மயங்கிய குழந்தையை வேகமாக வந்து வேலு தூக்க, பின்னோடு வந்த அரசி பவியின் கன்னம் பார்த்து அதிர்ந்து விட்டார்.
“ அய்யா வேலு! புள்ளைக்கு செவுலு வீங்கி போய் கெடக்குல, ஒழுங்கா தூக்கி பிடிவே” என்று அதட்டிய கொடி, குழந்தையை தொட்டு பார்க்க, கைகளில் பிசுபிசுவென என்னவோ இருந்தது.
வேலுக்கு பதற்றத்தில் கை நடுங்கியது. தண்ணிய முகத்தில் தெளித்து, கன்னத்தை தடவ, குழந்தையிடம் முனங்கல் வந்தது.
“அந்த சிறுக்கி தாண்ட இப்படி பண்ணிருக்கணும், கொஞ்ச நாள் கிறுக்கு பிடிச்ச மாதிரி தான் சுத்துறவ, நீயும் அவ மகுடிக்கு மயங்கி எல்லாத்துக்கும் தலையாட்டு, கோட்டி கழுதை பிள்ளைய கொள்ள பார்த்துட்தாலே” அரசி வாய்க்கு வந்தபடி புலம்பி பஞ்சு துணி கொண்டு துடைக்க, உணர்வு வந்த குழந்தை அலறி துடித்தது.
குழந்தையின் துடிப்பை பார்த்த வேலுக்கு, பதறி போய்“ எம்மா! பிள்ளைய தூக்கு ஆஸ்பத்திரி போவோம்” என்று கிளம்ப,
தன் தோழியுடன் பேசி முடித்த தாமரை, துணிகளை அள்ளி கொண்டு கீழிறங்க , குழந்தையின் அழு குரலில் பதட்டத்துடன் வந்தாள்.அரவம் கண்டு திரும்பி பார்த்த வேலு,
பின்கட்டில் தாமரை நிற்பதை பார்த்து கோபத்துடன் அவள் அருகே சென்றான். அவளை சும்மா விடும் எண்ணம் இல்லை போல.
கிராமப்புற பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் பின்கட்டு இருக்கும். அவனின் கோபம் கண்டு அதிர்ந்த தாமரை, என்ன என கேட்பதற்க்குள். அவன் விட்ட அறையில் முகம் தரையில் பட சாய்ந்து விழுந்தாள். சிமெண்ட் தரை முகத்தில் கீறளை உண்டு பண்ணியது.
அதிர்ந்து போய் கணவனை பார்த்தாள் தாமரை. அவ்வளவு சீக்கிரத்தில் நிதானம் தப்பி கோபம் கொள்ளும் கணவன் அல்ல வேலு. “மாமா” என்று அழைத்து எழுந்து நிற்ப்பதற்குள், மீண்டும் ஒரு அறை. மொத்தமாக சாய்ந்து விட்டாள் பெண்.
“ ஏட்டி! தாமரை தாமரைன்னு, நீ சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டினேன், என்னிய கோட்டி பயலா நினச்சு தான். எம் புள்ளைக்கு இப்படி ஒரு பாவம் பண்ணிய” என்று ஆவேசமாக கேட்டவன்.
“ உனக்கு பொறத்தத தவர என்னவே பண்ணுச்சு எம் புள்ள, அது என்ன களி மண்ண நமக்கு பிடிச்ச மாதிரி செஞ்சு வைக்க, பச்ச மண்ணு இப்படி பண்ணிடியே” கண்களில் நீர் ஒழுக ஆவேசமாக பேசியவனின் வார்த்தையில் நெஞ்சில் கை வைத்து அரண்டு பார்த்தாள் தாமரை.
“குழந்தைக்க” என்ன குழந்தைக்கு, என்ன ஆச்சு? என்று முழித்தவள். பின்னாடி வந்த அரசியின் கைகளில் இருந்த பவியின் நிலை கண்டு அதிர்ந்து போனாள்
“ஐயோ, பவி என்ன இப்படி?” என பதறி தூக்க வந்த தாமரையை தட்டி விட்ட கொடி, “ திமிர் புடிச்ச கழுத, என் பேத்திய கொள்ள பார்த்துருக்க! , கிட்ட வந்த கைய வெட்டிடுவென்” என்று கத்தியவர், “ வேலு , தாமதம் ஆகுது, புள்ளைக்கு முடியல ஆஸ்பத்திரி போவோம்” என்க.
