“செழியன், என்னாச்சு உங்களுக்கு?…” என்றவளும் கண்டிப்புடன் அவன் பக்கம் வந்து நின்றாள்.
“என்னாச்சு? தூக்கம் வரலை. அதான் சும்மா ரூம்க்குள்ளையே ஒரு வாக்…” என்றான் சிரிப்புடன்.
“பொய் சொன்னீங்க, உதை விழும்…” என்று மிரட்டியவளின் உரிமையில் மெல்ல கரைந்துகொண்டிருந்தான்.
அந்த நொடி ஆர்ப்பாட்டமாய் எழுந்தது அவளோடு மொத்தமாய் சரணடைந்துவிடு என்னும் ஆர்ப்பரிப்பு.
அதை அவன் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. திருமணமும் இப்படி இன்னொரு காரணம் சொல்லி.
இப்போது வாழ்க்கையை ஆரம்பிப்பதும் அப்படி என்றால் என நினைத்து அவனால் அதனை ஏற்க முடியவில்லை.
தன்னை அவள் மறுக்க போவதில்லை. ஆனாலும் அவனின் மனம் சண்டித்தனம் செய்துகொண்டிருந்தது.
அவர்களின் கூடல் வெறும் தவிப்பிற்க்கானதாய் இல்லாமல் காத்திருப்பின் எல்லையற்ற காதலுக்கானதாக இருக்கவேண்டும் என நினைத்தான்.
இப்போது சுபஷ்வினி வந்து அதட்டியதும் மெல்லிய புன்சிரிப்பு. தனக்கானவளின் தன் மீதான ஆதிக்கத்தை முழுதாய் அனுபவித்தான்.
“என்ன சிரிப்பு? என்னன்றேன்? சும்மா கிட்ட வரது, கிஸ் பன்றது, வேண்டாம்ன்னு எழுந்து போறதுன்னு என்ன பண்ணிட்டிருக்கீங்க? இப்ப உங்களை தள்ளி இருங்கன்னு நான் சொன்னேனா?…” என்று அவனின் முன் நின்றவளின் எகிறலில் இன்னும் நெருங்கி நின்றான்.
நெருக்கங்கள் இதமாக, இடைவெளியை இன்னும் குறைத்தவன் கைகள் அவளின் தோளில் மாலையாகியது.
“சரி, தள்ளி இருக்கலை. என்ன பண்ணலாம்?…” என்றான் சீண்டலுடன்.
“அடடா பச்சைமண்ணு. தெரியலைன்னா விடுங்க. எனக்கென்ன?…” என்றவள் அவனின் மூச்சுக்காற்றின் வெம்மையில் திரும்பி நின்றுகொள்ள பின்னிருந்தவனின் நெருக்கங்கள் மேலும் இம்சையூட்டியது.
அவனின் உறக்கமிழந்த இந்த தவிப்புகள் ஏன் என அவள் அறியாததில்லையே. அதை களைய நினைத்து வந்துவிட்டவளை இப்போது நாணம் சுற்றிக்கொண்டது.
“அஷ்வினி, ப்ச் என்ன சொல்ல?…” என்றவன் முகம் சுபஷ்வினியின் தோளில் அழுத்தமாய் பதிய,
“திரும்பவும் கல்யாணத்துக்கு முடிவெடுக்கும் போது சொன்ன அதே டயலாக்கா?…” என்றாள் கேலியாக.
“இல்லைன்னு எப்படி சொல்ல? உன்னோட முழுமனசா சந்தோஷமா சேரனும்ன்னு நினைக்கறேன். இந்த பதட்டங்கள், தவிப்புகள் எதுவுமில்லாம உனக்கான உன்னை தேடற அந்த தவிப்போட மட்டும் உன்னை நெருங்கனும்…” என்றான்.
அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளை அடையும்முன் அவனின் கைகளின் இருக்கங்கள் சுபஷ்வினியை இறுக்கிக்கொண்டே சென்றது.
மெல்லிய புன்னகை அவனின் செயலில். இதற்கு பெயர் என்னவாம்? இது தவிப்பில்லையா? என நினைத்துக்கொண்டே அவன் பக்கம் திரும்பவும் நெடுஞ்செழியன் அவளின் முகம் தாங்கினான்.
“என்ன செய்யட்டும் நான்?…” என்ற கேள்வியில்,
“இப்ப என்ன தோணுது? அதை செய்யலாம். இப்ப இந்த நிமிஷம் உங்களுக்குள்ள நான் மட்டும் இருக்கேன்னு நீங்க நம்பினா, உங்களுக்கு தோணினா…” என்றவள் முழுதாய் அவனிடம் தன்னை ஒப்புக்கொடுத்து நிற்க,
“சூர்…” என கேட்டவன் கழுத்தை வளைத்து தன்னை நோக்கி இழுத்துக்கொண்டவள்,
“வார்த்தையில் தான் சொல்லனுமா என்ன?…” என்று கேட்டு அவனின் கன்னத்தில் தன்னிதழை கொண்டுசெல்ல, சட்டென இமைக்கும் நொடியில் அவன் கன்னம் நகர்த்தி தன் மொழி சிந்தும் வழியில் தாங்கிக்கொண்டான்.
