“நேத்திக்கி கூட அவகள வெச்சிக்கிட்டு ஒவ்வீட்ட பேசிட்டேனேத்தா, வெசனப்படுவியோன்னு இந்த கெழவிக்கு ஒரே அங்கலாப்பா இருக்கு…” என வெளிப்படையாக சொல்ல,
“நீங்க சொன்னதுல எந்த தப்புமே இல்லையே. உண்மையை சொல்லிருக்கீங்க. இதுல வருத்தப்பட என்ன இருக்கு?…” என புரிந்துணர்வோடு பேசிய மருமகளை கன்னம் வழித்து நெட்டி முறித்தவர்,
“ஆனா இது பிக் அமௌன்ட். அதுவும் கார் ஏஜென்ஸில இருந்து ம்மா…”
“புரியுது டா. நான் கூட கேட்டேன்…”
“ஆனா பினான்ஸ் கம்பெனில இருந்தும் எடுத்து எங்கையோ சுத்த விட்டிருக்காங்க. நான்சென்ஸ்….” என்றவள் எங்கோயோ என்னவோ சிக்கிவிட்டதை போல பிரம்மை உண்டானது.
“ஓகே, அப்பா வரவும் க்ளாரிபை பண்ணிடலாம்…” என மகளை சமாதானம் செய்தவர்,
“ஹாஸ்பிட்டல் போட்டு வருவோமே?…” என கேட்டதும்,
“ஓகே ம்மா. ரெடியாகிட்டு வரேன்…” என்றவள் உடை மாற்றி வர மருத்துவமனை சென்றனர் இருவருமே.
மதுராவின் நெற்றி காயத்தில் நன்றாக நீர் கோர்த்து வீங்கி இருக்க ஒரு மருந்தை தந்தனர்.
“டூ டேய்ஸ் இதை காயத்துக்கு போடுங்க. ரெண்டுநாள் கழிச்சு வரவும் அதை ஆப்பரேட் பண்ணி கிளீன் பண்ணிடுவோம்…” என்றார் மருத்துவர்.
வீட்டில் வந்து சொல்ல உலகநாயகி அழும் நிலைக்கே சென்றுவிட்டார் தன்னால் என்று நினைத்து.
“ஆப்பரேட் பன்றதுன்னா ஆப்பரேஷன் இல்லை பாட்டி. காயத்தை லேசா கிழிச்சு விட்டு அந்த நீரை எல்லாம் வெளியேத்தி சுத்தம் பண்ணி கட்டு போடுவாங்க. அவ்வளோ தான்…” மதுரா புரியும்படி அவருக்கு சொல்ல,
“நீங்க எதையும் நினைக்க வேண்டாம் அத்தை. கவலைப்படாதீங்க. சின்னதா தான் இருக்கு. நாலஞ்சு நாள்ல சரியாகிடும்…” என்று சொல்ல,
“இம்புட்டுத்தானா? நான் கூட என்னன்னோன்னு பயந்துக்கிட்டேன்…” என்றார் இருவரையும் மாறி மாறி பார்த்து.
பின் பேத்தியை நன்றாக பார்த்தார். மருத்துவமனைக்கு சென்றிருந்தவள் திரீ போர்த் பேன்ட், டிஷர்ட் என்று அணிந்திருக்க உள்ளுக்குள் தன் எண்ணத்தில் பின்னடைவு.
அவளின் வாழ்க்கை முறை இங்கு வேறாக இருந்தாலும் ஓரு ஆசையில் தான் சொக்கநாதபாண்டியனுக்கு கேட்டது.
தன்னுடன் ஒரே இருப்பாள், நல்ல குடும்பம், செளிம்பான வாழ்க்கை, மரியாதை என்று இன்னும் பல நல்ல யோசனைகள். அதனைகொண்டே அவர் மகனிடம் சொல்லியிருந்தார்.
இப்போது இந்த உடையிலிருந்து ஒவ்வொன்றிக்கும் பேத்திக்கும், ஆசை பேரனுக்குமான வேறுபாடுகளை மனது வருத்தத்துடன் எடுத்து காண்பித்தது.
ஆனாலும் பேத்திக்கு பாண்டியனோடு வாழ்க்கை என்றால் அதைவிட வேறு மகிழ்ச்சி இல்லை.
“மதுவுக்கும் வயசாகுது. சீக்கிரம் வரன் பார்க்கலாமேன்னு சொல்லாம்ன்னு இருந்தேன். அதுக்குள்ளே அண்ணாவே பார்த்துட்டாங்களாமே?…” எனவும் கேட்டார்.
“ஹ்ம்ம் ஆமா…” என மகேஷ்வரி பல்லை கடித்தார்.
“அகில் மேரேஜ் பத்தியும் உங்கட்ட சொல்லிட்டு தான் செஞ்சிருக்கனும். ஒரு வார்த்தை கூட சொல்லாம செஞ்சிட்டோம்…” வருத்தம் போல வசுந்தரா சொல்ல,
“அதனால என்ன? இது ஒரு விஷயமா?..” என்றார் மகேஷ்வரி ஒன்றுமே இல்லை என்பதை போல.
மதுராவும் தாயின் அருகே வந்து அமர்ந்துகொள்ள வசுந்தராவின் பார்வை மொத்தமும் அவள் மீது தான்.
மகன் அவளை விரும்புவதும் தெரியும், இருவரின் பரஸ்பர காதலும் தெரியும். தெரிந்து தானே இந்த முடிவுமே என நினைத்தவர்,
“மகேஷ் எதுக்கு பாலீஷா பேசிக்கிட்டு. நேராவே சொல்லிடறேன். அகில் இந்நேரம் மதுகிட்ட பேசியிருப்பான்னு எனக்கு தெரியும். என்னத்தான் பழக்கவழக்கம், பிரண்ட்ஷிப் இதெல்லாம் இருந்தாலும் அது சொந்தம் மாதிரி வராதே?…” என்று அவரே உடைத்து பேச மதுராவின் முகத்தில் உணர்வில்லை.
“எனக்கு எங்க பக்கம் தான் பொண்ணை எடுக்கனும். என் பிள்ளைக்கு மதிப்பா கல்யாணம் செய்யனும். ஒரு சொல் எங்களை இப்படி முடிச்சிட்டன்னு யாரும் கேட்டுட கூடாது பாரு…” என்று சொல்லும் பொழுதே,