“உங்க கல்யாணத்துக்குக் கண்டிப்ப என்னை இன்வைட் பண்ணுங்க….சார்……அகல்யா கூட நடந்தால் மட்டும்….” என்று சொல்லி சென்று விட
சத்யசாகரனும் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றான்.அவனுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது.
நீரஜா சொன்னது அனைத்தும் உண்மைதான்.அவன் அகல்யா நினைக்கக் கூடாது என்று எண்ணியிருக்க எண்ணெமெல்லாம் அவள் தான்..
என்ன செய்வான் அவன்…?
அதுவும் அவன் அமெரிக்கா செல்லும் முன் அவள் என்னை ஞாபகம் வந்தால் சொல்லுங்க என்று சொல்லிய பின் அவளது ஞாபகமே..!!
நினைக்கக் கூடாதென நினைத்தால் கூட நினைவெல்லாம் அவள் தான்.
ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து அவள் அவனையே நினைத்து வந்து நிற்பாள் என அவன் சத்தியமாக எண்ணவில்லை.அவள் தான் அவன் முதல்பார்வையில் பட்டாள்.ஆனால் எங்கே அவள் மனதில் ஆசையை வளர்த்து விடுவோமோ என்றுதான் அவன் அவளைக் கண்டுகொள்ளாமல் இருந்தான்.
அவனுக்கு ஒன்று புரியவில்லை..ஆசை இருந்ததால் தான் அவள் அவனைக் காண வந்ததே,,,!!
அவளைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது.அகல்யா அவளது பிறந்த நாளில் அவளைப் பற்றி அவள் தாய் தந்தை பற்றியெல்லாம் கூறிய பின் அவனுக்கு அவள் மேல் அன்பு கூடியது.
ஆனால் அதை வெளிப்படுத்த முடியாத வகையில் அவனது இயலாமை தடுத்தது.
அதையும் தாண்டி அவனை இன்னொன்றும் தடுத்தது.
சத்தியம்…!!!
ஆம்..!! அகல்யாவின் பிடிவாதம் பற்றித் தெரிந்த மஞ்சரி , அகல்யா சத்யாவைக் காதலிப்பதாய் சொன்ன அடுத்த நாளே அவனைச் சந்தித்து , “இங்க பாருங்க சத்யா…நீங்க நல்லவரா இருக்கலாம்..ஆனா என் பொண்ணுக்கு நீங்க வேண்டாம்….நான் ஒரு டிவோர்சி…என் பொண்ணை நான் ரெண்டாந்தாரமா கட்டிக் கொடுக்க விரும்பல…..எந்த தாய் விரும்புவா நீங்களே சொல்லுங்க…..”
“கண்டிப்பா விரும்ப மாட்டேன்..” என அமெரிக்கா செல்லும் முன் அவருக்கு வாக்களித்திருந்தான்.அவன் அமெரிக்கா சென்ற பின் அதைப் பெரிதாக எடுக்கவில்லை..ஆனால் இந்தியா வந்த பின் அகல்யா அவனை நெருங்க முயற்சிக்க ,இவனோ விலகினான்.என்று அவளைப் பற்றியும் , அவளது அன்னை பற்றியும் அவள் கூறினாளோ அன்றே அவன் முடிவு செய்து விட்டான்.
இனி அகல்யாவின் வாழ்வில் அவன் குறுக்கீட கூடாதென்று.அவளுக்குக் கௌரவமான வாழ்வு வேண்டும்.சமூகம் அவளைக் கீழாகப் பார்க்க கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான்.
அவனின் உள்ளம் முழுதும் ஆசை இருந்தும் அதை மறைத்தான்.
ஆகையால் அகல்யா அவன் வாழ்வில் கானல் நீர், எட்டாக் கனி என்று தான் அவனே அவனைச் சமாதானம் செய்து வந்தான். நீரஜா சொல்லிய பின் தான் அகல்யா அவனுக்கு எவ்வளவு முக்கியம் எனப் புரிந்தது.
