நள்ளிரவிற்கு மேல் தான் உறக்கம் என்பதே அதிரனிடம் வந்தடைந்தது. அத்தனை களைப்பு உடலிலும், மனதிலும் இருந்தாலும் மேகாவின் நிலை அவனை வெகுவாய் அசைத்திருந்தது.
தானில்லையென்றால்? என்னவோ இந்த கேள்வி அவனிடம் மீண்டும் மீண்டும் எழும்பிக்கொண்டே இருந்தது.
அவளின் முகத்தையே பார்த்தபடி மேகாவின் பேச்சுக்களை கேட்டபடி கன்னம் வருடிக்கொண்டிருந்தவன் மெல்ல உறங்க ஆரம்பித்திருக்க திடீரென ஆழ்ந்த உறக்கத்தில் ஜில்லென்று குளிர் தனது உள்ளங்கையை தீண்டும் உணர்வு.