“எல்லாம் உங்களால. எனக்கு தான முதல்ல இவளை பேசினீங்க. எப்படி மிஸ் பண்ணுனீங்க?…” என்றவன் சட்டென்று ஆவேசம் கொண்டதை போல நிதீஷ் அவர் மீது பாய,
“நிதீஷ்…” என்றார் அவர் அதிர்ந்து.
வீட்டிலிருந்து கிளம்புகையில் எத்தனை தன்மையுடன் தானும் வந்து வாழ்த்திவிட்டு வருகிறேன் என உடன் வந்தான் என்று அதிர்ச்சியுடன் பார்த்தார்.
“நதி லிசன்…” என்று நிதீஷ் அவளை பார்க்க,
“ஸ்டே அவே நிதீஷ்…” என உறுமல் குரல் வந்த திசையில் திரும்பினார்கள் அனைவரும்.
“இப்ப என்னோட மிஸஸ் அவங்க. நீ மிஸ் பண்ணினதை பேசி அவ இவன்னு மரியாதை இல்லாம பேசின, நாக்கை இழுத்துவச்சு அறுத்துருவேன் ராஸ்கல்…” என்றான் நிதீஷின் அருகில் வந்த குருஆர்யன்.
அவனை பார்த்ததும் ஒருவித பயம் என்றாலும் பொங்கிக்கொண்டு வந்தது நிதீஷிற்கு.
கண்ணிமைக்கும் நேரத்தில் அவனின் வாயில் வேகமாய் குத்துவிட்டிருந்தான் குருஆர்யன்.
“ஆரி…” என்று தமயந்தியும், கீதாவும் அவனின் கையை பிடிக்க நனியிதழ் அதிர்ந்து போய் பார்த்தாள் கணவனை.
அவன் முகத்தில் அவ்வளவு ரௌத்திரம் ஆர்ப்பரித்தது. அவனின் கோபம் பார்த்தவள் தான். இந்தளவு இல்லை.
“சொல்லு. என்ன சொன்ன?…” என்ற குருஆர்யன் தன்னை உலுக்கிக்கொண்டு நிதீஷை பார்த்து மீண்டும் ஒரு அறை விட்டான்.
“ஆரி நான் கூட்டிட்டு போயிடறேன். இவன் இப்படியெல்லாம் பேசுவான்னு நினைக்கலை நான்…” என்று தணிகாச்சலம் தடுக்க பார்க்க நிதீஷ் பார்வை மீண்டும் நனியிதழை அடைந்தது.
“சொல்லிட்டே இருக்கேன். நீ என் முன்னாடியே என் வொய்பை பார்க்கிற?…” என்று மீண்டும் ஒரு அறை விட்டான் நிதீஷை.
“பார்ப்பியா? பார்ப்பியாடா?…” என்று மீண்டும் மீண்டும் அடிக்க,
“ஆரி…” என்று தணிகாச்சலம் அலற, முதலில் வீம்புக்கென்றே பார்த்த நிதீஷ் ஆர்யாவின் தாக்குதலில் ஒருகட்டத்தில் பயந்துபோனான்.
“ஆரி, என்ன இப்படி அடிச்சிருக்க?…” என்று விஷ்ணுவுக்கே தாங்கமுடியவில்லை.
“அடிக்காம. எவ்வளோ தைரியம் இருந்தா என் முன்னாடியே பேசுவான். என் வொய்ப்கிட்ட எப்படி பேசினான்னு ஞாபகப்படுத்தறானாம் உங்க மச்சான். கேளுங்க உங்கப்பாவும் இங்க தான இருக்காங்க…” என்று சொல்லியவன் மீண்டும் நிதீஷை அடிக்க பாய்ந்தவன் விஷ்ணுவின் பிடியில் நின்றான்.