அகல்யாவை விட்டுக்கொடுக்கவும் முடியாது விடவும் முடியாது என்று திண்ணமாய் அவன் மனது அடித்துச் சொன்னது.ஆனால் மஞ்சரியிடம் கொடுத்த வாக்கு அவனைத் தடுத்தது.
அவனது காதல்…!! அந்தத் தடைகளைத் தாண்ட துடித்தது.
இன்று அவளைக் காயப்படுத்திய போது அவன் தான் அவளை விடக் காயப்பட்டுப் போனான்.
அகல்யாவை விட முடியாது என்று அவன் மனம் உணர்ந்த அந்த நொடி மஞ்சரியிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்தான்.
அவன் மனம் தெளிவடைய உதவியை நீரஜாவுக்கு அழைத்தவன் ,
“நீரஜா திஸ் இஸ் சத்யா…”
“ஹாய்….சொல்லுங்க சத்யா….? என்ன போன்…?”
“தேங்க்ஸ்………”
“எதுக்கு…?”
“என் மனசை எனக்குப் புரிய வைச்சீங்க….இல்லனா நான் என்னையே ஏமாத்திட்டு இருந்திருப்பேன்….”
“நானும் வேண்டிக்கிறேன் சத்யா…….ஆல் தி பெஸ்ட்…..சீக்கிரமே கல்யாண சாப்பாடு போடுங்க…..”
“கண்டிப்பா…….நீங்களும் போடணும்….”
“சரி சத்யா…பார்ப்போம்….உங்களுக்கு ஒரு தேவதை கிடைச்ச மாறி எனக்கும் ஒருத்தர் கிடைப்பார் …..பார்ப்போம்…”
“கண்டிப்பா உங்க நல்ல மனசுக்குக் கிடைப்பாங்க…..சரிங்க பை…..வைக்கிறேன்…” என்ற சத்யா அதன்பின் மஞ்சரியை நாளை பார்க்க வேண்டும் என்ற முடிவோடு உறங்கச் சென்றான்.
அகல்யாவுக்கு மனது ஆறவே இல்லை.அவன் பேசிய வார்த்தைகளின் தாக்கம் இன்னமும் குறையாமல் அவள் காதில் ஒலிக்க , அதை அவளால் தாங்க இயலவில்லை.
அவளது அறையின் கதவை அடைத்தவள் , மெத்தையில் சாய , அவளையும் அறியாமல் கண்ணில் இருந்து நீர் வழியத் துவங்கியது.
அதை நினைத்து அவளுக்கே அவமானமாக இருந்தது.இதே வேறு யாராவது அவளை இப்படித் தரக்குறைவாய்ப் பேசியிருந்தால் ஒன்று கண்டுகொள்ளாமல் போயிருப்பாள் , இல்லை அடித்து விட்டு வந்திருப்பாள்.ஆனால் யாரை நல்லவன் என்று நினைத்து மனதை மறைக்காது காதலை சொன்னாளோ அவனே அவளை அவமானப்படுத்திய பின் மனம் முழுவதும் பாரமாய் இருந்தது.
அவன் மீது கொண்ட காதலால் அவனை அவள் தேடிச் செல்ல அவனோ அவளது தேடலை , அவனுக்கான காதலை அலையுற , எவனும் கிடைக்கலயா….? என்று கொச்சைப்படுத்திய பின் ஒரு வித வெறுப்பு மனதில் தோன்றியது.
ஆத்திரம் கண்ணை மறைக்க ஒரு முடிவெடுத்தாள்.
காதல் ஒரு முறை தான் வரும் என்பதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை.ஆனா முதல் காதல் அதை மறக்க முடியாது , இனி வரப்போகிறவனிடமும் மறைக்க முடியாது.
ஆம்.நிச்சயம் மறைக்க முடியாது அவளால்.அவள் சத்யாவை மறக்க நினைத்தாள்.
