இரவு நேரம் அந்த மொட்டை மாடியில் விளக்கின் வெளிச்சத்தொடு அதனை ஒத்திருந்த பௌர்ணமி நிலவின் வெளிச்சமும் ஒளி வீசிக்கொண்டிருந்தது.
மாடியின் தரையில் பெரிதாய் ஜமுக்காளம் ஒன்றை விரித்திருக்க அதில் பிள்ளைகள் இருவரிடமும் அதட்டலாய் பேசிக்கொண்டிருந்தாள் ஷ்ராவணி.
“சொன்னா கேட்கவே மாட்டியா நீ?…” என மகனை அதட்டினாள்.
“ம்மா, நோ ம்மா, ப்ளீஸ்…” என்று தன் அண்ணனை அணைத்துக்கொண்டு காப்பாற்ற முயன்றது அவளின் பெண் குழந்தை.
ஏழு வயதில் பவித்ரயேஷ், நான்கு வயதில் பௌர்ணமி. இருவரும் வம்சியை கொண்டு பிறந்திருக்க அவனை போலவே பிள்ளைகளையும் சமாளிக்க முடியவில்லை ஷ்ராவணியால்.
“அவனை சொன்னா உனக்கேன்டி இவ்வளோ கோவம் வருது? என்ன சொல்லி கிளம்பி வந்தீங்க? இங்க வந்து ஹோம்வொர்க் பண்ணுவோம்ன்னு பெருசா சொன்னீங்க?…” என்றாள் ஷ்ராவணி.
“ம்மா அண்ணய்யா பாபம்…” என மகள் தாயை முறைத்தபடி சொல்ல,
“தொலைச்சிடுவேன். இங்க ஃபங்க்ஷன்க்கு வரும் போதே என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன். ஊர்லையே ஹோம்வொர்க் முடிங்கன்னு சொன்னதுக்கு ஊருக்கு போய் பன்றேன்னு சொன்ன தானே பவி?…” என்றாள் மகனை.
“ம்மா சூரா நாளைக்கு பண்ணிடுவேன்…” மகனுக்கு தூக்கம் கண்களை சுழற்றியது.
“இன்னைக்கு ஏன்டா செய்யலைன்னு கேட்டா நாளைக்கு செய்வேன்னு சொல்ற?…” என்று கேட்க அப்படி விழித்தான் மகன்.
“என் பேச்சை இங்க யார் கேட்கறா? நேத்து சொன்னேன் தானே போனதும் ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சுட்டு தான் பாட்டி வீட்டுக்கு போகனும்ன்னு. வந்ததும் என்னை கேட்காம குடுகுடுன்னு ஓடறீங்க ரெண்டுபேரும்…” என்றவள்,
“நீ என்னடி உன் உயரத்துக்கு உன் அத்தைக்கு கால் பண்ணி மாமாவை அனுப்புங்கன்னு கிளம்பி ஓடிட்ட?…” என இருவரையும் வாட்டிக்கொண்டிருந்தாள்.
“ப்பா…” என கை நீட்டி தகப்பனை உதவிக்கு அழைத்தாள் மகள்.
“ம்ஹூம், என்னை வாயே திறக்க கூடாதுன்னு சொல்லிட்டா உங்கம்மா. நான் மாட்டேன். இல்லைன்னா எனக்கும் பனிஷ்மென்ட்…” என கண்கள் சிரிக்க முகத்தை பாவமாய் வைத்துகொண்டு கூறினான் வம்சி.
அங்கே தென்னைமரத்தின் காற்றில் சுற்று சுவற்றில் கையில் மொபைலுடன் அமர்ந்திருந்தான்.
ஆனாலும் மனைவியின் மிரட்டல் பார்வையில் அடங்கி அமர்ந்திருந்தான் அங்கேயே.
“பிள்ளைங்க நீங்க சப்போர்ட் செய்யறீங்கன்னு தெரிஞ்சா இன்னும் சொன்ன பேச்சு கேட்கமாட்டாங்க. யாருக்காச்சும் ஒருத்தருக்கு பயப்படனும்…” என மகன் பிறந்து வளரும் பொழுதே சொல்லிவிட்டாள் ஷ்ராவணி.
இன்றுவரை அதில் மாறாமல் வம்சி கடைபிடிக்க மகள் தான் அவ்வபோது அழைப்பாளே தவிர மகன் அழைக்கமாட்டான்.
அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது தகப்பன் தாயின் கண்டிப்பில் தலையிடமாட்டான் என்று.
பாவமாய் தலையை குனிந்தபடி அமர்ந்திருந்தான் அவன். ஷ்ராவணிக்கு பாவமாக இருந்தாலும் கோபம் வேறு.
இப்படி விட்டால் நிச்சயம் இதில் அசால்ட்டாக இருந்துவிடுவான். லக்னோ திரும்புகையில் நிச்சயம் பள்ளியில் எதையும் முடித்திருக்காமல் அங்கே மற்ற மாணவர்கள் முன் நிற்க வேண்டி வரும் என்று தெரியும்.
ஆம், மகள் பிறந்த இரண்டு வருடத்திலேயே வம்சிக்கு லக்னோவிற்கு பணியிடமாற்றம் கிடைத்திருந்தது.
அங்கேயே பிள்ளைகளின் படிப்பும் தொடர்ந்தது. மகளை மகன் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்திருந்தாள் ஆரம்பப்பள்ளியில்.
இப்போது ஷைலஜாவின் வளைகாப்பிற்கு வந்து சேர்ந்திருந்தனர் அவர்கள். படிப்பு, படிப்பு என்று தன் குறிக்கோளை அடைந்த பின்னர் தான் திருமணம் என ஷைலஜா சொல்லிவிட சென்ற வருடம் திருமணம் முடித்து இதோ வளைகாப்பு.
நாளை மறுநாள் வளைகாப்பு. அவர்கள் வீட்டில் சொந்தங்கள் என்று சூழ்ந்திருக்க வந்து வந்து பிள்ளைகளை அழைத்து சென்றுவிடுவார்கள்.
எந்தளவிற்கு வம்சி ஊர், உறவு என்று வராமல் செல்லாமல் இருந்தானோ அந்தளவிற்கு இப்போது சாந்தினியை கொண்டு ஷ்ராவணி அவனை இழுத்துக்கொண்டு வர ஆரம்பித்திருந்தாள்.
நல்லநாட்கள், விசேஷங்கள் எல்லாம் நெல்லூர் வீட்டில் வைத்து தான். அங்கே பிள்ளைகளுக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்தி வைத்திருந்தாள்.
ஆரம்ப நாட்களில் இதனை ஆட்சேபித்த வம்சிக்கு எதிராக அவனின் பிள்ளைகளின் மகிழ்ச்சியும், மனைவியின் விருப்பமும் முன்னின்று வென்றுவிட்டது.
அதனைக்கொண்டு முடிந்தளவு அங்கே சொந்த ஊருக்கு வந்துவிடுவான் அவர்களுடன்.
ஷ்ராவணி சொந்தத்தில் ஓரளவு இப்போது நன்றாகவே ராமனிடம் பேச ஆரம்பித்திருந்தான் வம்சி.
சந்துரு படிப்பை முடித்து நல்ல வேலையில் சேர்ந்ததும் தாய் தகப்பனை தன்னுடன் வீடு ஒன்றை பிடித்து தங்க வைத்துக்கொண்டான்.
ஒரு மாதம் முன்பு தான் அவனின் திருமணமும் முடிந்திருந்தது. சென்னையில் தாய் தகப்பனுடன் புது மனைவியுடனும் வாழ்க்கை நன்றாகவே சென்றது.
சந்துரு திருமணத்தில் வைத்து சிவரஞ்சனி ஷ்ராவணியை வேண்டுமென்றே பேச முயன்றாலும் ஒற்றை பார்வையில் அதனை அதட்டி அடக்கி வைத்தாள் ஷ்ராவணி.
முன்பை போலல்லாது திருப்பி கொடுக்கவும் ஆரம்பித்திருக்க எப்போது வேண்டுமானலும் அறைந்துவிடுவேன் என்னனும் பார்வையை கொடுத்தே எட்டி வைத்திருந்தாள்.
உறவு இருந்தும் இல்லாத நிலை சிவரஞ்சனி, ரமேஷுடையது. சந்துருவின் மனைவி பக்க சொந்தங்கள் கூட ஷ்ராவணியிடம் அத்தனை நெருக்கம் காட்ட சிவரஞ்சனி பேச்சிலே தன்னை காட்டிக்கொடுத்தாள்.
