கமலா கட்டாயப்படுத்தி பிள்ளைகளை வேலை செய்ய வைக்கவோ அவருக்கு உதவிக்கு அழைக்கவோ மாட்டார்.
தாயின் கஷ்டத்தை உணர்ந்து பிள்ளைகளே உதவி செய்வதால். உமா அங்கிருக்கும் வரை காலை ஏழு மணியளவில் தாமதமாக தான் காலையில் எழுவாள்.
சொந்த அத்தை வீட்டுக்கு மருமகளாக செல்வதால் கமலாவும் உமாவை அதிகமாக கெடுபிடி கொடுப்பதில்லை.
அந்தப் பழக்கத்தையும் மீறி அவள் இன்று காலை 5:00 மணிக்கு எல்லாம் எழுந்து இருக்கிறாள் என்றால். இரவு முழுவதும் அவள் சரியாக உறங்கவில்லை அதுவே காரணம்.
திருமணத்துக்கு முன்பிருந்த சந்தோசம் திருமணம் முடித்த அன்றே அவளுக்கு காணாமல் போயிருந்தது.
அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வந்தவளுக்கு அவன் அன்றே சத்தம் போட்டதும் அவளுக்கு கண்கள் எல்லாம் கலங்கியது அழுதபடியே படுக்கையில் படுத்தாள்.
காலையில் நடந்தது அனைத்தையும் சிந்தித்துக் கொண்டிருந்தவள் எவ்வாறு உறங்கினாள்.. என்பது தெரியாமல் உறங்கி இதோ காலை 5:00 மணிக்கு எல்லாம் கண்வழித்து எழுந்து வேலைகளை ஆரம்பித்து விட்டாள்.
எழுந்து அறையோடு ஒட்டி இருந்த குளியல் அறையில் குளித்துவிட்டு பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி பெற்றோர்கள் அமைத்துக் கொடுத்த இந்த வாழ்க்கையை நல்லபடியாக வாழ அருள் புரியுமாறு இறைவனை மனதார வேண்டிக்கொண்டு தீபாராதனை காட்டி விட்டு அறையை விட்டு வெளியேறி நேராக சமையல் அறைக்கு சென்றாள்.
சமையல் அறைக்கு செல்லவும் மகேஷ் கண்வழித்து எழுந்து சோபாவில் அமரவும் சரியாக இருந்தது.
அவன் எழுந்ததை கண்டு உடனடியாக காஃபி தயாரித்து அவனுக்கு கொடுத்தாள்.
அவள் காபியை நீட்டவும் அவன் அதை வாங்காமல் அங்கிருந்து டீப்போவில் வைக்க சொல்லிவிட்டு அறையில் இருந்து குளியலறைக்கு சென்று முகம் கழுவி விட்டு வந்து காபி எடுத்து பருக ஆரம்பித்தான்.
அவன் காஃபியை எடுத்ததும் சமையல் அறைக்கு செல்ல இருந்தவளை அவன் குரல் கலைத்தது “ ஏய்.! நில்லுடி. நீ என்ன இந்த வீட்டு வேலைக்காரியா?. யாரோ மாதிரி வந்த காபியை வச்ச போய்கிட்டே இருக்குற?. கல்யாணம் முடிச்சு இன்னைக்கு தான் முதல் நாள் வாழ்க்கையோட ஆரம்பம். அவன் அவன் சென்சார் அடிச்சிட்டு இருப்பான் நான் இங்கே இருந்து ஈ ஓட்டிட்டு இருக்கேன். காலைல குட் மார்னிங் சொல்லனும் லஞ்ச் டைமுக்கு குட் ஆப்டர்நூன் சொல்லணும். குட் ஈவினிங் சொல்லணும் நைட் குட் நைட் சொல்லணும். நான் வீட்டுக்கு வந்தாலே டைமுக்கு டைம் நீ எனக்கு விஷ் பண்ணி ஆகணும். இது ஒன்னும் உங்க அம்மா வீடு இல்ல உன்னோட விருப்பத்துக்கு என்ன வேணும்னாலும் செய்வதற்கு இனி என்னவாக இருந்தாலும் நான் சொன்னா மட்டும்தான் நீ செய்யணும். பிரேக்ஃபாஸ்ட்,லஞ்ச், ஈவினிங் ஸ்நாக்ஸ் நைட் டின்னர், எல்லாமே நான் தான் மெனு தருவேன். அப்புறம் உன் கைல பணம் பைசாவும் தரமாட்டேன். வீட்டுக்கு தேவையான மளிகை சாமான் உனக்கு தேவையானது அப்புறம் இனி டெய்லி மரக்கறி. நான் வெஜ் எல்லாமே வீட்டுக்கு நான் வாங்கி கொண்டு வந்து தருவேன். நீ எங்கேயும் போகவும் தேவையில்லை. எங்க அம்மாவோ இல்லை உங்க குடும்பத்துல இருந்து யாராவது வந்தா நல்லா ஊர் கதை பேசிட்டு இரு. அவங்களுக்கு வர முடியலையா? நீ அங்க போகணும்னு விருப்பப்பட்டால் நான் வரும்போது எனக்கு முன்னபே சொல்லணும். ஈவினிங் போறதா இருந்தா முதல் நாள் ஈவினிங் சொல்லணும் அப்பதான் என்னுடைய டைம் நான் சேஞ்ச் பண்ண முடியும். உன்னை மாதிரி சமைத்து சாப்பிட்டுட்டு வீட்டுல நான் வெட்டியா இருக்கிறது இலலை. என்னோட பிசினஸ் நான் தான் பாத்துக்கணும். அப்படியான பிசி டைம்லயும் உனக்கு நான் டெய்லி எல்லாம் வாங்கி தந்து சொகுசா உன்னை வீட்டுக்குள்ள வச்சிருக்கேன்னா என் பொண்டாட்டி என்னை நல்லபடியா பார்த்துக் கொள்ளணும். என்று நினைக்கும் என்னோட மனசை நீ புரிஞ்சுகிட்டா சரி. எனக்கு ஆபீஸ்க்கு போறதுக்கு டைம் ஆகுது சீக்கிரமா போயி பிரேக்ஃபாஸ்ட் இட்லி ஊத்தி கார சட்னியும். பண்ணு. இட்லி பொடி ஈவினிங் ரெடி பண்ணிடு. ” என்று கூறிவிட்டு அன்றய பேப்பரை படிக்க ஆரம்பித்தான்.
சிறுவயதில் கடினமாக உழைத்ததால் இயற்கையாகவே அவனுக்கு உடல் கட்டுக்கோப்பாக இருந்தது.
அதனால் சாதாரண அளவிலேயே வீட்டில் உடற்பயிற்சி செய்து கொள்வான் காலையில்.
இன்று உடற்பயிற்சி செய்வதற்கான மனநிலையில் அவன் இல்லை.
பேப்பரை மேலோட்டமாக புரட்டி பார்த்தவன். வழமை போன்று அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளும் கற்பழிப்பும் கொலையுமாக செய்தி சுவாரஸ்யம் இல்லாமல் இருந்ததால் பேப்பரை வைத்து விட்டு டிவியை போட்டு அவனுக்கு பிடித்த பிளே லிஸ்டில் இருந்த பாடல்களை கேட்க ஆரம்பித்தான்.
தேங்காய் துருவி அவள் சட்னி அரைக்க மிக்ஸி போடும்பொழுது அந்த சத்தம் அவனை தொந்தரவு செய்ததால் சமையலறைக்கு அவளை திட்டுவதற்காக சென்றான்.
காலையில் எழுந்து குளித்ததால் தலையில் இருந்து வடிந்த தண்ணீரும் வியர்வை துளிகளும் முதுகிலும் புடவை மறைத்தும் மறைக்காமலும் இருந்த இடையிலும் தாமரை இலையில் இருந்த தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தது. அந்த அழகு சிலையை பார்த்து அவனை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. மெதுவாக அடி எடுத்து வைத்து இடையோடு சேர்த்து அவளை அணைத்து கழுத்தில் முகம் புதைத்தான். அவளது வாசமும் சோப்பின் வாசமும் சேர்ந்து அவனை கிரங்கடித்து நிலை குலைய வைத்தது.
