“பேசாத நீ. அவன் சின்ன பையன். நீ எடுத்து சொல்லவேண்டியது தானே? வாய்ல என்ன வச்சிருக்க? அங்கயே கேட்டிருப்பேன். சரி நல்ல நாளதுவுமா பேச வேண்டாம்ன்னு உன்னை கூப்பிட்டேன்…” என்றவர்,
“இதையெல்லாம் எதிர்பார்த்தா சம்பந்தம் பண்ணுனீங்க? என்ன மாப்பிள்ளை ஆக போறோம்ன்னு மிதப்பா உன் மவனுக்கு? கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளை மிடுக்கு காமிக்கிறானோ? சொல்லி வை அவனை, தொலைச்சுடுவேன் பார்த்துக்க….” என்றார் நரசிம்மன்.
“அதில்லைப்பா. ப்ரவனுக்கு இது வேற விதமா தோணுது. குருமூர்த்தி அளவுக்கு நாம வசதி கிடையாது. இந்த கல்யாணத்துக்கு முதல்ல அவங்க வீட்டுல பெருசா சம்மதிக்கலைன்னு தான் அனுஷா மூலமா தெரிஞ்சது…”
“சரி இப்பத்தான் கல்யாணம் வரை வந்தாச்சே?…”
“ஆமா சிம்மா, பொண்ணுக்காக இறங்கி வந்திருக்காங்க. வீட்டுக்கு பார்க்க வந்தப்போ தான் அனுஷா அம்மாவுக்கு கீதாவை பிடிச்சு பேசினாங்க. அப்படியே ரெண்டு கல்யாண பேச்சுவார்த்தையாகி இப்ப இங்க நிக்கிது. ப்ரவனுக்கு சம்மதிக்கிற மாதிரி சம்மதிச்சு நம்மளை மட்டம் தட்டுறாங்களோன்னு ஒரு எண்ணம்…” என்று ஸ்ரீநிவாசன் சொல்ல,
“நான் சொல்றேன், பேசாம கல்யாணத்தை நிப்பாட்டிரு. இது சரிப்பட்டு வராது…” என படாரென நரசிம்மன் சொல்ல,
“என்னப்பா இப்படி சொல்ற?…” என அதிர்ந்துவிட்டார் ஸ்ரீநிவாசன்.
“பிறகென்ன? உன் மகன் நேரத்துக்கு தகுந்தாப்ல கற்பனை பண்ணிக்குவான். இதவச்சு அந்த பொண்ணுக்கிட்ட பேசாம இருப்பான். அங்க இருந்து அந்த புள்ளை கண்ணை கசக்குது. என்னத்துக்கு இது? சரிப்படாது…” என்றவரை விழிகள் தெறிக்க பார்த்தார் ஸ்ரீநிவாசன்.
“அவங்க அளவுல நாம சமமில்லைன்ற எண்ணம் இருந்தா அது காலத்துக்கு தாழ்வுமனப்பான்மையை தான் வளர்க்கும். நிம்மதி போயிரும். அந்த வீட்டு பையன் தானே இவங்க கல்யாணத்துக்கு பேசி சம்மதம் வாங்கினது?…”
“ஆமா சிம்மா. அந்த பையன் தான் இண்டர்வ்யூ…”
“இந்தா வாயை மூடு. இண்டர்வ்யூ இண்டர்வ்யூன்னு? என்னத்த அப்பனும், மவனும் தொழில் பண்ணி கிழிக்கிறீங்க? நீங்க ஆயிரம் காரணம் யோசிக்கிற மாதிரி அவனும் யோசிச்சிருப்பான்ல. அவனுக்கு அங்க பேட்டி குடுக்க தோணிருக்கும். நீங்க சொந்தமாக போறதுனால உன்கிட்டயே தான் குடுக்கனுமோ?…” என்றார் கோபத்துடன்.
“புரியுது சிம்மா…” என்றார் ஸ்ரீநிவாசன் உடனே.
“என்னத்த விளங்குச்சோ. உன் புள்ளையை கூப்பிட்டு சொல்லி வை. இல்லையா இதை இந்த இடத்துலயே முடிச்சிக்கிடுங்க. அந்த புள்ளையாச்சும் வேற எங்கியாவது போய் நிம்மதியா இருக்கட்டும்…” என்ற நரசிம்மன்,
“அதுக்கு முன்னாடி நான் பேசறதை கேட்டுக்கோ ப்ரவன். நம்மோட பிஸ்னஸ் யாரை நம்பியும் இல்லை. அவங்கவங்களுக்கு ஒரு தனித்தன்மை இருக்கற மாதிரி விருப்பமும் இருக்கும். அது உனக்கு வர போற மனைவியா இருந்தாலுமே….”
“ஸாரி டாட். எனக்கு புரிஞ்சிருச்சு. கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்துட்டேன். நான் அனுவை பார்த்துக்கறேன்…” என்று புன்னகைத்து,
மறுநாள் காலை எழுந்து காஞ்சிபுரம் சென்றவர்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்ப, வரும்பொழுதே நரசிம்மனுக்கு உடல்நல கோளாறு.
“ரெண்டுநாளா ரொம்ப டயர்டா தான் இருந்தாங்க. ரெஸ்ட்டே இல்லைல…” என்று கீதா சொல்ல நனியிதழ் முகத்தில் சொல்லொண்ணா வேதனை.
