“பார்த்தாலே தெரிஞ்சதே உங்க ஊர் பெருமை…” அர்னவ் கிண்டலாய் சொல்ல,
“ஹ்ம்ம் அதான். நானும் அதுவரைக்கும் பெருசா எங்கயும் வெளில போனதில்லை. என்னை வீட்டுல அனுப்பமாட்டேன்னு அண்ணா சொல்லி நான் ரொம்ப அடம் புடிச்சு தான் அந்த ட்ரிப்க்கு வந்தேன். வந்த இடத்தில கலவரம் இப்படின்னதும் தொலைஞ்சோம் வீட்டுல செம மாத்திருக்குன்னு அவ்வளோ பயம்…”
“என்ன சொன்னாங்க வீட்டுல?…”
“அதை ஏன் கேட்கறீங்க? உள்ள கூட்டிட்டு போய் அம்மா செம்ம வெளு, வெளுத்தாங்க. சொன்ன பேச்சு கேட்காம போவியா போவியான்னு அடி…”
“அப்பறம் எப்படி உன்னை வெளியூர்ல காலேஜ்ல தங்கி படிக்கவிட்டாங்க?…”
“அந்த காலேஜ்ல மெரிட்ல சீட் கிடைச்சது. பீஸ் கம்மி. எங்க ஸ்கூல் ஹெட்மிஸ் தான் வீட்டுல பேசி சம்மதிக்க வச்சாங்க. படிச்சிட்டு நல்ல வேலைக்கு போகலாம்ன்னு இருந்தேன்…” என்று கதையளந்து கொண்டிருக்க,
“எல்லாம் ஓகே, அதென்ன க்ரஷ் வேற ஹஸ் வேற?…” என்று கேட்டதுமே தூங்குவதை போல கண்ணை மூடிக்கொண்டாள் முல்லை.
“ஒய், இந்த ஆக்ட்டிங் எல்லாம் வேண்டாம். சொல்லு கேட்போம். அதையும் ஏன் விடுவானேன்?…” என வம்பிழுக்க,
“க்ரஷ்ன்னா உங்க மேல ஒரு நல்ல அபிப்ராயம். உங்களை பிடிக்கும். அதாவது உங்களோட பேச்சு, பொறுமை, அமைதி…”
“அந்த எருமை எல்லாம் மேய்க்க வேண்டாம். ஒழுங்கா நிஜமா சொல்லு….”
“என்ன சொல்ல இதான் க்ரஷ். அவ்வளோ தான்….” என்றாள் சீரியஸாக.
“அண்ணியும் டவுட்டா இருக்கு இருக்குன்னே கிண்டல் பன்றாங்க. இப்ப நீங்க. நான் ஆமான்னா ஆமான்னு சொல்லிட்டு போறேன். பெருசா லவ் பன்ற அளவுக்கெல்லாம் அங்க ஸீன் இல்லை உங்களுக்கு. ரொம்பத்தான்….”
படபடவென்று முல்லை பேசவும் அவளின் கோபத்தை கண்டு புன்னகைத்தவன் தன் நெஞ்சோடு அவள் முகத்தை சேர்த்து புதைத்துக்கொண்டான்.
“அட போதும்மா, எவ்வளோ பேச்சு? சீண்டினா பொறி பறக்குது போ….” என்று அவள் தலையை பிடித்து லேசாய் ஆட்டவும்,
“நீங்க அதை படிச்சிருக்கலாம் தானே? ஏன் அன்னைக்கே படிக்கலை. எனக்கு உங்ககிட்ட சொல்லனும்னு தான் இருந்துச்சு. என்னை எப்படி நீங்க தப்பா நினைக்கலாம்ன்னு அவ்வளோ கோபமும்…”
“சொல்ற அளவுக்கு அதுல ஒண்ணுமில்லை முல்லை. விடேன்…” என்றவன் அவளின் உடல் நலன் பற்றி சொல்லிக்கொண்டிருந்தான்.
மறுநாள் தனியே இருக்கவேண்டுமே என ஒவ்வொன்றாய் அவளுக்கு விளக்கிக்கொண்டிருக்க எல்லாம் தெளிவாய் கேட்டு தலையாட்டியவளின் பாவனையில் பேச்சை நிறுத்தியவன்,
“ஓகே, இப்போதைக்கு இது போதும்….” என அவள் முகத்தை தன்னருகே இழுத்து பிடிக்க,
விளக்கங்கள் விலாவரியாக வெளிச்சத்துடன் விளக்கப்பட அவனின் அணைப்பிற்குள் துவண்டவள்,
“ஒரே நாள்ல நான் டாக்டராகிடுவேன் போல? விடுங்க சாமி. எனக்கு எந்த டவுட்டும் இல்லை…” என்று அவனிடம் கெஞ்சாத குறையாக கெஞ்சியவளிடம் மிஞ்சிக்கொண்டு தான் இருந்தான் அர்னவ்.
வழக்கம் போல அவனின் அன்றாட வேலைகள் இழுத்துக்கொள்ள முதல் வாரம் தனிமையில் வெகு சிரமம் முல்லைக்கு.
அந்த வார இறுதியில் அன்னக்கிளி, கலைவாணன், வனிதா என வந்திருக்க முல்லையின் குடும்பமும் வந்திருந்தனர்.
ஒருவாரம் அங்கே இருந்து மகளுக்கு ஆசை தீர தேவையானவற்றை செய்து போட்டார் ஞானம்.
அந்த ஒருவாரமும் போன வேகம் தெரியவில்லை. அத்தனை சந்தோஷம் குடும்பமாய், வீடு முழுவதும் கலகலப்பாய் ஆட்களுடன் என்று.
வார இறுதியில் அவர்களும் கிளம்பி செல்ல தனிமையில் பைத்தியம் பிடிக்காத குறை தான் முல்லைக்கு.
சொல்லியபடியே அர்னவ் கிளம்பிய பின்னர் தனியே இருப்பதனால் வீட்டிலிருந்தே பயிலும் படியான வகுப்பில் சேர்த்துவிட்டிருந்தான்.
“எக்ஸ்ட்ரா சர்ட்டிஃபிகேட் கோர்ஸ் தான் முல்லை. நீ எப்போ ஜாப் ப்ளான் பண்ணினாலும் உனக்கு யூஸாகும்…” என்று சொல்லியிருக்க முல்லைக்கும் அது ஒரு நிம்மதியாக இருந்தது.
வேலை நேரம் போக மற்ற நேரங்களில் எல்லாம் இருவருமாக இருக்கும் பொழுதுகள் இனிமையை கூட்டியது.
மாதம் மாதம் தானே மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்து என மருத்துவனாகவும் அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டான்.
“கொஞ்சம் அடாவடி, பிடிவாதம். மத்தபடி நல்லவர் தான்…” மீண்டுமாய் அவனுக்கு அவள் புகழாரம் சூட்டினாள் முல்லைமலர்.
உஷாவின் தங்கை பூங்கொடி தான் அவ்வப்போது கிண்டலாய் பேசுவாள் முல்லையிடம்.
“என்னனுக்கா உங்களுக்கு பொழுது போகுது? தனியாவே இருக்கறது? அதுவும் டாக்டர் அண்ணா பேசவே காசு கேட்காங்க….” என கிண்டல் பேசும் பொழுது மௌனமான புன்னகை தான் முல்லைக்கு.
நிஜமோ நிஜம் தானே? தன்னிடம் பேசுமளவிற்கு தன் குடும்பத்தினரிடமோ ஏன் அவனின் குடும்பத்தினரிடமோ கூட பேசியதில்லை.
கேட்கும் கேள்விக்கு ஓரிரு பதில்கள். பேசவேண்டுமென்ற விசாரிப்புகள் தானே தவிர மற்றபடி கலகலப்பாய் கிண்டலாய் என பேசியதில்லை.
பேசவில்லை என்றால் அன்பு இல்லை என்றில்லை என அவனோடான இத்தனை நாள் வாழ்கையில் புரிந்துகொண்டாள் முல்லை.
பெங்களூர் வந்தும் அவள் படிப்பு தொடர அங்கே அவனுக்கு எங்கே கடிதம் எழுத? ஆனால் மறவாமல் வீட்டினருக்கு அனுப்பிவிடுவாள் முல்லை.
அந்த பழக்கத்தை மட்டும் மாற்ற முடியவில்லை இன்றளவும். அவள் பழக்கிவிட்டதையும் கணவனாக அவனும் மாற்றவில்லை.
மாதம் ஒருமுறை மருத்துவமனை முகவரியில் இருந்து வீட்டிற்கு வரும் மடல்கள் முல்லையின் மனதில் வாசம் பரப்பிக்கொண்டே இருந்தது.
