“என்ன முல்லை, அதுக்குள்ளே கிளம்பிட்ட?…” என்று சௌமியா கேட்கவும்,
“அவங்களுக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்து கால் வந்திருச்சு க்கா. அதான்…” என்றாள் பேசவே தடுமாறி.
“நார்மலா இரு முல்லை. பழசை மறந்திடு. மறந்திட தான் வேணும். இல்லைன்னா உனக்குமே கஷ்டம் தான். இப்ப உனக்கு கல்யாணமாகிருச்சு. நான் ஜஸ்ட் உன்னோட ரிலேட்டிவ் மட்டும் தான். பழைய சௌமியா தான்…” என்றாள் மென்னகையுடன்.
“சௌமிக்கா…” என்று கண்கள் கலங்கவும் அவளை ஆறுதலாய் அணைத்துக்கொண்ட சௌமியா,
“ஓகே, ஓகே. அழ கூடாது. எல்லாமே விதிப்படி தான் நடக்கும். நடந்திருச்சு. சந்தோஷமா வாழ பாரு…” என்றாள்.
“ஏன், எனக்கென்ன? நான் இப்பவும் சந்தோஷமா தான் இருக்கேன். எனக்கான வாழ்க்கை வேறன்னு அன்னைக்கே புரிஞ்சுடுச்சு. சோ நான் ஹேப்பி தான் முல்லை….” என்றாள் சிரித்தபடி.
அன்றும் தெளிவாகவே இதை கூறியிருந்தாள் சௌமியா. மனது வலிக்க வலிக்க அந்த வார்த்தைகளை சொல்லியிருந்தாலும் சொன்னது சொன்னது தான்.
“இன்னொருத்தி கழுத்துல தாலி கட்டினவரை திரும்ப எனக்குன்னு முடிவு பண்ண யாருக்கும் நான் அனுமதி தரமாட்டேன். இதோட இந்த விஷயத்தை விட்டுடுங்க…” என சௌமியா அந்த திருமண கலவரத்தில் சொல்லியிருந்தாலும் முல்லை கவனிக்கவில்லை.
கவனிக்கும் சூழ்நிலை அன்று இல்லவே இல்லை. அதிர்ச்சியோடு அடுத்து என்னவாகுமோ என்னும் அச்சமும் சூழ்ந்திருக்க எதுவும் காதில் விழவில்லையே.
இப்போது சௌமியா தெளிவாய் சொல்ல முல்லையின் மனதில் குற்ற உணர்ச்சி குறைந்தது.
மனதெல்லாம் குடைந்தது அது தானே? இன்னுமும் அர்னவின் நினைப்பை சுமந்து வாழ்கிறாளோ என்று.
ஆனாலும் முந்தைய நாள் கோவிலில் வைத்து சௌமியா தங்களையும், அர்னவ்வையும் பார்த்த பார்வை நெஞ்சை விட்டு அகலவில்லை.
“சில நிஜங்களை ஏத்துக்க தான் வேணும் முல்லை. நேத்தும் எனக்கு அவ்வளோ ஆச்சர்யம். டாக்டர் உன்னை எவ்வளோ கேர் பன்றார். என்னால நம்பவே முடியலை. உங்க மேரேஜ்க்கு முன்னாடி இவருக்கு எமோஷனல் அட்டாச்மென்ட் இருக்குமான்னு குழம்பாத நாளில்லை….” என்ற சௌமியா,
“ஆனா உன்கிட்ட உன்னை புரிஞ்சு அவர் நடந்துக்கறதை பார்க்கும் போது ஆச்சர்யமாவும் இருக்கு. சந்தோஷமாவும் இருக்கு. உனக்கு வாழ்த்துக்கள். நேத்தே சொல்லனும்னு பார்த்தேன். நீ உள்ள போய்ட்ட…” என்றாள்.
“தேங்க்ஸ் சௌமிக்கா…” முல்லை சொல்ல,
“ஓகே, நீ கிளம்பு. ரோட்ல நிப்பாட்டி பேசறேன். எனக்கும் ஹாஸ்பிட்டல் போக லேட்டாச்சு. உன்னை பார்த்ததும் நல்லதுக்கு தான்…”
“ஏன் சௌமிக்கா?…”
“நான் மேல படிக்கலாம்ன்னு சொன்னேன்ல. அடுத்து நீ வரப்போ இங்க இருப்பேனான்னு தெரியாது. அதுக்கு தான் சொன்னேன். உன் ஹஸ்பன்ட் கிட்டயும் சொல்லிருடா. கிளம்பறேன். அன்ட் நேத்து மணி பேசினதுக்கு நான் ஸாரி கேட்டுக்கறேன்…”