நாதனின் தோய்ந்து அமர்ந்திருக்கும் தோற்றத்தைகண்ட எழிலுக்கு மனம் தாளவில்லை.., அலர் கூறியது போல ஏற்கனவே மைல்ட் கார்டியாக் அரெஸ்ட்டில் இருந்து மீண்டிருக்கும் நாதனின் உடல்நிலை எவ்வாறு இன்றைய சூழலை கடக்கும் என்ற கேள்வியையே அவன் மனமும் தொடுத்துகொண்டிருக்க அங்கே வந்த கதிர், “என்ன ஆச்சு மாமா..? ஏதாவது பிரச்சனையா.. அப்பா எப்படி இருக்காரு..?” என்று கேட்க,
“ஒண்ணுமில்லை நல்லா இருக்காருடா வழக்கமா எடுக்கிறது மறந்துட்டாராம் அதான் எடுத்துட்டு வர சொன்னேன்” என்றவன் அவனிடம் இருந்து மாத்திரைகளை பெற்றுவந்து நாதனிடம் கொடுக்க, யார், என்ன கொடுத்தார்கள்.. என்பதை கூட உணர முடியாமல் அமர்ந்திருந்தவர் தன் போக்கில் மாத்திரைகளை விழுங்கினார்.
வெளியில் நிர்மாலமாய் அவர் முகம் தோற்றம் அளித்தாலும் மனம் எத்தகைய ஏமாற்றமும் வலியும் கொண்டிருக்கும் என்பதை ஓரளவு நன்றாகவே கணித்திருந்தான். அதிலும் பாவம் ஒருபுறம் பழி ஒருபுறமாகி போயிருப்பதை கண்டவனின் கோபம் மொத்தமும் இதற்கெல்லாம் காரணமான பாவத்தின் மறுஉருவமான பிரகாசத்திடம் திரும்பியது,
‘யோவ் மனுஷனா நீயெல்லாம் எந்த அப்பனும் செய்யாத, செய்யவே முடியாத காரியத்தை செஞ்சிருக்ககொஞ்சம்கூட உனக்கு கூசலை…? உன் பொண்ணு தானே.. அவ அவளை இத்தனை தூரம் வளர விட்டு இந்த கோலத்துல இத்தனை பேர் பார்க்க கொண்டுவந்து நிறுத்தியிருக்கியே என்னதான்டா வேணும் உனக்கு ? ஏன் செய்ததெல்லாம் போதலையா இன்னும் யார் உயிரை எடுக்க வந்திருக்க ?’
‘மாமா என்ன பேசுற..?’
‘யோவ் கேட்கிறது காதுல விழலை வாயை திற கீர்த்தி பத்தின விஷயத்தை யாருக்கும் சொல்லாம இத்தனை நாள் எங்க போயிருந்த..? இன்னைக்கு எதுக்கு இவளை ஊர் பார்க்க கொண்டு வந்து நிறுத்தின ? ச்சை நீ கேவலமானவன்னு தெரியும் ஆனா இந்த அளவுக்குன்னு தெரியாது” என்றவனின் முகத்தில் மிதமிஞ்சிய வெறுப்பு தாண்டவமாட அவன் விழியில் விழுந்தார் நாதன்.
“யோவ் இவர் என்னயா துரோகம் பண்ணாரு உனக்கு? தம்பின்னு உனக்காக உன் யோக்கியதை தெரிஞ்சும் வந்த மனுஷனைஎதுக்கு தேவையில்லாம இழுத்துவிட்டு அசிங்கபடுத்தின ? எனக்கு வர ஆத்திரத்துக்கு உன்னையெல்லாம் அப்படியே கண்டந்துண்டமா வெட்டி மண்ணோட மண்ணா பொதைக்கனும்னுதோணுது.. ஆனா உன்னை தொட்டு என்னை கரைபடுத்திக்க விரும்பலை” என்றவனுக்குமே அழுத்தம் தாளாமல் தலையை பிடித்துக்கொண்டு நாதனுக்கு மறுபுறம் அமர்ந்துவிட்டான்.
