பாலை குடித்து முடித்த ப்ரீத்தி எங்கே விட்டேன்..? என்று நெற்றியை தட்டியவள் நினைவு வரவும், “ஹான், ஆனா இங்க எங்க அம்மா மேலயும் சரிபாதி தப்பு இருக்கு மாமா, எங்க அம்மாவோட அறியாமை, அவன் மேல வச்ச முட்டாள்தனமான நம்பிக்கை, பெத்தவங்களை ஏமாற்றியதுன்னு பெரிய லிஸ்டே இருக்கு, எல்லாத்துக்கும் மேல அந்த வயசுல வந்ததுக்கு பேரு காதலே இல்லை அப்படியே வச்சிகிட்டாலும் முறை இல்லாம தன்னை ஒருத்தன் தொடுவதை எப்படி அனுமதிக்கலாம்..??” என்றவளின் விழிகள் சினத்தில் மிளிர இருக்கையில் இருந்து எழுந்தவள்,
“அப்படி என்ன காதல்..? மண்ணாங்கட்டி காதல்..!” என்றுசீறியவள் தனிமையையும், மறைவிடத்தையும் தேடி போய் பண்ற திருட்டுதனத்துக்கு பேர் காதலா..?? ஆணோ பெண்ணோ ஊரார் முன்னிலையில் பந்தத்தில் இணையும் முன் கட்டுப்பாடு இல்லாத வரம்பு மீறல்கள் அவங்களை எந்நிலையில் கொண்டு நிறுத்தும்னு வாழ்க்கை எங்கம்மாக்கு செருப்பால அடிச்சு புரிய வச்சுடுச்சி..!!”
“ஆனா அவன் அவங்களை.., நாங்க அவனோட குழந்தைங்கன்னு தெரிஞ்சும் அவங்களை எவன் கூடவோ ***** நீ பெத்து போடுறதுக்கு எல்லாம் என் இனிஷியல் கொடுக்கனும்னு நினைக்கிறது பேராசைடின்னு” சொல்லி நாக்குல நரம்பில்லாம அசிங்கபடுத்தி அடிச்சு ஏன்டா வாழறோம்னு நினைக்க வச்சிட்டான்”
அதை கேட்டஅலரின் முகமே இறுகி கன்றி போனது இத்தகைய மிருகத்தையா அன்று தான் தாங்கி பிடித்தோம் என்று..!! அப்போது கூட எழில் கூறினானே அவனை தொடுவதே பாவம் என்று…!! தான் தான் அதை கூட புரிந்து கொள்ள முடியாத முட்டாளாக இருந்திருக்கிறோமே என்று தன்னையே நிந்தித்து கொண்டவள் மனமோவேகமாக பிரகாசத்தின் மீது எந்தெந்த பிரிவுகளில் எல்லாம் வழக்கு தொடுக்கலாம் என்று எண்ணமிட்டவாறேப்ரீத்தியின் பேச்சை கவனிக்க தொடங்கினாள்.
“ஏற்கனவே அவனோட கோரமுகம் தெரிஞ்சதுலயே பாதி உயிராகி போயிருந்த எங்க அம்மாவைவிலைமாதுவோடுஒப்பிட்டு அவங்க மிச்ச சொச்ச உயிரையும் எடுத்தவன் மொத்தமா அழிக்க வேண்டி திரும்ப கழுத்தை நெரிக்க தொடங்கினான்” என்றிட அலரின் உடலில் பெரும் அதிர்வு.