வேகமாக பவியை தூக்கி கொண்டு வெளியே சென்றான். பின்னாடி வந்த தாமரையை தடுத்த அரசி, “ நீயி எங்கடி வார, உன் பெட்டிய கட்டி நில்லு, போதும் உன் பவுசு, உன்னிய அத்து விட்டு தான் மறு வேலை, என் பேத்திக்கு நீயி பண்ண காரியத்துக்கு பஞ்சாயத்து கூட்டி சந்தி சிரிக்க வைக்கல நான் ராஜதுரை மவ இல்லாவே” என்று கொடி ஆவேசமாக பேசி செல்ல ,
கணவனின் கோபம், மாமியாரின் ஆவேசம், குழந்தையின் நிலை என்று மாறி மாறி அவளை கலங்கடிக்க, நிலை குலைந்து போனவள் மடிந்து அமர்ந்து அழுதாள். குழந்தைக்கு ஏதேனும் நேர வேண்டும் என்று அவள் எதுவும் செய்ய வில்லையே.
நேரம் ஆக ஆக மனதில் பயம் கவ்வியது. குழந்தையுடன் எங்கு சென்றார்கள் என்றும் தெரியவில்லை. குழந்தைக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை. வேலுக்கு போன் செய்யவும் பயமாக இருந்தது. தன் கண் பார்த்து நடக்கும் கணவன், உள்ளங்கையில் வைத்து தாங்குபவன் அவனின் கோபத்தை சம்பாதித்து கொண்டோமே! ஆற்றாமையாக இருந்தது.
மற்ற விடுகளில் பின் கட்டில் இருப்பவர்கள் எல்லாம் பார்த்து கொண்டு தான் இருந்தனர். வேலு அடித்ததையும், தாமரை அழுததையும்.
தாமரை தான் எண்ண சுழலில் சிக்கி கொண்டாள். குழந்தைக்கு ஏதோ நேர்வது போலவும், பஞ்சாயத்தில் நிற்பது போலவும், ஊர் மக்கள் தன்னை சாடவும், அடிக்கவும் செய்வது போல ஏதேதோ எண்ணம். தான் ஒரு நல்ல தாய் இல்லையோ, தன்னால் தான் குழந்தைக்கு இந்த நிலையோ என்று பயந்த மனது எதுவோ நினைத்து துடிக்க,
படியில் சோர்ந்து அமர்ந்து அழுதவள் , பக்கத்தில் பார்க்க பூந்தோட்டதிற்க்கு வைத்திருந்த பூச்சி கொள்ளி மருந்து படவும், தன் வாழ்வை முடித்து கொள்ளவே நினைத்து விட்டாள். தன்னால் குழந்தைக்கு ஏதேனும் ஆகி, பிள்ளையை கொன்ற தாயாக தான் வாழ்வதா! என்ற எண்ணம் தோன்ற நிமிர்ந்து முடிவு எடுத்து விட்டாள்.
இங்கு, மருத்துவமனையில் குழந்தைக்கு சீரியஸ் என்று சொல்லி வேற ஒரு குழந்தை மருத்துவமனைக்கு வெளியூர் அனுப்பி வைத்தனர். வேலு முற்றாக தளர்ந்து விட்டான். இங்கு வரும் வரையும் நிலைமை வீரியம் தெரிய வில்லை. தற்போது கையறு நிலை தான். பத்து மாதமே ஆன குழந்தையின் கண்ணீரும், அழுகை சத்தமும், வெளியே நின்றிருந்த இருவரையும் நடுங்க செய்தது.
ஆம்புலன்சில் குழந்தையை கொண்டு செல்லும் போது தான் வேலு பார்த்தான் மகள் முகம். ஒரு பக்க முகத்தில் கண்ணு மட்டும் தெரிய, மற்றைய பக்கம் முழுவதும் காயத்திற்கு பஞ்சு வைத்து கட்டியிருப்பார்கள் போல. கைகளில் உறை அணிந்து, முகமூடி போட்ட இருவர் சர்வ ஜாக்கிருதையாக குழந்தையை கொண்டு சென்றனர்.
