ஆனால் இப்போது பத்மாவதி சொன்னது போல் தான் அனிதாவை எழுப்பி எல்லாம் உட்கார வைக்க முடியாத சூழ்நிலையில் தான் அவள் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாளா..? இல்லை மயக்கமா என்று நினைக்கும் அளவுக்கு,
சூர்ய நாரயணன்.. “ அனி அனி…” என்று கன்னத்தை தட்டி பார்த்தார்.. அனிதாவின் உடலை வேகமாக குலுக்கியும் அவள் எழாது போகவும்..
பதட்டத்துடன் தன் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த மனைவியிடம்.. “ என்ன பத்து எழுப்பி உட்கார வைத்தேன் என்று சொன்ன.. ஆனால் இப்போ கண் கூட முழிக்க மாட்டேங்குறா…” என்று இப்போது தான் சூர்ய நாரயணனுக்கு லேசாக பயம் ஏற்ப்பட்டது..
அவருக்குமே இன்னும் தன் மகளை பற்றிய தெளிவாக புரியாது, உடல் நிலை தான் சரியில்லையோ என்று நினைத்தார்..
அங்கு இருக்கும் தண்ணீரை தன் மகள் முகத்தில் தெளித்தும் மகள் முழிக்காது போனதால், பத்மாவதி…
“ நம்ம ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் விடலாம் அத்தான்..” என்று தன் கணவனிடம் பதறி போய் சொன்னார்..
மாலை தான் வர வேற்ப்பு, இப்போதே மருத்துவமனைக்கு அதுவும் தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு சென்று விட்டால், அங்கு இருக்கும் மருத்துவர்களுக்கு இன்றைய நாளின் முக்கியதுவம் தெரியும் தானே..
அதனால் சீக்கிரம் சிகிச்சை செய்து மாலைக்குள் தன் மகளை சரி செய்து விடுவர்.. என்று நினைத்து தங்கள் குடும்ப மருத்துவமனைக்கு சூர்ய நாரயணனும், பத்மாவதியும் அனிதாவை அழைத்து கொண்டு சென்றனர்.
பூபதி குடும்பத்திற்க்கு என்று சொந்தமாக ஒரு மருத்துவனை இருக்கிறது.. அவர்கள் குடும்பமே மருந்தகம் தயாரிப்பது தான்..
அதனால் வெங்கட பூபதியும், சங்கர பூபதியும் அவர்கள் தலை முறையில் சொந்தமாக ஒரு மருத்துவமனையை வாங்கி விட்டனர்.. என்ன ஒன்று தங்கள் பெயரில் இல்லாது அவர்கள் நண்பன் பினாமி பெயரில் அந்த மருத்துவமனை இருக்கிறது…
ஆனால் அனைவருக்குமே தெரியும்.. அந்த மருத்துவமனை பூபதி குடும்பத்திற்க்கு சொந்தமானது என்று..
அதனால் அனிதாவை சூர்ய நாரயணனும், பத்மாவதியும் அங்கு அழைத்து சென்ற போது , உடனடியாக அவளுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கி விட்டனர்.. என்ன ஒன்று அனிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் முன், அந்த மருத்துவமனையின் தலமை மருத்துவர் வெங்கட பூபதிக்கு அழைத்து சொல்லி விட்டார்..
அங்கும் பயந்து தான் விட்டனர்.. ஒன்று தங்கை மகள்.. அந்த பாசம்.. அதோடு நாளை காலை முகூர்த்தம் இன்று மாலை வர வேற்ப்பு வைத்து இருக்கிறோம்..
இந்த சமயத்தில் அவளுக்கு உடல் நிலை சரியில்லாது போய் விட்டதே, என்று பதட்டத்துடன் அனைவரும் தங்கள் மருத்துவமனைக்கு சென்ற அனைவரும் உண்மை நிலை புரியாது தான் பதறி சென்றனர்..
அனிதாவின் தோழி சுஜாதா அந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவராக இப்போது தான் சேர்ந்தாள். அவளுக்கு அனிதாவை சேர்த்து உள்ளார்கள் என்று தெரிந்ததுமே, பதறி போய் அனிதாவுக்கு சிகிச்சை செய்து கொண்டு இருக்கும் இடத்தை தேடி மூச்சு வாங்க ஓடி வந்தாள்..
ஆனால் அவள் வருவதற்க்குள் அனிதாவை பரிசோதனைகள் செய்து முடித்து விட்டனர்.. அந்த பரிசோதனையை செய்தது அந்த மருத்துவமனையின் தலமை மருத்துவர்..
அவரை இங்கு நியமித்தது வெங்கட பூபதி தான் எனும் போது, அந்த தலமை மருத்துவர் வெங்கட பூபதிக்கு தானே உண்மையாக இருப்பார்..
அனிதாவுக்கு என்ன பிரச்சனை என்பதை அறிந்த பின், அதுவும் நாளை சர்வேஷ்வருக்கும், இந்த பெண்ணுக்கும் தான் திருமணம்.. அவர் வீட்டுக்கும் அழைப்பிதழ் வந்து இருக்கிறதே…
அதுவும் அவருக்கு தனிப்பட்ட முறையில் சர்வேஷ்வரனையும் தெரியும்.. இப்போது எல்லாம் அந்த மருத்துவமனைக்கு தேவையான மருந்துக்கள் அனைத்துமே சர்வேஷ்வரனின் நேரிடை பார்வையில் தான் இங்கு வருகிறது..
அதன் பொருட்டு இந்த மருத்துவமனைக்கு சர்வேஷ்வரனின் விஜயம் அவ்வப்போது நிகழும்.. நல்ல பைய்யன் என்ற அப்பிராயமும் சர்வேஷ்வரன் மீது அந்த தலமை மருத்துவருக்கு உண்டு..
