அதிலும் ஆதிஷேஷன் அவனின் தனி ராஜாங்கமும், துணிச்சலும் அனைவரும் அறிந்ததாகிற்றே.
எச்சிலை விழுங்கியபடி சிங்காரம் ஆதிஷேஷனை பார்க்க அவனுடன் பவன் பின்னால் நின்றிருந்தான்.
மண்டபத்தில் கூட இவனை பார்த்ததும் யோசிக்காமல் போனோமே என சிங்காரத்திற்கு மீண்டும் தன்னுடைய மழுங்கிய புத்தியின் மேல் கோபம் பிறந்தது.
ஆவுடையப்பன் வரவேற்பில் பவனை பார்த்தும் அவருக்கு அன்று கருத்தில் பதியவில்லையே.
அழுத்தி பார்த்திருந்தாலும் கூட அமைச்சரின் வீட்டு விசேஷத்தில் இப்படியான பெரிய ஆட்கள் கலந்துகொள்வது ஒன்றும் புதிதில்லை என்று யோசித்திருக்க கூடுமே தவிர்த்து வேறு எண்ணம் பிறந்திருக்காது தான்.
ஆனால் தானிருக்கும் நிலை, தான் செய்த செயல்கள், அதிலும் ஆதரவற்ற பிள்ளைகளுக்கான பணத்தை சுருட்டியது என இதனை வைத்தாகினும் கொஞ்சமும் எச்சரிக்கையுடன் இருந்திருக்க கூடும் என எண்ணி இப்போது மொத்தமாய் நொந்து போனார்.
“வாங்க ஸார்…” என ஆவுடையப்பன் ஆதிஷேஷனிடம் கை கூப்பினான்.
“ஹலோ ஆவுடையப்பன்…” என்ற ஷேஷாவின் பார்வை அவனின் கையில் பதிந்து மீள,
“கைல ப்ளட்…” என புன்னகைத்தான் ஆவுடையப்பன்.
“இட்ஸ் ஓகே…” என்றவன்,
“உங்க வொய்ப் இப்ப எப்படி இருக்காங்க ஆவுடையப்பன்?…”
“வெல், நெக்ஸ்ட் மூவ்?…” ஷேஷா சிங்காரத்தை கை காண்பித்து கேட்க,
“ஏற்கனவே சொன்னது தான். நாளைக்கு நைட் சிங்காரம் போலீஸ் கையில மாட்டுவார். ஆனா இப்படி இல்லை…” என்று ஆவுடையப்பன் கண்ணில் தீப்பொறி பறக்க சொல்ல,
“இங்க பாருங்க, அந்த பணத்துல ஒரு பைசா எனக்கு தேவையில்லை. வேண்டாம். என்னை முழுசா போலீஸ்ல குடுங்க. இனி எந்த தப்பும் பண்ணமாட்டேன்…” என ஷேஷாவையும், ஆவுடையப்பனையும் பார்த்து கதறிக்கொண்டு கெஞ்சினார்.
“பணத்தை எடுத்துக்கோங்கன்னு சொல்ல அது உங்க பணமில்லையே மிஸ்டர் சிங்காரம். அது கடவுளோட குழந்தைங்களுக்கானது. அவங்களுக்கு கண்டிப்பா போய் சேரும். நீங்க சொல்லனும்னு இல்லை…” என்றான் ஷேஷா.
“நீங்க இதுல இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்ல. அதுவும் இது அரசாங்கத்துக்கு வந்த பணம்…” சிங்காரம் சொல்ல,
“அரசாங்கம்ன்னா யார் நீங்களா மிஸ்டர். சிங்காரம்? நான் இருக்கமாட்டேன்னு நினைச்சீங்களா? நிரஞ்சன் என்னோட ட்ரஸ்ட்ல படிச்சு, வளர்ந்தவர்…” என்றான் ஷேஷா.
அவன் சொல்லவும் இதை யோசிக்காமல் போனதில் இன்னும் அடிவாங்கியது சிங்காரத்தின் கர்வம்.