தொற்று ஏற்படும் என்று வேலு, கொடி இருவரையும் ஆம்புலன்சில் ஏற்ற வில்லை. ஆம்புலன்ஸ் சத்தமும், குழந்தையின் நிலையும் பயத்தை உண்டாக்க, தனியாக கார் ஓட்ட முடியவில்ல வேலுக்கு. வாடகை காரிலே பின் தொடர்ந்து சென்றனர் இருக்கும் தெய்வங்களை எல்லாம் வேண்டி கொண்டு.
வீட்டில் என்ன சண்டை என்று கேட்க வந்த அக்கம் பக்கத்தினர். மயங்கி கிடந்த தாமரையும் பக்கத்தில் இருந்த மருந்து பாட்டிலையும் கண்டவர்கள் பதறி துடித்து, வீட்டில் ஒருவரும் இல்லாததால் தாமரையின் தந்தைக்கு சொல்ல, அலறி அடித்து வந்தனர் நல்ல சிவம், அவர் மனைவி பூமணி, மகன் கண்ணன். அவர்களுக்கும் நடந்தவை ஒன்றும் தெரிய வில்லை, முதலில் தாமரையை காப்பாற்ற எண்ணியே மருத்துவமனை தூக்கி சென்றனர்.
“ தற்கொலை கேஸ் முதல்ல போலீஸ் கிட்ட சொல்லுங்க, பல்ஸ் லோவாகுது இங்கு வச்சு பார்க்க முடியாது. மதுரை பெரியாஸ்பித்திரிக்கு கொண்டு போங்க” என்று அனுப்பி விட, மீண்டும் தாமரையை தூக்கி கொண்டு மதுரை சென்றனர். அங்கு, ஏகப்பட்ட கேள்விகள், ஃபார்மாலிடிஸ் முடித்து, சிகிச்சை தொடங்க, வந்து விட்டனர் போலீஸ்.
என்ன? ஏது? என்று விசாரிக்க ஒன்றும் தெரியவில்லை நல்ல சிவதிற்க்கு, கூட வந்த சொந்தங்களை விசாரிக்க, அப்போதுதான் தெரிந்தது தாமரையின் குடும்பாத்தாற்க்கு, யாரும் அருகில் நின்று பேசுவதை கவனிக்க வில்லையே, தூரம் நின்று பார்த்த காட்சியை மட்டுமே கூறினார்.
வேலு இரு முறை அடித்ததையும், அரசி பிடித்து தள்ளி விட்டதும், நீண்ட நேரம் அழுத தாமரை உள்ளே சென்று விட்டதையும் மட்டுமே கூறினார் பூமணிக்கு ஆவேசம் பொங்கியது. தன் மகளை எவ்வாறு அடிக்கலாம், தவறு செய்தாலும் தங்களிடம் சொல்லிருக்களாமே!, கை நீட்டி அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது.
நல்ல சிவம், “ ஏலே கண்ணா! உம் மாமனுக்கு போன் போடுவே! என்னன்னு கேட்போம்”…
கண்ணன் வேலுக்கு போன் செய்து, “ மாமா , அக்கா இங்க!”… என்று ஆரம்பிக்கும் முன்னாடியே,
“அவளை பத்தி பேசாதே! எனக்கும், அவளுக்கும் இனி ஒன்னும் இல்லை, என் புள்ளைய மட்டும் விட்டுட சொல்லு!” என்று கோபமாக சொல்லி போனை வைக்க, அதை அச்சுபிசகாமல் ஒப்பித்து விட்டான் கண்ணன்.
இங்கு, குழந்தைக்கு ஊசி போட நரம்பு கிடைக்காமல் போக, எட்டு தடவை குத்தி எடுத்து விட்டனர். கை, கால்களை உதைத்து அழும் குழந்தையை எங்கனம் கட்டுபடுத்த , மேலும் புது முகங்களுடன் ஒட்டாமல் குழந்தை பயந்து கத்த, பின் வேலுவை தான் வர சொல்லி பிடித்து கொள்ள சொல்லினர். வேலுக்கு தான் நிமிடம் கொடுமையானதாக இருந்தது. ஒரு வழியாக வேலு அழுத்தி பிடிக்க காலின் கட்டை விரலில் நரம்பு எடுத்தே ஊசி போட்டனர்.
