“ம்.. எங்கண்ணன் ரொம்ப நல்லவன்.” என பெருமையாக சொல்ல.. “ம்க்கூம்.. நல்லவன்..” என நொடித்து.. “கூடவே கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு இங்கையே விட்டுட்டு போய்ட்டார்.” என வாடினாள் ஆராதனா.
“ப்ச் ஆரா.. கூட்டிட்டு போகத்தான் இரண்டு மாசம் கழிச்சி வந்தான். நீ கன்சீவ் ஆகவும்தான விட்டுட்டு போனான்.” என அண்ணனிற்காக பேசினாள்.
“எனக்குதான் விபரம் தெரியல, அவருக்கு தெரியும்தான? கொஞ்ச நாள் கழிச்சி குழந்தை பெத்துருக்கலாம்.” என்றாள் சோர்வாக.
“அப்படிலாம் சொல்லாத ஆரா. குழந்தை வயித்துலயிருக்கும்போது இப்படி நினைப்பு கூடவே கூடாது. குழந்தை வரம் கிடைக்காம எத்தனை பேர் எவ்வளோ மனஉளைச்சலுக்கு ஆளாகுறாங்க தெரியுமா?
அப்படி கஷ்டம் உனக்கு கடவுள் கொடுக்கல.. கடவுளுக்கு நன்றி சொல்லி சந்தோசமா சுமக்கவேண்டிய சுகமான சுமை இது.” என பெருமையாக சொல்லி..
“இப்போ என்ன? இன்னும் அஞ்சே மாசம்.. குட்டி வெளில வந்துடுவாங்க, அப்புறம் மூனே மாசத்துல உன் புருசனோட பறந்துடு.” என்றாள் உற்சாகமாக.
“ம்..” என சிரித்தவள்.. “இருங்க உங்கண்ணாக்கு கால் பண்ணலாம். நேத்து ஃபங்சனை ரொம்ப மிஸ் பண்றதா சொன்னார்.” என அழைத்தாள் கணவனுக்கு.
அறிவு திரையில் வர.. “ம்.. பாருங்க உங்க தங்கையை.” என மங்கை முகமருகே மொபைலை நீட்ட.. தங்கையின் மலர்ந்த முகம் கண்டு நிம்மதியானவன்.. “ம்.. ஃபைனலி தேவா உன்கிட்ட மாட்டிக்கிட்டார் போலயே. இனிதான் அவருக்கு லைஃப் டாஸ்க்கோட கஷ்டம் தெரியப்போகுது..” என்றான் சோகமாக.
மங்கை முறைக்கவும்.. “தங்கையானாலும் ஒரு நியாயம் வேணாமா? உண்மையைத்தான சொன்னேன்?” என்றான் சிரிப்போடு.
மங்கை.. “எப்போ வர?” என்றாள் ஏக்கமாக.
“ஆரா டெலிவரி டேட்டுக்கும் பத்து நாள் முன்ன அங்க இருப்பேன்.” என்றான்.
“அப்போ என்னை பார்க்கலாம் வரமாட்ட.. உன் பொண்டாட்டி புள்ளைக்காகத்தான் வர..” என மங்கை முறைக்க..
அறிவு.. “ஆராவ சமாளிக்கிறதே பெரிய கஷ்டமா இருக்கு, இதுல நீயும் இப்படி கேட்டா என்னால தாங்க முடியாது மங்கை..” என்றான் பாவமாக.
“சரி..சரி பொழைச்சி போ.” என்றாள் பெருந்தன்மையாக.
“ஸ்வீட் ஹார்ட் தூங்கறாரா?” என்றான்.
“ம்.. நேத்தெல்லாம் மங்காக்கு அப்பாக்கு கல்யாணம்னு ஒரே ஆட்டம், அதோட அம்மாவோட ஊர் சுத்துனான்.. லேட்டாதான் எழுந்துப்பான்.” என்றாள்.
“ஆராம்மா.. டீ கிடைக்குமா?” என்றபடி தேவேஷ் கிச்சனுள் வர.. “தேவா எழுந்துட்டார் போல, குரல் கேக்குது.. நீ என்னனு பாரு, நான் அப்புறம் பேசுறேன்.” என அறிவு சொல்ல..