நடப்பதை கூர்மையாய் கவனித்து கொண்டிருந்த அலருக்குஓரளவுக்கு நிலவரம் புரிபட்டாலும் அதையும்மீறி பல கேள்விகள் பிறக்க மெல்ல நாதனை நெருங்கியவள், “என்னப்பாநடந்தது..? யாரு கீர்த்தியை மாமாகிட்ட கொண்டு விட்டது..? எதுக்காக விட்டீங்க ? இது எப்போ நடந்தது..? ரெண்டு பேரும் லவ் பண்ணின பிறகும் கல்யாணம் பண்ணாம ஏன்இப்படி பண்ணினீங்க..?” என்று அடுக்கடுக்காய் கேள்விகளை தொடுக்க உள்ளுக்குள் நொறுங்கி போயிருந்த நாதனால் ஒரு வெற்றுபார்வையை மட்டுமே அவளுக்கு பதிலாக அளிக்க முடிந்தது.
தம்பியை பற்றி நன்கு தெரிந்தே விலகியிருந்த நாதனை சில மாதங்களுக்கு முன் அவர் வீடுதேடி சென்ற பிரகாசம்அவர் பாதங்களை அழுத்தமாய்பிடித்துகொண்டு தன் பெண்ணை காப்பாற்றுமாறு வேண்டியவர் நடந்ததை கூறவும் நாதனுக்கு பழைய கசடுகள் பின்னுக்கு தள்ளப்பட அவர் நினைவில் கீர்த்தி மட்டுமே நிறைந்திருந்தாள்.
எப்படியேனும் அவளை மீட்டெடுக்க வேண்டும் என்ற நாதனின் எண்ணம் பெண்ணை பெற்ற ஒவ்வொரு தகப்பனுக்கும் உண்டான துடிப்புஅதை குறைகூற முடியாது ஆனால் மனைவி உட்பட உறவுகளை எல்லாம் பகைத்து தம்பி குடும்பத்தை காத்துவிட்டதாக நினைத்து கொண்டிருக்கும் மனிதருக்கு தம்பியும் அவன் மகளும் சேர்ந்து என்ன செய்ய முயல்கின்றனர் என்பதை கணிக்க முடியாமல் ஓய்ந்து போனார்.
******************************************
மறுபுறம் இருந்த சரனுக்குமே நாதனை கண்டு மனம் வெதும்பி தான் போனது.. பின்னே அவனை போலவே உச்சபட்ச அதிர்ச்சி கொண்டிருக்கும் மற்றொரு நபரின் நிலையை புரிந்து கொள்ள முடியாதவன் இல்லையே அவன்.. ஆனால் எங்கே அவன் அவர் முன் சென்றால் அவரின் நிலை இன்னமும் மோசமாகிவிட கூடுமோ என்றெண்ணி அவரிடம்செல்லதுடித்த கால்களை கட்டுபடுத்தி கொண்டான்.
ஆனால் அவர் இறுதியாக உதிர்த்த வார்த்தைகளிலேயே அவர் மனம் எத்தனை நொந்து போயிருக்கும் என்று அறிந்தவன் உள்ளம் துடிதுடித்து போக, ‘நீங்க முட்டாள் இல்லை மாமா..‘ என்று உள்ளுக்குள் ஆர்பரித்தது. ஆனால் இப்போது கீர்த்தி இருக்கும் நிலை அவள் தன்னை நிறுத்தியிருக்கும் சூழல் அனைத்தும் அவன்கூறும் வார்த்தைகளை நம்பவிடாமல் அவனுக்கு எதிராகவே திரும்பிவிட கூடும் என்பதை அறிந்தவன்விழிகளில் ஒருவித வலி பரவ மௌனமாய் சுவரில் சாய்ந்து நின்றான்.
ஆனால் அவன் பார்வை தன் எதிரே புரியாத புதிராய் நின்றிருந்தகீர்த்தியின் மீது அழுத்தமாய் ஊடுருவியிருந்தது, அதிலும் அவள் உடல் மொழியில் தென்பட்ட அசாத்திய தைரியமும் அவள் குரலில் இருந்த உறுதியும் விழிகளில் தெரிந்த தீவிரமும் சரணை அசைத்து தான் பார்த்தது. மனமோ மீண்டும் அவளுடனான அன்றைய நினைவுகளில் இருந்து மீளாது போக மீண்டும் ஒருமுறை அவளது தோற்றத்தை ஒப்பிட்டு பார்க்க தொடங்கியது.