“ஒண்ணுமில்லை நதி…” என்றார் மகளிடம் நரசிம்மன்.
ஆனால் கண்களில் உயிர்பயம். என்னதான் தனக்கு பின்னால் தன் மகளை தன் அண்ணனின் குடும்பம் பார்த்துக்கொள்ளும் என்றாலும் தானில்லாமல் மகள் எப்படி இருப்பாள் என்று உள்ளுக்குள் பரிதவித்து போனார்.
ஆனால் அதனை முகத்தினில் காண்பிக்காமல் அவளுக்கு தைரியம் சொல்ல, தகப்பனின் முயற்சி புரிந்து அவளும் மென்முறுவல் புரிந்தாள்.
———————————————–
“நான் போய்ட்டு வந்திடறேன். நாம போய் பார்க்கலைன்னா எப்படி?…” என தமயந்தி குருமூர்த்தியிடம் சொல்லிக்கொண்டிருக்க,
“அவங்க யாருன்னே தெரியாது. ஏன் போகனும்ன்னு சொல்ற நீ?…” என்றார் மனைவியிடம்.
“என்ன பேச்சு இது? நேர்ல பார்க்கலைன்னாலும் சொந்தம்ன்னு பார்க்க வேண்டாமா? சம்பந்தியோட கூட பிறந்த தம்பி அவர். விஷயம் தெரியாம இருந்தா வேற. தெரிஞ்ச பின்னாடி போகாம இருக்கமுடியாது…” என்று சொல்லியவர்,
“என்ன பரத்?…” என்றார் மகனிடம்.
“நம்ம ஹாஸ்பிட்டல்ல தான் இருக்காங்க ப்பா. நான் கூட்டிட்டு போய்ட்டு வரேன்…” என்றான் தாய்க்கு ஆதரவாக. குருமூர்த்தி யோசனையுடன் பார்க்க,
“நிச்சயதார்த்தம்ன்னு முன்னாடியே நாம செஞ்சிருந்தா கண்டிப்பா அவரும் வந்திருப்பார். கல்யாண பேச்சுக்கள் எல்லாம் நாமளா இங்க வச்சு பேசிக்கிட்டது தானே. பொண்ணு பார்க்கறப்போ அவரால இங்க வர முடியலை. அவர் பொண்ணுக்கும் எக்ஸாம் இருந்ததாம்…” என்றவர்,
“இதுக்கு கூட பர்மிஷன் வாங்கி தான் போகனுமா? அப்படியே உங்க இளைய மகன் மாதிரி இருக்கீங்க…” என்றதும் வந்து சேர்ந்தான் குருஆர்யன்.
“பேயை நினைச்சா உடனே வந்துருமாம். தோ வந்துட்டான்…” பரத் சிரிக்க,
“தூங்காம இந்தநேரம் என்ன பேச்சு?…” என்றான் குருஆர்யன் வந்ததுமே கேள்வியாக.
“சரி போய்ட்டு வா…” என்று குருமூர்த்தியும் சொல்ல, இளையமகனின் பார்வையில் அங்கேயே நின்றுவிட்டார் தமயந்தி.
“இல்ல ஆரி, நம்ம கீதாவோட சித்தப்பாவுக்கு வந்த இடத்துல உடம்பு சரியில்லையாம்….”
“ஸோ?…”
“அதான் அப்பா நாளைக்கு போய் பார்த்துட்டு வான்னு சொல்லியிருக்காங்க.நான் கூட எதுக்குன்னேன். உங்கப்பா போன்னு சொல்லியிருக்காங்க. நம்ம பரத் ஹாஸ்பிட்டல்ல தான் அட்மிட் பண்ணியிருக்காங்கலாம்…” என்றவர்,
“நீ நாளைக்கு ப்ரீனா வாயேன்…” என்று வேறு கேட்க,
“வேற வேலை இல்லை…” என்று வேகமாய் சென்றுவிட்டான் உள்ளே.
“ஹப்பா…” என நெஞ்சில் கைவைத்து திரும்ப குருமூர்த்தியின் முறைப்பில்,
“இங்க பாருங்க, ஒருநாளைக்கு ஒருத்தரை தான் சமாளிக்க முடியும். இன்னைக்கு கோட்டா ஓவர். போய் தூங்கறேன்…” என்று அவர் பேசும்முன் வேகமாய் சொல்லிவிட்டு திடுபுடுவென ஓட்டமெடுத்தார் தமயந்தி.
மனைவியின் வேகத்தில் குருமூர்த்தி முகத்தில் புன்னகை. சிரிப்புடன் அவரும் எழுந்து செல்ல அங்கே கண்ணை மூடி சத்தமாய் குறட்டை வேறு தமயந்தியிடம்.
“நிஜமாவே நல்லா தூங்கினா இவ்வளோ குறட்டை வராதாமே…” என வேண்டுமென்றே குருமூர்த்தி சொல்ல சட்டென குறட்டை சத்தம் குறைய,
“யப்பா சாமி. எனக்கு பதில் சொல்ல தெம்பில்லை. இப்படியே விட்டா நாளைக்கு என்னை தான் கொண்டுபோய் அட்மிட் பண்ணனும் போல?…” என்றதும், அதுவரை சிரித்துக்கொண்டிருந்த குருமூர்த்தி,