“அவரை சாக்கு வச்சி என்னை கழட்டி விடறியா?” என கேட்டவள்.. “அது எனக்கு போட்ட டீ.. நீங்க காலைல காபிதான குடிப்பிங்க?” என டீயை எடுக்க வந்த தேவேஷிடம் மல்லுக்கு நிற்க..
“நல்லா இருக்கிங்களா தேவா.” என்றான் அறிவு.
மொபைல் மங்கை கையிலிருக்க, “நல்லா இருக்கேன் அறிவு.” என குரல் கொடுத்தான் தேவேஷ்.
“மூஞ்சை பார்த்துதான் பேசுங்களே.” என மொபைலை மங்கை நீட்ட.. “ஏய்.. நீ டீ குடி, நான் அப்புறம் பேசுறேன்.” என அறிவு சொல்ல.. “இவர்கிட்ட பேச உனக்கென்ன தயக்கம்? உங்க ரெண்டு பேருக்கும்தான் கெமிஸ்ட்ரி, ஃபிஸிக்ஸ் எல்லாம் நல்லா ஒர்க்கவுட் ஆகுமே.” என்றாள் நக்கலாக.
எதை குறிப்பிடுகிறாள் எனப்புரிந்த தேவேஷ் மங்கையை முறைக்க.. அறிவு புரியாமல் பார்க்க, “இவருக்கு கால்ல அடிபட்ட அன்னைக்கு.. ஆராவை கூட அப்படி தூக்கியிருக்க மாட்ட..” என்றாள் சிரிப்போடு.
அறிவு.. “அம்மா தாயே.. அந்த மனுசன் இப்போதான் எல்லார்கிட்டயும் கொஞ்சமா பேச ஆரம்பிச்சிருக்கார்.. அதை கெடுத்துடாத. ஃபோனை என் பொண்டாட்டிக்கிட்ட கொடு.” என்றான் உள்ளடக்கிய சிரிப்போடு.
“ம்..” என ஆராதனாவிடம் போனை கொடுக்க, வாங்கியவள் வெளியேறவும்.. முறைத்துக்கொண்டிருந்த கணவனிடம்.. “எது வேணும்னாலும் என் பேரோட சேர்த்து சொன்னாதான் கிடைக்கும்.” என தன் டீயை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
“ஹே.. இதென்ன அழிச்சாட்டியம்?” என்றான் கண்கள் மின்ன..
கற்பகமும் தவமணியும் ஒரு சேர வந்தனர். “மாப்பிள்ளைக்கு டீ கொடுக்கலையா?” என்றார் தவமணி.
“என்கிட்ட எதுவும் கேக்கலம்மா, ஆன்ட்டிகிட்ட கேப்பாராயிருக்கும்.” என்றாள் டீ யை குடித்தவாறு.
முறைத்தவர்.. “அவர் கேக்கலனா என்ன? என்ன வேணும்னு நீ கேட்டு கொடுக்கலாமில்ல?” என்றார்.
“அப்படியும் செய்யலாம்…” என இழுத்தவள்.. “இல்ல ஆன்ட்டி உங்க பொண்ணை பார்த்துக்கிறதை போல, நீங்க ஆன்ட்டி மகனை பார்த்துக்கலாம். ஆன்ட்டியாவது நான் வரும்போதெல்லாம் செய்யிறாங்க, ஆனா நீங்க இன்னைக்குத்தான வந்துருக்கிங்க? அதனால ஊருக்கு போறவரை அவரை கவனிக்க வேண்டியது உங்க பொறுப்பு..” என்றாள் கட்டளையாக.
தவமணி முறைக்க.. “விடு தவமணி, நான் பார்த்துக்கிறேன்.” என கிச்சனுக்குள் போனார் கற்பகம்.
மங்கை வீட்டிலிருந்தால் அவள்தான் சமைப்பாள். மங்கைக்கு மகன் மீதுள்ள விருப்பம் புரிந்தும் இன்னும் விலகியிருக்கிறானே என்ற வேதனையோடு கிச்சனுக்குள் நுழைந்துகொண்டார்.
