வாழிக்கு தன்வியிடம் தன்னுடைய விருப்பத்தை சொல்லிவிட்டோம், அவளது பதில் என்னவாக இருக்குமென்கிற பதட்டமோ பயமோ கொஞ்சமும் இல்லை.
காதலை வெளிப்படுத்துவது சுய உரிமையென்றால்… ஏற்பதோ, மறுப்பதோ எதிரில் இருப்பவரின் சுய உரிமை. அதில் உட்புக யாருக்கும் இடமில்லை.
கண்ணுக்குத் தெரிந்த எல்லையில் வானோடு முட்டி மோதிக்கொண்டிருந்த கடல் நீர் கருமை பூசியிருக்க… நிலவு வெளிச்சத்தில் மங்கிய மஞ்சளாய் பிரதிபலித்த கரை தொடும் அலைகளில் லயித்திருந்தான் வாழி.
நிலவோடு அலை பொங்கும் நுரையின் குமிழிகள் போல் மனதின் அலைப்புறுதல்கள் யாவும் வெடித்து அமிழ்ந்து போன உணர்வு.
கொலைகளை நினைத்து ஆர்பரித்துக் கொண்டிருக்கும் வாழியின் மூளையும் மனமும் அக்கணம் அமைதியை தத்தெடுத்திருந்தன.
அவனின் அமைதிக்கு அங்கு நிலவும் இயற்கையின் எழில் காரணமென்றால் மிகை.
ஆஷ் வாழியின் தோளில் தன் முகத்தை உராய்ந்திட, அவனின் கழுத்தோடு கட்டிக்கொண்டு தன்னோடு இறுக்கிய வாழி… அதன் நெற்றியில் இதழ் பதிக்க,
மின்னலாய் ஒளி வெட்டிச் சென்றது. அதனோடு சிறு ஓசையும்.
வாழி என்னவென்று பார்த்திட தன்வி தன்னுடைய அலைப்பேசியில் வாழி, ஆஷிற்கு முத்தம் வைத்த நொடியை காட்சிப்பதிவு செய்திருந்தாள்.
“என்னை மட்டும் தான் நீ போட்டோ எடுக்கிற நினைக்கிறேன். அன்னைக்கு உன் லேப்பில் பார்த்தேன். நான் கார்டனில் ஓடுறது, நடக்குறது, சிட்டர்ல இருக்கிறதுன்னு எல்லாம் எடுத்து வச்சிருக்க. எனக்குத் தெரியாமலே!” என்றான்.
வாழிக்கு அருகில் நன்கு இடைவெளிவிட்டு அமர்ந்தவள்,
“தெரியல… உங்களை போட்டோ எடுக்க ரொம்ப பிடிக்கும். ஏற்கனவே சொல்லியிருக்கனே” என்றாள்.
பிடிக்கும் என்ற வார்த்தைக்கு தன்வி அதிக அழுத்தம் கொடுத்ததை போலிருந்தது.
ஒருவரையொருவர் பார்க்காது, கரை தொடும் அலையையும், அலை தொட மறுத்து துரத்தும் ஆஷின் விளையாட்டில் கண் பதித்திருந்தனர்.
“பேசணும்… என்ன? எப்படின்னு தெரியல!” தன்வி.
இருவரின் பார்வையும் தங்களுக்கு எதிரில் தான் இருந்தது.
“அன்னைக்கு லவ் மேரேஜ் சொன்னீங்க… உங்க லவ்… அது நான் தானா?”
அவள் புறம் பார்வையை திருப்பியவன்,
“நானே எதிர்பாராதது” என்றான்.
“ஹோ… பட் எனக்கு அப்படியில்லை. நீங்க கேட்டதிலிருந்து, எனக்கே என்னை புதுசா புரியுது.”
“ரொம்ப தின்க் பண்ணியிருக்க போல” என்ற வாழி, “உனக்கு என்னவோ அதை நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன்” என்றான்.