அதனார் அனைவரையும் தன் அறைக்கு அழைத்து… “ அவங்க சமீபத்தில் கருகலைப்பு செய்து இருக்காங்க போல.. அதுவும் அந்த குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்த பின்..
அது அவங்க உடல் நிலையும் பாதித்து அவங்க கருவரையையும் பாதித்து இருக்கு… அது மட்டும் இல்ல.. என் கணிப்பு படி பார்த்தால், அவங்களுக்கு இந்த கருகலைப்பு முதல் முறை இல்லை என்பது தான் என் இத்தனை வருடம் சர்வீஸ் சொல்க்கிறது..” என்று அந்த தலமை மருத்துவர் சொல்லவும் பத்மாவதி அங்கேயே சாட்சாங்கமாக வீழ்ந்து விட்டார்..
உடனடியாக பத்மாவதிக்கும் அங்கு சிகிச்சை செய்ய தொடங்கி விட்டனர்.. ஏன் என்றால் அவரின் உடல் நிலையை பற்றி அந்த மருத்துவமனையில் இருக்கு தலமை மருத்துவருக்கு தெரியும் என்பதால், பத்மாவதிக்கு உடனடிகையாக சிக்கிச்சை செய்ய ஆரம்பித்து விட்டனர்..
சூர்ய நாரயணனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. சங்கர பூபதி தன் தம்பி வெங்கட பூபதியை பார்க்கா,, அவர் முகத்தில் அப்படி ஒரு கோபம், கூடவே சங்கடமும்..
பின் தன் தம்பி மகன் சர்வேஷ்வரனை பார்த்தார்.. அவன் முகத்தில் கோபம் என்று சொல்வதை விட அவமானம்.. அடுத்து என்ன..? நாளை திருமணம் என்று அனைவரையும் அழைத்தாயிற்று..
நட்பு தொழில் வட்டம்.. ஏன் அரசியல் வட்டம் கூட இதில் அடக்கம்.. இது வெளியில் தெரிந்தால், தங்கள் குடும்பத்திற்க்கு இது எவ்வளவு அவமானம். அதுவும் தனக்கு..
கோபம் அவமானம் இருந்தாலுமே, அவன் தலையில் கை வைத்து அமரவில்லை. ஏதாவது செய்தாக வேண்டும்… யாரின் முன்னும் தானும் சரி, தன் குடும்பமும் சரி தலை குனிந்து நிற்க கூடாது என்று யோசித்தவன் கண் முன் சூர்ய நாரயணன் தெரிந்தார்…
உடனே அவர் அருகில் சென்ற சர்வேஷ்வரன்.. “ அந்த பெண் என்ன செய்யிறா…? என்ன வயது..?” என்ற அவனின் கேள்வி சூர்ய நாரயணனுக்கு சுத்தமாக புரியவில்லை..
தன் மகள் இப்படி செய்வாள் என்று அவர் சுத்தமாக எதிர் பார்க்கவில்லை.. கொஞ்சம் திமிராக நடந்து கொள்வாள் தான்… இந்த திமிர்த்தனம் அனிதா மட்டும் இல்லாது வனிதாவின் பேச்சும் அப்படி தான் இருக்கும்..
அது சிறு வயது முதலே அளவுக்கு அதிகமான பணம் இருந்தால், ஒரு சிலர் அனைவரும் தனக்கு கீழ் என்ற நினைப்பே .. இந்த திமிர்த்தனத்திற்க்கு காரணம்.. இதை அவர் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை..
அவர் நண்பர்கள் வீட்டு பிள்ளைகளும் இப்படி இருப்பதை அவர் பார்த்து இருப்பதால், “ இந்த வயதில் இப்படி இருக்காங்க.. போக போக சரி ஆகி விடுவார்கள்..” என்று தன் மனைவி பத்மாவதி ஒரு இரு முறை மகள்களை பற்றி குற்றப்பத்திரிக்கை வாசித்த போது, பத்மாவதியிடம் அவர் இப்படி சொல்லி இருக்கிறார்.
ஆனால் இவள் அந்த திமிர்த்தனத்தையும் மிஞ்சிய செயல்களை அல்லவா செய்து இருக்கிறாள் .. அதோடு மகளின் உடல் நிலை.. அதோடு அவளின் வாழ்வு என்ற பயத்தில் இருந்தவருக்கு சர்வேஷ்வரனின் பேச்சு புரியாது போய் விட்டது..
அதனால்.. “ யாரை சர்வா கேட்கிற..?” என்ற கேள்வியை சூர்ய நாரயணன் தலை நிமிர்ந்து கேட்க முடியாது குனிந்த வாறு தான் கேட்டார்.. இவனுக்கு என்ன பதில் சொல்வது..? என்று…
“தன் மகளை கட்டிக் கொள் என்று சொல்ல முடியுமா..? அதுவும் சர்வேஷ்வரன் குடும்ப மானம் கவுரவும் என்று அதிகம் பார்ப்பவன் என்று அவருக்குமே நன்றாக தெரியுமே..
அப்படி இருக்க தன் மகளின் இந்த செயல், இவனை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று தெரிந்து தலை நிமிர முடியாது போய் தான் கேட்டார்..
சர்சேஷ்வரன் சுற்றி வளைக்காது.. “ நீங்க தாலி கட்டாது குடும்பம் நடத்தும் அந்த பொம்பளையின் மகளை தான் கேட்கிறேன்…?” என்ற சர்வேஷ்வரனின் பேச்சில், சூர்ய நாரயணன் மட்டும் அல்லாது அவன் குடும்பத்தினரே அதிர்ச்சியோடு தான் அவனை பார்த்தனர்..