“அவ வீட்டுல இருக்கும்போது அவளை செய்ய சொல்லுங்க சம்மந்தி.” என்றவாறு தவமணி கிச்சனுக்குள் செல்ல..
அன்னையின் வாடிய முகம் கண்டவன்.. “மங்கை ஒரு காபி கிடைக்குமா?” என்றான் இலகுவாக.
“சாதா காபியா? இல்ல ஸ்பெஷல் காபியா?” என்றாள்.
தேவேஷ் புரியாமல் பார்க்க, அவனருகே சென்றவள்.. “மங்கை காபி போடுன்னு சொன்னா சாதா காபிதான் கிடைக்கும். தேவமங்கை காபி போடுன்னு சொன்னா ஸ்பெஷல் காபி கிடைக்கும்.” என புருவம் உயர்த்தி கெத்தாக சொன்னவள்.. “காபி மட்டும் இல்ல, எல்லா விசயத்துலயும் இப்படித்தான்.” என்றாள் சன்னக்குரலில்.
“நீ சாதா காபியே போட்டு எடுத்துட்டு வா.. நான் அதை ஸ்பெஷலாக்கிக்கிறேன்.. ஸ்பெஷல் காபி இங்க வச்சி குடிக்க கூடாது, காபியோட ரூம்க்கு வாங்க மங்கையர்கரசி..” என உள்ளே போனான் தேவேஷ்.
கிச்சன் சென்றவள்.. “ஆன்ட்டி கொடுங்க, நான் எடுத்துட்டு போறேன்.” என கற்பகத்திடமிருந்து காபி வாங்க.. கற்பகம் ஆச்சர்யமாய் விழிவிரிக்க.. (Tramadol) “நாங்க பழம் விட்டுக்கிட்டோம்.. அதனாலதான் காபி எடுத்துட்டு போறேன்.” என்று மங்கை சொல்லி செல்ல.. இணைந்து வாழவில்லை என்றாலும் வழக்கத்தில் இல்லாமல் மங்கை மகனுக்கு காபி கொடுக்க சென்றதால், குறைந்த பட்சம் தேவேஷ் மங்கை மனதை நோகச்செய்யவில்லை என்ற நினைப்பு நிம்மதியை கொடுத்தது.
**** **** ****
மங்கை உள்ளே வரவும்.. காபியை வாங்கி கட்டிலில் அமர்ந்தவன் மங்கையையும் அமர சொன்னான். மங்கை அமரவும்.. “பொதுவா எனக்கு கம்ப்பேர் பண்றது பிடிக்கவே பிடிக்காது, ஆனா உன் விசயத்துல கம்ப்பேர் பண்ணாம இருக்க முடியல.” என்று மங்கை முகம் பார்த்தான்.
ஷர்மிளாவைப் பற்றித்தான் சொல்லப்போறான் என்றுணர்ந்த மங்கை மனதை திடப்படுத்தி கணவனை பார்த்தாள். “ஷர்மி ஆக்ஸிடண்ட்ல இறந்த நாள்லயிருந்து, எதாவது ஒரு மேஜிக் நடந்து திரும்பி வந்துடமாட்டாளானு நினைச்சி ஏங்காத நாளில்ல..
ஆனா என்னைக்கு அவ தற்கொலை செய்துக்கிட்டானு தெரிய வந்ததோ அன்னைக்குத்தான் செத்தவ செத்ததுதான், இனி எப்பவும் திரும்பி வரப்போறதில்லைன்ற உண்மை உரைச்சது.
எனக்கு வாரிசு வேணும்னு அத்தனை துடிச்சவ.. என்தேவ், என்தேவ்னு வார்த்தைக்கொரு தேவ் போடுறவ.. கடைசியா நம்ம இல்லனா அவளோட தேவ் குழந்தை அம்மா இல்லாம வளருவானேன்னு கொஞ்சம் கூட யோசிக்காம சாக முடிவெடுத்திருக்கா பாரு.. அதைத்தான் என்னால தாங்கவே முடியல.