எங்க அம்மாக்கு தன்னோட கனவு எல்லாமே கனவாவே போயிட்ட விரக்தியில வாழ்க்கை மீதிருந்த பிடிப்பே போயிருச்சி… இனியும் எதுக்கு வாழனும் வாழ்ந்து இதுக்கு மேலயும் சமூதயத்தோட பார்வையில இன்னும் கீழிறங்கி போகனுமா.. ?? தன்னோட உயிரோடு சேர்ந்து நாங்களும் அழிவோமேன்னு கூட சிந்திக்க முடியாத அளவு பித்து பிடித்த நிலை..!! அவங்களுக்கு பிடிப்பில்லாமபோயிருக்கலாம் ஆனா எங்களுக்கு வாழனுங்கிற ஆசை இருந்திருக்கு அவன் நெரிச்சதுல மூச்சு காற்று தடை பட்டு போகவும்நாங்க ரெண்டு பெரும் உள்ள இருந்து பலமா உதைச்சிருக்கோம்
அப்போ தான் எங்கம்மாக்கு ஸ்மரனே வந்திருக்கு உடனே, “இ..ல்..ல இனி வர மாட்டேன்” என்று கண்ணீரோட அவன் கிட்ட கை கூப்பினதுக்கு அப்புறம் அவங்களை விட்டவன்,
“எங்கயாவது போய் தொலை ஆனா உன் பிள்ளைக்கு இனிஷியல் கேட்டு திரும்ப வந்துடாதஉன்னை மாறி வேசி எல்லாம் கவுரமான வாழ்க்கைக்கு ஆசை படறது தப்புடினு கடைசியா எச்சரித்து அனுப்புவும் மறக்கலை”
“அவன் தன்னோட கையை தளர்த்தவும் உயிர்தப்பிச்சா போதும்னு அந்த இடத்தை விட்டுஓடினஎங்க அம்மா போய் நின்னது ரெயில்வே ஸ்டேஷன் முன்ன..!! ஆமா எங்க இனி இந்த ஊருல இருந்தா கண்டிப்பா தன்னையும் குழந்தைகளையும் கொன்னுடுவானோன்னு பயந்தவங்களுக்கு தன்னை அசிங்கபடுத்தின ஊரார் முன்னாடி திரும்ப போய் நிற்கிற தைரியமும் இல்லை அதனால யாரும் கண்ணிலையும் படாம ஊரை விட்டே போக முடிவு பண்ணி எதிர்காலம் என்னனே தெரியாம கிடைச்ச ட்ரெயின்ல ஏறி இருந்தாங்க…. கையில ஒரு பைசா இல்லாம அடுத்து என்னன்னு கூட யோசிக்க முடியாம எங்க போய் சேரபோகிறோம் என்ற இலக்கில்லாம எங்களை காப்பாத்துறது மட்டுமே குறிக்கோளா இருந்தவங்க போய் சேர்ந்த இடம் தான் சென்னை”
ஆனா அவன் எங்க அம்மாவை நம்பலை அவங்களை கண்காணிக்க பின்னாடியே ஆள் அனுப்பி இருந்திருக்கான். எங்க அவங்க திரும்ப உரிமை கொண்டாடிட்டு வந்தா தன்னோட அரசியல் கனவு ஆட்டம் கண்டுடுமோன்னு அவனுக்கு இருந்த பயம் எங்க அம்மாவை கண்காணிக்க பின்னாடியே ஆள் அனுப்பவச்சிருக்கு.., இல்லாட்டி எப்படி எங்க அம்மாக்கு குழந்தை பிறந்த மூணாவது நாளே சரியான விலாசத்துக்கு அவன் எங்களை தேடி வந்திருக்க முடியும் என்று கேட்க..அனைவரின் முகமும் மேலும் திகைப்பில் ஆழ்ந்து போனது.
***************************************
ஆம் ப்ரீத்தியின் யூகம் மிகச்சரியே…!!! அன்று வசுமதி தன்னிடம் உறுதி அளித்துவிட்டு சென்றிருந்தாலும் அவர் மீது பிரகாசத்திர்க்கு நம்பிக்கை இல்லை.., ஏனெனில் இதுவரை அவர் கடந்து வந்த பெண்களிலேயே கருவை வளர விட்டு தன்னை தேடி கண்டுபிடித்து இத்தனை தூரம் வந்தது வசுமதி மட்டுமே..!! பெற்றோரை இழந்து அனாதரவாய் நிற்கும் நிலையில் நிச்சயம் குழந்தைகளை சாக்கிட்டு மீண்டும் தன்னை தேடி வர வாய்ப்பிருப்பதால் அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அதை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டி ஏற்பாடு செய்திருந்தார்.
நம்பிக்கையான அந்நபர் மூலமாக நிழலாக கண்காணிக்கபட்ட வசுமதியின் நிலை அவ்வப்போது பிரகாசத்திற்கு பகிரப்பட்டு வந்தது. அதன்படி வசுமதிக்கு அரசு மருத்துவமனையில் சுகபிரசவம் நிகழ்ந்தது குறித்தும் பிரகாசத்திற்கு அந்நபர் தெரிவிக்கையில்,
“டேய் பன்னிகூட தான் பத்து குட்டி போடுது இவ பிள்ளை பெத்து இருக்கிறது என்ன நாட்டுக்கு முக்கியமான செய்தியா? எதுக்கு இதுக்கு எல்லாம் கூப்பிட்டு என் நேரத்தை வீணாக்குற என்று சீறியவர்…, அவ ஊர் பக்கம் என்னை தேடி வர மாதிரி இருந்தா மட்டும் எனக்கு சொல்லு”என்றார்.