வாய்மையில் அவள் வளைந்து கொடுக்க மாட்டாள்.ஆனால் வாழ்க்கையில் வளைந்து கொடுப்பாள்.தாயின் விருப்பத்தை மதிக்க எண்ணினாள்.அட்லிஸ்ட் ராஜேஸ்வரனும் மஞ்சரியும் சேர வேண்டும் என எண்ணினாள்.அதனால் மஞ்சரியிடம் சென்று திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தாள் ,அதுவும் அவர் பார்த்தவனையே.
“இனி அவருக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லமா…ம்ச்…..எப்போவும் இருந்ததில்லை…சோ நீங்க பார்த்த ஆளே எனக்கு ஓகே…”
“ஏன் தீடீர்னு……நீ அவ்வளவு சீக்கிரம் எதையும் விட மாட்டியே அம்மு….?”
“ப்ச்…நாளைக்கு நீங்க சொன்ன மனோகர் கிட்ட நான் பேசணும்……அவர் கிட்ட சொல்லிடுங்க……ஓகேவா…….சத்யாவுக்கு நான் வேண்டாமாம்…அவரே நல்லா மண்டையில் உறைக்கிற மாறி அடிச்சுச் சொல்லிட்டார்…சந்தோசம் தானே….அதான் உங்க பேச்சை கேட்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்…” என்றவள் அறைக்குள் சென்று அடைந்தாள்.
அடுத்த நாள் காலையில் தாயாரிடம் மனோகரை எங்கே சந்திக்க வேண்டும் என்று கேட்டவள் அவனை அவன் சொன்ன இடத்தில் சந்திக்கச் சென்றாள்.
ஆனால் மனம் தான் அவளுடன் செல்லவில்லை.மனதுக்குப் பிடித்தவர்கள் விருப்பாகப் பேசினாலும் சரி வெறுப்பாகப் பேசினாலும் சரி மனதை விட்டு அந்த ஆனந்தமோ ரணமோ ஆறாது.அப்படிதான் அகல்யாவும் இருந்தாள்.
இருந்தாலும் தனக்கெனவே வாழ்ந்த தாயின் சந்தோசத்திற்காகவும் நிம்மதிக்காகவும் அவள் மனோகரை சந்திக்கச் சென்றாள்.அதற்காக மனோகரிடம் சத்யாவைப் பற்றிக் கூறாமல் இருக்க நினைக்கவில்லை அவள்.இத்தனைக்கும் சத்யாவும் அவளும் காதலிக்கவில்லை.இவள் காதலை அவன் ஏற்கவும் இல்லை.மிஞ்சிப் போனால் பத்து முறைக்கும் குறைவாகவே அவனை நேரில் சந்தித்திருப்பாள்.ஐந்து முறை தான் மனம் விட்டு பேசியிருப்பாள்.
அவள் இப்படி மனதுக்குள் அலைபாய்ந்து கொண்டே வண்டி ஓட்ட , எதிரில் வந்த காரை அவள் கவனிக்கவில்லை. ஒரு திருப்பத்தில் அந்தக் கார் வர இவள் கொண்டு போய் அந்தக் காரில் வண்டியை விட்டாள்.
அந்தக் காரில் இருந்து இறங்கியவன் அவளை முறைத்தவாறே அவளைத் தூக்கி விட , இவளும் அவனைப் பதிலுக்கு முறைத்தாள்.
ரிஷியும் அகல்யாவும் ஒருவருக்கு ஒருவர் முறைத்தனர்.அஜாக்கிரதையாய் வந்து அவனது காரில் மோதியவளைக் கண்டவன் , அவளை முறைக்க , அவளும் அவளுக்கு இருந்த எரிச்சலில் அவனை முறைத்தாள்.
“பார்க்காம வந்ததால தானே மோதிட்டேன்……அப்புறம் என்ன கேள்வி…?” என்று சிடுசிடுத்தாள் அகல்யா.