“ உம்மா குட்டி. பிரியாணி தானேடி சாப்பிட முடியாது. தயிர் சாதம் கிடைக்கும் தானே. 31 வருஷமா காத்து வந்த பிரம்மச்சாரிய விரதத்தை இன்னைக்கு எனக்கு கைக்கு எட்டிய தூரத்துல என் பொண்டாட்டியா நீ இருக்கும் போது என்னால் என்னையயே கட்டுப்படுத்த முடியலை டி. ” என்று கூறியபடி அவனது கைகள் அவளது இடையில் செய்த மாயாஜாலத்தில் அவளும் அவளின் சுய நினைவை இழந்து அவனது கட்டுக்குள் வர ஆரம்பித்தாள்.
அப்பொழுது அவளுக்கு எந்த நிபந்தனையோ நிஷா கூறியதோ எதுவும் நினைவில் இல்லாமல் போனது.
அவளும் அவனது தொடுகையில் கரைவதை பார்த்து அவளை மறுபக்கம் திருப்பி ஒரு பெண்ணின் முதல் இதழ் தேன் சுவையை அறிய தலை குனிந்து இருந்த அவளது முகத்தினை நிமிர்த்தி பார்த்தவன். முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக. பீரியட் என்னும் பொய்யை கூறி நாடகம் ஆடியவள் காலையில் எழுந்து பூஜை அறையில் விளக்கேற்றி பூஜை செய்து பிறை நெற்றியில் திருநீர் வைத்திருந்தாள். அதை அவனது கண்கள் கூர்ந்து கவனித்ததை அவள் அறியாமல் அவனது தொடுகையில் இருந்து அவள் இன்னும் நிகழ்வுக்கு வரவில்லை.
பொய் கூறுவது அதை மறைக்க முயற்சி செய்வது மேலும் பொய் கூறுவது என்று எதுவுமே அவள் செய்ததில்லை.
அதனால் அவனிடம் இரவு அவள் பீரியட் என்று கூறியதை கூட அவள் மறந்து விட்டு வழமை போன்று முதல் நாளாகிய இன்று விளக்கேற்ற வேண்டும் என்று பூஜை அறைக்கு சென்று விட்டாள்.
அதைப் பார்த்தவனின் மனநிலை எவ்வாறு இருந்தது என்று அவள் சற்று உணரவில்லை.
கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஓங்கி அவளது கன்னத்தில் அறைந்து அவன் கொடுத்த மோக நிலையை கலைத்தான்.
அடித்த அடியில் சற்று தள்ளி சென்று கீழே விழுந்து விட்டாள் உமா.
கை கொடுத்து அவளை எழுப்பாமல் கைபேசியை எடுத்து கமலாவிற்கு அழைப்பு விடுத்தான்.
அழைப்பை ஏற்றது என்னவோ பழனிச்சாமி தான்.
இந்த நேரம் அவர் அங்கு இருப்பார் என்பதை அவன் அறிந்து கொள்ளாமல் அழைப்பை ஏற்று விட்டார் இனி பேசாமல் வைப்பது முறையல்ல என்று
“ ஹலோ மாமா. கடைக்கு போகலையா?. ” என்று அவன் கேட்டதும் என்றும் இல்லாத திருநாளாக அவனே அழைத்து இவ்வாறு கேட்டதும் பழனிச்சாமி எவ்வாறு அதை எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றார்.
நீண்ட நேரமாக அவன் லைனில் இருப்பதை தெரிந்து கொண்ட பழனிச்சாமி பேச வேண்டும் என்று கட்டாயத்தால் “ போகணும் மாப்பிள்ளை. சொல்லுங்க என்ன விஷயம்.” என்றார்.
“ ஏ மாமா ஏதும் விஷயம் இல்லாட்டி கால் பண்ணி பேசக்கூடாதா?. ” என்றான்.
என்னடா இது இன்னைக்கு எனக்கு வந்த சோதனை. என்று பழனிச்சாமி நினைத்துக் கொண்டு ஏதோ அவன் வம்பு இழுப்பதாக தோன்றியது அவருக்கு.
“ என்ன மாப்பிளை நீங்க அப்படியெல்லாம் எதுவும் இல்லை. கால் பண்ணி இருக்கீங்க என்ன என்று கேட்டேன்.”
“ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு மாமா. நான் இன்னைக்கு கட்டாயம் ஆபீஸ் போய் ஆகணும். கொஞ்சம் அத்தையும் பிள்ளைகளையும் வரச் சொல்றதுக்காக அழைத்தேன் மாமா. அவங்க வந்தா உமாக்கு ஆறுதலா இருக்கும். புது வீடு புது இடம் தானே. அவள் இதுக்கு செட்டாக கொஞ்ச நாள் ஆகும். தனியா இருக்கிற பீல் அவளுக்கு வராமல் இருக்கும். அனுப்பி வைக்கிறீங்களா மாமா?. ” என்றான் மகேஷ்.
அவனது பேச்சை கேட்டதும் பழனிச்சாமியின் மனம் குளிர்ந்து விட்டது. என்ன செய்வாளோ எப்படி தாக்குப்பிடிப்பாளோ என்று பல குழப்பங்களில் இருந்தவருக்கு அவன் அழைத்து இவ்வாறு கூறியதும் மனதில் ஒரு நிம்மதி பரவுவதை உணர்ந்தார்.
“ அதுக்கு என்ன மாப்பிள்ளை கட்டாயம் இப்பவே அனுப்பி வைக்கிறேன். எனக்கு இன்னைக்கு கடையை திறந்தே ஆகணும் அதனால் நான் வர முடியாது. அவங்களை அனுப்பி வைக்கிறேன் மாப்பிள்ளை. ” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டு அங்கே செல்லும்படி வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு அவர் வெளியேறி விட்டார்.
அந்தப் பக்கம் மகேஷ் அழைப்பை துண்டித்ததும் எழுந்து நின்றவளை பார்த்து “ ச்சீ என்ன பொண்ணு டி நீ..! இரவே நான் கேட்டேன் தானே டி.. பயத்துல பொய் சொல்றியா? என்ன ஏதுன்னு உண்மைய சொல்லுன்னு கேட்டேனா?இல்லையா? சொல்லுடி . முதல் நாள் அதுவுமா பொய் சொல்லி என்னை ரொம்ப ஏமாற்றி விட்ட நீ. என்னடி வாயில முட்டையா அடைச்சு வச்சிருக்க?. வாய் திறந்து பேசுடி இல்லாட்டி இன்னொரு அப்பு வச்சிடுவேன்.” என்று கூறி கையை ஓங்கியபடி அவளை பார்த்து நின்றான்.
அவர்களது வாழ்க்கைக்காக தான் அவள் நிஷா கூறியதை உண்மை என்று நம்பி அவனிடம் பொய் உரைத்தாள்.
அதுவே அவளது வாழ்க்கைக்கு முதல் நாள் அவனிடம் அடியும் திட்டும் வாங்கி கொடுத்து விட்டது.
அவன் அடித்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ ஏய் என்ன பார்வை டி. எனக்கு இது பிடிக்கவில்லை. இல்லை எனக்கு பயமா இருக்கு கொஞ்ச நாள் டைம் தாங்க. அப்படி ஏதாவது கேட்டு இருந்தால் ஓகேன்னு நானும் உன்னோட உணர்வுக்கும் மனசுக்கும் மரியாதை கொடுத்து சம்மதிச்சிருப்பேன். எத்தனை வருஷமா நீ என்ன பார்த்திருக்கிற என்னை பார்த்தா பொண்ணுங்களை பார்த்ததும் அப்படியே மேலே பாஞ்சு விழுகிற மாதிரியா இருக்கேன். எனக்கும் உனக்கும் நான்கு வருடத்திற்கு முன்பே கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க. அப்ப இருந்தே நீ எனக்கு பாதி பொண்டாட்டி ஆயிட்ட. அதுக்கு பிறகு உன்னை ஒரு தவறான பார்வை பார்த்திருப்பனாடி. நான் அப்படி பட்டவனா இருந்திருந்தால் இந்நேரம் எனக்கு மூணு வயசுல ஒரு குட்டி பாப்பா இருந்திருக்கும். என்னோட முதல் தோல்வியை என்னால இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதற்கு காரணம் நீ என்கிட்ட பொய் சொல்லி ஏமாற்றி இருக்க என்பதை நான் தெரிஞ்சுகிட்டேன். கல்யாணம் நடந்த அடுத்த நாளே நீ என்கிட்ட இருந்து மனசளவில் விலகிட்ட உமா. இனி நான் பட்ட காயம் மறந்து என் மனசு உன்னை ஏற்றுக் கொள்ளும் வரைக்கும் நீயா உன்னை தந்தாலும் எனக்கு வேண்டாம். போ இங்க இருந்து என் கண் முன்னாடி நீ வரக்கூடாது. முன்பு சொன்ன மாதிரி எனக்கு உன்னுடைய எந்த விஷ் தேவையில்லை. அதை தவிர நான் சொன்ன மற்ற எல்லாமே நடக்கும். இன்னும் கொஞ்ச நேரத்துல உன் குடும்பம் வரும் அடுத்து இந்த மடப்பயலை என்ன சொல்லி ஏமாற்றலாம்னு குடும்பமா இருந்து பேசி முடிவு செய்து வைங்க. ” என்று ஆக்ரோஷமாக கத்திவிட்டு அவனது ஏமாற்றத்தின் வலி போக்கும் வழி தெரியாமல் அவர்கள் வரும் முன்பு அங்கிருந்து வெளியேறி விட்டான்.