முகம் வியர்வையில் குளித்திருக்க விழிகளில் மிரட்சி இன்னும் மீதமிருக்க கீர்த்தியின் கருவிழிகளோ அச்சத்தில் இங்கும் அங்கும் உருண்டோடிக்கொண்டிருந்தது… அதிலும் சரணின் சட்டையை நெஞ்சோடு இறுக பிடித்து கொண்டிருந்தவளுக்கு தன் இதயம் வழக்கத்திற்கு மாறாக அதிவேகமாக துடிப்பதை நன்றாகவே உணர முடிந்தது.
தொண்டையில் நீர்வற்றி போக மூச்சு விடவும் மறந்தவளாய் சரணுடன் அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்த இந்த மூன்று நிமிடங்களும் மூன்று யுகங்களாய் நீள கீர்த்திக்கோ நெருப்பின் மேல் அமர்ந்திருக்கும் நிலை தான்.
பின்னே சற்றுமுன் அனைத்தும் நிமிடங்களில் நிகழ்ந்திருக்க அவளை அங்கு மற்றவர்கள் முன் காட்சி பொருளாக்க விரும்பாமல் துரிதமாக சரண் இங்கு அழைத்து வந்திருப்பதை அவளது அறிவு உணர்த்தினாலும் அவள் இருந்த கோலம் அதிலும் அந்நிய ஆணுடன் தனித்து அவன் வீட்டிலேயே.., இது போதுமே அவள் அடிவயிறு பிசைய உள்ளுக்குள் இனம்புரியாத பயம் கவ்விக்கொள்ள அவள் மனமும் அதிவேகமாக அடித்துகொண்டது.
“எப்போதுஇங்கிருந்து செல்வோம்” என்ற கேள்வியையே மனம் முட்டி நின்றாலும் பதில் காண அவன் வேண்டுமே! என்று சரண் சென்று மறைந்த அறை கதவையே வெறித்திருந்தாள்.
தீபாவளிக்கு எப்போதுமே ஊருக்கு சென்றுவிடும் சரண் இப்போது முக்கியமான ப்ராஜெக்ட் எடுத்து செய்து கொண்டிருப்பதால் இம்முறை செல்லவில்லை ஆனால் மதியம் போல அழைப்பு வர அலுவலகத்திற்கு சென்றிருந்தவன் அப்போது தான் வளாகத்தினுள் நிகழ்ந்து கொண்டிருந்த வர்ண ஜாலங்களை கண்டவாறு குடியிருப்பு வளாகத்திருக்குள் நுழைந்தான்.
“இல்லைப்பா ஃபோன் பேசிட்டு எல்லாம் வண்டி ஓட்டலை.. அபார்ட்மெண்ட்க்கு வந்துட்டேன்வண்டியை நிறுத்தி இறங்கின அப்புறம் தான் உங்ககிட்ட பேசுறேன் கண்டிப்பா அடுத்த வாரம் வந்துடுறேன்பாஅம்மா கிட்ட கொடுங்க” என்றவன் அப்போது தான் அவன் கட்டிட வளாகத்தில் இருந்த மரத்திற்கு கீழ் ஒரு பெண் காதுகளை பொத்தியபடி நிற்பதையும் அவள் பின்னே வைக்கபட்டிருந்த மெழுகுவர்த்தியில் அவள் தாவணி பட்டு அதன் நுனியில் தீப்பிடிக்க தொடங்கியதையும் எதேர்ச்சையாக கண்டான்.
உடனே வேகமாக அவளை நோக்கி ஓடியவன் பாதி தூரம் கடக்கையில் தான் அவள் தாவணியில் தீ வேகமாக பரவுவதையும் இன்னும் அப்பெண் கண்களை திறவாமல் இருப்பதையும் கண்டவன் எதையும் யோசியாமல் தன் சட்டையை கழற்றியவாறு அவளிடம் விரைந்தவன் தீ முழுவதுமாக அவளை சுட்டெரிக்குமுன் காத்துவிட்டான்.
அவன் கவனம் முழுதும் அவள் தாவணியில் இருந்ததால் அதுவரை யாரோ ஒரு பெண் என்று தான் எண்ணி இருந்தான் ஆனால் தன் கைவளைவில் நடுக்கத்துடன் இருந்த கீர்த்தி பார்க்கவும் தான் அது மாலில் பார்த்த பெண் என்பதே அவன் புத்திக்கு புரிந்தது. கீர்த்தியை பற்றி ஏற்கனவே ஓரளவு கணித்திருந்தவன் அவளை யாருக்கும் காட்சி படுத்தவிரும்பாது அங்கிருந்த கட்டிட மறைவிற்கு நகர்த்தி சென்றவன் கீர்த்தியிடம் சில கேள்விகள் கேட்கஅதிர்ந்து போயிருந்தவளிடம் இருந்து எதற்கும் பதில் வராது போக வேறு வழியின்றி அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.
