உண்மைக்கும் கொடுத்துவைத்தவள் என்று வெண்மணி தன்னை நினைத்திருக்க எல்லாமாய் தன்னை தாங்கும் மனைவியை கண்டு தான் என்ன தவம் செய்தேனோ என்று தேனரசன் நெஞ்சம் விம்ம வெண்மணியின் புன்னகையை கண்டு களித்திருந்தான்.
இன்னும் பத்து நாட்களில் தேனரசன் எழுதிய அரசாங்க பரிட்சையின் தேர்வு முடிவுகள்.
அதுவரையில் அவன் வேறு எங்கும் வேலைக்கு செல்லவில்லை. அக்கம்பக்கத்தில் இருக்கும் ஊர்களுக்கு மட்டுமே இருவருமாக சென்று வருவதுமாக இருந்தனர்.
வீட்டிற்கு தேவையானவற்றை வெண்மணியை அழைத்துக்கொண்டு சென்று வாங்கி வந்திருந்தான் தேனரசன்.
வெண்மணி ஒவ்வொன்றிற்கும் கணக்கு பார்த்து வாங்க முற்பட கணிசமான பணம் கையிருப்பில் உள்ளதென அவளின் கவலையை போக்கினான் தேனரசன்.
“நா அதியமா செலவுன்னு செயிதது இந்த இருட்டுக்கட அல்வாவுக்குத்தன். வேற ஒன்னியும் ஆசைப்பட்டு வாங்கி திங்கமாட்டேம்டி…” என தேனரசன் சொல்லுகையில் அவனுக்கு என்னெவெல்லாம் பிடிக்கும் என பொன்னியிடம் கேட்டு தெரிந்துகொண்டாள் வெண்மணி.
“என்னத்துக்கு சிமித்தர? பதறினாக்குல என்னவாவ போவுது?…” என இலகுவாய் புன்னகைத்தான் தேனரசன்.
“நாளைக்கி நீயி என்னத்த எழுதி கிழிச்சன்னு வரும்ய்யா. பொறவு பேசிக்கிட்டுதன். நா இங்க ஒறக்கமில்லாம ஒனக்காவண்டி இங்க நா கெடந்து அல்லாடுனா அவம்பாதமா பண்ணுத?…” என அவனை தள்ளிவிட்டு எழுந்து அமர ஊஞ்சல் அதன் வேகத்தில் தடுமாறியது.
மாடியில் வெண்மணிக்கு சீராக வந்த ஊஞ்சலில் தான் இத்தனை நேரமும் சீராட்டலும், சீராட்டலின் தன்மையின் பாராட்டலும் நடந்துகொண்டிருந்தது.
“பையடி. ஒன்னிய ஆரு ஒறங்க சொன்னா?…” என்று அவளை மீண்டும் அணைத்துக்கொண்டான் தேனரசன்.
“யோவ் மாமா…” என தன் தோளில் முகம் புதைத்திருந்தவன் சிகையை பிடித்து உயர்த்த முயன்றாள்.
“கேக்கும்டி சிமித்தர. என்னன்னு சொல்லு….” என்று அசையாமல் தேனரசன் இருக்க,
“நாளைக்கி பொங்க வெக்கலாமில்ல?…” என்று வெண்மணி பதட்டம் தணியாமல் கேட்டாள்.
தேனரசன் அடக்கமாட்டாமல் சிரித்தபடி நிமிர்ந்து பார்க்க வெண்மணி அவனின் கன்னத்தில் வலிக்க கடித்தாள்.