“ஓகே, இன்னைக்கு முழுக்க இந்த ஸாங் ரிகர்சல் மட்டும் தான். நாளைக்கு ஸாங் ரெக்கார்டிங் இருக்கு உங்களுக்கு…” என அலுங்காமல் கொள்ளாமல் அவள் தலையில் பூவை அள்ளி கொட்டினான்.
“ரெக்கார்டிங்?…” ஸ்ருதி இன்னும் நம்பமுடியாமல் திகைத்து பார்க்க,
“ரெக்கார்டிங் தான். இப்ப நான் பண்ணிட்டிருக்கற ஒரு மூவில சோலோ சாங் ஒன்னு இருக்கு. நாளைக்கு பார்க்கலாம். உங்க வாய்ஸ் சூட்டாகிட்டா நீங்க அறிமுகமாகற பாடலா கூட இருக்கும்…” என்று சொல்ல சந்தோஷத்தில் திக்குமுக்காடினாள் ஸ்ருதி.
“ஹேப்பி?…” என பார்த்திவ் தலையை அசைக்க,
“அதுக்கு இன்னைக்கு கரெக்ட்டா பாடனும் நீங்க. நாளைக்கு ஸாங் பெர்பெக்ட்டா வந்தா தான் ரிலீஸாகும். அதுக்கு உங்களோட ஃபுல் எஃபர்ட் போடனும். ஓகே….”
“கண்டிப்பா ஸார். கண்டிப்பா…” என்று சொல்லியவளை கண்டு புன்னகைத்தவன்,
“லஞ்ச் வரும். சாப்பிட்டு திரும்ப ரிகர்ஸல் பண்ணுங்க. நான் டூ ஹவர்ஸ்ல வரேன்….” என்று சொல்லி கிளம்பினான்.
வெளியே வந்தவன் இன்னொரு அறைக்கு சென்று ஸ்ருதியின் குரல்களை பதிவு செய்திருந்ததை கேக்க ஆரம்பித்தான் பார்த்திவ்.
———————————————
மதிய உணவு இடைவேளையில் அந்த டைனிங் ஏரியாவிலிருந்த அனைவரும் சாப்பிட்டு முடித்து சென்றிருக்க சுபஷ்வினி இன்னும் அங்கே தான் அமர்ந்திருந்தாள்.
வீட்டிற்கு போனில் பேசிக்கொண்டிருந்தவள் பார்வை அவ்வப்போது தன்னை பார்ப்பதும், வர நினைப்பதுமாக யோசித்து நின்ற நரேஷை கவனித்துக்கொண்டு தான் இருந்தது.
ஒருவழியாக நரேஷும் வந்துவிட்டான் சுபஷ்வினி போனை வைத்துவிட்டு நிமிரவும் எதிரில் வந்து நிற்க,
இன்னும் அவனால் நம்ப முடியவில்லை. எப்படி சிரித்துக்கொண்டே பேசுகிறாள் என விளங்கவும் இல்லை.
“இல்லை அஷ், இனிமே தான்…” என்றவன்,
“உன்கிட்ட கொஞ்சம் பேசனும், என் ரூம்க்கு வாயேன்…” என்று அழைக்க,
“எஸ், அப்கோர்ஸ்…” என்று சொல்லியவள் நரேஷின் பின்னால் செல்ல தன்னுடைய டீமை அழைத்து நரேஷ் பேச அழைப்பதாக சொல்லிவிட்டு சென்றாள்.
“உட்கார் அஷ்…” என்ற நரேஷின் மேஜைக்கு எதிரே நின்றுகொண்டவள் அமரவில்லை,
“பரவாயில்லை சொல்லேன். கேட்போம்…” என்று அந்த புன்னகையில் சிறு மாற்றம்.
“ஸோ, நீயும் கோபமா தான் இருக்க…” என்று நரேஷ் கண்டுகொண்டான்.
“இதை கேக்க தான் கூப்பிட்டியா நரேஷ்?…” என சுபஷ்வினி.
“அப்படியும் வச்சுக்கலாம். நீ சொல்லி தான் அவ கேஸை வாபஸ் வாங்கினான்னு தெரியும்…”
“ஓகே, அதுக்கென்ன இப்போ?…” என்றவள் தன் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டாள்.