அதுவே அவளிடமிருந்து அனைவரையும் எட்ட நிற்க வைத்தது. தானாக சென்றாலும் பேச்சே வைத்துக்கொள்ள கூடாதென நினைக்கும் அளவிற்கு தான் அவளின் செயல்கள் இன்னும்.
அவ்வப்போது ராமேஸ்வரம் சென்று வருவார்கள். சென்று உடனே வந்துவிடுவார்கள். அதுதான் வம்சி வழக்கமாக கொண்டிருந்தான்.
இப்போதும் பிள்ளைகளை கண்களை உருட்டி பாடத்தை சொல்லித்தந்து கொண்டிருந்த மனைவியை பார்த்தபடி அதனை வீடியோவாய் எடுத்தான் வம்சி அவளறியாமல்.
“ஹாய் குட்டீஸ், என்ன பன்றீங்க?…” என பிரணவ்வும், ஷைலுவின் கணவனும் வந்துவிட்டார்கள்.
அவர்களை பார்த்ததும் குழந்தைகள் குதூகலிக்க வம்சி வரவேற்று புன்னகைக்க ஷ்ராவணிக்கு விழி பிதுங்கியது.
அழுதுவிடுவேன் என்பதை போல அவர்களை பார்க்க பிள்ளைகள் அவள் முன் காதில் கை வைத்து ஆட்டமாய் ஆடியபடி பிரணவ்வை நோக்கி ஓடி செல்ல ஆளுக்கொருவராய் பிள்ளைகளை தூக்கிக்கொண்டனர்.
“போலா, போலா. சீக்கிரம்…” என இருவரையும் இங்கே ஷ்ராவணி பக்கம் திரும்பவிடவில்லை பிள்ளைகள்.
“ஹேய் விடுடா நிலா…” என்றான் வம்சி அவளருகே வந்து.
“இன்னைக்கு நோ ஹோம்வொர்க்கா குட்டீஸ்? சூடு அம்மா பாவம்ரா…” என்றான் பிரணவ்.
“நோ பாக்கமாட்டோம்…” என இருவரும் ஒன்றுபோல முகத்தை கை கொண்டு மூடிக்கொள்ள,
“நாளைக்கு என்கிட்டே தான் வரனும். ம்மா கதை சொல்லுன்னு கேளு. வாய்லையே நாலு வப்பு வைக்கறேன்…” என்றாள் ஷ்ராவணி கோபமாய்.
“டேய் கிளம்புங்க நீங்க. நான் பார்த்துக்கறேன்…” வம்சி சொல்ல,
“அம்மா தான் ண்ணா கூட்டிட்டு வர சொன்னாங்க குட்டீஸ்க்கு பிடிச்ச மீன் குழம்பும், வறுவலும் செஞ்சிருக்கோம்ன்னு. ஈவ்னிங் பிரஷா பிடிச்சது கொண்டுவந்தாங்க. உடனே அம்மா வாங்கி செஞ்சாச்சு…” பிரணவ் சொல்ல,
“அம்மாவா செஞ்சிருக்கமாட்டாங்க. இவன் கேட்டிருப்பான். இவ கூட சேர்ந்து ஆமா சொல்லியிருப்பா. தெரியும்டா…” என்றான் பிள்ளைகள் முதுகை தட்டி கொடுத்து.
“ஓகே, நான் ஹெல்ப் பன்றேன்…” என ஷைலுவின் கணவன் அந்த புத்தகங்களை வாங்கிக்கொள்ள,
“நோ மாமாகாரு, அண்ணைய்யா பாபம்…” என்றாள் பௌர்ணமி.
“அப்ப நீ போகாத. இங்கயே பாவம் பார்த்துட்டு இருடி…” என்று அவளை வாங்க முயற்சிக்க,
“மாமாகாரு லெட்ஸ் கோ…” என்று காலை உதைத்தாள் பௌர்ணமி.
இருவரும் பிள்ளைகளை தூக்கிக்கொண்டு செல்ல வம்சியும், ஷ்ராவணியும் கீழே இறங்க வந்தனர்.
“ண்ணா நான் கீழே லாக் பண்ணிக்கறேன். நீ இரு…” என்று சொல்லி கிளம்பிவிட்டான் பிரணவ்.
