“எப்பவும் குடிச்சிட்டு குடுப்பீகல்ல ண்ணே, அதேம் நிக்குதா…” என ஜகா கூற,
“ஹ்ம்ம்…” என்றபடி வாயில் சரித்தவன் குடித்து முடித்து துர்காவிடம் தர வாங்கிக்கொண்டு நகர்ந்தாள்.
“செரி ஜகா, நா தோப்பு வரைக்கி ஒரு எட்டு போயிட்டு வாரேன். பத்துமணிக்கால அவக வீட்டுக்கு வந்திடறேன். நீயும் ஞாவவமா வந்து சேரும்வே…” என சொல்லி எழுந்துகொள்ள,
“யய்யா…” என வந்தார் காந்திமதி.
“உனக்கென்ன அப்பத்தா?…” என்று அவரிடம் கேட்க,
“போற போக்குல என்னிய அங்கன கொண்டு விடத்தான? நீ வாரப்ப சோலிய முடிச்சிட்டு கெளம்புதேன்…” என சொல்ல அவரை முறைத்தான்.
முகத்தில் அத்தனை கள்ளத்தனம் காந்திமதி பாட்டிக்கு. அது அப்பட்டமாய் தெரிய இன்னும் முறைத்தான்.
பாவம் போல உடலை வளைத்து முகத்தை திருப்பிக்கொண்டவர் பேரன் தன்னை ‘கண்டுகொண்டானே’ என அசடு வழிய,
“சும்மாத்தேன் இரும்டா. அங்கன அவக ஒடஞ்சு போயி வந்துருக்காக. ஆத்தமாட்டாம நாலு வாய் வார்த்த பேச நாதி வேணாமா? போனேம்ன்னா அவகளுக்கு ஒரு ஆறுததேன்…” என அப்பாவியாக சொல்ல,
“இந்த சாவசத்தத்தேன் எங்க கத்துக்கிட்டியோ கெழவி? என்னியவே பொண்ண தூக்க ஆள கூட்ட சொன்னவதான நீயி?…” என்று வேறு ஜகா போட்டுக்கொடுக்க பாண்டியனின் முகத்தில் இன்னும் கோபம்.
“அப்பத்தா…” என அவன் நெற்றிக்கண் திறக்க,
“சோக்கு சோக்குக்கு சொன்னேம்ய்யா. பாவிப்பய இப்ப சேத்து போடுதியான். அதெல்லா சும்மா. ஒன்னிய கேக்காம ஒத்த வார்த்த பேசுவேனா? கெடையாதே…” என்று அப்படியே மாற்றி சாதித்தார்.
“அவ்வா புளுகுனி கெழவி…” என்றான் ஜகா.
“ஏலே…” என காந்திமதி பல்லை கடிக்க,
“சின்ன புள்ளைய கெடுக்குதமாரித்தேன் பேசுவியோ? நேத்து நீ பேசினதத்தேன் பாத்தேமில்ல…” என பாண்டியன் ககூற காந்திமதி முகத்தை தொங்கபோட்டுவிட்டார்.
“இங்காருத்தா அவக சொன்னதெல்லா இன்னும் அப்பிடியே தான் இருக்கு. இம்பிட்டு நாளுல நா படிச்சி பட்டம் வாங்கிட்டேனா? அலங்காநல்லூருதேன் டவுனாயிருச்சா?…” என கேட்கவும் அனைவருமே மௌனமாகினர்.
அந்த எச்சரிக்கை தாய்க்குமே சேர்த்து என அவர்களுக்கு புரிந்தது. இளையவர்களுக்கு அண்ணன் பேச்சிற்கு மறுபேச்சு கிடையாது.
மூத்தவர்கள் இருவரும் ‘இப்படி பிடிவாதமாய் சொல்கிறானே’ என வருத்தத்துடன் பார்த்தார்கள்.
இத்தனை மாதங்களில் எத்தனை பெண்கள் புகைப்படம் காட்டியாகிற்று. எல்லாவற்றிற்குமே மறுப்பு தான்.
“ஏம்த்தா உசுர வாங்குத? வேணா வேணான்னு ஒன்னொன்னுத்துக்கும் சொல்லுதப்ப ஒன்னிய இத்தேமாரித்தேன் சொன்னாவன்னு நெஞ்சுல மிதிக்கததாட்டம் இருக்குத்தா. ஒனக்கென் எம்மனசு அம்புடமாட்டிக்கி?…” என சில நாட்களுக்கு முன்னர் பொறுக்கமாட்டாமல் சொல்லியும்விட்டான்.
“கொஞ்சநாளைக்கி என்னிய விட்டா நானே சொல்லுதேன். எந்த பொண்ண காட்டுனாலும் கெட்டுதேன். ஒவ்வொருக்கா ஒவ்வொரு போட்டோவ காமிச்சி கேக்குத. இத பொண்ண பெத்தவகளும் அறிஞ்சுக்கிடுவாக தான? மனசு என்ன பாடுபடும்த்தா? இத்த செய்யாத…” என அழுத்தி சொல்லியிருந்தான்.
காந்திமதிக்கும், வடிவுக்கும் தங்கள் செய்கை பிடிக்காமல் இப்படி சொல்கிறான் என்றே தோன்றவில்லை.
மதுராவின் எண்ணத்தை இன்னுமே அவன் முழுதாய் மறக்காமல் மறுக்கிறான் என்று தான் தோன்ற அத்தனை அழுத்தம் கொடுத்தனர்.
கூடுதலாக வடிவிற்கு எங்கே மகன் திருமணம் என்ற ஒன்றையே மறந்துவிடுவானோ என்னும் பயம் வேறு.
இப்படி அவரவர் அவரவர் நிலையில் நின்று இந்த திருமண விஷயத்தில் யோசிக்க சொக்கநாதபாண்டியனின் முடிவை யாராலும் மாற்ற முடியவில்லை.
இப்போதும் அன்று சொல்லியதையே கூறியவன் பெருமூச்சுடன் வெளிவாசல் பக்கம் திரும்பினான்.
“இரும்ய்யா, இம்பிட்டு வயித்துல போடத்தான?…” என வடிவு நிறுத்த,
“வேணாம்த்தா, வாரேன்…” என்று கிளம்பிவிட்டான்.
புல்லட் சத்தத்தில் உள்ளே வரை அதிர்வு அலையாய் பரவ அனைவருமே ஆதங்க பெருமூச்சுடன் திரும்ப காந்திமதி வேகமாய் வந்து ஜகாவின் தலையில் நறுக்கென்று கொட்டினார்.
“அப்பத்தா…” என ஜகா கத்த,
“நல்லா வலிக்கட்டும்லே. அவேனுக்கு வம்பாடுபட்டு ஒத்த கலியாணத்த பண்ணிப்பிடலாம்ன்னா இல்லாத கோக்குமாக்குத்தனம்லாம் பண்ணுத நீயி. இனி ஒனக்கு ஒத்த தலையசைப்பு என்கிட்ட அம்புடாதுப்பு. வெச்சிக்கிறேம்…” என்று சண்டைக்கு நின்றார்.
“அட கூறுகெட்டவனுவலா? சொன்னா ஒடனுக்கே அம்பிடுமா என்ன?…” என்ற காந்திமதி,
“ஒங்கண்ணே செரியான மலைமுழுங்கி. அந்த புள்ளைய மனசுல நெப்பிக்கிட்டுதேன் ஒத்த பொம்பளைய கூட கண்ணால காணமாட்டுதியான். அதேம் இழுத்து புடிக்குதேன்…” என சொல்லவும்,