வெளி வரண்டாவில் ஒரு மர பலகையில் படுக்க வைத்திருந்த அந்த நபர் மீது மாலைகள் போட பட்டு படுக்கை வைத்து இருக்க.. அவரை சுற்றி இருந்த உறவுகள் அவர் அவர் உறவு முறை சொல்லி.
.”ஒ….” என்று கதறி அழுது கொண்டு இருந்தனர்.. அந்த மனிதரின் தலை மாட்டில் ஒரு ஸ்டூல் போட்டு அதில் அமர வைத்திருந்த பெண் மணி மீது சடலத்தின் ஊற்றப்படும் நீரை தலை மாட்டில் அமர்ந்திருந்த அந்த பெண் மணி மீதும் தண்ணீரை வாறி வாறி இறைக்க..
காலையில் இருந்து அழுது ஒய்ந்து போய் இருந்த அந்த பெண்மணிக்கு அழுக கூட தெம்பில்லாது பாதி மயக்க நிலையில் அமர வைக்கப்பட்டு இருந்தார்..
கையில் தீ சட்டியை பிடித்து கொண்டு நின்று இருந்த சித்தார்த்.. ‘சித்திக்கு இது போல் எல்லாம் எந்த சடங்கும் செய்ய வேண்டாமே..’ என்று சொல்ல தான் நினைத்தான்.. ஆனால் சொல்லவில்லை… இது போல் தனித்து எந்த ஒரு முடிவும் எடுத்து அவனுக்கு பழக்கம் கிடையாது..
அது போல ஒரு சூழ்நிலையை இவனை சந்திக்க விட்டது கிடையாது.. இதோ இறந்து சடலம் என்று அனைவரும் சொல்கிறார்களே.. அவனின் சித்தப்பா சீதா ராமன் ..அந்த நிலையில் அவனை விட்டது கிடையாது…
இதே போல் கையில் தீ சட்டீயோடு முன்னும் நின்று இருக்கிறான்.. அவன் தந்தையான கலிய பெருமானுக்கு கொல்லி வைக்க. எட்டு வருடம் முன்.. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிந்து இரண்டு நாள் சென்று இருந்த சமயம் அது..
அவனின் தங்கை ஜெய சுதா பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிக் கொண்டு இருந்த சமயமும் அது.. வேலைக்கு சென்றவர். தனியாரில் தான் வேலை பார்த்து கொண்டு இருந்தார்.
ஆபிஸில் இருந்து சீதா ராமனுக்கு தான் போன் சென்றது. “உங்க அண்ணனுக்கு உடம்பு சரியில்ல ஆஸ்பிட்டலுக்கு அழைத்து செல்கிறோம்..வாங்க.” என்று மருத்துவமனை பெயரும் கூறினர்.
சித்தப்பா மத்திய அரசில் வேலையில் இருந்தார்.. .உடனே அண்ணனை சேர்த்த மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அவர் அங்கு பார்த்தது இறந்து கிடந்த பூத உடலை தான்..
.
விடுமுறை.. பொது தேர்வு படிப்பு படிப்பு என்று இருந்தவன்.. விடுமுறை என்பதால் கூட படித்த நண்பர்களுடன் அவன் வீட்டில் தான் செஸ் விளையாடி கொண்டு இருந்தான்..
சித்தப்பா வீட்டு தொலை பேசிக்கு அழைத்து விசயம் சொல்லாது.. “வா சித்து..” என்றதும்..
“சித்தியை அழைத்து கொண்டு வரனுமா சித்தா.” என்று தான் கேட்டான்..
அவர்களுடையது கூட்டு குடும்பம்.. சித்தி பத்மினி வீட்டை விட்டு வெளியில் தனியாக எங்கும் போக மாட்டார்.. அடுத்த தெருவில் இருக்கும் தையல் கடைக்கு கூட துணை தேவை அவருக்கு.. அது தன்னுடைய சின்ன மகளாக இருந்தாலும் சரி..