அச்சாரம் கொடுப்பதை தனதாக்கிக்கொண்டவன் கண்கள் சிரிக்க, அதைகண்டுகொண்டு விடுபடமுடியாமல் அவனின் தோளில் அடித்தவளின் விழிகள் அவனை மிரட்டியது.
ஒரு நொடியில் அவ்விடம் இதழை அவன் கொண்டு வந்ததோடு மொத்தமாய் அவளை இழுத்துக்கொள்ள இருவரின் பார்வைகள் மயக்கம் கொண்டன.
முத்தத்தில் மொத்தமாய் தள்ளாடும் பெண்ணவளை கையில் ஏந்திக்கொண்டவன் முகமெல்லாம் மத்தாப்பூ.
“பிராடு போலீஸ், நான் கன்னத்துல தான் குடுக்க வந்தேன்…” என்றாள் சுபஷ்வினி.
“ஆனா கன்னத்துக்கு பர்ஸ்ட் ப்ரையாரிட்டி குடுக்கக்கூடாதுன்னு இது ரெண்டும் ஒரே நச்சரிப்பு அஷ்வினி…” என்றான் தன்னிதழ்களை சத்தத்துடன் குவித்து காண்பித்து கண்சிமிட்டி.
“வாக்கிங் மூட் போயிருச்சும்மா…” என சொல்லியவன் அவளின் முகத்தோடு மோதினான்.
“அஷ்வினி இப்ப உன் காது ப்ரீன்னு தானே சொன்ன?…” என்றவனின் வார்த்தைகள் எல்லைகளை கடந்து அவளிடம் தஞ்சமடைய கேட்டவள் கூசி, சிவந்து, சிலிர்த்தாள் அவன் கைகளுக்குள்.
“அவ்வ்வ்வா இதெல்லாம் எங்க மூட்டை கட்டி வச்சிருந்தீங்க லத்தி?…” என்றவள் அவன் முகம் பார்க்கவே நாண,
“எங்க, என் முகம் பாரு, என்னை பார்த்து கேளு. சொல்றேன்….” என்றவனின் கலாட்டா சிரிப்பில் அவள் மனதும் இலகுவானது.
“பார்க்கறேன், பார்த்துட்டே இருக்கறேன். இந்த நாள் இப்படி ஒருநாள் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. சிலநேரம் ஈகோ கூட எவ்வளோ கொடுமைல செழியன்?…” என்றவள் கண்கள் கலங்கிவிட்டது.
“சிலநேரம் ஈகோ கூட சுகமா இருக்கும். அதுவும் காத்திருப்பை போல. நிமிஷத்துக்கு நிமிஷம் அந்த ஈகோ ஞாபகத்துக்கு நம்மளை கொண்டுவரும் போது இன்னும் நெருக்கத்தை, நினைப்பை அதிகமாக்கும் அஷ்வினி…” என்றான் வாஞ்சையாக அவளின் கன்னத்தில் தன் மீசையை உரசவிட்டு.
“இப்ப இந்த விஷயமும் இல்லைன்னா இன்னும் நமக்கு கல்யாணமாகி இருக்காதுல? அன்னைக்கு அந்த ரெசார்ட் நான் வராம இருந்து…” என்றவள் வார்த்தைகளை முடிக்கவிடாமல் விழுங்கிக்கொண்டவன் வேகத்தில் மிரண்டு மூர்ச்சையாகும் நிலைக்கு வந்தாள் சுபஷ்வினி.
ஆவேசம் கொண்டவனை போன்ற அந்த முத்தத்தில் மெல்ல விழிகள் சுருங்க, அவனை பிடித்திருந்த கைகள் தளரவும் விடுவித்தான் நெடுஞ்செழியன்.
“எதை பத்தியும் என்னை நினைக்க கூடாதுன்னுட்டு நீ என்னடி பன்ற?…” என்றவன் கோபத்தில் மெல்ல அவள் இதழ்கள் வளைந்தது.
“ஆமான்னு சொல்லி திருப்பி குடுத்தா வாங்கிப்பீங்களா லத்தி?…” என சுபஷ்வினி கேட்டதும்,
“அஷ்வினி என்ன குடுத்தாலும் வாங்க தயார். அவளையே குடுத்தாலும். காத்துட்டிருக்கேன்…” என்றவன் நெஞ்சில் முகம் சாய்த்தவள் கைகள் அவனை தழுவிக்கொள்ள மொத்தமாய் மனைவியை தன்னோடு அணைத்துக்கொண்டான் நெடுஞ்செழியன்.
கைகள் நான்கும் கோர்த்து, நெரித்து, இரவின் இருளில் ஆசைகள் வெளிச்சம் கொள்ள, அவன் அவளை கொள்ள, அவள் அவனில் துள்ள என சங்கீத சாகரம் முத்தச்சத்தத்தில் அரங்கேறியது.