அவர் பேசி முடிக்கவுமே அடுத்த அழைப்பு தீபிகாவின் தாயிடம் இருந்து வந்தது ஆம் ஒரே பெண் என்பதால் ஏழாம் மாதமே வளைக்காப்பு செய்து தீபிகாவை சென்னைக்கு அழைத்து சென்றிருந்தனர் அவர் பெற்றோர். அழைத்து சென்ற இரு வாரங்களிலேயே தீபிகாவிற்கு திடீரென உதிர போக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் சேர்த்திருப்பதை அவர் மாமியார் தெரிவிக்கவும் உடனே சென்னைக்கு கிளம்பி சென்றார்.
ஆனால் அவர் மருத்துவமனையில் நுழைந்த அதேநேரம் குறை பிரசவத்தில் அவர்களது ஆண் மகவு இறந்தே பிறந்திருக்க ஏற்கனவே தீபிகாவின் கர்ப்பப்பை பலவீனமாக இருப்பதால் ஒரு குழந்தைக்கு மேல் பெறுவது அவர் உயிருக்கே ஆபத்து என்று மருத்துவர் எச்சரித்து இருந்த நிலையில் பெயர் சொல்ல
ஒரு பிள்ளை போதும் என்பதால் பிரகாசமும் அதை குறித்து பெரிதாக கவலைபடவில்லை… ஆனால் இப்போது முதலுக்கே மோசமாகி போயிருந்தது…!!
ஆம் குழந்தை பிறந்த பின் ஒரு சில காரணங்களால் தீபிகாவின் கர்ப்பப்பையையும் சேர்த்தே அகற்ற வேண்டிய கட்டாயம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டிருக்க உடனே பிரகாசத்தை அழைத்த மருத்துவர் பார்வதி அவரிடம் நிலையை விளக்கி கூறி அதற்கான கையெப்பம் பெற்று செல்ல,
வானமே இரண்டாக பிளந்து தலையில் விழுந்த நிலையில் நிலை குலைந்து போனார் பிரகாசம்.
இப்போது தன் உதிரம் பூமியில் ஜனிக்கும் முன்னமே மறைந்த வலியைவிட மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்பட்டு இனி அவருக்கு பெயர் சொல்ல வாரிசு இல்லையே என்ற வேதனை அவரை பெரிதாக அரிக்க தொடங்கியது. நிலை குத்திய விழிகளுடன் எத்தனை நேரம் அமர்ந்திருந்தாரோ மீண்டும் அறைக்கு திரும்பிய பார்வதிக்குமே அவரை கண்டு மனம் தவித்து போனது…,
ஆம் ஆதர்ஷதம்பதிகளான பிரகாசத்தையும் தீபிகாவையும் கடந்த சில மாதங்களாக அவர் நன்கு அறிவார். அதிலும் தீபிகா கருவுற்ற நாளில் இருந்தே மனைவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சென்னையில் புகழ்பெற்ற மருத்துவமனையின் தலைவரான பார்வதியிடம் தானேசிகிச்சைக்கு அழைத்து செல்லும் பிரகாசத்தை இத்தனை மாதங்களாக அவரும் பார்த்து வருகிறார் தானே..!!
அத்தகைய தருணங்களில் மனைவியின் மீதான பிரகாசத்தின் பேரன்பையும் அவரை மதிப்புடன்நடத்தும் பண்பையும், மனைவிக்கு ஒன்றேன்றால் துடிதுடித்து உடைந்து போகும் அவரது காதலிலும் பார்வதி பெரிதும் வியந்து போயிருக்கிறார். அத்தகைய மனிதருக்கு இப்போது வாரிசு அற்று போயிருப்பது எத்தகைய துன்பம் என்பதை புரிந்தாலும் நிஜத்தை ஏற்றுகொள்ளாமல் இருப்பவரைஎவ்வாறு தேற்றுவது என்று அவருக்கு சுத்தமாக புரியவில்லை.
