தன் அத்தையின் பேச்சை கேட்டு கொண்டு வந்த சர்வேஷ்வர்.. “ என்ன அத்தை சாப்பிட்டிங்கலா…?” என்று கேட்டுக் கொண்டே அவர் பக்கத்தில் அமர்ந்தவனை வாஞ்சையாக கன்னத்தை தடவியவர்..
“ சாப்பிட்டேன் சர்வா.. உனக்கு ஆபிசுக்கு நேரம் ஆச்சி பார்.. நீ போய் சாப்பிடு.” என்று சொன்ன பத்மாவதி, தன் பெரிய அண்ணி ரேவதியின் முறைப்பில் தன் பார்வையை தன் பெரிய மருமகன் பக்கம் திருப்பியவர்..
“ நீயும் சாப்பிடு மகி..” என்று சொன்னார்.
பத்மாவதி தன் ஒரு மகளை மகேஷ்வரனுக்கு கட்டி கொடுத்து இருந்தாலும், இன்னொரு மகளை சர்வேஷ்வரனுக்கு கட்டி கொடுப்பதாக இருந்தாலுமே இருவரையும் பெயர் சொல்லி தான் அழைப்பார்.
இப்போது மருமகன் என்ற உறவை விட, பத்மாவதிக்கு அவர்களை சிறு குழந்தையாக இருந்த போது தூக்கி வளர்த்த பாசம் தான் அவருக்கு அதிகம்..
தன் அன்னையின் பார்வைக்கு அத்தை தன்னை உபசரித்ததில் சிரித்த மகேஷ்வர் .. “ஏன் அத்தை அம்மா கிட்ட சொல்லுங்க.. எனக்கு மகியோட .. கொஞ்சம் அதிகமா சர்வாவே பிடிக்குமுன்னு…” என்று சொன்ன மகேஷ்வரனின் பேச்சில் துளியும் கோபம் இல்லை…
தன் இரு மருமகன்களையும் வாஞ்சையோடு பார்த்த பத்மாவதிக்கு, தன் இருமகள்களையும் நினைத்து தான் கொஞ்சம் கோபம் வந்தது…
இதோ மகேஷ்வர் அலுவலகத்திற்க்கு கிளம்பி விட்டான். ஆனால் இன்னும் தன் மகள் வனிதா படுக்கையை விட்டு கூட எழுந்து இருக்க மாட்டாள்.
சரி காலை தான் அப்படி என்றால், சர்வேஷ்வர் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும் நேரம், ஒரு நாளும் அவள் வீட்டில் இருக்க மாட்டாள்.
ஏதாவது ஒரு பார்ட்டி.. தினம் இருக்கும். இல்லை என்றால் ஷாப்பிங்… தன் அண்ணன் மகனுக்கு கொடுத்ததால் இவர்கள் மானம் தப்பியது..
தன் மகள் புகுந்த வீட்டில் பெயருக்காவது வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் என்று வெளி உலகத்தில் கவுரவமாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம்… இதே இவளை வெளியில் கொடுத்து இருந்தோம், இவளை தங்கள் வீட்டுக்கு அனுப்பியதோடு நாக்கு பிடிங்கி கொள்வது போல் கண்டிப்பாக கேட்டு இருப்பார்கள்.
சரி பெரிய மகள் தான் இப்படி என்றால், தன் சின்ன மகள் அனிதா இவளுக்கு மேல் தான் இருக்கிறாள்.. இவளாவது உள்ளூரில் சுற்றுக்கிறாள்.. அவள் சுற்றுவது எல்லாம் வெளி ஊர்.. ஒரு சில சமயம் அந்த சுற்றலில் வெளிநாடும் அடங்கும்..
கட்டுப்படுத்த முடியவில்லை… ஒரு சில சமயம் கோபமாக கேட்டால்.. “ உங்க புருஷனை விட்டு விட்டு எங்களை திட்டம் செய்யிறிங்கலா..?” என்று மகள்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது ஊமையாகி போய் விடுவார்..
அதனாலே அந்த இருமகள்களும் தங்களின் ஆயுதமாக இந்த வார்த்தையை உபயோகிக்க… அப்படி விட்டது.. இதோ இவர்களின் இந்த நடவடிக்கை எங்கு வந்து முடியுமோ என்பது போல் ஒரு சில சமயம் இவர் மனதில் பயமே ஏற்ப்பட்டு விடுகிறது..