“இவனை இப்படியே ஊருக்கு பேக் பண்ணிருங்க. இல்லைன்னா உயிர் மட்டும் தான் மிஞ்சும் இவனுக்கு…” என்று சொல்ல, அங்கே நிமிர கூட முடியாமல் அமர்ந்திருந்தான் நிதீஷ்.
“இவ்வளோ அராஜகம் பன்றான். நீ ஏதாவது கேட்கிறியா விஷ்ணு?…” என்றார் தணிகாச்சலம்.
“வெக்கமாயில்ல உங்களுக்கு? உங்ககிட்ட முன்னாடி பேசும் போதே நீங்க அடிச்சு பல்லை கழட்டிருந்தா இவன் இவ்வளோ தூரம் துணிஞ்சு நிப்பானா?…” என்றான் கொந்தளித்து குருஆர்யன்.
“ஆரி கூல்டவுன்…” என்ற பரத்,
“கீதா போய் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் கொண்டுவா…” என்றான் மனைவியிடம்.
“இவன் பேசினதுக்கு அது வேறையா? பார்க்கிற பார்வையும் அசிங்கம். பேச்சும் அருவருப்பு…” என்று மறுத்துவிட்டாள்.
விஷ்ணுவிற்கு அத்தனை அவமானமாக இருந்தது. மது எதுவும் பேசவில்லை. வெறுத்து போய் நின்றிருந்தாள்.
“அப்பறம் என்ன சொன்னீங்க மிஸ்டர் தணிகாச்சலம், அராஜகமா? உன் தங்கச்சி பிள்ளை யுஎஸ்ல நித்தைக்கும் ஒருத்தியோட ஊர் மேய்வான். வீட்டுக்கு மட்டும் குத்துவிளக்கா ஒரு பொண்ணு வேணும்ன்னு கேட்பான். இல்லைன்னா தப்பா பேசி அவளை டார்ச்சர் பண்ணுவான். அது தப்பில்லை. நான் கண்டிச்சது தப்பா? வெட்டி போட்டிருக்கனும் அவனை…” என்றவனின் ஆக்ரோஷத்தில் அனைவருமே வாயடைத்து நின்றனர்.
ஏன் எதற்கு இந்த நிதானமற்ற கோபம் என்று யாருக்கும் புரியவில்லை. அந்தளவிற்கு ஆர்யனின் ஆவேசம் அவர்களை உலுக்கிவிட்டது.
“இவனை பார்த்தா இதை தான் நான் செய்வேன்னு இவனை வரவிடாம பண்ணேன். ஆனா மீறி வந்து என்கிட்ட வாங்கிட்டான்…” என்று சொல்ல அனைவருக்குமே அதிர்ச்சி தான் நிதீஷ் பற்றி அறிந்துகொண்டதில்.
“அவன் ஆசைப்பட்டது தப்பு தான். அதுக்காக அவன் ஒழுக்கத்தை தப்பா சொல்லாத ஆரி. அவனை பத்தி எனக்கு நல்லா தெரியும்…” என்று தணிகாச்சலம் நம்பமுடியாமல் சொல்ல,
“ஓஹ், எவிடென்ஸ் வேணுமா? காமிச்சிடுவோமே?…” என்று சொல்லியவன் நிதீஷை பார்த்து,
“காமிக்கவா?…” என்றான்.
தலைகுனிந்து அமர்ந்திருந்த நிதீஷ் எதற்கும் பதில் சொல்லவில்லை. அவனின் காயங்களுக்கு மருந்து போட்ட பரத்தின் கைகள் கூட ஒருகணம் நின்றுவிட்டது.