மின்விசிறியை சுழல விட்டவன் அவள் முன் ஒரு ஸ்டூலை இழுத்து போட்டு அமர்ந்து, “ஏங்க.. ஹலோ உங்களுக்கு ஒன்னும் ஆகலை யு ஆர் ஸேப், டோன்ட் வொரி” என்றபோதும் அவள் தலை உயர்த்தவில்லை. அவளை எப்படி அழைத்து பேசுவது என்று விழித்தவனுக்கு அவளின் குழந்தை முகம் நெஞ்சிலாட, மெல்லிய குரலில் “பாப்பு..‘ என்றழைக்கவுமே தலை உயர்த்தி பார்த்தவள் சட்டென மிரட்சியுடன் மீண்டும் குனிந்து கொண்டாள்.
“பாப்புப்ளீஸ் கண்ட்ரோல் யூர்செல்ப்டேக் அ டீப் ப்ரீத்… யூ வில் பீல் பெட்டர்” என்று சொல்லிக்கொண்டே போனவனுக்கு அப்போதும் அவள் தலை உயராது இருப்பதை காணவும் தான்அவள் முன் சட்டையின்றி அமர்ந்திருப்பது புரிய தன்னையே கடிந்துகொண்டவன், “ப்ச் ஒன் செகண்ட் வந்துடறேன்” என்று சட்டென தன் அறைக்குள் புகுந்துகொண்டான்.
உள்ளே சென்றவன் கையில் அகப்பட்ட டீஷர்ட்டை எடுத்து போடும் போது தான் சரண்யாவுக்கு அவன் வாங்கி வைத்திருந்த புத்தாடை நினைவு வர சட்டென அதை தேடி எடுத்துகொண்டு வெளியில் வந்தவனை கண்டதும் சிறு பதட்டத்துடன் எழுந்தவளிடம் “ஹே ரிலாக்ஸ்..” என்று கையோடு கொண்டு வந்திருந்த தண்ணீரை நீட்டி குடிங்க என்றான்.
அவள் குடித்து முடிக்கவும் “ஃபீலிங் பெட்டர், இப்போ பயம் போயிடுச்சா…” என்று வினவ சிறு தலைஅசைப்பு மட்டுமே கீர்த்தியிடம்.
ஆனால் பார்வை நொடிக்கொரு தரம் வாயிற்கதவை தொட்டு மீண்டது. அதைக்கண்டவன் அவள் மனதை படித்தது போல, “இந்தாங்க யாருக்கு கால் பண்ணணுமோ பண்ணுங்க” என்று கைபேசியை நீட்டி தன் வீட்டு எண்ணை அவளிடம் தெரிவித்து ஐந்தாம் தளம் என்பதையும் சேர்த்து சொன்னான்.
அவனிடமிருந்து கைபேசியை வாங்கவும் இன்னமும் தான் அவன் முன் இந்நிலையில் அமர்ந்திருக்கிறோமே என்ற எண்ணமே கீர்த்தியின் கண்ணீரை அதிகரிக்க பதட்டத்தில் எந்த எண்ணும் நினைவில் எழாமல் போனது பேதைக்கு.நெஞ்சம் விம்ம சில்லிட்ட கரங்களுடன் கைபேசியையே வெறித்து கொண்டிருந்தாள்.
“என்னாச்சு எதுக்கு அழறீங்க, உங்களுக்கு ஒண்ணுமில்லை” என்றவனும் அப்போதுதான் கீர்த்தி சட்டையை இறுக பிடித்திருப்பதை கண்டு.. வந்த உடன் அவளிடம் உடையை கொடுக்காத தன் மடத்தனத்தை எண்ணி தலையில் தட்டியவன் சுடிதாரை கொடுத்து இந்த ரூம்ல போய் சேன்ஜ் பண்ணிட்டு வாங்க நாம வெளியில போயி ரிலாக்ஸா பேசலாம்”என்று வாசல் கதவை அடைத்து விட்டு காரிடாரில் சென்று நின்றுகொண்டான்.
