெட்டவளாக்கி என் கூடவே நரகத்துக்குத்தான் கூட்டிட்டு போவேன்னு தெரியாதா உனக்கு… அப்புறம் நீ வந்தா உன் டார்லிங், என் அருமை புருஷன்…. இப்படி எல்லாரும் தானே வருவீங்க…. இதை நீ யோசிக்கவே இல்லையே மச்சி..” – ஷானு
“அதுவந்து மச்சி… நான் மட்டும் அங்க போய் என்ன செய்றது சொல்லு அதுவும் தனியா…? சரி விடு மச்சி…. இதெல்லாம் புதுசா நமக்கு…. ஆமாம் அதென்ன உங்கண்ணன் பாவம், பாவம்னு சொல்லிட்டு இருக்க… அப்போ நான் பாவமில்லையா..? என்னமோ என் மேல ரொம்ப பாசம் அது இதுனு சொல்லிட்டு இப்போ என்னன்னா கண்டுக்க கூட மாட்டேங்குறான் உங்க நொண்ணன்..”
“சரி பேசலாம்னு போனா பேயைப் பார்த்த மாதிரி ஓடுறான்…. இதெல்லாம் சரியே இல்ல சொல்லி வை… நான் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன் பார்த்துக்கோ…. அப்புறம் உங்கண்ணனுக்கு செய்கூலி சேதாரம் ஆச்சுன்னா நான் பொறுப்பு கிடையாது… என்னை யாரும் கேட்க கூடாது சரியா..” – ஷானு
“ஹேய்.. ஹேய் ரிலாக்ஸ் டி…. இப்போ எதுக்கு மூச்சு விடாம டைலாக் விடுற…. நீ நம்பினாலும் நம்பலைனாலும்எங்க அண்ணா பாவம் தான்..” – வித்தி
“அடியேய்…… என் கைல கிடைச்ச செத்தடி மகளே…. ஒழுங்கா அவன் யாரை லவ் பண்ணான், அநதப் பொண்ணு யாரு…? எந்த ஊரு..? எப்படி பழக்கம் எல்லாம் எனக்கு மெயில் பண்ணு..? இல்ல உனக்கு சகுனி வேலை பார்க்க கூட தயங்க மாட்டேன் நான்..” ஷானு
“ஏய் எருமைப் பிசாசே…. எப்பவும் இதே வேலையாத்தான் சுத்துரியா… போற போக்குல என் குடும்பத்துல கும்மியடிச்சிடாதே குண்டம்மா உனக்கு புண்ணியமா போகட்டும்… அப்புறம் அந்த பொண்ணு யாருன்னு அண்ணாக்கிட்ட தான் கேட்கணும்…. அது நீங்க ரெண்டு பெரும் பேசி தீர்த்துக்க வேண்டிய ப்ராப்ளம் குண்டுஸ்..”
“இதுல என்ன ஏன் கோர்த்து விடுற…. நான் யாருக்கிட்ட கேட்க முடியும்… காசிக்கு போனாலும் கருமம் போகாதுன்னு சொல்லுவாங்க, அது போலத்தான் இப்போ என் நிலைமையும்…. தீபக்கிட்ட கேட்டு பார்க்குறேன்… அவர் சொன்னா ஒகே…. இல்லைன்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது சொல்லிட்டேன்…” – வித்யா
“ஹலோ… ஹலோ…. என்ன ரொம்ப பேசுற… பழசெல்லாம் மறந்துடுச்சா… என்னம்மா இப்படி சொல்ரீங்களேம்மா…. நீ கேட்டு உன் டார்லிங் ஒன்னு இல்லைன்னு சொல்லிடுவாரோ… இதை நாங்க நம்பனும்…. சும்மா நடிக்காதடி…. கேட்டு சொல்லு மச்சி… இந்த கிறுக்கன் ஓவரா பண்றான்… எப்போ பார்த்தாலும் ஒரு கிளாஸ் கஞ்சிய குடிச்ச மாதிரி விரைப்பா அலையுறான்…”.
“இவனை எப்படி அப்ரோச் பன்றதுனே தெரியல… ஆனா ரொம்ப பண்ணான்னு வை, நான் காண்டாகிடுவேன்… அப்புறம் அவன் பழைய ஷானவியத்தான் பார்க்க வேண்டி வரும் சொல்லிட்டேன்… மை பொறுமையை யுவர் ப்ரதர் ஓவர் சோதிச்சிங் மச்சி…..” – ஷானு.