பண்டிகை என்று வரும் போது குடும்பத்திற்க்கு என்று துணி எடுக்க இது போல் வேலையில் இருந்து சித்தப்பா அப்படியே கடைக்கு வர. இவன் சில சமயம் சித்தியை அழைத்து கொண்டு செல்வான்.. அந்த பழக்கத்தில் தான் கேட்டான்..
ஆனால் சித்தப்பா..”இல்ல சித்தூ நீ மட்டும் வா..” என்று சொன்ன சித்தப்பாவின் குரலில் தெரிந்த மாறுப்பாட்டை சித்தார்த் அப்போது தான் கவனித்தான்..
“சித்தா உங்களுக்கு உடம்பு சரியில்லையா.. அப்பாவுக்கு போன் போட்டு கூட அழைத்து வரவா..” என்று அப்போது சித்தார்த்தும் பதறி கேட்க.ஒரு மருத்துவமனை பெயர் சொல்லி வா என்று அழைத்தது.. பின் சென்ற போது தான் தன் தந்தை இறந்தது என்று தெரிய வர.. மகன் உடைந்து விட்டான்..
அவர்கள் மத்தியதர வர்க்க குடும்பத்தினர்.. .வீடு மட்டும் சொந்த வீடு.. தாத்தா வாங்கியது.. இரு மகன்கள்.. ஒரே குடும்பமாக இருக்க.. அன்ணன் தம்பிகள் மட்டும் அல்லாது மனைவிமார்கள் அவர்கள் பிள்ளைகள் என்று எந்த வேற்றுமையும் காட்டாது வாழ்பவர்கள் தான்..
ஆனால் இப்போது தன் அப்பா கிடையாது.. இதே போல் தீ சட்டி வைத்து கொண்டு இருந்தவனை கட்டி பிடித்து கொண்டு இருந்த பதினைந்து வயது தங்கை.. இதோ இன்று சித்தி அமர்ந்திருந்த கோலத்தில் அன்று அவன் அன்னை பாக்யவதி..
தந்தை இறந்த துக்கத்தை விட இனி என்ன என்று கலங்கி நின்றவனின் தோளை அணைத்து.”சித்தப்பா நான் இருக்கேன்..” என்று எட்டு வருடம் முன் சொன்னார்..
சொன்ன சொல் தவறாது.. அப்பா இல்லை.. அது மட்டுமே வெற்றிடமாக இருக்க. அனைத்துமே பழைய மாதிரி தான் நடந்தது.. அவன் நினைத்த படிப்பு.. அதன் பின் அவன் விரும்பிய பேங்க் எக்ஸாம் எழுதி முதல் அட்டம்டில் பாஸ் செய்து இன்று வங்கியில் துணை மேலாளராக இருக்கிறான்..
இதோ சித்தியின் பக்கத்தில் அழுது கொண்டு இருக்கிறாளே அவனின் தங்கை ஜெய சுதாவும் விரும்பிய இஞ்சீனியர் படிப்பு .. இரண்டு வருடம் வேலைக்கு சென்ற பின். திருமணம். என்று அனைத்துமே சித்தப்பா பார்த்து கொண்டார்.. ஒரு சின்ன கொலுசு வாங்குவது என்றாலும் தன் தங்கைக்கும் சேர்த்து மூன்றாக தான் வாங்குவார்..
தங்களை அண்ணன் பிள்ளைகள் என்று பாகுப்பாடே காட்டியது கிடையாது.. தங்கைக்கு நல்ல இடம் வந்த போது..”இன்னும் இரன்டு வருடம் வேலைக்கு போன பின் பார்க்கலாம்..” என்று தான் இவன் கூறினான்..
அவன் அப்போது தான் வேலைக்கு சேர்ந்து இருந்தான்..இப்போது அவன் தங்கைக்கு என்று பெரியதாக எதுவும் செய்ய முடியாது என்ற காரணத்தினால் கூறினான்.. அண்ணன் மகனின் மனதை சரியாக புரிந்து கொண்ட அவனின் சித்தப்பா..