அவன் சென்றதும் தான் தடதடத்த நெஞ்சம் மெல்ல சமன்பட அவன் கொடுத்த உடையை பார்க்கவும் ஒருகணம் திக்கென்றானது கீர்த்திக்கு.
பின்னேபெண்கள் அதுவும் தன் வயதை ஒத்த பெண்கள் அணியும் சல்வார்அவனிடம் எப்படி..??? என்று யோசித்தவளுக்கு ஒருவேளை அவன் திருமணம் ஆனவனோ என்ற கேள்வி எழ.., இன்னதென்று பிரித்தறிய முடியா உணர்வு சட்டென்று அவளை கவ்விக்கொள்ள தான் இருக்கும் நிலையையும் மறந்து ஹால் முழுக்க எங்கேனும் அவன் திருமண புகைப்படம் தென்படுகிறதா என்று நான்கு புறங்களிலும் இண்டு இடுக்கு விடாமல் நன்கு தேடிப்பார்த்தாள்.
“ஏன் தேடுகிறோம் ? அவனுக்கு திருமணம் ஆகியிருந்தால் தனக்கு என்ன வந்தது” என்று ஒரு மனம் இடித்துரைத்தாலும் அவனுக்கு திருமணம் ஆகியிருக்ககூடாதே என்று மற்றொரு மனம் வேண்டத்தான் செய்தது.., அனைத்து ஆராய்ச்சிகளையும் முடித்தவள் இறுதியாக அறைக்குள் நுழைந்து உடை மாற்றி அங்கிருந்த கண்ணாடியில் அவள் தோற்றம் கண்டவள் உடனே முகம் கழுவி வர இப்போது நன்றாகவே தெளிந்திருந்தாள்.
இன்னமும் வாயில் கதவு சாற்றியிருப்பதை கண்டவளுக்கு ஏன் என்று புரியாத ஒரு நிறைவு மனம் முழுதும் பரவ அது முகத்திலும் இளம் முறுவலை தோற்றுவித்திருந்தது. கீர்த்தி கதவை தட்டவும் இரு நொடிகளில் கதவை திறந்தவன்,
“இப்ப ஓகே வா ..??” என்று கேட்டவாறு கதவை சாற்றி அவளுடன் காரிடாரில் வந்து நின்றான்.
‘ஹ்ம்ம்‘ என்றவள் அவனுடன் இணைந்து நடந்தவாறேமிக மென்மையான குரலில் “ஐ ஆம் ஸாரி” என்றாள்.
“என்னங்க இது ஹெல்ப் பண்ணினா எல்லாரும் தேங்க்ஸ் சொல்லுவாங்க நீங்க என்னன்னா வித்யாசமா ஸாரி சொல்றீங்க” என்று ஆச்சர்யமாக கேட்டவன்,
‘யாராவது நெருப்புன்னு தெரிஞ்சும் கிட்ட போவாங்களா? இட் வாஸ் ஜஸ்ட் ஆன் ஆக்ஸிடென்ட் ஃப்ரீயா விடுங்க உங்க வீட்ல உங்களை தேட போறாங்க ஃபர்ஸ்ட் கால் பண்ணி சொல்லுங்க.. அன்டைம்மா இருக்கு இல்ல நானே கொண்டு விட்டுடுவேன் இப்போ சரி வராது ஸோ ப்ளீஸ் கால் பண்ணுங்க” என்று கைபேசியை அவளிடம் நீட்டினான்.
இதுநாள் வரை நொடிப்பொழுது கிடைத்தாலும் பெண்களிடம் பேச்சை வளர்க்க விரும்பும் பெரும்பான்மையான ஆண்களை குறித்து அறிந்திருந்தவளுக்கு சரணின் நடவடிக்கைகளில் வியப்பே மேலோங்கியது. அவளை காப்பாற்றி அழைத்து வந்தவன் இத்தனை நேரம் அவளிடம் காத்த கண்ணியமும் அவளை நடத்திய விதமும் பேசியை அளித்து உடனே தகவல் தெரிவிக்குமாறு கூறியதாகட்டும் என்று அவனின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் கீர்த்தியை வசீகரித்திருந்தது.