“நோ சொன்னால்?”
“கொஞ்சம் பெயினா இருக்கும் நினைக்கிறேன். பட் ஜஸ்ட் மூவ் ஆன்.”
வாழியின் எதார்த்தம் அவனது பதிலில் தெரிந்தது.
“ஒரு முடிவு எடுத்துட்டன்னு தெரியுது. அதுக்கு அப்புறமும் என்னத்த உருட்டிக்கிற?” என்ற வாழி,
“பிடிச்சிருக்குன்னா பிடிச்சிருக்கு சொல்லு. பிடிக்கலன்னாலும் பிடிச்சிருக்கு சொல்லு” என்று வேகமாக சொல்லிட…
தன்வி சிரித்துவிட்டாள்.
“க்யூட்.” வாழிக்கு எல்லாம் வெளிப்படையாகக் காட்டிடத்தான் வந்தது.
“நான் சிரிச்சு நீங்க பார்த்தது இல்லையா?”
“இப்போ எல்லாம் ஏதோ மாற்றமா, எனக்குள் வேற பீல்.” அவளின் முகத்தை சுட்டியவாறு காற்றில் விரலால் வட்டமிட்டுக் கூறினான்.
தன்வி அவனை பார்த்தது பார்த்தபடி இருக்க…
“தன்விக்கு வாழியை பிடிச்சிருக்கு ரைட்?” என்றான்.
“யூ ஆர் அன்பிலிவ்வபுள்” என்று அவனை உணர்ந்து இமை விரித்துக் கூறினாள்.
“வேறென்ன குழப்பம் உனக்கு?”
“அருண்.” ஒரு பெயர் அவளிடம் ஏற்படுத்தி சென்ற (ஏ)மாற்றம் அதிகம்.
“உனக்கே இப்போ புரிஞ்சிருக்குமே… வேறென்ன?”
“எப்பவும்…” என்று அழுத்திக் கூறிய தன்வி, “நமக்கு பேரன் பேத்தி வந்த பின்னர் கூட, இந்த பெயரை வைத்து எந்தவொரு கான்வ(ர்)சேஷனோ, ஆர்க்யூவோ வரக்கூடாது” என்றாள்.
தோள் குலுக்கி, கண் சிமிட்டி, இதழ் நீண்டு வராதென்று இட வலமாக தலையாட்டினான்.
“நான் தேவலாம் போல” என்ற வாழி, “தன்விக்கு வாழியை எவ்ளோ பிடிச்சிருக்குன்னு இப்போ சொன்னதில் தெரியுதே. இனி நீ உன் வாய் வார்த்தையாதான் ஓகே சொல்லணும் இல்லை. தன்வியை வாழிக்கு புரியுது” என்றான்.
அவனின் இந்த கனிவு, அக்கறை, புரிதலில் தான் மேலும் மேலும் துவண்டு போகிறாள். அவனளவிற்கு தங்களின் காதலுக்கு தான் தகுதியுடையவளா? என்கிற கேள்வி அவளுள் தோன்றி கலங்கடிக்கிறது.
“நீங்க அந்த டைப் இல்லைன்னு தெரியும். பட், கோபத்தில் கூட சொல்லிக்காட்டிடக் கூடாது” என்று சொன்னவளின் கண்கள் சட்டென்று கலங்கி நின்றது.
கால் முட்டியில் கை குற்றி, தலை சாய்த்து கன்னத்தை தாங்கியவன் பார்வை ரசனையாய் அவளின் நீர் தேங்கிய விழிகளில் லயித்தது.
அவனை முழுதாய் கொள்ளை கொண்டது அவளது கண்ணீர் தானே! இப்போதும் அதில் விழுந்தவன், எழ முடியாது தத்தளித்துக் கொண்டிருந்தான்.
சட்டென்று அவனது பார்வை வீச்சில் அவளுள் சில்லென்ற இதம். இதயத்தை வெட்டி இழுக்கும் உணர்வு.