ஆனால் அவர் வெளியே சென்றிருந்த அரை மணி நேரத்திற்குள் மனதினுள் பல கணக்குகளை போட்டுகொண்டிருந்த பிரகாசம் மருத்துவரின் வரவில் “கண்ட்ரோல் யுவர்செல்ப்” என்ற அவரின் குரலில் அவர் புறம் திரும்பிய போது விழிகள் இரண்டும் கொவ்வை பழமென சிவந்து கண்ணீர் கோடுகள் கன்னம் தாண்டி வழிந்திருந்தது,
“கண்ட்ரோல் யுவர்செல்ப் மிஸ்டர் பிரகாசம், லைப் இதோட முடிஞ்சிடலை எனக்கு புரியுது உங்களால தீபிகாவை தவிர வேற பெண்ணை நினச்சி கூட பார்க்க முடியாதுன்னு ஆனா என்ன பண்ண உங்களுக்கு விதிக்க பட்டது இது தான்..!! என்று தன் கண்ணாடியை கழற்றி மேஜை மீது வைத்தவர், காலம் முழுக்க உங்களுக்கு அவங்க குழந்தையாவும் நீங்க அவங்களுக்கு குழந்தையாவும் இருக்கலாம்…, ஒரு வேளை அதையும் மீறி உங்களுக்கு குழந்தை ஆசை இருந்தா இங்க எத்தனையோ அநாதை குழந்தைங்க இருக்காங்க நீங்க வேணும்ன்னா யாரையாவது தத்தெடுத்துக்கலாம்” என்று கூற,
அவரையே உணர்வற்று பார்த்து கொண்டிருந்த பிரகாசமா மனதினுள் “ஏன்டி எவனோ **** பெத்து போட்ட புள்ளையை எடுத்து வளர்க்க எனக்கென்ன தலை எழுத்தா..?? என்று கடுகடுத்தவர்ஆமாடி இந்த கருமத்தை கழிச்சி கட்டினா அவ அப்பன் எனக்கு பாடை கட்டிடுவான்,”என்று மனதினுள் புலம்பியவரின்மனகண்ணில் சட்டென வசுமதியின் முகம் வந்துபோக அடுத்த இருநொடிகளில் என்ன பேச வேண்டும் என்பதை ஒத்திகை பார்த்தவர் சற்றும் தாமதிக்காமல் உடனேமருத்துவரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்திருந்தார்.
அவர் செயலை எதிர்பாராது பதறி விலகிய பார்வதி, “வாட் இஸ் திஸ் மிஸ்டர் பிரகாசம்..?? எந்திரிங்க முதல்ல..!!” என்று சீற,
“இல்லைடாக்டர் இல்லை உங்களை தவிர எனக்கு வேற மார்க்கம் இல்லை” என்றவரின் கண்ணீர் பார்வதியின் பாதங்களை சுட தொடர்ந்த பிரகாசமா “ப்ளீஸ் நீங்க தான் எப்படியாவது என் மனைவியை காப்பாத்தி கொடுக்கணும்” என்றிட…,
‘முதல்ல எந்திரிங்க‘ என்று பிரகாசத்தை கடிந்தவர் அவர் எழுந்து நிற்கவும்,
“உங்க வைப் கர்ப்பப்பை எடுக்காம போயிருந்தா தான் ஆபத்துஇப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை இன்னும் கொஞ்ச நாளில் அவங்க உடல் நிலை தேறிடும் கவலைபடாதீங்க”
“கர்ப்பப்பை சேர்த்து அவ உயிரை எடுத்திருந்தா உனக்கு கோவில் கட்டி இருப்பேன்டிஎன்று மனதினுள் கருவியவர் உடனே முகத்தில் உணர்வுகளை துடைத்து.. “அது இல்லை டாக்டர், உங்களுக்கே தெரியும் என்னோட உயிரே அவதான்னு ஆனா ஏற்கனவே தன்னால் ஒரு குழந்தைக்கு மேல பெற முடியாதுன்னு மனசொடிஞ்சி போயிருந்தா இப்ப இருந்த ஒன்னும் போயிடுச்சின்னு தெரிஞ்சா நிச்சயம் அவ உலகத்தை விட்டே போயிடுவா.., அவ இல்லாத உலகத்துல நான் இருந்து என்ன பண்ண போறேன்” என்று அருகே இருந்த சுவற்றில் முட்டியாறு தன் நடிப்பை அட்டகாசமாக தொடங்கியவர், அவரை தடுத்து பிடித்த மருத்துவரிடம் பேசும் விதத்தில் பேசி அடுத்த அரை மணி நேரத்தில் தன் திட்டத்திற்கான ஒப்புதல் பெற்றிருந்தார்.
ஆம் குழந்தை இறந்த செய்தியை ஒரு மூன்று மணி நேரங்களுக்கு அவர் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தால் இரு நாட்களுக்கு முன் தன் நண்பனுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்றை அவர் சம்மதத்துடன்
பெற்று வந்து தங்கள் குழந்தையாக வளர்ப்பதாக அவருக்கு உறுதி அளித்திருந்தவர் அடுத்த அரை மணி நேரத்தில் சென்னையில் வசுமதி அடைக்கலம் புகுந்திருந்த குடிசையினுள் நுழைந்திருந்தார்.