கிடைத்த சந்தர்ப்பத்தில் அவளிடம் தன்னை அறிமுகபடுத்தி பேச்சை வளர்க்காமல் அவளின் தேவைகளை அறிந்து செயலாற்றி அவளின் பாதுகாப்பை முதன்மைபடுத்தி பார்த்து பார்த்து செய்பவனைகண்டவளின் மனம் மெல்ல அவளையும் அறியாமல் அவன் வசம் செல்ல ஆரம்பித்தது. அதிலும் இன்னமும் அவள் பெயரை அவன் கேட்டிருக்கவில்லை என்று எண்ணியபோதே அவன் தன்னை ‘பாப்பு‘ என்றழைத்ததை அவள் மனம் ஒரு ஓரத்தில் சேகரித்து கொண்டது.
இரு சந்திப்புகளில் இது சாத்தியமா என்று கேட்டால்மற்ற பொழுதாக இருப்பின் கீர்த்தி இல்லை என்று தான் வாதிட்டு இருப்பாள் ஆனால் சரணின் அணுகுமுறை இதோ அவளிடமே சாத்தியபட்டிருக்கிறதே..! அதிலும் அவளை இங்கிருந்து துரத்த முயல்பவனை கண்டு அவளுக்கு ஆச்சர்யமே.
அவள் முன் சொடக்கிட்ட சரண், “என்ன ஆச்சு..?? அமைதியாகிட்டீங்க டைம் ஆகுது கால் பண்ணுங்க..??”
இங்கு சரணுக்குமே கீர்த்தியை சந்தித்தது அவனே எதிர்பாராதது.., அதில் இன்பமாய் அதிர்ந்திருந்தாலும் தற்போதைய அவள் நிலையும் அச்சமும் அவளை பற்றி அறிந்து கொள்ளும் ஆவலை ஒத்திவைக்க செய்திருந்தது. அதிலும் தங்கள் வீட்டு பெண் எங்கிருக்கிறாள் என்று தெரியாமல் போனால் அக்குடும்பம் என்ன பாடுபடும் என்று புரிந்தவனுக்கு அவளை கேள்வி கேட்டு தாமதிக்க இயலவில்லை.
“தேவைப்படாது நானும் இதே காலனி தான்” என்று கைபேசியை திருப்பி அளித்தவள் “அது… அதுநான் ஸாரி கேட்டது அன்னைக்கு உங்ககிட்ட மரியாதை இல்லாம பேசினதுக்கு நீங்க சாதாரணமாதான் சொன்னீங்க ஆனா நான் தான் கொஞ்சம் ஹைப்பாகிட்டேன்ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க” என்றவளுக்கு இப்போது தயக்கம் நீங்கி சகஜமாக பேச்சு வந்திருந்தது.
“நோ நோ ஆக்சுவலி ஐ ஹாவ் டு பி ஸாரி! அன்னைக்கு அது உங்களுக்கு எவ்வளவு எம்பேரஸிங்கா இருந்திருக்கும்னு எனக்கு தெரியும்பட் ரியலி தட் வாஸ் நாட் மை இன்ட்டென்ஷன் ..”
‘இல்லை பரவாயில்லை நீங்க எதுக்கு ஸாரி சொல்லிக்கிட்டு…‘ என்றவளுக்கு அவனுடனான தனித்த இந்நொடிகளை எவ்வாறு கையாள்வது என்பது பிடிபடாதுபோக பார்வை நிலையின்றி அங்குமிங்கும் அலைபாய “அப்ப நான் கிளம்பட்டா” என்றாள்.
சரணுக்குமே அவளுடனான நொடிகள் இன்னும் நீளாதோ என்ற ஏக்கம் இருந்தாலும், “யாஹ் சூயர்.. நீங்களே போயிடுவிங்களா..?? இல்லை நான் கீழ வரை கூட வரட்டுமா..?” என்று கேட்க..,
இல்லை அதோ… என்று சற்று தொலைவில் இருந்த மற்றொரு கட்டிடத்தை சுட்டிகாட்டியவள் “அங்க தான் என் வீடுஎன் பிரெண்ட் கூட வந்தேன் அவகீழ தான் இருக்கா நானே போயிக்குவேன் தேங்க்ஸ்” என்றவளுக்கு சரி என்று தலையாட்டிவன் அங்கேயே நிற்கசில அடிகள் நடந்தவள் மீண்டும் திரும்பி பார்க்க அவன் பார்வை தன்னை தொடர்வதை கண்டவளின்மனம் வேகமாய் அடித்துக்கொள்ள சட்டென லிப்ட்டில் நுழைந்தாள்.