பிள்ளைகள் இருவரும் குட்நைட், பை சொல்லி பறக்கும் முத்தத்தையும் தந்துவிட்டு செல்ல ஒற்றை விரலை நீட்டி அவர்களை பொய்யாய் மிரட்டினாள் ஷ்ராவணி புன்னகையுடன்.
மாடியின் மறுபக்கம் வந்து கீழே அவர்கள் கிளம்புவதை பார்த்தபடி அவள் நிற்க பிள்ளைகளை சுமந்தபடி அவர்கள் நடந்து செல்ல மாடி விளக்கு அணைக்கப்பட்டு இப்போது வெறும் நிலா வெளிச்சம் மட்டுமே.
எதிர்பார்ப்புடன் நின்றவளின் ஆவலை அட்சுபிசகாமல் நிறைவேற்றி அவளை அணைத்து தன் ஆளுகைக்குள் நிறுத்தியிருந்தான் வம்சி.
முதன் முதலில் தோரணையாய் தன்னெதிரே அமர்ந்து, அக்கறையாய் மிரட்டியதில் துவங்கி, ஆளுமையாய் தன்னை அவன் வாழ்வில் இணைத்துக்கொண்டது வரை அவள் வம்சி இன்னும் அதே வம்சி தான்.
இப்படியான எத்தனையோ இரவுகள் இருளில் நிலவோடு அவர்களுக்கு கழிந்திருந்தாலும் ஒவ்வொரு இரவும் புதுமை தான்.
இரவும் அவன் நிலவும் வாழ்க்கையின் மிச்சம் துடைத்து வெற்றிடம் இல்லாமல் நிரம்பி இருக்க ஆகாயத்தை ஒத்திருந்தது அவள் மீதான அவனின் நேசம்.
“மன்ஞ்சி பில்லாடா நுவ்வு சந்திரமுகி….” என்று காதோரம் கிசுகிசுக்க,
“ஒருநாள் இல்லை ஒருநாள் உதரவான்னு தூக்கி போட்டு எகிற போறேன். எப்ப பாருங்க சந்திரமுகி….” என்று அவன் வசம் முறைத்தபடி திரும்பினாள்.
“ஹ்ம்ம், மில்டரி ஸார் அடுத்த பிரமோஷனுக்கு ரெடியா?…”
“எஸ், ரெடி டூ டேக் ரா…” என்று உடனே அவளை கையில் ஏந்திக்கொள்ள,
“பிராட், கேடி எப்ப பாரு இப்படி டைவர்ட் பன்றது. நான் இதையா சொன்னேன்? மீசை நரைக்க ஆரம்பிச்சிருச்சு. பேச்சு குறையலை…” என அவனின் மீசையை பிடித்து ஆட்டியவள் கன்னத்தில் லேசாய் கடித்து வைக்க,
“சரியான உஷார்ட் பார்ட்டி. ஒன்னுக்கு ரெண்டா திருப்பி தருவேன்னு லைட்டா கடிச்சு வைக்கிற. உன்னை…” என்று அவளை அப்படியே சுற்ற தலை சுற்றியது ஷ்ராவணிக்கு.
“அச்சோ போதும். தலையெல்லாம் கிறுகிறுக்குது. எப்ப பாரு பந்தை தூக்கி போட்டு பிடிக்கிற மாதிரியே பன்றது….” என்றவளை தரையில் இறக்கிவிட நிற்கமுடியாமல் தள்ளாடி ஜமுக்காளத்தில் அமர்ந்தாள்.
“சொன்னேன்ல…” என்று தலையை பிடித்துக்கொள்ள அவளின் மடியில் தலை சாய்ந்துகொண்டான் வம்சி.
“என்னால உட்காரவே முடியலை. இதுல நீங்களுமா?…”
“ப்ச், பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க. அவங்க முன்னாடி இப்படி முடியலை நிலா…” சற்றே சோககீதம் வாசித்தான்.
பிள்ளைகள் முன் அத்தனை கவனமாக இருப்பான் வம்சி. அவனறியாமல் அவன் பயணித்த கண்டிப்பான வாழ்க்கை தடங்கள் தன் பிள்ளைகளை சூழ்ந்தாலும் அதில் அன்பையும் சேர்த்தே காட்டினான்.
பிள்ளைகள் தாயிடம் கொஞ்சி விளையாடும் தருணங்களில் அவனின் பார்வைகள் தன்னைப்போல தன்னுடைய நாட்களையும் ஒப்பிட்டு பார்க்கும்.