அவன் கோபத்தோடு வீட்டை விட்டு வெளியேறி சென்றதும் அடுத்து என்ன செய்வது எவ்வாறு அவனை சமாதானப்படுத்துவது என்பது தெரியாமல். குடும்பத்தினர் வருகிறார்கள் என்பதை கேட்டு அடித்ததை தாய்க்கு தெரியப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டு மீண்டும் முகம் கழுவி அவன் அடித்ததை மறைக்க அலங்காரம் செய்ய ஆரம்பித்தாள்.
அவள் மேல் தான் தவறு இருக்கிறது வேறு ஏதாவது காரணம் சொல்லி இதை தடுத்திருக்கலாம்.
அப்படி இல்லை என்றால் சொன்ன பொயை காப்பாற்றியாவது இருக்கலாம்.
பொய் கூறிவிட்டு அடுத்த நாள் அது இல்லை என்று வெளிச்சம் போட்டு காட்டியதால் அவனும் கோபம் கொண்டு விட்டான்.
திருமணமான முதல் நாளே அவளை அடித்து விட்டான் என்று பெற்றோருக்கு தெரிந்தால் இதனால் வேறு பிரச்சனை வரும் என்பதை உணர்ந்து குடும்ப பெண்ணாக உமா மாறி மறைக்க ஆரம்பித்து விட்டாள். அது மட்டுமல்லாமல் முதலிரவை தள்ளி வைத்த காரணத்தால் மகளை கொடுமைப்படுத்துகிறான் என்று தாய் உணர்ந்து அவசரமாக அதற்கு நாள் பார்த்து அதனால் அவர்கள் குடும்பம் பாதிக்கப்பட்டு விடுமோ என்று பயந்துவிட்டாள்.
அன்றாவது அவன் அடித்ததையும் கூறி முதலிரவு பற்றி நிஷா கூறியதையும் தாயிடம் கூறியிருந்தால் வரப்போகும் பெரிய பிரச்சினைகளில் இருந்து அவள் தப்பித்திருப்பாள்.
ஆனால் மீண்டும் அவளுக்கு அன்று கிடைத்த வாய்ப்பை அவள் தவற விட்டு விட்டாள்.
அவள் அலங்காரம் முடித்து ஹாலுக்கு வரவும் கமலா பிள்ளைகள் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வரவும் சரியாக இருந்தது.
வலுக்கட்டாயமாக முகத்தை சிரித்த மாதிரி வைத்துக்கொண்டு தாய் தங்கையை அணைத்து வரவேற்றாள்.
கமலா மகளின் முகத்தை தான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
மகள் வாழ்க்கை ஆரம்பித்து விட்டாளா? என்று பார்த்தார்.
இங்கு தான் முதலுக்கே மோசம் ஆகிவிட்டதே.
“ என்னம்மா முன்ன பின்ன பார்த்திராத ஆளை பாக்குற மாதிரி பாக்குற?. இத்தனை வருஷமா என்னை பார்த்தது போதாதா?. ஒரு நைட் தான் நான் உங்களை பார்க்கவில்லை. அதுக்குள்ள வருஷ கணக்கா உங்கள விட்டு பிரிந்திருந்த மாதிரி பார்க்கிற?.” என்றாள்.