“ஏன் அஷ் அவளுக்கு எவ்வளோ தைரியம் இருந்தா போலீஸ் ஸ்டேஷன் வரை போயிருப்பா?…” என்று ஆரம்பிக்க,
“உனக்கு எவ்வளோ தைரியம் அவகிட்ட அப்படி கேட்டிருப்ப?…” என சுபஷ்வினி எதிர்கேள்வி கேட்டாள்.
“ஏன் கேட்க கூடாது? என் கூட இருன்னு சொன்னதுல என்ன தப்பிருக்கு? அவளுக்கு அதுல என்ன கஷ்டம்? சொல்ல போனா பிக் ஆபர்சுனட்டி. அவ லைஃப்க்கு நான் ஒரு கார்டியன் மாதிரி இருந்திருப்பேன்…” என்று சொல்லியவனை பார்த்து பல்லை கடித்தவள்,
“அதாவது பாவமேன்னு பாதுகாப்பு குடுத்திருப்ப. ரைட்?…” என்றாள்.
“கிட்டத்தட்ட. அவளுக்கு ஒரு வாழ்க்கை என்ன இருக்கு? அதான் நான்…” என்றவனை முறைத்தவள்,
“நீ என்னடா பெரிய ஹேர் ப்ளக்கிங் டாக், அவளுக்கு வாழ்க்கை குடுக்க? பெரிய இவனா நீ?….” என குரல் உயராமல், உடல்மொழி மாறாமல் சுபஷ்வினி மெல்லிய குரலில் கேட்க,
“ஏய் மைன்ட் யூர் வேர்ட்ஸ்…” என்றான் நரேஷ் இருக்கையிலிருந்து எழுந்து நின்று.
என்ன பேச அழைத்து வந்தால் இவள் என்ன பேசிக்கொண்டிருக்கிறாள் என பார்த்தான் நரேஷ்.
“நீ மைண்ட் பண்ணுனியா உன்னோட வார்த்தையை? அசிங்கத்தை அள்ளி இரைச்ச மாதிரி தானே பேசின?…” என்று கேட்க,
“ஓஹ், இதெல்லாம் உள்ள வச்சுக்கிட்டு தான் ஒன்னும் தெரியாத மாதிரி ஸ்மைல் பண்ணிட்டு இருந்தியா? இப்ப புரியுது, இவனை இங்க ஒன்னும் பண்ண முடியாதுன்னு பாலிஷ்டா இருந்திருக்க….” என நரேஷ் அலட்சியமாக.
“நான் என்ன செய்வேன், செய்யமாட்டேன்னு உனக்கென்ன தேவைக்கு? ஜஸ்ட் நீ ஒரு கோ வொர்க்கர். அந்த ஒரு விஷயத்துக்காக தான் நானும் சைலண்டா இருந்தேன்…” என்ற சுபஷ்வினி,
“இங்க உன்னை எதுவும் செய்ய முடியாதுன்னா நினைக்கிற? அந்த நினைப்பு வேற இருக்கா? ஞாபகம் இருக்கட்டும் நரேஷ், நான் சொல்லலைன்னா இந்நேரம் நீ கம்பி எண்ணியிருப்ப…” என்று எச்சரிக்கை போல சொல்ல,
“வாட் நான்சென்ஸ்? நான் கம்பி எண்ணியிருப்பேனா? ஜஸ்ட் சில ஆயிரங்களை குடுத்தா போதும், அதே கேஸ் அப்படியே ஆப்போஸிட்டா திரும்பும். நான் கூப்பிட்டதை திருப்பி அவ கூப்பிட்டதா நா சொல்லுவேன். எனக்கு எத்தனையோ பேர் இருக்காங்க. என்ன செய்ய முடியும் அவளால?…” என்றவன்,
“இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்லை. நீ ஸ்ருதிட்ட பேசு. அவ ஓகேனா இப்பவும் எனக்கு ஓகே. என்ன சொல்ற?…” என நரேஷ் எகத்தாளமாக கேட்டதும் பளார் என அறைந்தாள் சுபஷ்வினி.
ஒரு நொடி என்ன நடந்தது என்றே தெரியாமல் கண்ணெல்லாம் மங்கலாகி போனது நரேஷுக்கு.
தலையை உலுக்கிக்கொண்டு சுபஷ்வினியை நிமிர்ந்து பார்க்க அவள் இன்னும் சாதாரணமாக நின்றிருந்தாள் கண்களில் அத்தனை திமிருடன்.