“என்ன சித்தார்த் பிரிச்சி யோசிக்கிறியா..?” என்று கேட்டவரை பதறி போய்..” சித்தா .” என்றவன் தோள் மீது அன்றும் கை போட்டு “ நம்ம ஜெயாக்கு மாப்பிள்ளை போட்டோ பார்த்ததும் பிடிச்சிடுச்சிடா. நான் நல்லா விசாரிச்சிட்டேன்.. நல்ல இடம். முடிச்சிடலாம்.. அப்புறம் நாம தேடும் போது இது போல் இடம் கிடைக்காது.” என்று சொன்னவர் அனைத்தும் அவரே பார்த்து கொண்டார்.
ஒத்தை மனிதர்.. ஒருவர் வருமானம் கொண்டு தான். தங்கள் நான்கு பேரையும் படிக்க வைத்தது.. குடும்பத்தையும் பார்த்து கொண்டார். சேமிப்பு என்பது கிடையாது.. அதனால் தான் அன்று சித்தார்த் இரண்டு வருடம் கழித்து திருமணம் செய்யலாம் என்று சொன்னது.
ஆனால் அவர் நல்ல இடம் என்று சொன்னதோடு அண்ணன் மகள் திருமணத்தை நன்றாகவே நடத்தி முடித்து விட்டார்.. தங்கைக்கு நகை பத்தாது தன் அம்மாவுடையது பத்து சவரன் என்றால், சித்தியுடையது பத்து சவரன் போட்டு தான் தன் தங்கையின் திருமணத்தை சித்தப்பா செய்து முடித்தது.
ஆனால் இன்று.. அவர் மகள்கள் என்று நினைவு ஒடும் போதே அவனின் கண்கள் தன் இரு தங்கைகளை தேடியது.. அன்று தன் தங்கை போல் தான் இன்று சின்ன தங்கை பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறாள்..
அவளுக்கு மூத்தவள் பி. காம் கடைசி வருடம்.. இருவரும் கை பிடித்து கொண்டு சித்தாவின் அருகில் நின்று கொண்டு இருந்த அந்த தோற்றம் அவன் நெஞ்சை பிடித்து உலுக்குவதாக இருந்தது.
விபத்து. தன் தந்தைக்கு சின்ன தந்தை ஒடியது போல் தான் சித்தப்பாவுக்கு விபத்து என்று கேள்வி பட்டு தன் வங்கியில் இருந்து ஒடினான்.
கடைசியாக உயிரை கையில் பிடித்து கொண்டு தன் வரவுக்காக காத்து கொண்டு இருந்தது போல் தன் கை பிடித்து..”கு..ருவி த…லையி. ல் பனை.ங்காய் வை.ப்பது போல் உன் மீது பார.த்தை சுமத்திட்டு போறேன் சித்தார்த்.. உன் சி..த்திக்கு ஒ..ன்னும் தெரியாது பார்த்துக்க.” மூச்சு விட சிரமத்திலும் இந்த வார்த்தை சொன்னது தான் அவர் பேசியது..
இதோ இன்று அவரை எரித்து விட்டால்.. அவர் வாழ்ந்த வாழ்வு முடிந்தது.. இனி அடுத்து.. அன்று தன் தந்தை இறந்த போது தன் சித்தப்பா இருந்தார்.. ஆனால் இன்று.. அன்று என் சித்தப்பா நின்ற இடத்தில் இன்று நான் இருக்கிறேன். நான் தான் பார்க்க வேண்டும் அனைத்துமே வீட்டிற்க்கு ஒரே மகன் நான் தான்.. ஒரே ஆண்மகனும் அவனுக்கு அவனே இதை பல முறை சொல்லி கொண்டான்..
கொல்லி வைத்து முடித்து பதினைந்தாம் நாள் காரியம் என்று கழுத்து வரை துக்கம் அடைத்து கொண்டு இருந்தாலும். அனைத்தும் செய்தான்..