ஆனா உன் விசயம் அப்படியில்ல.. எத்தனை முறை உன்னை வேணாம்னு சொல்லியிருக்கேன், சில நேரம் பேசக்கூடாத வார்த்தையை பேசியிருக்கேன், அப்பவும் கொஞ்சம் கூட அசராம.. எனக்கு நீ தேவையில்லடா, என் குழந்தைதான் முக்கியம்னு, குழந்தைக்காகவே உன் வாழ்க்கையை பணையம் வச்சவ..” என பெருமையாய் மங்கையை அணைத்திருந்தான் இறுக்கமாக.
“ஷர்மி கேரக்டர் வேற… உன் கேரக்டர் வேற.. அவளை ரீப்ளேஸ் பண்ணனும்னு நினைக்காத. எனக்கு அவ இடத்துல நீ வேணாம்..” என்றான் உறுதியாக.
மங்கை அமைதியாய் இருக்க.. “என்னை பொண்டாட்டியா நினைக்கலனாலும் பரவால்ல, ஆனா உனக்கும் என் குழந்தைக்கும் இடையில என்னைத்தவிர வேற யாரும் உள்ள வரக்கூடாதுனு ஸ்ட்ராங்கா நின்ன அந்த வீரமங்கை வேணும்..
இன்னொருத்தியோட குடும்பம் நடத்தின என்னை விரும்பறதே பெரிய விசயம், என்னை பிடிச்சிருந்தபோதும், நிர்பந்தத்துல வரது இல்ல காதல், தானா வரனும்னு ஃபோர்ஸ் பண்ணாம விலகியிருந்த மெச்சூர்ட் மங்கை வேணும்.
சஞ்ஜெய் பிறந்தப்போ குட்டிசாத்தானு சொன்ன நர்ஸை லெஃப் அண்ட் ரைட் வாங்கின கோபம்.. ஒரு இரண்டு மணிநேரம் பர்மிசன் போடறதையே குற்றமா நினைக்கிற தொழில் பக்தி, நான் உன்னை காயப்படுத்தும் போதெல்லாம் கொஞ்சம் கூட அசராம பதில் கொடுத்து என் வாயை அடைக்குற ரோசம்னு எல்லாமும் சேர்ந்த மங்கையர்கரசியை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..” என இதழை நெருங்க.. விலகியவள்..
“காபி கேட்டிங்கதான? ஆறியே போச்சு. வேற போட்டுட்டு வரேன்..” என எழ முற்பட.. கதவை தாழிட்டவன்.. “தேவமங்கையையும் பிடிச்சிருக்கு, ஆனாலும் மங்கையோட தேவனா இருக்கத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு.” என முத்தமிட பெருமையோடு ஒப்புக்கொடுத்தாள் கணவனுக்கு.
சற்று நேரத்தில்.. “ப்பா.. பைக்கு.. மாக்கெட்” என்ற சஞ்ஜெயின் குரலில் மங்கை போராடி விலக.. அடுத்தநொடி கதவை தட்டினான் மகன்.
“ஓஹ்..” என சிரித்தவன்.. “இது எங்களோட மார்க்கெட் டைம்.” என ஆறிய காபியை கடகடவென குடித்து கதவை திறக்க.. “ப்பா..” என தயாராய் நின்றிருந்தான்.
இருவரும் கிளம்ப.. மகனோடு செல்லும் கணவனை பெருமையோடு பார்த்திருந்தாள். மருமகளின் முகம் கற்பகத்திற்கு பெரும் சந்தோசத்தை கொடுக்க.. “நீயும் போய் வாயேன் மங்கை. அவனுக்கு கறி மீன் சரியா பார்த்து வாங்க தெரியாது.” என்றார்.
தேவேஷ் மங்கையைப் பார்க்க.. மகனின் சந்தோசம் பார்த்து.. “இல்லயில்ல.. நீங்க போய் வாங்க. அம்மா இன்னைக்கு நான்வெஜ் சாப்பிடமாட்டாங்க. ஆராக்கும் அந்த ஸ்மெல் ஒத்துக்கிறதில்ல.” என்றாள்.
தேவேஷ் கிளம்பவும்.. “என் மகன் நல்லவன்தானே.?” என்றார் பரிதவிப்பாக.
“ம்..” என முகம் சுருக்கியவள்.. “கொஞ்சம்.” என சிரிப்போடு சொல்லி, “டிபன் செய்யிறேன்.” என கிச்சனுள் நுழைந்தாள்.