அன்னம், தண்ணி ஏதும் இல்லாமல் குழந்தையே கதி என்று கிடந்தார்கள் வேலுவும்,அரசியும். குளுக்கோஸ் ஏற்றுவதால் சிறிது அசைந்தாலும் போச்சு என்று காவல் காத்தனர். குழந்தை முகத்தின் காயமும் மாறுதல் இல்லாமல் இருக்க, நினைக்க நினைக்க தாமரை மேல் கோபம் பொங்கியது. அப்படி என்ன நிற வேறுபாடு தாமரைக்கு, நீ பெத்த குழந்தை தானே, உன் உதிரத்தில் வந்த மகளுக்கு அநியாயம் செய்து விட்டாயே! மனதில் பொருமலுடன் வேலு இருக்கையில் தான், கண்ணன் போன் செய்ய கோபத்தை வார்த்தைகளாக இறக்கி வைத்து விட்டான்.
நல்ல சிவமும் கோபத்தில் கொதித்து கொண்டு தான் இருந்தார். உயிருக்கு உயிரான மகள் இன்று உயிருக்கு போராடும் நிலை கண்டு, தாங்கள் இங்கு துடித்து கொண்டு இருக்க, எங்கயோ போய் ஒளிந்து கொண்டு என்ன பேச்சு பேசுகிறான், வரட்டும் அவனை ஒரு கை பார்க்காமல் விட போவதில்லை. எப்படியாகிலும் வந்து தானே ஆகவேண்டும்.
பூமணி மகளுடன் தான் இருந்தார். வாயிலும், மூக்கிலும் சிறு குழாய் விட்டு சுத்தம் செய்து மருந்தை வெளியே எடுத்தனர். கொடுமை தான் தற்கொலை முயற்சியை விட, மீண்டு வர போராடுவது தான் கஷ்டம். மகளின் அவஸ்த்தை கண்டு நிற்காமல் நீர் பெருகியது அவருக்கு.
மருத்துவர்கள் முன்று நாள் அவகாசம் கொடுத்து இருக்க, நிலமை என்னவென தெரியாமல் பதறிய சிவம். தனக்கு தெரிந்த ஊழியர் முகம் ரகசியமாக விசாரிக்க, “ சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, கை மீருன நிலை தான், வெறும் வயித்துல குடிச்சுருக்காங்க குடல்ல ஒட்டி இருக்கு, வெளிய வராது சிரமம் தான். எதுக்கும் தயாராகவே இருங்க” என்று சொல்லி செல்ல,
அப்படி ஒரு அரட்டலும், கதறலுமாக பூமணி கத்தி அழுக, சிவத்திற்க்கும் தாங்க முடியவில்லையே கண்கள் கலங்க இறுகி நின்றார். சொந்த பந்தங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வர, அவரவர் வாய் தான் பேசியது. விவரம் தெரிந்து தான் வேலு ஓடி ஒளிந்து விட்டதாக கூட பேசி கொண்டனர்.
சுழல் என்னவென தெரியாமல் வேலும், நடந்தது என்னவென அறியாமல் நல்ல சிவமும் கோபத்தில் இருக்க. தாமரையை காண வந்து விட்டனர் போலீஸ். பெண்ணும் சீரியஸ் கண்டிசனில் இருக்க, கேஸ் உறுதி பட்டது. சாவின் விளிம்பில் நிற்கும் தன் மகளுக்கு நியாயம் செய்ய, வேலுவின் மீது மனைவியை அடித்து துன்புறுத்துதல், தற்கொலை தூண்டல் என்று அவன் மீது வழக்கு பதிவு செய்தார் நல்ல சிவம்.
ஒரு நாள் முழுவதும் காக்க செய்த பின்பே, குழந்தை கண் விழித்தது. அதன் பிறகு தான், இருவருக்கும் மூச்சே வந்தது. கொஞ்சம் ஆசுவாச படுத்தி அமர, சோர்ந்து கிடந்த தாயின் முகம் கண்டு, அவருக்கு ஏதேனும் வாங்கி வர சென்றான் வேலு. பின்பு தாயை கவனித்து, தன் தேவையை முடித்து அனைத்து வைக்கப்பட்டிருந்த போனை உயிர்ப்பிக்க, அதில் ஏகப்பட்ட கால் இருக்க, ஏதேனும் அவசரமோ என்று பதறி போய் மணி மாறனுக்கு போன் பண்ண. அந்த பக்கம் சொல்ல பட்ட செய்தியில் உறைந்து போய் நின்று விட்டான் வேலு.
