“அவ உசுர வாங்கன்னே வந்துருக்கியான்…” என நாயகி ஜகாவை சொல்ல,
“பொறவு வேலவெட்டி இல்லையாமில்ல?…” என கிண்டலாய் சொல்லி,
“இன்னிக்கி மத்தியானத்துக்கு காந்திமதி பிரியாணிதேம். ஊருக்குள்ள ஒருபய மறக்கமாட்டானுவ…” என பாட்டியை அவன் இன்னும் தூக்கி பிடித்திருக்க காந்திமதி பயத்தில் அவன் மேல் ஒட்டிக்கொண்டு ஜகாவை இறுக்கமாக பிடித்துக்கொண்டார்.
“அட விடுங்க ஜகா. இன்னொரு நாள் பிரியாணி போட்டுடுவோம். இன்னைக்கு ஏற்கனவே பிரியாணி ரெடி…” என மதுரா கிண்டலாக சொல்ல ஜகாவும் இறக்கி விட அங்கிருந்த கம்பை எடுத்து அவனை அடிப்பதை போல பாவலா செய்த காந்திமதி,
“எம்புட்டு திமிரு பாத்தியா? இவேம் கூட சேந்தேனா இதேம். கிறுக்குப்பய…” என மதுராவிடமும் சொல்லி ஜகாவையும் பேச,
கண்ணீர் உடைப்பெடுக்க சட்டென்று பாண்டியனை அணைத்துக்கொண்டவள் முகம் அவனின் நெஞ்சில் பதிய வேறு யாருமற்ற சாலையில் மெல்ல ஜீப்பின் பக்கவாட்டில் மரத்தின் நிழலுக்கு அவளுடன் நகர்ந்தான் சொக்கநாதபாண்டியன்.
“ம்மா…” என்றவள் விசும்பல் சில நொடிகள் மட்டுமே.
மெல்ல முகம் நிமிர்த்த அவளின் கன்னங்களை பற்றியவன் இதழ்கள் நெற்றியில் அழுத்தமாய் பதிந்து மீண்டது.
“என்னப்பா?…” என கேட்டதும்,
“ஒண்ணுமில்லப்பா…” என்றாள் கண்ணை துடைத்துக்கொண்டு.
“அம்மா பேசவும் கொஞ்சம் கஷ்டமா போச்சு. அதான்…” என சிரித்தபடி சொல்ல,
“என்ன கஷ்டம்?…”
“கஷ்டம் எனக்கில்லை. உங்களுக்கு. இனிமே என்னை சமாளிக்கனுமே நீங்க?…” என்றாள் கண் சிமிட்டி.
ஒரு நொடியில் கண்ணீர் வந்துவிட்டதில் மூக்கின் நுனி மிளகாயாய் சிவந்திருக்க மெல்ல அதன் நுனியில் இதழ் பதித்தவன்,
“சமாளிப்போம்…” என சொல்லி அவளின் நெற்றியில் முட்ட,
“யாரோ வராங்க சொக்கரே…” என்றதும் சட்டென அவளிடமிருந்து விலகி பார்க்க ஒருவருமில்லை.
“அடிங்…” என்றவன் கைகள் அவளின் கழுத்தை வளைத்து பிடித்தது.