“அன்னைக்கு விளையாட்டா தோணுச்சு. ஆனா கேட்டதுல இருந்து நிஜமாவே இந்த ரூம்ல தனியா இருக்க பயமா இருக்கு. அதான் பால்கனி, ஜன்னல் எல்லாம் பூட்டி வச்சுப்பேன். அபிகிட்ட போன்ல பேசிட்டே வேலையை பார்ப்பேன்…”
“நம்ப முடியலையே? நிஜமாவே உனக்கு பயம்ன்னு…” என்று சொல்லிய நொடி பால்கனி கதவு படாரென காற்றில் அடித்து விலக பாய்ந்து அவனின் முதுகில் ஒண்டிக்கொண்டாள் பிரனித்தா.
இதழ்களில் பூத்திருந்த குறுஞ்சிரிப்போடு அவன் மார்பை சுற்றியிருந்த அவளின் மெல்லிய விரல்கள் மேல் அழுத்தம் கொடுத்தவன்,
“அங்க யாரோ நிக்கிறாங்களோ? இல்லை சும்மா பிரம்மையா?…” என்று வேறு கேட்க காற்றின் வேகத்திற்கு திரை சீலைகள் வேறு திசைக்கொன்றாய் பறந்தது.
“அச்சோ சும்மா இருங்க கொஞ்ச நேரம். நான் பார்க்கவே மாட்டேன். வாங்க ஹாலுக்கு போவோம்…” என்று பிரனித்தா அவனை அசைத்து இழுக்க அவ்வுணர்வில் கண்களை மூடிக்கொண்டவன் இதழ்கள் உள்ளுக்குள் மடங்கிக்கொண்டது.
“மோகினி…” என்றான் உல்லாசமாய் ரசித்து.
“அச்சோ கூப்பிடாதீங்க. ப்ளீஸ். நான்லாம் பில்டிங் ஸ்ட்ராங். பேஸ்மட்டம் வீக் ஆள். ஒத்துக்கறேன். இப்ப வெளில போகலாம். இல்லைன்னா இப்படி பேச வேண்டாம்…” என அலறலும் கெஞ்சலுமாக அவனை இன்னும் இறுக்கிக்கொண்டாள்.
“நீ தானே பூத் பங்களான்னு சொன்ன?…” இன்னும் சீண்டி பார்த்தான் அவளை.
“தெரியாம சொல்லிட்டேன். ஆனா நிஜமாவே நான் சொன்னதுல இருந்தே அந்த பீல் தான் குடுக்குது இந்த பங்களா…”
“என்னவோ தனியா சுத்தின மாதிரி. அதெல்லாம் கும்பலா தான் சுத்துவோம். என் ரூம் கூட நான் லாக் பண்ண மாட்டேன். சும்மா தான் சாத்தி வைப்பேன். இப்ப இது முக்கியமா?…” என அவள் கடுப்பில் குரலை உயர்த்த,
“லாஸ்ட்டா என்ன பேர் வச்சேன்னு சொன்ன நீ?…” என்றான் அவளிடம்.
“இப்ப இது முக்கியமா? அதான் எல்லாமே சொல்லிட்டேனே?…”
“ஹ்ம்ம், இப்ப பால்கனி டோரை லாக் பண்ணுங்களேன். இல்லைன்னா அந்த கர்ட்டன்ஸவாச்சும் கட்டி வைங்க. டோர் ஸ்டேன்ட் போட்டுவிடுங்க. காத்துல அடிக்காம இருக்கட்டும்…” வரிசையாக அவள் சொல்ல சொல்ல அங்கிருந்து நகர்ந்தான் இல்லை.
“ப்ளீஸ்…” என்றவளிடம்,
“இனிமே இப்படி பட்டப்பேர் வைப்பியா?…” என்றான்.
“தெரியலை. வைக்கனும்னு இல்லை. அந்த சூழ்நிலையில என் மூளைக்குள்ள டான்னு வந்து உட்கார்ந்துடுது. நான் என்ன பண்ணட்டும்?…” என்றால் பாவம் போல.
அந்த முகத்தில் தன்னை தொலைத்துவிட அவன் ஆசைகொள்ள மீண்டும் கதவு அடித்து சாற்ற அவன் கைகளுக்குள் இன்னும் தன்னை பொதிந்துகொண்டாள்.
அவள் உடல் வெளிப்படையாக நடுக்கமெடுக்க தானும் செய்வது அதிகப்படி என நினைத்தவன் அவளிடமிருந்து விலகி கதவை அடைக்க சென்றான்.
அவன் செல்லும் முன் மீண்டும் கதவு படபடவென்று அடித்ததில் வேகமாய் அவனை நெருங்கி கையை பிடித்தவள் அணைப்பில் மொத்தமாய் கட்டுப்பாடிழந்தான் ஆவுடையப்பன்.
“ஓஹ் நோ…” என சொல்லிக்கொண்டவன் கதவை அடைக்கும் முன் அந்த ஜில்லென்ற காற்றில், மழைக்காக மண்வாசம் நாசியில் இறங்க,
“டோர் ஓப்பன்ல இருக்கட்டுமே? மழை வரும் போல மோகினி. ஃபீல் குட் மொமென்ட்…” என சொல்லியவன் டோர் ஸ்டாண்டை மட்டும் போட்டுவிட்டு திரைகளை நன்றாக இழுத்துவிட்டவன்,
“காற்றுக்கு ஆடத்தான் செய்யும். நீ அதை பார்க்காத…” என்று சொல்ல,
“இந்த சைட் இவ்வளோ பெரிய மரம் தான் இன்னும் பயம் காட்டுது காத்துல அசையறப்போ…” ஒற்றை கண்ணை திறந்து பார்த்து சொல்லியவள்,
“நான் தூங்கவும் வேணும்னா நீங்க திறந்துக்கோங்களேன்…” என கிட்டத்தட்ட கெஞ்சவே செய்ய அவள் முகபாவனையும், நெருக்கமும் சித்தம் கலங்க செய்தது கணவனானவனை.