“என்ன மேடம் ரொம்பச் சூடா இருக்கப் போல….”
“ப்ச்…ஒன்னுமில்ல…ரிஷி..”
“உன் முகம் சரியில்லை……கண்ணெல்லாம் சிவந்திருக்கு…என்ன பிரச்சனைன்னு சொல்லும்மா..”
“ஒன்னுமில்ல ரிஷி…..கை எரியுது…” என்று கீழே விழுந்ததால் உராய்ந்த அவளது கையைக் காட்டினாள்.
“ம்ச்…சரி வா…..உன் வண்டியை டிரைவரை எடுத்துட்டு வீட்டில ட்ராப் பண்ண சொல்றேன்..நீ என் கூட வா ஹாஸ்பிட்டல் போய் டிரஸ்ஸீங் செஞ்சிடலாம்…”
வேண்டாம் எனச் சொல்ல வந்தவள் பிறகு அவன் ஒப்புக்கொள்ள மாட்டான் என அவனோடு சென்றாள்.
ரிஷிகார்த்திக்கேயன் அகல்யாவின் தோழி ஜீவாவின் காதலன்.ஜீவா சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட இன்னமும் அவளது காதலோடும் காதல் தந்த நினைவோடும் அவன் வாழ்ந்து வருகிறான்.சென்னை நகரின் ஏ.சி.பி யாக இருக்கும் துடிப்பான இளைஞன்.ஜீவா தான் அகல்யாவுக்கு நெருங்கிய தோழி.
ஜீவா பொறியியல் கல்லூரியில் சேர , அங்கே அவளது சீனியர் ரிஷிக்கும் காதல் வர அதன்பின் அதை அவள் அகல்யாவிடம் சொல்ல , காதல் என்றாலே கசப்பு என்ற எண்ணம் கொண்ட அகல்யா ரிஷியைக் கூப்பிட்டு கண்டிக்க , சின்னப் பெண்ணாய் இருந்தாலும் , அவளை விட வயதில் பெரிய சீனியரான அவனை அவள் எதிர்த்த நின்ற விதம் அவனுக்குப் பிடித்துப் போனது.மானசீகமாய் அவளைத் தங்கை என்றே எண்ணினான்.அகல்யாவை சமாதானப்படுத்தி அவன் காதலுக்குப் பச்சைக் கொடி காட்ட வைத்தான்.
ஜீவா மறைந்த பின் உடைந்த போன ரிஷிக்கு அகல்யா தான் ஆறுதல்.அவன் மீது அகல்யாவுக்கு மிகுந்த மரியாதை உண்டு.கிட்ட தட்ட ஒரு ஹீரோ வொர்ஷிப் அவன் மீது.அண்ணன் என்று சொன்னதில்லையே தவிர இருவருக்குமிடையே புரிதலும் பாசமும் நிறைய உண்டு.ஒரு அழகிய தோழமை அவர்களுக்கு இடையே இழைந்தோடும்
அதனால் தான் அவன் பேச்சுக்கு மறுப்புச் சொல்லாமல் அவனோடு ஹாஸ்பிட்டல் சென்றாள்.அதன்பின் அவனே அவளைக் கோர்ட்டில் கொண்டு போய் விட்டான்.அங்கே ,
“ரிஷி……அம்மா எப்படி இருக்காங்க?”
“நல்லா இருக்காங்க…”
“நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க ரிஷி நானும் அம்மாவும் சந்தோசப்படுவோம்…ப்ளீஸ்…ஜீவா இருந்தாலும் அதைத்தான் சொல்லுவா….”
“இல்ல….கண்டிப்பா அவ அப்படிச் சொல்ல மாட்டா அகல்மா…..அவ ரொம்பப் பொஸஸிவ்………….எல்லா தெரிஞ்சும் நீ இப்படிச் சொல்லலாமா…அவள என்னால சத்தியமா மறக்க முடியாது……”
“அவ நீங்க நல்லா இருக்கனும்னு தான் நினைப்பா…..”