“தப்பு செஞ்சா யார் வேணும்னாலும் கேள்வி கேட்கலாம். நீங்க செஞ்சது இன்னொருத்தர் தட்டுல விழுந்த சாப்பாட்டை பறிச்சி சாப்பிட நினைச்சதுக்கு சமம்…” ஷேஷா சொல்ல,
“தப்பு தான். நான் உணர்ந்துட்டேன். என்னை தயவு செஞ்சு போலீஸ்ல குடுங்க…”
“உணர்ந்திருந்தா கொலைபாதகம் பண்ண தோணிருக்காது மிஸ்டர். சிங்காரம். டூ லேட்…” என்ற ஷேஷா,
“நான் கிளம்பறேன். என் வொய்ப் ஷக்தி உங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல சொன்னாங்க. அன்ட் உங்க ரிசப்ஷனுக்கு வர முடியலை….”
“இட்ஸ் ஓகே ஸார். மேம்க்கு நான் தேங்க் பண்ணேன்னு சொல்லிருங்க…”
“சூர்…” என்ற ஷேஷா,
“கண்டிப்பா ஒருநாள் உங்க ஃபேமிலியோட வீட்டுக்கு வரனும். ஷக்தி தாத்தா பேர் கூட ஆவுடையப்பன் தான். தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கறேன்…” என ஷேஷா சொல்லவும் ஆமோதிப்பாய் தலையசைத்தான் அவன்.
“உங்களுக்கும் தேங்க்ஸ். நிரஞ்சன் மூலமா தான் உங்களை மீட் பண்ண முடிஞ்சது. இந்த விஷயத்துல நிறைய ஹெல்ப் பண்ணிருக்கீங்க. தேங்க்ஸ் அகைன்…” என்றதும் அவனின் தோளில் தட்டிய ஷேஷா,
“கிளம்பறேன். கால் பண்ணுங்க…” என்று சொல்லிவிட்டு சிங்காரத்தையும் பார்த்துவிட்டு கிளம்பிவிட்டான் ஷேஷா.
ஆதிஷேஷன் அரசியலில் இருந்து சாதிக்க முடியாததை கூட தனியாய் சாதிப்பவன். அவனுடன் ஆவுடையப்பன்.
நேகாவின் தந்தையுடன் எப்படி ஆவுடையப்பனுக்கு பழக்கம் என இப்போது வெட்டவெளிச்சமாகியது சிங்காரத்திற்கு.
நேகாவின் தந்தை வானம் அறக்கட்டளைக்கு வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடை செய்துகொண்டிருப்பது சிங்காரம் அறிந்தது தான்.
அது எங்கே தொட்டு எப்படி தன்னை சுற்றியிருக்கிறது என புரிந்துபோக உண்மையில் தான் முட்டாள் தான் என தோன்றியது.
அனைத்திற்கும் மத்திய புள்ளி நிரஞ்சன். அதில் கோட்டைவிட்டுவிட்டதில் மனம் வெதும்பியது.
கவனம் முழுக்க ஆவுடையப்பன் பக்கமிருந்து வரும் எதிர்ப்புகள் என்னவென யோசித்தவர் மறுபக்கம் கோட்டைவிட்டுவிட்டார்.
“ஹ்ம்ம், சிங்காரம் பீச் பக்கம் ஒரு ரைட் போகலாமா? ரொம்ப போர் இங்க…” என்று கேட்க கிலி பிடித்தது சிங்காரத்திற்கு.
“புதுசா கல்யாணமானவன் நான். உன்னோட மாரடிக்கிறேன் பாரு. ஒழுங்கா நான் சொல்லும் போதே கேட்டிருந்தா இவ்வளோ தேவையா சிங்காரம்?…” என்றான் எள்ளலாய்.
“ஆவுடை…”
“எனக்கு இருக்கற வெறிக்கு உன்னோட ஒத்த ஒத்த நகத்தையும் கையால கொஞ்சம் கொஞ்சமா பிச்சு எறியனும்னு வருதுய்யா. கருமத்த கொஞ்சம் என் கோவத்தை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன். உன்னை மாதிரி கூமுட்டைத்தனம் பண்ண கூடாது பாரு…”
“அது தெரிஞ்சா இன்னும் யோசிச்சு இப்பவே உனக்கு நெஞ்சுவலி வந்துருமே?…” என்றவன்,
“பணம்ன்னா என்னவேணா செய்வியா நீ? எனக்கு யாருமில்லாம பண்ண பார்த்த தானே? யாருமே இல்லாம போவ பாரு நீ…” என்றான்.