“ஹ்ம்ம்…” என்று கதவை பூட்டியவன் அதில் ஜன்னலை மட்டும் திறந்து வைத்துவிட்டு அவளிடம் திரும்ப,
“ஹ்ம்ம், இன்னைக்கு தூங்கின மாதிரி தான். கேட்கவே மாட்டீங்க. எல்லாம் நீங்க நினைக்கிறது தான்…” என நகர்ந்தாள்.
“தூங்கனுமா?…” என்ற கேள்வியில் அவனின் மனம் புரிய திகைத்து நின்றவள் பார்வை பதில் கூற முடியாமல் ஸ்தம்பித்தாள்.
இருவரின் விரல்கள் பின்னிக்கொள்ள இன்னும் அருகில் இழுத்தவன் அதரங்கள் அவளிடம் தன் கேள்விக்கான பதிலை தானாக வாங்க முயன்றது.
நின்ற இடத்தில் கால்கள் துவழ ஆரம்பிக்க இன்னொரு கையால் அவளின் இடைவளைத்து தன்னுயரத்திற்கு தாங்கிக்கொண்டான்.
பிரனித்தாவின் கூந்தல் வாசத்துடன் அவள் சூடியிருந்த முல்லை பூ வாசம் அவனின் மதியை மொத்தமாய் கொள்ளை கொண்டது.
மயக்கமும், மௌனமுமாக அவளின் இணக்கம் அவளிடம் இன்னும் தன் ஆதிக்கத்தை செலுத்த சொல்லியது.
“நிறைய பேர் வச்சுட்ட இந்த மோகினிக்கு கொஞ்சம் நேரம் மந்திரம் சொல்லவா?…” என காதில் கிசுகிசுக்க அவன் முகம் காண நாணி கழுத்து வளைவில் தன்னை சாய்த்துக்கொண்டாள் பிரனித்தா.
அவனின் கால்கள் நகர அவனோடு நகர்ந்தவள் அணைப்பில் புன்னகையுடன் சேருமிடம் இடம் சேர்ந்தவன்,
“மொத்தமா உனக்குள்ள வரட்டுமா மோகினி?…” என்ற கேள்வியில் பதில் சொல்லும் நிலையில் இல்லை அவள்.
மற்ற எண்ணங்கள் எல்லாம் அவளுலகத்தில் மறைய அவனும் அவளும் மட்டும் நிதர்சனத்தில்.
சீண்டலான சிரிப்புடன் அறையின் வெளிச்சங்களை மொத்தமாய் விழுங்கியவன் அவளில் நிறைய துவங்க கண்களை மூடிக்கொண்டாள் அவனை முழுதாய் உணர்ந்ததில்.
சின்ன சின்ன வன்முறை சீண்டலாய் தோன்ற அவனின் சிகையை பிடித்து இழுத்தாள்.
“ஓகே கூல்…” என்றவன் ரகசிய சிரிப்பு மொத்தமாய் அவளை சுருட்டிக்கொள்ள அவனிடம் இத்தனையை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை.
எதிர்பாராத கூடல், தேனாய் தித்தித்தது. கண்களை மூடியவள் மூச்சுக்கள் அவன் சுவாசத்தில் கலந்தது.
அவன் கேசங்களுக்கிடையே ஊடுருவிய விரல்கள் ஒன்றையொன்று நெரித்துக்கொள்ள இறுக்கம் தளர்ந்து மெல்லிய தலைகோதலில் ஆர்ப்பரித்த உணர்வெனும் கடலலை கொஞ்சம் கொஞ்சமாக கரை சேர்ந்தது.
மெல்லிய மூச்சுக்காற்றின் வெம்மை குறைந்து ஆசுவாசமான நிறைவான சுவாசங்கள் ஒன்றையொன்று கலந்தது.
அதிகாலை வரை கண்களை திறக்கவில்லை. பேச்சுக்கள் மட்டும் அவர்களின் இரவை நீட்டித்திருக்க பேச பேச தீரவில்லை.
பகிராத உணர்வுகள் எல்லாம் இதில் கட்டவிழ மனதின் ஆழம் தொட்டு அவன் விருப்பத்தை அவளிடம் கூட்டிக்கொண்டிருந்தான்.
கனவல்ல நனவே என அவ்வப்போது பிரனித்தாவின் கேலி, கிண்டல்களில் இன்னுமே அவளின் மூழ்கினான் ஆவுடையப்பன்.
மொத்த வசந்தமும் அவன் வாசலில் வந்துவிட்டதை போல இறகை போல மனது திசையற்று அவளோடு பறந்தது.
விடியலை நெருங்கும் தருவாய். அதுவரை அவன் வளர்ந்தது, வாழ்ந்தது, படிப்பு, அரசியல் என்று எல்லாம் ஓரளவு முன்பே தெரிந்திருந்தாலும் அவனின் இலகுவான பேச்சில் கேட்க இன்னும் புதிதாக இருந்தது.
திருமணம் பேசிய நாட்களில் இருந்து கல்யாணம் முடிந்த பின்பும் கூட அவனிடம் இத்தனை நிதானத்தை கண்டதில்லை.