“நீங்க அனுப்பிடறீங்க உங்க ப்ரிஸ்க்ரிப்ஷனை. நான் எந்த அட்ரஸ்க்கு அனுப்ப? உங்க ஹாஸ்பிடலுக்கு அனுப்ப முடியுமா?…” என அவன் அனுப்பியது வரும் நாட்களிலெல்லாம் அத்தனை புலம்பல்.
“இந்த அட்ரஸ்க்கு இந்த அட்ரஸ்ல இருந்தே அனுப்ப முடியுமா?….” என்று சண்டைக்கு நிற்கவும் செய்திருந்தாள்.
நாட்கள் மாதங்களாக இரு குடும்பத்து பெரியவர்களும் மாற்றி மாற்றி இங்கு வந்து பார்த்துக்கொண்டனர் முல்லையை.
வளைகாப்பு ஏழாம் மாதமே போடலாம் என ஆசையுடன் ஞானம் சொல்ல அர்னவ் உடனே சரி என்றுவிட்டான் அன்னக்கிளியிடம்.
“அப்பறம் என்ன அடுத்து முல்லை ஊருக்கு வர போறது வளைகாப்புக்கு தான்…” என்ற அன்னக்கிளி அப்போதே பாபநாசத்தில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று திட்டமிட ஆரம்பித்தார்.
வளைகாப்பிற்கு அருந்ததியும் கிளம்பி வருவதாய் சொல்லிவிட இரு குடும்பமும் செய்யும் முறைகளை தீவிரமாய் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இதில் அர்னவ்வின் இந்த உடனடி சம்மதத்தில் முல்லையின் பார்வை அவனை சந்தேகமாய் துளைக்க,
இப்படியான அபாயமான நேரங்களில் நேக்காக அவளின் கோபத்தை திசை திருப்பிவிடுவான்.
“ஆமாமா, அஞ்சாம் மாசம் மருந்து குடுக்க வந்தவங்க ரெண்டுநாள் வந்து இருந்துட்டு போன்னு ஆசையா கூப்பிட்டாங்க. எவ்வளோ உருட்டு உருட்டினீங்க? கிளாஸ் இருக்கு. செக்கப் இருக்கு. வேலை இருக்குன்னு…”
“ஆமா வேலை இருந்துச்சு. அதான் சொன்னேன்…” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
“எல்லாம் பொய், எங்கம்மா அங்க கூட பத்துநாள் என்னை வச்சு பார்க்கனும்னு ஆசைப்பட்டாங்க. அதை அவங்க அத்தைட்ட பேசறதை கேட்டுட்டு தானே நீங்க ப்ளான் பண்ணி என்னை கூட்டிட்டு வந்துட்டீங்க…” என்று சண்டைக்கு நிற்க,
“இல்லைன்னு சொல்லமாட்டேன். உன்னை மாதிரி பொண்டாட்டி இருந்தா நானா தனியா தான் ப்ளான் பண்ணனும்…” என மல்லுக்கு நின்றான் அர்னவ்வும்.
“என்ன?…”
“என்ன என்ன? என் புருஷன் பாவம், இத்தனை வருஷம் தனியா இருக்கார். விட்டுட்டு வரமுடியாதுன்னு சொல்ல உனக்கு மனசில்ல. சொல்லவும் மாட்ட. ஸோ எனக்கு தோணினதை நான் பண்ணேன்…” என்று அவன் செய்ததற்கு நியாயம் பேசினான்.
“எப்பவும் நீங்க இப்படித்தானா?…” என்றவள்,
“வளைகாப்புக்கு எப்படி சரின்னு உடனே சொன்னீங்க? உங்களை நம்ப முடியாதே?…” என சந்தேகமாய் கேட்க,
“ஓகே நம்ப வேண்டாம்….” என்று அவளின் கூந்தலில் முகம் புதைப்பவனிடம் எங்கே கோபம் கொள்ள.
“உனக்கு டாக்டரே நான் தான் முல்லை. எனக்கு தெரியாதா?….” என பேசி பேசியே அவளை பேச்சில் மயக்கும் வித்தை தெரிந்தவன்.
முல்லை நினைத்ததை போல விசேஷம் முடியும் வரை அமைதியாய் இருந்த அர்னவ் வில்லங்கத்தை திண்டுக்கல் சென்று ஏற்றிவிட்டான் வளைகாப்பு முடித்ததுமே.