அடுத்த நொடி மண்டபத்தில் நடந்த விபத்து தான் கண்முன் வந்தது. சுதாரிக்காத நொடிகளாக போயிருந்தால் அன்றே அவளுடன் அவனும் உயிரோடு மரித்திருப்பானே என நினைக்க அதுவே உயிரை உலுக்கியது.
வரவேற்பு முடிந்து வெளியே வந்து காரில் ஏற முயன்ற அந்த கணம் லாரி ஒன்று வர ஓரமாய் சென்றுவிடும் என நினைக்கும் முன் நெருங்கியதும் வேகமெடுத்தது பிரனித்தா பக்கம்.
“ஹேய்…” என்று கத்தி அவளை இழுக்கும் முன் நேகா கைகொடுத்து அவளை காப்பாற்ற இருவருமே கீழே விழ நேகாவின் கை சக்கரத்தில் சிக்கியதில் நசுங்கியிருந்தது.
கீழே விழுந்ததில் பிரனித்தாவின் தலையில் அடிபட்டு ரத்தம் கசிய இருவரையும் மருத்துவமனையில் சேர்க்க ஆயத்தமாகினார்கள்.
லாரி ட்ரைவர் தன்னை போலீஸ் தான் கைது செய்வார்கள் என நினைத்தாலும் அந்த நிமிடம் பயத்தில் ‘முடிந்தால் தப்பிவிடுவோம்’ கூவிய மனதின் அலறலில் ஓட ஆரம்பிக்க கொஞ்சமும் பிசகாமல் ஆவுடையப்பனின் கையில் சிக்கிக்கொண்டான்.
அத்தனைபேருக்கும் ஸ்தம்பித்த நிலை. வேறு யோசிக்க முடியாமல் அன்று மருத்துவமனையிலேயே இருந்தான் ஆவுடையப்பன்.
இருவரும் நினைவு திரும்பிய பின்னர் தான் பத்ரியிடமும், புருஷோத்தமனிடமும் சொல்லிவிட்டு அசோகனை பார்த்துக்கொள்ளும்படி சொல்லி அங்கிருந்து கிளம்பினான்.
நடந்துவிட்ட நிகழ்வின் நினைவில் மீண்டும் ஆத்திரம் கிளர்ந்தெழ அந்த ட்ரைவரை போட்டு சாத்தினான்.
“ஸார் கால்…” லால் சொல்ல,
“யாருன்னு சொல்லு லால்…” என்றான்.
“புருஷோத்தமன்…” என்றதும் வாங்கியவன்,
“என்ன புருஷோத்தமன்?…” என்றான் தன்னை நிதானத்திற்கு கொண்டுவர முயன்று.
“ஸார் மேம்…”
“ப்ச், இப்ப பேச முடியாது. என்ன கேட்டாலும் நான் பிஸியா இருக்கேன்னு மட்டும் சொல்லு. அவுட் ஆஃப் ஸ்டேஷன்னு சொல்லு. வந்து பேசுவேன்னு சமாளி…” என்று அழைப்பை துண்டித்துவிட்டான் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்காமல்.
அத்தனை அடித்தும், லாரி ட்ரைவர் அழ, அதனை பார்த்து பயத்தில் சிங்காரம் அலற என எதுவும் அவனின் கோபத்தை தணிக்கவில்லை.
“உயிர் கொஞ்சகொஞ்சமா போறதுன்னா என்னன்னு பாரு சிங்காரம்…” என அடித்துக்கொண்டிருந்தவன் கவனம் ஏதோ சத்தத்தில் திசை திரும்ப அங்கே தூரத்தில் பிரனித்தா.
பார்த்ததுமே எழுந்து நின்றுவிட்டவன் சுத்தமாய் அவளை அங்கே எதிர்பார்க்கவில்லை.
“பிரனிம்மா…” என எங்கே அவள் இங்கே நெருங்கி விடுவாளோ அவன் அவளை நோக்கி ஓட ஆவுடையப்பனை தாண்டி அங்கே அழுதுகொண்டிருந்தவன் மீது கவனம் சென்றது பிரனித்தாவிற்கு.
கால்கள் நடுங்க ஆவுடையப்பன் அவன் அருகே வர வர பின்னோக்கி நகர்ந்தவள் பார்வை இப்போது குருதி படிந்த அவன் கரங்களில் நிலைபெற்று மூர்ச்சையடைந்தது.