“நான் இப்பவும் நல்லா தான் இருக்கேன்….கல்யாணம் தான் வாழ்க்கையா என்ன…?”
“அதை நானும் சொன்னா….?”
“அம்மா….தாயே….நான் வாசு இல்ல…வக்கீலா இருந்தாலே உங்கிட்ட பேசறது கஷ்டம்…..நானோ போலிஸ்…..ஆள விடு…முதல்ல நீ கல்யாணம் செஞ்சிக்கோ…அப்புறமா எனக்குப் பார்க்கலாம்….” என்று கைக்கூப்ப
“ப்ச்….ப்ளீஸ்….இப்படி பேசினா உங்கிட்ட நான் பேச மாட்டேன்…”
“………………………………………..”
“சரி…..நீ ஏன் டென்சனா வண்டி ஓட்டின…? அதைச் சொல்லு..?”
“என்ன ஏ.சி.பி சார் இன்வெஸ்டிகேஷனா…?”
“அப்படிதான் வைச்சிக்கோயேன்…சொல்லு அகல் மழுப்பாத…”
“நான் சரியா கவனிக்கல……….”
“அதான் வை….டெல் மீ அகல்…அவுட் வித் இட்…..நீ கவனமில்லாம அஜாக்கிரதையா ஓட்ட மாட்ட….டென்சனா இருந்தா தான் உன் முகம் வேர்க்கும்…கண்ணு சிவக்கும்….கை நடுங்கும்…..அதை நான் ஹாஸ்பிட்டலே கவனிச்சேன்…நீ நிதானம் இழக்கற அளவுக்கு என்ன ஆச்சும்மா?”
சத்யா பற்றி ரிஷிக்கு எதுவும் தெரியாது.அதனால் அவனைப் பற்றி அவனிடம் சொல்ல அகல்யா விரும்பவில்லை.சத்யாவைப் பற்றிச் சொல்ல விரும்பவில்லை என்பதை விட அவனைக் குறித்துத் தவறாய் சொல்ல அவள் விரும்பவில்லை.அதான் உண்மை.
“ஹம்ம்…ஆனா தப்பு அவர் பேர்ல இல்ல……என் மேல தான்….அவர் பின்னாடி நான் போனேன்ல…அதான்….காதலா இருந்தாலும் சரி எந்தக் கண்றாவியா இருந்தாலும் சரி ஆண்கள் தான் முதல்ல சொல்லணும்…” என்று வெம்ப,
அப்போது பார்த்து வந்தான் வாசு.அகல்யா ஏதோ சிரீயசாகப் பேசுவது போல் தோன்ற ,அதுவும் அவள் அழ, எங்கே இவன் போனால் அவள் பேசுவதை நிறுத்தி விடுவாள் என்பதால் அமைதியாக அங்கேயே நின்றான்.
அவள் பேசுவதைக் கேட்டவன் ,”ஹா ஹா பொங்க ஆரம்பிச்சுட்டா டா ஆரம்பிச்சுட்டா….பொங்குறதுதான் பொங்குறா எப்போவுமே மிளகுப் பொங்கல் தான பொங்கனும்…ஒரு சேஞ்சுக்கு சக்கரைப் பொங்கல் வெண் பொங்கல் பொங்குனா என்ன…..?…” என மனதில் நினைத்தான்.
“ஆமா அகல்…..அவங்க தான் முதல்ல சொல்லணும்…ஒரு பொண்ணா போய்க் காதல சொன்னா இப்படித் தான் செய்வாங்க…..ஆனா பசங்க சொன்னா நம்ம ஒத்துக்கணும்…இல்ல……ஒத்துக்கிற வரைக்கும் நம்ம பின்னாடியே சுத்துவானுங்க…..ப்ச்…….இதெல்லாம் மாத்த முடியாது விடு……..”