இதழ்களில் உறைந்த புன்னகையுடன் லிப்ட்டினுள் நின்றிருந்தவளுக்கு அப்போது தான் அவன் இறுதியாய் கேட்டது புரியவும், “ப்ச் லூசு இப்படியா இருப்ப அவங்களே கீழ விடவரேன்னு சொன்னங்க நீ ஏன்டி வேண்டாம்னு சொன்ன.., வந்திருந்தா அட்லீஸ்ட் பேரையாவது தெரிஞ்சு வச்சிருக்கலாம் இப்ப அதுவும் தெரியலை அவசரகுடுக்கை” என்று மனம் கழுவி ஊற்ற அதற்குபதிலளிக்க முடியாமல் திணறியவள் வீடு சென்று சேர்ந்தாள்.
அவள் பாதுகாப்பாக தன் குடியிருப்பு கட்டிடத்திற்குள் நுழைவதை உறுதி செய்தபின் தான் சரண் தன் வீட்டிற்குள் நுழைந்தான்.
நினைவில் இருந்து மீண்டவன் பார்வை கீர்த்தி மீது படிய அங்கு அவள் பார்வையின் தீவிரம் எதற்காக..? பழி உணர்வு யார் மீது..? யாருக்காக தன்னை தானே இந்நிலையில்.. என்று எதுவும் புரிபடாது போகமனஅயர்ச்சியில்விரக்தியாய் புன்னகைத்தவன்கண்ணில்அனைத்திற்கும் மகுடம் சூட்டும் விதமாய் அவளின் மேடிட்ட வயிறு தென்பட அவ்வளவு தான் அவள் மீதான சீற்றம் பன்மடங்காய் அதிகரிக்கஅவன் முகம் என்றும் இல்லாத ரௌத்திரம் கொண்டது.
மறுநொடியே “அடங்கமாட்டீங்களா நீங்க ரெண்டு பேரும்.. ஏய் இது என்னடி புது நாடகம்..?” என்று கர்ஜித்தவாறு கீர்த்தியின் கன்னத்தில் தன் கரத்தை இறக்க முயல அதற்குள் எழில் அவன் கரத்தை பிடிக்கவும் “மாமா” என்று அழுத்தமாக அலர் சரணுக்கும் கீர்த்திக்கும் இடையில் நின்றிருந்தாள்.
‘விடுங்கண்ணா..‘ என்று எழிலிடம் இருந்து தன் கரத்தை விடுவித்தவன், “நீ நகரு அமுலு இத்தனை நாள்ல இதுங்க திருந்தி இருக்கும்னு நெனச்சேன் ஆனா இப்போ புரியுது கொன்னே போட்டாலும் இதுங்க எல்லாம் திருந்த கூடிய ஆட்கள் இல்லை அதிலும் இவ இருக்காளே இவளை முதல்ல..” என்று பல்லை கடித்துக்கொண்டு கீர்த்தியை பார்க்க,
“நான் சரியாதான் பேசுறேன் ஆனா நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?உங்ககிட்ட இருந்து சத்தியமா நான் இதை எதிர்பார்க்கலை,எப்படி மாமா உங்களை காதலிச்ச பெண்கிட்ட கல்யாணத்துக்கு முன்னமே எல்லைமீற…” என்றவளுக்கு மேலும் தொடர முடியாமல் போக சுழிந்த முகத்தோடு அவனை பார்க்க அதில் சரண் உள்ளுக்குள் நொறுங்கி போனான்.
‘இவ்ளோ மாசம் எப்படி அவளை தனியா தவிக்கவிட்டீங்க ஒருவேளைஇதே நிலை எங்க யாருக்காவது வந்திருந்தாலும் இப்படிதான் உங்க மனசு கல்லா இருந்திருக்குமா..? இது போதாதுன்னு அவளையே அடிக்க போறீங்க, கீர்த்தியை அடிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு ? என்னதான் ரெண்டு பேர் சேர்ந்து தப்பு பண்ணினாலும் கடைசில பெண்ணுக்கு தான் எல்லா பழியும்இல்லையா மாமா ?” என்று கேட்டவளின் குரலில் அவன் மீதான நம்பிக்கை ஆட்டம் கண்டிருப்பதை அறிந்த சரண் உறைந்து போனான்.