“சரிப்பா தப்பே பண்ணியிருக்கட்டும் அவன். அதுக்காக என்கிட்ட சொல்லிருக்கனும். நீ கை நீட்டுவியா? இப்படி நாங்க தடுத்தும் சாகும்படி அடிக்கிற…” என்று கண்கலங்கி அவர் சொல்ல,
“இப்பவும் சொல்லியிருக்கமாட்டேன். ஆனா இந்த நாய் திரும்ப எதுவும் செய்யுமே?…” என்றவன்,
“இனி இவன் நினைப்புல கூட தப்பிருக்க கூடாது. இருந்தா சங்கை கிழிச்சிருவேன். புரியுதா? உசுரோட இருக்கனும்னா இங்க இருக்காத. ப்ரீ அட்வைஸ்…” என்று சொல்லி,
“இவனை அள்ளிட்டு முதல்ல புறப்படுங்க. என் அக்காவோட மாமனாரா, எங்க வீட்டோட சம்பந்தியா நீங்க வரலாம். அதுவுமே விஷ்ணு மாமாவுக்காக மட்டும் தான். தூக்கிட்டு போங்க இந்த குப்பையை…” என்ற குருஆர்யன் தன் வலது கையை உதறிக்கொண்டான்.
“போதுமாப்பா?…” என தணிகாச்சலத்தை பார்த்து சொல்லிய விஷ்ணு,
“நீயெல்லாம் என்ன ஜென்மம்டா….” என்று நிதீஷை காறி உமிழ்ந்துவிட்டான்.
தணிகாச்சலம் அவமானத்துடன் அங்கிருந்து வெளியேறினார் தங்கை மகனை அழைத்துக்கொண்டு.
அவர்கள் கிளம்பி சென்றதும் விஷ்ணு தளர்ந்து அமர மதுவிற்கு அவனை எப்படி சமாதானம் செய்வதென்றே தெரியவில்லை.
“கொஞ்சநேரம் விடுக்கா. அப்பறம் பேசு…” என்று சொல்லிவிட்டு, மனைவியை தேடி மாடிக்கு செல்ல அங்கே கீதா நனியிதழிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“நீங்க கீழ போங்க. நான் பார்த்துக்கறேன்…” என்று குருஆர்யன் சொல்லவும் கீதாவும் வெளியேற, சோபாவில் அமர்ந்திருந்த மனைவியை பார்த்தபடி குளியலறை சென்று குளித்துவிட்டு வந்தான்.
“ஊஃப்…” என்ற ஆசுவாச பெருமூச்சுடன் அன்றைக்கு போல அவளின் மடி சாய்ந்தவன்,
“ஹீட்டட் மொமென்ட். ப்ளீஸ் இதழ்…” என்று அவளின் இடையை கட்டிக்கொண்டு வயிற்றில் முகம் புதைத்து,
“ஹேய் பிஸியோ, டூ இட்…” என்றான் அவளின் கரத்தை அடுத்து தன் கேசத்தில் நுழைத்து.
சில நொடிகள் அவனின் தலையை கோதிவிட இருவருக்குள்ளும் மௌனமாய் சில மணித்துளிகள் பூக்களாய் உதிர்ந்தது.
“அவுச்…” என்று கையை அவன் லேசாய் உதற அதனை பிடித்து பார்த்தாள் நனியிதழ்.
அவனின் புறங்கையின் தோல் லேசாய் உரிந்திருந்தது. நிதீஷை அடித்ததில் அவன் பல் பட்டு தோல் காயம் கொண்டிருக்க,
“கை வலிக்குதா?…” என்றாள் அதனை ஊதிவிட்டு.
“பார்த்தா எப்படி தெரியுது?…” என முறைப்புடன் கேட்க,
“அடிச்ச கைப்புள்ளைக்கே இப்படின்னா?…” என்று அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள் நனியிதழ்.
எப்படி ஒரு சூழ்நிலை கீழே? இங்கே அவளின் சஞ்சலமற்ற இந்த சிரிப்பு குருஆர்யனின் மனதை குளிர்வித்தது.
“வலிக்குதான்னு கேட்டுட்டு கிண்டலா உனக்கு? வலிச்சா மருந்து போடனும். நீ என்னை ஓட்டற…” என்றான் அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவனாக.
“சரி எழுந்திரிங்க. போட்டுடலாம்…” என்று எழுந்துகொள்ள பார்க்க,