“நந்திக்கு என்ன கேடு வந்துச்சு..அவள ஏத்தி விடுறா..அபிஷேக் கிட்ட சண்டை போட்டாளோ…..?இவளும் பொங்குறா…..” எனக் கவுண்டர் கொடுத்தான் வாசு.
அது உண்மை தானே..!! பெண்களால் ஆண்களின் எண்ணங்களுக்கு ஆட்படத்தான் முடியும்.ஒரு பெண் தனது உள்ளத்தையோ உணர்ச்சியையோ எளிதில் ஒரு ஆடவனிடத்தில் வெளிப்படுத்தி விட முடியாது.நாணம் என்பதையெல்லாம் தாண்டி நடைமுறையில் அதன் சாத்தியம் மிகவும் குறைவு.ஆண்களாலேயே இயல்பாகக் காதலை சொல்ல முடியாத போது பெண்களால் மட்டும் சொல்லி விட முடியுமா என்ன…?
ஒரு ஆணால் இயல்பாய் ஒரு பெண்ணின் பின் காதலை சொல்லிக் கொண்டு சுற்ற முடியும்..ஆனால் பெண்ணால் அப்படி ஆணின் பின்னால் காதலை சொல்லிக் கொண்டு துரத்தி துரத்திக் காதலிக்க முடிகிறதா என்ன…?
திருமண உறவில் கூடப் பெண்களால் இயல்பாக அவர்களின் உணர்வுகளைக் கொட்டி விட முடியாது.பெண் என்பவள் கணவனின் கண்ணாடியாக இருக்க வேண்டும் என்றுதான் நம் சமூகம் எண்ணுகிறது.ஒரு சிலருக்கே சுயத்தைத் தனித்தன்மையை இழக்காத வகையில் துணை அமைகிறார்கள்.
“அப்போ நமக்குக் காதல் வந்தா கூடச் சொல்லக்கூடாது அப்படித்தானே….அவங்க உணர்வுகளுக்கு நாம பிரதிபலிக்கனும்…நம்மளோட சுய உணர்வுகளுக்கு நாம பிரதிபலிக்கக் கூடாது….இல்ல .” என அகல்யா சொல்ல
“அதான் உண்மை……… நம்ம உணர்வுகளை வெளிப்படுத்த அதுக்கு ஏத்த மாதிரி துணை வேணும்…….இட் டெபண்ட்ஸ்……..விடுடி…உனக்கு சத்யாவ விடப் பெட்டரா ஒருத்தர் கிடைப்பாங்க……”
“இப்போ….எனக்கு யாரையுமே….வேண்டாம்னு தோணுது…சத்யாவே இப்படின்னா….ம்ச்…நினைக்க முடியல..விடு…அம்மாக்காகத் தான் அந்த இந்திக்காரனா பார்க்க போனேன்……அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு…..அவங்க நான் என்னமோ வேணும்னே செஞ்ச மாறி சொல்லுவாங்க…சை…நினைச்சாலே டென்ஷனா இருக்கு….அவங்க வேற….குறுக்கு விசாரணை எல்லாம் செய்வாங்க….”
“விடும்மா….”
அப்போது அவளது கையைப் பார்த்த நந்தினி“ஆமா….என்னது இது கையில ப்ளாஸ்டர்…..”
“சரி நந்து…எனக்கு டயர்டா இருக்கு..நான் போறேன்….” என்றவள் வெளியே வர வாசு மறைந்து நின்றான்.
அகல்யா ஒரு ஆட்டோ பிடித்துச் செல்ல , வாசு நந்தினியிடம் சென்று விசாரிக்க , அவளோ எங்கே இவனிடம் சொன்னால் அகல்யா கோபிப்பாளோ என்று பயந்து சொல்லாமல் இருக்க , வாசு அவளை மிரட்டி உருட்டி உண்மையைச் சொல்ல வைத்தான்.அதைக் கேட்டு அவன் ஒரு முடிவு செய்தான்.