தாமரை இப்படி ஒரு காரியத்தை செய்வாள் என்று கனவிலும் எண்ண வில்லை வேலு. அவளிடம் கோபத்தை, வெறுப்பை காட்டினால், திரும்ப அதே அளவு ஏன்? அதை விட அதிகமாக வெளிப்படுத்தி வறுத்துவாளே தவிர என்றும் தன்னை காயப்படுத்தி கொள்ள மாட்டாள். அவனுக்கு பயத்திலும், அதிர்ச்சியிலும் கை, கால் நடுங்கியதே தவிர என்ன செய்ய வேண்டும் என்று ஒன்றும் தோன்ற வில்லை. சோர்ந்து போய் நிற்கும் நேரமும் இதுவல்லவே! அங்கு நிலவரமும் சரியாக பிடிபடவில்லை. தாயிடம் குழந்தையை பார்த்து கொள்ள சொல்லி, முக்கிய வேலை இருப்பதால் போவதாகவும், பொழுது சாய்வதற்க்குள் வந்து விடுவதாகவும் உறுதியளித்து தாமரையை காண சென்று விட்டான்.
குழந்தை நிலை கண்ட பின்னும், முக்கிய வேலை என்று வேலு செல்வதானால், நிலமை பிரிந்து அரசியும் குழந்தை அருகில் இருந்து கொண்டார். தாமரை நிலை கவலைக்கிடமாக தான் இருந்தது. முதல் நாள் முழுவதும் வாந்தியிலே கழிய, மறுநாள் கொஞ்சம் ஓய்வாக இருந்தால் பெண். அதினாலே சற்று தெம்பாக இருந்தனர் குடும்பத்தினர். ஆனால், காலை பதினோரு மணியளவில் கட்டுப்பாடு இன்றி நீர் இறங்க, மீண்டும் அபாய கட்டத்திற்கு சென்று விட்டாள் தாமரை.
உயிரை கையில் பிடித்து கொண்டு, வேலு ஓடி வந்தான். அவனை பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. தலை எல்லாம் கலைந்து, முகம் வாடி இருண்டு, நாள் முழுவதும் உணவு உண்ணாமல் காலை அருந்திய காபியோடு அரக்க, பறக்க ஓடி வந்தான்.
இருந்த சொந்தம் எல்லாம் அவனை சூழ்ந்து, குடைய யாரிடமும் பதில் பேசாமல் தன் மாமாவை நோக்கி போனான். மகளின் நிலையில் இறுகி நின்ற சிவம், அரவம் உணர்ந்து திரும்பி பார்க்க வேலுதான். கோபம் கட்டி கடங்காமல் பெருக, மாமா என்று வேலு அழைக்கும் முன்னே, அவனை அடித்து துவம்சம் செய்தார் சிவம். யார் தடுத்தும் ஒன்றும் முடியவில்லை. உடலளவிலும், மனதளவிலும் சோர்ந்து கிடந்த வேலுவால் எதிர்க்க திராணி இல்லை.
மணிமாறன் தான் போராடி வேலுவை கை பிடித்து இழுத்து வர, மற்றவர்கள் சிவத்தை அடக்கினார். கண்ணனும் காவல் துறைக்கு தகவல் சொல்லிருக்க, வந்து விட்டனர் வேலுவை அழைத்து செல்ல. தாமரையின் நிலையும் உறுதி இல்லாமல் இருக்க, வேலுக்கு வெளி வரும் மார்க்கம் இல்லை.
தெரியாத ஊரில் கை குழந்தையோடு அரசி இருக்க, நிலை அறியாமல் நிதானம் இன்றி தாமரை கிடக்க, மனைவி, குழந்தை பற்றி தகவல் ஏதும் அறியாமல் இருவரின் நிலை எண்ணி குமைந்து போன வேலு, ஜெயில் கம்பிகளுக்கு பின் நின்றான். விசயம் அறிந்து பெரியாத்தா பதறி கொண்டு ஓடி வந்தார்.