இந்த வயதின் தான் என்ன செய்திருப்போம்? எப்படி இருந்திருப்போம் என்று யோசித்து பார்க்கையில் தனது பிள்ளைகளின் விளையாட்டும், தாயுடனான ஒட்டுதலும் என பார்க்க பார்க்க தெவிட்டாது அவனுக்கு.
அத்தகைய நேரங்களில் தனிமையில் மனைவியின் மடி தான் அவனின் சரணாலயம்.
சொல்லிக்கொள்ள உறவுகள் இருந்தும் தனியானவனாக தான் தன்னை உணர்ந்திருக்கிறான்.
என்றோ ஓர் இரவு, நிலவின் வெளிச்சத்தில் அவன் கண்டெடுத்த பெண்ணிலவின் வெளிச்சம் தன் வாழ்க்கையை இத்தனை ஒளியை கூட்டும் அன்று நினைத்தும் பார்த்தானில்லை.
இவரிடத்தில் நிறையவே பழக்கவழக்கங்கள், வேறுபாடுகள் என இருந்தாலும் பிள்ளைகளிடம் அவற்றை என்றுமே காண்பித்ததில்லை.
எதையும் திணித்ததும் இல்லை. அவர்கள் வளர்ச்சி எப்படியோ அப்படியே வளரட்டும் என்று தான் இருந்தனர்.
உணவாகட்டும், பேச்சாகட்டும் எல்லாமே எல்லாமே இருவரையும் கொண்டே இருந்தது.
இல்லை இது கூடாது என எதையும் ஷ்ராவணியும் சொல்லியதில்லை. இப்படித்தான் செய்யவேண்டும், இதை தான் பேச வேண்டும் என வம்சியும் கட்டாயப்படுத்தியதில்லை.
ஒழுக்கம், மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் பண்பு, படிப்பு, நடத்தை, பார்வைகள் என்று மட்டுமே பிள்ளைகளுக்கு போதித்தனர்.
வம்சியின் உறவுகளும், ஷ்ராவணியின் சொந்தங்களும் என பிள்ளைகள் இருபக்கங்களிலும் செல்லங்களே.
நெல்லூரில் இருக்கும் வரை அவர்களிடம் ஒட்டிக்கொள்வதை போல சென்னையில் ஷ்ராவணி பெற்றோர், தம்பியிடமும் ஒட்டிக்கொள்வார்கள்.
இப்படித்தான் இருப்பேன் என்ற பிடிவாதங்களை பிள்ளைகளிடம் வளரவிட்டதில்லை இருவருமே.
இன்னும் முன்பை போல வாக்குவாதங்கள், சண்டைகள் எல்லாம் வம்சி, ஷ்ராவணியிடம் இப்போதும் குறையாமல் தான் இருக்கிறது.
அதனை பிள்ளைகளின் முன்பு காட்டிக்கொள்ளாமல் தனியே மொபைலை எடுத்துக்கொண்டு சென்று அதில் தான் சண்டைகள்.
இத்தனை வருடங்கள் கடந்தும் குறையாமல் கூடிக்கொண்டே இருப்பது காதல் ஒன்றே.
சேர்க்க சேர்க்க இன்னும் காதல் சேருமிடத்தில் சேர்ந்துகொண்டே தான் இருந்தது.
மொபைலில் கிணிங் சத்தத்தில் ஷ்ராவணி அதனை திரும்பி பார்க்க ஷைலு தான் அனுப்பியிருந்தாள்.
பிள்ளைகள் அங்கேயே உறங்க போவதாகவும், தானே பாடத்தை சொல்லி தந்துவிடுவதாகவும் சொல்லி அனுப்பியிருக்க சிரிப்புடன் சரி என்று பதில் அனுப்பிவிட்டு வம்சியை பார்த்தாள்.
ஷ்ராவணி மடியில் அயர்ந்த உறக்கத்தில் வம்சி. முன்னுச்சி முடியிலும் காதோரமும் சிறு வெள்ளி கம்பிகள் ஆங்காங்கே பார்க்க,
“யோவ், மில்டரி தாத்தா…” என்றாள் மீசையை பிடித்து இழுத்து.
“ஷ் இப்புடு ஏன்ட்டிமா நிலா?…” என்றவன் அவளை கீழே சாய்க்க,