“பார்த்திவ்க்கு என்ன பன்றோம், என்ன பண்ணோம்ன்னு தெரியாம இல்லை யட்சினி. உரசினதுக்கெல்லாம் ஒட்டிக்குமா என்ன?…” என்ற கேள்வியில் ஸ்ருதியின் முகமும் சிவந்துவிட கதவை திறந்துகொண்டு போட்டோ எடுக்க ஆட்களும் வந்துவிட்டனர்.
“ஹ்ம்ம், அமேஸிங்…” என்றாள் சுபஷ்வினி.
நிம்மதியாக இருந்தது இப்போது ஸ்ருதியின் முகம் பார்த்து. பார்த்திவ்வின் அருகாமையில் அவளின் அலைப்புருதல்கள் எட்டி நிற்பதை கண்கூடாக கண்டிருந்தாள் சுபஷ்வினி.
அதற்கடுத்த வேளைகள் துரிதமாக நகர ஆரம்பிக்க மணமக்கள் இருவரும் தனி தனியாகவும் சேர்ந்தும் பலவிதமாய் நின்றும் அமர்ந்தும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இருவரையும் இன்னும் சற்று நெருக்கமாய் புகைப்படம் எடுக்க கேட்க பார்த்திவ் மறுத்துவிட்டான்.
“எங்களோட போட்டோஸ் எல்லாரும் பார்க்கிற விதமா இருக்கனும். இப்படியே இருக்கட்டும்…” என முடித்துக்கொண்டவன்,
“நம்மோட அந்தரங்கம். நமக்கானதா மட்டும் இருக்கனும். என்ன ஸ்ருதி?…” என அவளிடமும் கேட்க,
“உங்களுக்கு பாடம் நடத்த சொல்லியா தரனும். ரைட் ரைட்…” என அவனை கிண்டல் பேசினாள் ஸ்ருதி.
அதன் பின் கோவிலுக்கு கிளம்பி வெளியே வர ஜெயரூபன் போனில் பேசியபடி அவர்களுக்காக நின்றார்.
மஞ்சுளா, அறிவழகன் இருவரின் கால்களிலும் விழுந்து எழுந்தவர்கள் சுபஷ்வினி பெற்றோர், சுதந்திரம் தம்பதியினர் காலிலும் விழுந்து எழுந்தனர்.
“என்னப்பா என் கால்ல எல்லாம் விழுந்துட்டு?…” என சுதந்திரம் சங்கோஜப்பட,
“மூத்த ஸார்க்கு இன்னும் இளமை திரும்புதே நினைப்பு போல?…” என கலாய்த்த சுபாஷ்,
“வயசானவங்க கால்ல சின்ன பிள்ளைங்க விழுந்தாங்கன்னா பதினாறையும் பெத்துக்கங்கன்னு சொல்றதை விட்டுபோட்டு இதென்ன எக்ஸாமா? ஏன் எதுக்குன்னு?…” என அவன் விடாமல் ஓட்ட,
“இங்கையுமாடா?…” என்றார் அவர் சிரித்துக்கொண்டே.
“பின்ன தங்கச்சி எம்புட்டு நேரம் நிக்கிறதாம்? முஹூர்த்த நேரம் போகுதுல?…” என்ற சுபாஷ்,
“ம்மா நீங்க சொல்லுங்க…” என மஞ்சுளாவை அழைக்கவும்,
“உனக்கு சேட்டைடா. எங்க ரத்னாவை காணும். அவ பக்கத்துல இருந்தா பேசுவியா நீ?…” என அவனை கிண்டலடித்தார்.
“நம்ம சுபா அம்மாவோட என்னவோ எடுத்து வைக்கனும்ன்னு சொன்னா. ஆளை காணும்…” என்று மனைவிக்கு போனில் அழைப்பு விடுத்தான்.
“எல்லாரும் கிளம்புங்க. மத்தவங்களை நான் அழைச்சிட்டு வரேன்…” என அறிவழகன் சொல்ல,
“நானும் இருக்கேன்…” என சுதந்திரம் அங்கிருந்தார்.
சுபாஷுடன் மற்ற உறவுகளும் கிளம்ப அனைவரும் கோவிலுக்கு சென்றனர் மணமக்களுடன்.
அத்தனை உறவுகள் சூழ்ந்த உலகில் ராணியாய் மகுடம் வீற்றிருந்தாள் ஸ்ருதகீர்த்தி.
அவர்கள் எல்லாம் கோவிலை வந்தடைய அங்கே தயாராய் நின்றிருந்தார் ஜெயரூபன்.
கோவிலில் அவர்களுக்கான பாதுகாப்புகளும் கூட அத்தனை திருப்தியாகவே இருந்தது.
மணமேடையில் அமர்ந்தவர்களுக்கான சம்பிரதாயங்கள் ஆரம்பிக்க ஜெயரூபன் யாரோ ஒருவராய் ஒரு மூலையில் இதனை நின்று பார்த்துக்கொண்டிருக்க அங்கே சொந்தங்களாய் ஸ்ருதியின் உறவுகள் நின்றிருந்தனர்.
அறையில் வைத்து கலந்கியவள் தான். அதன் பின்னர் அவளின் மனதெல்லாம் அவளுடன் இருந்தவர்கள் தங்களை நிரப்பிக்கொண்டனர்.
அத்தனை ஆராவாரம். அவ்வளவு சந்தோஷம். மஞ்சுளாவின் உறவுகளும் இதில் முழுமனதுடன் கலந்துகொண்டனர்.
“பார்த்திவ்க்கு பிடிச்சிருக்கே. அதுவே போதும் எங்களுக்கு…” என்று வந்துவிட்டனர்.
யாரும் எங்கும் ஸ்ருதியையும் கூட விட்டுத்தரவில்லை. அவளை தாங்கி பார்த்துக்கொள்ள மனதிநோரம் அந்த கேள்வி மட்டும் அவளை விட்டு அகலவில்லை.
ஏன் தன்னை பெற்றவர்கள் மட்டும் இப்படி மனநிலையில் இருந்தனர் என்று. அவர்கள் மட்டுமா? அவர்களை சேர்ந்தவர்களும் தானே?