“என்ன… என்ன வாழ்?” தன்விக்கு நா தந்தியடித்தது.
“கட்டியிழுக்குது” என்று நெஞ்சத்தை நீவிக்கொண்டவன், “உன் கண்ணீர் என்னை மொத்தமா சாய்க்குது” என்றான்.
“ஹான்…” வாய் பிளந்தாள்.
“உன்னைவிட உன்னோட கண்ணீர் முகம் ரொம்ப ரொம்ப பிடிக்குது. ஆனால் வாழிக்கு தன்வி அழக்கூடாதே!” என்று, அவளின் கன்னம் தீண்டிட நீண்டுவிட்ட கையை சட்டென்று இழுத்துக் கொண்டான்.
சில மணி நேரங்களில் நடக்கும் எதையுமே நம்ப முடியாது இருப்பவளுக்கு, வாழி இனி தன்னுடையவன் என்பதையே கிரகிக்க அவகாசம் எடுக்கும் நிலை. அதிலும் வாழியின் பேச்சு, பார்வை, செயல் என அனைத்திலும் அவன் காட்டி அவள் உணரும் உரிமை, நெருக்கம் யாவும் இன்ப அவஸ்தையாய் அவளிடம். இப்போதும் தன்னை தீண்டிட நீண்டுவிட்ட அவனின் கையில், உறைந்து விட்டாள்.
எழுந்து நின்றவன், ஆஷை பார்க்க… அதுவோ விளையாண்ட களைப்பில் உறங்கியிருந்தது.
வாழி வீட்டிற்கு செல்லத்தான் எழுந்துவிட்டான் என நினைத்த தன்வி தானும் எழும்பிட முயன்ற நொடி அவளருகில் இடவெளியின்றி இருவரின் தோள்கள் உரச அமர்ந்தான்.
“வாழ்…” தீண்டலில் பேச்சின்றி ஓசை மட்டும் தான் அவளிடம்.
உணர்ந்தவன், “தன்விக்கு வாழ் பழகணுமே” என்று இன்னும் நெருங்கி அமர்ந்தான்.
“வாழ் ப்ளீஸ்” என்றவள் தன் பக்க அவனின் புஜத்தை இரு கைகளாலும் இறுக பற்றியவளாக, அவனது தோளிலே முகம் புதைத்துக் கொண்டாள்.
அவளின் செயலில் புன்னகை சிந்தியவன்,
காதலாய் தன்னவளின் அருகாமையை ரசித்தவாறு இருக்க… நிமிடங்கள் பல கரைந்தது.
“ரொம்ப நேரமாச்சுடா… போவோமா?” என்றான்.
“ஹான்…” வேகமாக அவனிடமிருந்து எழுந்து நகர்ந்திருந்தாள். எத்தனை நேரம் அவனது தோளில் முகம் கவிழ்த்திருந்தாளோ… அதில் அவள் உணர்ந்தவை ஏராளம். அவனிடமிருந்து அவளுக்கானதாக மட்டுமே!
அந்த தருணம் அருண் என்றவனின் வருகை தன் வாழ்வில் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று எண்ணினாள். அந்த எண்ணத்தோடு அருண் என்ற பெயரையும் தன் நினைவிலிருந்து அழித்திருந்தாள்.
ஈர்ப்பு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் உண்மை காதல் என்பதை ஒருவரிடம் தான் ஆழ்ந்து அகம் சேர்த்திட முடியும்.
மூன்று வருட காதலென்று சொல்லிய தன்விக்கு, அருணிடம் ஆர்பரித்திடாத உணர்வுகள் யாவும் வாழியின் சில மணி நேர காதலில் சுழன்றடிக்கிறதே!
என்ன பேசுவதென்று தெரியாது ஆஷை காரணியாக்கி வீடு வந்து சேர்ந்தனர்.