மூலையில் முடங்கி இருந்த தங்கைகளை முடக்கினான்.. கல்லூரி பள்ளிக்கு அனுப்பினான்.. தன் தங்கையை மாமியார் வீட்டிற்க்கு அனுப்பி வைத்தான்.. அம்மா சித்தியை பழைய மாதிரி இல்லாது போனாலும், சமைப்பது சாப்பிடுவது வீட்டு வேலை என்று அவர்கள் கவனத்தை திசை திருப்பி வைத்தான்.
இறந்தவரின் செட்டில்மென்ட் பணம் என்று அது வேறு ஒரு பாட்டுக்கு வேலை நடந்து கொண்டு இருந்தது.. இதை எல்லாம் அவன் வங்கி வேலைகளையும் பார்த்து கொண்டே தான் செய்தது..
ஒரு சில சமயம் அவனாலேயே முடியாது..தனிமையில்.”சித்தா..” என்று அவர் புகைப்படத்தை பார்த்து கதறி அழுது இருக்கிறான்..தனிமையில் தான்.. தான் அழுதால் வீட்டு பெண்கள் இன்னும் சோர்ந்து போய் விடுவார்கள் என்று..
இவை அனைத்தும் செய்து முடித்து பார்த்தாள் மூன்று மாதம் கடந்து இருந்தது. இப்போது மெல்ல மெல்ல அவனின் வீடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி கொண்டு இருந்து.. அவன் அப்படி தான் நினைத்தான்..
அவனின் குட்டி தங்கை பூவிதழ் பள்ளியில் இருந்து அவனுக்கு அழைப்பு வரும் வரை.. பள்ளியில் இருந்து அழைப்பு எனவும் முதலில் சித்தார்த் பயந்து தான் விட்டான்.. அவனின் முன் அனுபவம் அப்படி பட்டது..
ஆனால் பள்ளிக்கு சென்று பார்த்த போது..பள்ளியின் தலமை ஆசிரியர்..அவர் ஒரு பேப்பரை இவனிடம் நீட்டினார்..அதில் அவளின் தங்கையின் பெயர்.. ரோல் நம்பரை தவிர வேறு எதுவும் எழுதாது வெற்றிடமாக இருக்க
.
இது என்ன என்று பார்த்த சித்தார்த்துக்கு ..பூவிதழின் பள்ளி ஆசிரியர்..”இது உங்க சிஸ்டரோட நேத்து எழுதுன ரிவிஷன் எக்ஸாம் பேப்பர்..” என்றதும் அதிர்ந்து தன் தங்கையை பார்த்தான்.
தலமை ஆசிரியர். “நல்லா படிக்கும் பெண்.. சமீபத்தில் இவள் தந்தை இறந்ததும் தெரியும்… அவள் ரொம்ப மன அழுத்ததில் இருக்கா போல.. வகுப்பில் கூட சரியா பேசுறது இல்ல.. பாடத்தை கவனிக்கிறது இல்ல என்று சொல்றாங்க .. நாங்க பேசனும்.. ஆனா எதுக்கும் வாய் திறக்க மாட்டேங்குறா. நீங்க கொஞ்சம் பேசுங்க. அவள் அடுத்து எழுத போவது பப்ளீக் எக்ஸாம்..” என்று அவர்களின் கடமையை செய்து அனுப்பி வைத்தனர்…
சித்தார்த்துக்கு தான் அனைத்தும் ஒரளவுக்கு பரவாயில்லை என்று நினைத்து இருக்க.. என்ன இது என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. அவனுமே இருபத்தி ஐந்து வயதுடைய இளைஞன் தானே..
பள்ளியில் இருந்து நேராக அவளை ஒரு ஐஸ் க்ரீம் பார்லருக்கு அழைத்து சென்றான்.. அவளுக்கு பிடித்த ப்ளேவரை வாங்கி கொடுத்து விட்டு சாப்பிட சொல்ல. அவள் சாப்பிடாது இருக்கவும். அவள் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்த சித்தார்த்.