“ஹாஹா என்ன மச்சி இப்படி புலம்புற… இப்போதான் சிபிண்ணா சரியான வழியில போறாருன்னு தோணுது… பட் ஐம் சோ ஹேப்பி டா… நீ இப்படி பேசி எவ்ளோ நாளாச்சு தெரியுமா… அண்ணா சீக்கிரம் உன்னை புரிஞ்சிப்பார்…”
“அவர் பேசலைன்னு நீயும் உம்முன்னு இருக்காத… வேதாளம் போல பின்னாடியே சுத்து…. யு நோ மச்சி அண்ணா ஆல்ரெடி உன்மேல பைத்தியமா தான் இருக்காங்க… நீ பின்னாடியே சுத்து… உன் தொல்லை தாங்காம சண்டையாச்சும் போடுவாங்க… அப்போ நீ அதை கேட்ச் பண்ணி சமாதானம் பண்ணிரு… எப்படி என் ஐடியா….” – வித்தி
“ஹ்ம்ம் சகிக்கல பக்கி… ஐடியா கொடுக்குது பாரு…. நாங்க என்ன பண்ணணுமோ அதை நாங்களே பண்ணிக்கிறோம்… நான் கேட்ட டீடைல்ஸ் மட்டும் கேதர் பண்ணி சொல்லு…” – ஷானு
“அதானே கொஞ்சம் வளர விடமாட்டீங்களே…..” என சத்தமாக முணுமுணுத்தவாறே, “சரிடி கேட்டுட்டு உனக்கு மெசஜ் பண்றேன்… பாய்… டேக் கேர்….” என்று போனை வைத்தாள்.
தோழியின் முனுமுனுப்பில் சிரிப்பு வர, சிரித்துவிட்டு பாய் சொல்லி லைனை கட் செய்தபடி திரும்பியவள் யார் மீதோ மோதிவிட…. “ஹ்ம்ப்ச் பார்த்து வர தெரியாதா..? என்றபடியே இடித்த நெற்றியை தேய்த்தபடி அது யாரென்று பார்க்க… அங்கோ இறுக்கமான முகத்துடன் நின்றிருந்தது சாட்சாத் சிபியே தான்..
அந்த நேரத்தில், அந்த இடத்தில் அவனை சற்றும் எதிர்பார்த்திராதவள் திரு திருவென விழிக்க, அவனோ “ஆன்டி வந்து ரொம்ப நேரமா வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க..” என்றதோடு திரும்பி விட… இவளுக்குத்தான் மண்டை காய்ந்தது…
‘இவன் எப்போ வந்தான், எப்படி வந்தான்… ஓ வாக்கிங் ஸ்டிக் இருக்கே அதை வச்சு வந்திருப்பான். நாம் பேசின எல்லாத்தையும் கேட்டிருப்பானோ..? அப்படி கேட்டிருந்தா இப்படி நார்மலா இருக்க மாட்டானே…. ஆனா கேட்காம இருக்காதே… நாம மெல்லாமாவும் பேசல….. எப்படி கேட்காம இருக்கும்.. கண்டிப்பா கேட்டுருக்கும்… எல்லாத்தையும் கேட்டுட்டு வேணும்னே அமைதியா போறான்..’
‘வெறுப்பேத்துறானோ…? அப்படி மட்டும் செஞ்சான் அவனுக்கு நேரம் சரியில்லன்னு அர்த்தம்… பக்கி…பக்கி எப்படி போகுது பாரு ஒண்ணுமே தெரியாத மாதிரி…? இதெல்லாம் மேரேஜ் பன்னலன்னு யார் அழுதா…? ஹ்ம்ம் இந்த அம்மா வேற எதுக்கு வந்துருக்காங்களோ…..’ என்று மனதுக்குள்ளே புலம்பியவாறே தன் தாயை நோக்கி சென்றாள்.
ஷானவி வித்தியாவிடம் பேச ஆரம்பித்ததுமே அவன் வந்துவிட்டான்… பேசும் சுவாரஸ்யத்தில் அவளருகே நிற்பதைக் கூட உணராமல் சண்டையிட்டு, திட்டி, புலம்பி என அவள் பேசியதைப் பார்த்தவனுக்கு ‘ஷானு இஸ் ரிடர்ன்’ என்றே தோன்றியது…
இனி ஆட்டம் சூடு பிடிக்கும் என்று உணர்ந்தவனுக்கு மனமெல்லாம் நிறைந்து முகம் கொள்ளா புன்னகை தோன்றியது… அதை வெளிக்காட்டாமல் அவளிடம் சாதரணமாக பேசிவிட்டு வந்துவிட்டாலும் அவள் முகம் போன போக்கை நினைத்து அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை…
தன் வாக்கிங் ஸ்டிக்கை வைத்து மெதுவகாவே தன் அறைக்கு சென்றவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான். வாடி வா…. எத்தனை நாள் சுத்தல்ல விட்டுருப்ப…. இது என் டர்ன்….இப்போ நீ சுத்து என வில்லத்தனமாக நினைத்தான் அந்த காதல் கிறுக்கன்…
(ஏண்டா தம்பி உனக்கு இது தேவையா… இப்போதான் அவ கொஞ்சம் மனசு மாறி, உச்சிப்பிள்ளையார் கோவில் மலையை விட்டு இறங்கி வந்துருக்கா… அது பொறுக்கலையா… நீ அவக்கிட்ட அடி திங்காம அடங்க மாட்ட… விதி வலியது டாக்குடர் தம்பி.. நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட… – இது என்னோட மைன்ட் வாய்சுங்கோ..)