கேட்டினை மூடும் போது, தன்வி சொன்னது உண்மையா என்று அந்நேரத்திலும் வாழியின் போலீஸ் மூளை ஆராய்ந்தது.
உண்மையில் அதன் மூலை கூர்மையாகத்தான் இருந்தது.
‘இதை சரி பண்ணனும்’ என நினைத்தவன், தன்வியை பார்க்க அவளோ அவனுக்கு நான்கடி முன் சென்று கொண்டிருந்தாள்.
சட்டென்று அவளின் நடை நின்றது.
அவனை நோக்கி திரும்பிய வேகத்தில்…
“என்ன சொல்லட்டும்?” எனக் கேட்டிருந்தாள்.
“என்ன சொல்லணுமோ அதை சொல்லு.” இருவரின் ஒரு வாழ்வை நினைத்து அவளிடமிருக்கும் பதட்டம் சற்றும் அவனிடமில்லை.
“அம்மா நான் என்ன சொல்லுவேன்னு என் முகத்தையே பார்த்திட்டு இருந்தாங்க… தூங்கமால் வெயிட் பண்ணாலும் பண்ணுவாங்க” என்று விரல்களை உள்ளங்கையில் குவித்து இறுக்கி மூடி தன் பதட்டம் குறைத்தாள்.
“உனக்காக நான் ஓகே சொன்னால், அப்பாவே உன்னை நான் கட்டாயப்படுத்துறேன்னு சொல்லிடுவார். அதனால்… நீயே சொல்லு” என்றவன் கொஞ்சமும் கருணையின்றி அவளை தாண்டிக்கொண்டு தன் வீட்டிற்குள் நுழைந்திருந்தான்.
“கல் நெஞ்சக்காரங்க…” வேகமாக புலனம் வழி அனுப்பி வைத்தவள், கால்களை தரையில் உதைத்தபடி சென்றாள்.
பொழுது புலர்ந்து நேரம் கடந்தே இருவரும் துயில் துறந்தனர்.
ஒருவித படப்படப்போடு தான் தன்வி கீழே வந்தாள். ஓரளவிற்கு அன்னை கேட்டால், பதில் சொல்லும் திடத்தை தனக்குள் பெற்றிருந்தாள்.
கிருஷ்ணனும் ராதாவும் வெளியில் செல்ல கிளம்பி தயாராக இருந்தனர்.
“எதாவது பங்க்ஷனாப்பா?”
“கோவிலுக்கு போயிட்டு வரலான்னு. சேகரன், லட்சுவும் கூட வறாங்க” என்றார்.
“சரிப்பா.”
“என்னடா… அம்மாகிட்ட எதாவது சொல்லணுமா?” இப்போதும் ராதா மகளின் பொறுமையா ஏற்கமுடியாது கேட்டிருந்தார்.
‘எப்படியும் தனு எதுவும் சொல்லப்போவதில்லை… இவள் வேறு’ என்று மானசீகமாக தலையில் முட்டிக்கொண்ட கிருஷ்ணன் மகள் சொன்னதில் வயதை மீறி துள்ளி குதித்திருந்தார்.
“எனக்கு வாழ்… அவங்களை பிடிச்சிருக்கும்மா!” சொல்லிய வேகத்தில் பெற்றோரை பார்த்திட வெட்கம் கொண்டவளாக வெளியில் ஓடிவந்தவள், எதிரே வந்த வாழியின் நெஞ்சில் முட்டி விலகி நின்றாள்.
“ஹேய் தன்வி…” என்றவன்,
அவள் முகம் சுருக்கி நெற்றியை தேய்த்துக்கொண்டதில்…
“வலிக்குதா?” எனக் கேட்டான்.
“அங்க இரும்பு ஏதும் ஒளிச்சு வச்சிருக்கீங்களா?” என்றவளின் கேள்வியில் அட்டகாசமாய் சிரித்தவன்,