முத்திரைகள் வரிசைகட்டி முத்தத்தடம் கொண்டு நித்திரையை விரட்டும் அவனின் ஆக்கங்களினால் மனமெங்கும் மாயமாய் ஒரு ஊஞ்சலாட்டம்.
மூச்சுக்களின் வெம்மையின் உரசலில் தயக்கங்களும், வெட்கங்களும் தீயிலிட்ட சருகென சாய்ந்துவிட பேராண்மை கொண்ட பெண்மை அங்கே ஆதிக்கம் செலுத்தியது அவளவனோடு.
மிச்சமின்றிய தேடல்களில் மீண்டும் மீண்டும் தொலைந்து எழ இருவரின் சிலிர்ப்புகள் சிவக்கும்படி தான் இருந்ததுவோ!.
மன்னவனின் விரலின் நடனங்கள் கொண்டாட்டமாய் ராஜ அதிகாரத்துடன் இடையூறு இன்றி ஊர்வலம் வந்து மூர்ச்சைகள் முற்றுபெராமல் மீண்டுமாய் முக்குளிப்பில் நெடுஞ்செழியன்.
“பார்ரா லத்திக்கு கவிதையை?…” என கிண்டல் பேசி விலகி சரிய,
“ம்ஹூம், கிட்டவே இரு. இப்படி நெருக்கத்துக்கும், விலகலுக்கும் இடையில நான் தான் தவிச்சு போறேன் அஷ்வினி. என்ன பன்றடி நீ?…” என அவன் பிதற்ற,
“முத்திடுச்சு…” என்று கலகலத்து சிரித்தாள் சுபஷ்வினி.
அவளின் புன்னகையை உள்வாங்கிக்கொண்டே மனதினுள் மெல்ல நடந்தவற்றை அசைபோட்டான் நெடுஞ்செழியன்.
அவளில் அவன் அழுத்தங்கள் எல்லாம் பனியாய் கலைந்திருப்பதை போலிருந்தது.
“என்ன ஸார் திரும்பவும் கனவா?…” என்றாள் அவனின் மீசையை பிடித்திழுத்து சுபஷ்வினி.
“ஹ்ம்ம் கனவு தான். இந்த கனவு ரொம்ப நாள் கனவு. உன்னோட என் வாழ்க்கை எப்போ ஆரம்பமாகும்ன்ற கனவு. சிறப்பாவே துவங்கி வச்சாச்சு…” என்றவன் அவள் பக்கம் திரும்பினான்.
“அஷ்வினி…” என்ற அழைப்பில்,
“சொல்லுங்க என்ன?…” என்றாள் குறுஞ்சிரிப்போடு.
“ம்ஹூம், ஒண்ணுமில்லை…” என அவன் தலையசைக்க,
“ஹலோ என்ன என்னவோ சொல்ல வந்துட்டு ஒண்ணுமில்லைன்னா?…” என சுபஷ்வினி முறைக்க,
“ஒண்ணுமில்லைன்னா சொல்ல நிறைய இருக்குன்னு அர்த்தம். ரசிப்பை ருசித்து தான் காட்டனும்ன்னு அர்த்தம். அதுக்கு வார்த்தையா வடிவம் குடுக்க முடியாதுன்னு அர்த்தம்…..”
“அப்போ எனக்கு எப்படி தெரியுமாம்?…” சுபஷ்வினியின் கேள்வியில் சன்னமான சிரிப்போடு அவன் கன்னம் பிடித்து கிள்ளியவன்,
“தெரியுமே. ஒவ்வொரு தொடுகையும், என்னோட தீண்டலும் உன்கிட்ட பேசும்ன்னும் அர்த்தம். என் பார்வை போற தூரம் என்னோட தேவையை சொல்லும்ன்னு அர்த்தம். என் முகத்தோடு உன் முகம் உரசும் போது என் மூச்சுக்காற்று உன்கிட்ட தஞ்சமடைய கேட்குதுன்னு அர்த்தம்…” என வரிசையாய் அடுக்க,
“இதுக்கு என்ன அர்த்தமாம்?…” என்றவனின் கேள்விகள் அவளின் ஒவ்வொன்றிலும் சஞ்சரித்து சங்கமித்தது.
சங்கமத்தின் ஆளுகையில் இணையிடம் அவன் தேடியவையின் தடங்கள் வெட்கம் கொண்டு கூச்சம் தாளாமல் நிழல் தேடி அவனிடமே ஒளிந்துகொண்டது.
இரு வருடங்களாக தகித்த இரு உயிர்களின் ஏக்கமும் பால் சொட்டும் பனியிரவில் வார்த்தைகள் கடந்து, இதழ் சேர்ந்து, குளிர் தென்றலில் இளைப்பாறி, அணைப்பின் கனப்பில் இதம் சேர்த்தது.