ஏன் என்றால் இப்போது எல்லாம் தன் சின்ன மகள் அனிதா அடிக்கடி வெளிநாடு சென்று விடுகிறாள்.. தன் மன குறையை ஒரு பெண் தாய் வீட்டில் சொல்லி தீர்த்து கொள்ளலாம்..
ஆனால் அந்த வீட்டில் தன் மகளை கொடுத்து விட்டு, இன்னொரு மகளை கொடுக்க இருக்கும் போது, அவர்களிடமே எப்படி தன் மகளின் குறையை சொல்வது என்று தெரியாது.. மனதில் வைத்தே அழுத்திக் கொள்வதால்,
ஏற்கனவே உடல் நிலையில் கொஞ்சம் தோய்வை கண்ட அந்த உடல், இப்போது எல்லாம் இன்னும் கொஞ்சம் மோசமாகி அடிக்கடி உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுகிறது..
தன் அத்தையின் சோர்ந்த முகத்தை பார்த்த சர்வேஷ்வர்.. “ என்ன அத்தை உடம்பு சரியில்லையா..? என்ன செய்யுது…? என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, அங்கு வந்த சர்வேஷ்வரின் தந்தை வெங்கட பூபதி..
“ என் தங்கையின் உடம்போட அவள் மனது தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கு என்ன செய்யிறது..?” என்று மகனிடம் சொன்னவர்..
தங்கையை பார்த்து…” என்ன மாப்பிள்ளை அங்கு போயிட்டாரா..?” என்று கோபத்துடன் கேட்டார்.
“ம்..” என்று தலை குனிந்து தன் கை நகத்தை பார்த்து கொண்டு சொன்ன அத்தையின் இந்த நிலையை பார்த்து சர்வேஷ்வரனுக்கு அவ்வளவு கோபம்..
என்ன இருந்து என்ன பிரயோசனம்..? தங்கள் வீட்டு பெண்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை பிடிங்கி கொடுக்காது, ஊரின் முன் உயர்ந்து நின்று என்ன பயன்..?
“ இப்படியே பேசிட்டே இருங்க..நீங்களும் ஒன்றும் செய்யாதிங்க.. எங்களையும் செய்ய விடாதிங்க…?” என்று தன் தந்தையிடமும், அப்போது தான் அங்கு வந்த தன் பெரியப்பாவிடமும் காட்டினான்..
சர்வேஷ்வரனின் இந்த கோபம் இப்போது வந்தது கிடையாது.. அவனுக்கு எப்போது தன் தாய் மாமனும், தன் அத்தையின் கணவனுமான சூர்ய நாரயணனை பற்றி அவனின் பதினெட்டாவது வயதில் தெரிய வந்ததோ அப்போதே, கோபத்துடன் தன் அத்தையின் வீட்டுக்கு கிளம்பி விட்டான்.
தன் அப்பா பெரியப்பா சொன்ன.. “ பேசலாம்.. பேசி விடலாம்.. (Tramadol) ஆனால் பேசிய பின் உன் அத்தையை நாம் இங்கு கூட்டி கொண்டு வந்து விட வேண்டும்.. அதே போல் உன் அம்மாவை அங்கு அனுப்பி விட வேண்டும்.. அப்படி இருந்தால் போ…” என்ற தன் தந்தையின் பேச்சில் அப்படியே அமைதி காத்து விட்டான்.
அவன் என்ன தான் வெளிநாடு போய் படித்து வந்தாலுமே, ஒருவனுக்கு ஒருத்தி.. அதே போல் தான் திருமணம் பந்தம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை தான்..
அந்த பந்தத்தை தக்க வைத்து கொள்ள போராட வேண்டுமே தவிர.. அதை அறுத்து எரிந்து வருவதில் அவனுக்கு எப்போதுமே உடன்ப்பாடு இல்லை… அத்தையோடு தன் அன்னையையும் அங்கு அனுப்பி விட வேண்டும் என்பதில் அப்போது அமைதி காத்தான்.