அர்த்த ராத்திரியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வசுமதியை தேடி புறப்பட்டவர் அவர் இருந்த குடிசையினுள் நுழைந்த மறுநொடியே தரையில் விரித்திருந்த பாயில் இருகுழந்தைகளையும் கிடத்தி குளிருக்கு கதகதப்பாக அவர்களை வைக்க வேண்டி அங்கு இருந்த சில கந்தல்களை ஒழுங்குபடுத்தி குழந்தைகளுக்கு போர்த்தி கொண்டிருந்த வசுமதியின் முன் நெடுசாண்கிடையாக விழுந்து அவர் பாதங்களை இறுக்கமாக பற்றி கொள்ள வசுமதியின் அருகே அவருக்கு அடைக்கலம் அளித்திருந்த பாட்டி திகைத்து போனார், வசுமதியும் ஒன்றும் புரியாமல் அதிர்வில் பிரகாசத்தை தான் பார்த்து கொண்டிருந்தார்.
வசுமதியின் முகத்தில் தென்பட்ட அதிர்வில் இருந்தே வந்திருப்பது யார் என்று புரிந்து கொண்ட பாட்டி அவர்களுக்கு தனிமை அளித்து கதவை சாற்றிவிட்டு வெளியேறி இருந்தார்.
மறுநொடியே வசுமதியின் கரங்களை பற்றி தன் முகத்தில் பலமாக அறைந்தவர், “உனக்கு பண்ணின பாவத்துக்குஆண்டவன் என்னை தண்டிச்சிட்டான் வசு” என்று கண்ணீரினூடே மீண்டும் தன் நடிப்பாற்றலை வெளிபடுத்த தொடங்கியவர் கையேடு கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தில் வைத்தபடி,
“கையில கிடைச்ச பொக்கிஷத்தை எட்டி உதைச்ச எனக்கு இது தேவை, இது தேவை நான் ஒரு பைத்தியக்காரன்.., எனக்கு இது தேவை தான் வசு” என்று கத்தியை தூரஎறிந்தவர் மீண்டும் அவர் பாதங்களை பற்றிகொண்டு,
“வசு இதுக்கு மேலயும் நான் உயிரோட இருந்து என்ன பிரோஜனம் ஊருல இருக்கவன் எல்லாம் எனனை ஏளனமா பார்க்க போறான் எத்தனை பேர் நீயெல்லாம் ஆம்பளையாடான்னு கேட்டு அசிங்க படுத்த போறான்னு தெரியலை, எல்லாமே உனக்கு செஞ்ச பாவம் தான் வசு வேற எதுவும் இல்லை” என்று எழுந்தவர்கத்தியை தேடி எடுத்து, “என் குழந்தைகளையே தப்பா பேசின எனக்கு ஆண்டவன் சரியான தண்டனை கொடுத்துட்டான்”என்று விஷயத்தை கூறாமல் அவரிடம் நடந்து கொண்ட முறைக்கு கத்தியை கொண்டு தன் கையில் கீறியவர் தன் கைகளாலேயேமேலும் தன்னை தண்டித்து கொள்ள தொடங்கினார்.
அதன் விளைவாக குருதி வெளியேற ஒரு கட்டத்திற்கு மேல் அதை காண சகியாமல் வசுமதி அவரிடம் என்ன விஷயம் எதுக்கு இப்படி எல்லாம் பண்றீங்க நான் தான் விலகி வந்துட்டேனே, என்றிட,
உடனே அவரை நெருங்கி அவர் மடியில் தலை கவிழ்த்த பிரகாசம் அழுகையினூடே நடந்ததை விவரிக்க, பிரகாசம் பேசிய பேச்சில் இது நாள் வரை அவர் கொண்டிருந்த கோபம் முகமறியா சிசுவின் மரணத்தில் எங்கோ மறைந்து போக.., குழந்தைக்காக கண்ணீர் வடித்த வசுமதி தீபிகாவிர்க்காக வருந்தவும் தவறவில்லை. வசுமதியின் முகத்தை திருப்தியுடன் பார்த்து கொண்டிருந்த பிரகாசம் அவரது இச்சுபாவத்தை அடிப்படையாக கொண்டுஅடுத்த ஒரு மணிநேரத்தில் கெஞ்சி, கொஞ்சி,சமாளித்துவசுமதிக்கு உரிய அங்கிகாரம் அளிப்பேன் என்று அளித்த பல வாக்குறுதிகளுக்கு இடையில் வசுமதியை சம்மதிக்க வைத்து ஒரு குழந்தையுடன் வெளியேறி இருந்தார்.