மகள் கிண்டல் அடித்து சகஜமாக பேசுவதை பார்த்து சற்று ஆறுதல் அடைந்து கொண்டார் கமலா . தாயிடம் மகள் நடிக்கிறாள் என்பதை அவர் அறிந்து கொள்ளவில்லை.
அவன் இல்லாததால் சகஜமாகவே அவர்களுடன் அவள் பேசிக் கொண்டிருந்தாள்.
வந்தவர்களுக்கு காபி கொடுத்ததும். குடித்துவிட்டு மகள் முடிக்காமல் இருந்த வேலைகள் அனைத்தையும் கமலா செய்து கொடுத்துவிட்டு நேரம் போவதை உணர்ந்து அவருக்கும் வீட்டில் போட்டது போட்ட படி வேலைகள் இருந்ததால் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
அவர்கள் சென்ற சற்று நேரத்தில் நிஷாவும் சித்ராவும் வந்தார்கள்.
வந்தவர்களுக்கு மீண்டும் காபி போட்டு கொடுத்தாள். அதை வாங்கிய நிஷாவின் கழுகு கண்ணுக்கு அடித்த தடம் சிவந்து இருந்தது சதப்பவில்லை.
அதைப் பார்த்து தாய்க்கும் காட்டிவிட்டு.
“ அப்புறம் அண்ணி சொல்லுங்க இரவு. அண்ணாவ சமாளிச்சிட்டீங்களா?. எதுவும் பிரச்சினை இல்லையே. ” என்றால் நிஷா என்ன நடந்தது என தெரிந்து கொள்ளும் ஆவலில்.
பெற்ற தாய்க்கு சொல்லாதவளா இவர்களுக்கு சொல்ல போகிறாள்.
“ ஒன்னும் பிரச்சனை இல்லை அண்ணி அவர் ஏற்றுக் கொண்டார்.” என்று சிரித்தபடி கூறினாள் உமா.
“ சரி அண்ணி நாங்க நேற்று அண்ணா எங்களுக்கு வாங்கி வைத்திருந்த திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு போக வந்தோம். அது எல்லாம் கொஞ்சம் எடுத்துக் கொடுக்கிறீங்களா?.”
அவர்கள் சென்றால் போதும் என்று நினைத்து உமா சமையலறைக்குள் சென்றாள்.
அனைத்தும் கவர் செய்யப்பட்டிருந்ததால் என்ன இருக்கிறது என்று கூட தெரியவில்லை.
ஒவ்வொரு பையாக தூக்கிக்கொண்டு வந்து ஹாலில் வைத்தாள்.
அவள் எடுத்து வைத்தவற்றை நிஷாவும் உமாவும் மீண்டும் தூக்கிக்கொண்டு வாசலுக்கு வந்தார்கள்.
“ சரி அண்ணி வெயில்ல நிக்காமல் நீங்க வீட்டுகுள்ள போங்க. ஆட்டோக்கு கால் பண்ணி இருக்கோம் ஆட்டோ வந்ததும் நாங்க போயிடுவோம்.” என்று அவள் கூறியதைக் கேட்டு உமாவும் உள்ளே சென்றுவிட்டாள்.
“ பார்த்தியா அம்மா இவளோட திமிரை. ராமன் அணிலுக்கு கோடு போட்ட மாதிரி அவன் அடிச்ச தடம் அப்படியே தெரியுது. ஆனா ஒண்ணுமே நடக்கலன்னு சொல்லி நம்மகிட்ட சமாளிக்கிறாள். இதை இப்படியே விடக்கூடாது அண்ணா அவளை அடித்து வைத்த அத்தைக்கும் மாமாக்கு தெரியப்படுத்திட்டா அதுக்கு பிறகு அவங்க பாத்துக்குவாங்க மிச்சத்தை. கடைசி வரைக்கும் இதுக்கு நாம தான் காரணம்னு தெரியாம இருந்தால் சரி. ” என்று கூறி ஆட்டோ வந்ததும் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு அவர்களும் சென்று விட்டார்கள்.
நிஷாவும் சித்ராவும் அவர்கள் பேசியதை ரகசியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை ஒரு ஜீவன் கேட்டதை அவர்கள் அறியவில்லை.
இதனால் அவர்களுக்கும் இனி வாழ்வில் சூறாவளி சுழற்றி அடிக்க போவது அறியாமல் சந்தோசமாக சென்றார்கள்.