தெரியும் தன் அத்தையை இங்கு அழைத்து வந்து விட்டால், அன்னையின் அண்ணன் அத்தையின் கணவன் எனும் போது, தன் அம்மாவை பார்க்கும் பார்வை மாறும் தான்.. அது இயற்க்கையும் கூட.. ஏன் இப்போதே ஒரு சில சமயம் அப்பா.. கோபம் வந்தால் தன் மாமனை வைத்து அம்மாவை திட்டுவதை அவன் கல்லூரி படிக்கும் சமயத்தில் கேட்டு இருக்கிறான்.
தன் தந்தை அப்படி பேசினால் சர்வேஷ்வர் கேட்டு விடுவான்.. “ யாரின் சட்டையை பிடித்து கேட்க வேண்டுமோ அதை செய்யாது, இவங்களை ஏன் பிடித்து சத்தம் போடுறிங்க..?” என்று இரண்டு முறை கேட்டதில், இது போலான பேச்சு அவன் எதிரில் நடை பெறுவது கிடையாது…
மகேஷ்வரனும் இதை தான் சொல்வான்.. “ ஏன் விட்டோம் அவரை என்று..” பெரியவர்கள் அமைதி காத்து விடுவார்கள்..
அதுவும் அந்த பொம்பளையை அழைத்து கொண்டு வெளியில் சுற்றுவதை செய்தி தாள்களில் பார்த்தால், ,இன்னும் இன்னும் கோபம் தான் எழும்.. நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைப்பதா..? என்று..
பெரியவர்களுக்காக சிறியவர்கள் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதி காத்து இருக்கின்றனர்..
பின் இவர்களின் பேச்சு தொழில் பற்றி வீட்டு ஆண்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது தான் இரவு உடையோடு கையை மேல தூக்கி முறுக்கி விட்ட வாறு படியில் இருந்து இறங்கி கொண்டு இருந்தாள் வனிதா..
அதை பார்த்த பத்மாவதி இதே படிக்கட்டில் தன் சின்ன மருமகன் இறங்கி வந்த போது ரசித்த கண்கள்.. வனிதாவின் இந்த செயல்களில் அருவெருத்து என்ன இது உடை என்பது போல் ஒரு தாயாக அவர் கூசி தான் போனார்..
ஏன் என்றால் உள்ள அணிந்து இருந்த இரு சிறிய உடை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டுவது போல் தான் இரவு உடை என்ற பெயரில் கொசு வலையை தைத்து அணிந்து கொண்டு இருந்தாள்.
அதுவும் அவள் சோம்பல் முறிக்கிறேன் என்று கையை தூக்கும் சமயம் கை இல்லாத அந்த உடை, உள்ளே அணிந்து இருந்த அந்த உடையை மேல் துணி இல்லாது அனைவரும் பார்க்கும் படி காட்சி தந்தது.
ஒரு அன்னையால் கூட அதை பார்க்க முடியாது அவர் தலை குனிந்து கொள்ளும் போது.. அந்த வீட்டின் ஆண்களின் நிலை சொல்லவும் வேண்டுமோ…
சர்வேஷ்ரர் பல்லை கடித்து கொண்டு தலை குனிந்து கொள்ள மகேஷ்வரன் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டான்..
வெளியில் அனைவரையும் கட்டி ஆண்டு என்ன பிரயோசனம்.. மனைவியின் இது போல் செயல்களை திட்டம் செய்ய முடியவில்லையே… அதுவும் ஒரு சில சமயம் பார்ட்டி என்று போனவள் நடுயிரவு வீடு திரும்புபவளின் மீது வீசும் மது வாடையில்..
“ என்ன வனி குடிச்சிட்டு வந்தியா..?” என்று கேட்டதற்க்கு, அன்று அவள் பேசிய பெண்ணியவாதிய பேச்சில். ஏன் கேட்டோம் என்று நொந்து போய் விட்டான்..
உண்மையை சொல்வது என்றால், மகேஷ்வரனால் தன் மனைவியை அடக்க முடியவில்லை.. முயன்று பார்த்தால் இன்னும் இன்னும் தான் பிரச்சனை கூடுகிறது..
சொந்தத்தில் முடிந்த திருமணம்.. வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியவில்லை.. அதுவும் தன் அத்தையின் உடல்நிலை.. அதோடு அவர் கணவனால் ஏற்கனவே மன உளச்சலில் இருக்கும் அத்தைக்கு, நானும் பிரச்சனை கொடுக்க வேண்டுமா என்று இவன் அனுசரித்து நடந்தால், அதை வனிதா இன்னும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு போகிறாள்..