“எவ்வளோ தைரியம் என்னையே அடிக்கிற நீ?…” என்ற நரேஷ் நிதானம் தவறினான்.
“தப்பா பேசினா அடிக்க தான் செய்வேன்….” என்று இன்னொரு கன்னத்தையும் சுபஷ்வினி பதம் பார்க்க,
“அவளை தான கூப்பிட்டேன். உன்னையா கூப்பிட்டேன். இவ்வளோ துள்ளுற?…” என்றவனுக்கு மீண்டும் அதற்கும் விழ,
“அஷ் தப்பு பன்ற. இதுக்கு ஸ்ருதியோட சேர்ந்து நீயும் கஷ்டப்பட போற….” என்று சொல்லியவன் அவள் பின்னால் செல்ல செல்ல கோபமாய் எச்சரித்துக்கொண்டே முன்னேற மற்றவர்கள் பார்வை இங்கே விழ ஆரம்பித்ததை கவனிக்கவில்லை நரேஷ்.
“டேய் இவனே, பண்ணுடா. என்னடா பண்ணிடுவ பெருசா? பண்ணு பார்ப்போம். ரொம்ப இல்லை. உன்னை இத்தனை அடிச்சேன். இதுல ஒன்னை திருப்பி குடுத்திரு பார்ப்போம்…” என சவால் விட,
“ஏய்…” என்று அவளை பிடிக்க வந்தவனின் காலை எட்டி மிதித்தவள் கீழே தள்ள நரேஷின் பின்னந்தலையில் சரியான அடி விழுந்தது.
“உன் குடும்பத்துக்கு தெரிஞ்சிருமோன்னு எவ்வளோ பயம் பயந்த நீ? பேரன்ட்ஸ் இல்லைன்னா உன் இஷ்டத்துக்கு பேசுவியோ? அப்போ இவ்வளோ அசிங்கமா பேசின உன்னோட வளர்ப்பும், உன் பேரன்ட்ஸ் ஒழுக்கத்தையும் நான் பேசவா?…” என்று கேட்க,
“வேண்டாம் அஷ்…” என அவளை கொலைவெறியில் எச்சரித்தான்.
“தப்பு தப்பு. நான் ஏன் பேச போறேன்? நீ பேசினதை காமிச்சிட்டா போச்சு. அவங்க பேசட்டும்….” என்றவள்,
“அப்பறம் என்ன சொன்ன? கேஸை திருப்பிவியா? எவிடன்ஸ் இருக்குதுடா பேரிக்கா தலையா. உன் மூஞ்சிக்கு நினைப்பை பாரு. கல்யாணம் பண்ணிக்கனும்னா வீட்டுல பொண்ணை பார்த்து பண்ணிக்க வேண்டியது தானடா ராஸ்கல்…” என்று பேச நரேஷிற்கு தலையில் வலி கூடியது.
அதற்குள் அலுவலகத்தில் அத்தனைபேரும் கூடிவிட நரேஷ் எழுந்து நின்று அனைவரையும் பார்த்தான்.
அவமானமாக போனது அனைவரின் முன்பும் தான் அடிவாங்கி இப்படி நிற்கும் நிலையை எண்ணி.
பேசாமல் இவளை அழைக்காமலே இருந்திருக்க வேண்டுமோ என காலம் கடந்து யோசனை உதித்தது.
“என்ன நடக்குது? என்னாச்சு?…” என மேலதிகாரியும் இன்னும் சிலரும் வந்துவிட்டனர்.
“அதுதான் ஸார் என் கோபமே. ப்ரெண்ட் அப்படின்ற முகமூடில கேவலமான வேலை பார்த்திருக்கான். பிரெண்டா பழகின எனக்கே இப்ப தான் இவன் யோக்கியதை தெரியுது. அப்போ இங்க எத்தனை பேரை எப்படி பார்த்திருப்பானோ?…” என்றாள் சுபஷ்வினி.
அவள் சொல்லவும் அத்தனைபேரின் பார்வையும் நரேஷை கேவலமாக பார்த்தது.
அவனின் பெயர் இங்கு வரை பழுதடையும் என நரேஷ் துளியும் நினைக்கவே இல்லை.
சுபஷ்வினியின் கண்டுகொள்ளாத செய்கை மட்டுமே அவனின் மூளையை குடைந்தெடுக்க ஸ்ருதியை பற்றியும் அறிந்துகொள்ள விழைந்ததன் விளைவு இதெல்லாம்.