தங்கள் அறையில் சோபாவிலேயே படுத்துறங்கும் தன் மூத்த மகன் விஷ்ணுவையே ஆதூரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் காஞ்சனா! அப்படியே அவனது தலையைக் கோதி விட்டார்.
எத்தனை வயதானாலென்ன? தாய்க்கு அவன் பிள்ளைதானே!
“என்னங்க இது! நம்ம விஷ்ணுவுக்கு தாடியெல்லாம் நரைக்க ஆரம்பித்து விட்டதே!” என்றார் கணவரிடம் வருத்தமாக! விஷ்ணுவின் தாடியில் தென்பட்ட ஒரு நாள் தாடியின் தென்பட்ட நரையை கண்டு!
“இப்பெல்லாம், பசங்களுக்கு work டென்ஷன் ஜாஸ்திம்மா, 3௦ வயதிலேயே இப்போதெல்லாம் நரைத்து விடுகிறது!” என்றார் விஸ்வநாதன்.
இவனுக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டால் தான், தன்மனம் நிம்மதியடையும்.
அவன் காதலிக்கிறேன்னு வந்து நின்னப்போ, நான் அவனை ரொம்ப திட்டிட்டேன். ரொம்ப எதிர்த்தேன். அவன் மனத்தைக் காயபடுத்தி விட்டேன் என் பொல்லாத ஈகோவினால்.
ஊர் வாய்க்கும், இந்த மீனாட்சி வாயிற்கெல்லாம் பயந்து , என் பிள்ளையைப் படுத்தி எடுத்துவிட்டேன். கொஞ்ச போராட்டமா அவனுக்கு! இததனைக்கும் தாய் சொல் மீறாத பையன்.
காலம் கடந்து, பெண் பிள்ளை வேண்டும் என்ற ஆசையில், ப்ரநிதாவை உண்டான போது, விஷ்ணு கொஞ்சம் பெரிய பையன். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்!
வேறொரு பையன்களாக இருந்தால், மற்றவர்கள் கிண்டலுக்கு பயந்து, வீட்டில் என்ன செய்து இருப்பார்களோ!
ஆனால் இவன் எவர் கிண்டலுக்கும் பயப்பட வில்லை! மாறாக, தன் தாயின் ஆரோக்கியத்தைப் பற்றி மட்டுமே கவலைக் கொண்டான்! ரொம்ப கேர் எடுத்துப் பார்த்துக் கொண்டான் தன் அம்மாவை!
15 வயதில் அவனுக்கிருந்த, maturity தனக்கு இத்தனை வயதில் இல்லாமல் போய் விட்டது!
அவன் ஆசைப் பட்டு கேட்டதை நிறைவேற்றாமல், கொஞ்ச நஞ்ச திட்டா வசவா! அப்பாடி!
இவன் இப்படி இருக்க தன் சாபம் தான் காரணமோ என்றெல்லாம் எண்ணி கழிவிரக்கம் கொண்டார் அவர்!.
திருமணம் ஆன இந்த எட்டு வருடங்களில், இடையே ஒரு முறை அர்ச்சனா கருத்தரித்தாள் தான், ஆனால் அது இரண்டு மாதங்களிலேயே கலைந்தும் விட்டது.
“ஒரு முறை கருத்தரித்து விட்டாலே அந்த பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் கட்டாயம் உண்டு, கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ” என்று அவள் குடும்ப ஜோசியர் சொன்னதால், அவர்களை இதுவரை வேற எந்த treatmentக்கும் அனுமதிக்கவில்லை காஞ்சனா!
இவர் மன ஓட்டத்தை ஊகித்த விஸ்வநாதன், “கவலைப் படாதே காஞ்சனா, எல்லாம் சரியாகி விடும்!” என்றார்.
“நம் பிள்ளைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரத்தினம்! அவர்கள் எடுக்கும் முடிவும் சரியாக இருக்கும். அவர்கள் சந்தோசம் தான் முக்கியமே தவிர மற்ற எதுவும் நமக்கு முக்கியம் கிடையாது!.
அவர்களும் எந்தவொரு தவறான முடிவுகள் எடுக்க மாட்டார்கள் என நம்பிக்கைக் கொள்” என்றார்.
“சரிங்க” என்றபடி கண்ணயர்ந்த தன் மனைவியை பாசமுடன் பார்த்தார் விஸ்வநாதன்.
நாளுக்கு நாள் தன் மனைவி மனம் கனிந்து வருவதை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்!
முன் இருந்த காஞ்சனாவுக்கும், இப்போது இருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்!
ஆன்மீகமும்,பக்தியும், வயது முதிர்ச்சியும் அவரை soft ஆக்கிக்கொண்டு வருவதை அவர் உணர்கிறார்!
பார்ப்போம், இந்த பிரபு வேறு ப்ரனிதா, அவன் நண்பன் ஸ்ரீ யை விரும்புகிறாள் என்கிறான்!.
ஸ்ரீயை பொறுத்தவரை, தான் வலைபோட்டு தேடினாலும் இப்படி ஒரு மாப்பிள்ளையைத் தேடிக்கொண்டு வர முடியாது தான்! அப்படி ஒரு நல்ல, தன் மகளுக்கு ஏற்ற ஜோடி!
இதற்கு இவளை எப்படியாவது ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும் மெல்ல பேசிப்பேசி!
இன்று இப்படியெல்லாம் விஷ்ணுவை எண்ணி இப்படி பேசுபவள் தான் , மீண்டும் விஜய் விசயத்தில் மீண்டும் முரண்டுப் பிடித்தாள்,
பின், தான் என்னன்ன “சித்து” வேலைகள் செய்து அவளை சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது!
இப்பக்கூட பிரபுவின் விசயத்திலும் இவள் எடுத்திருக்கும் முடிவு – அது தான் வினிதாவை பிரபுவுக்கு திருமணம் முடிப்பதில், அவர்க்கு துளியும் இஷ்டமில்லை!
பரமேஸ்வரன் குடும்பத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் அவர் பெண்ணைக் கட்ட இவருக்கு விருப்பமில்லை. மனைவியின் விருப்பத்திற்காக பொறுமை காக்கிறார்!
பிரபுவுக்கும் வினித்தாவைப் பிடித்த மாதிரியும் தெரியவில்லை!
ஆனால் பிரபுவே பெரிதாக எதிர்க்காத போது அவரால் ஒன்றும் தடுக்க முடியவில்லை!
இப்போது பிரபு அபியை பாஸ்ட் ட்ராக்கில் காதலித்துக்கொண்டு இருப்பது தான் அவர்க்கு இன்னும் தெரியாதே!
இன்று, விஷ்ணு எழுபதாம் கல்யாணம் பற்றி பேசிய போது, காஞ்சனா உடனே அவர் அண்ணன் பரமேஸ்வரனுக்கு போன் போட்டு விவரம் சொல்லி, அவரைக் குடும்பத்துடன் வர சொல்லி விட்டாள்.
அவர்கள், பாண்டியிலிருந்து நேரே திருக்கடையூர் வந்து விடுவதாக சொல்லி, பின் தங்களுடன் சேர்ந்து திருச்சிக்கு வருவதாக சொல்லிவிட்டார்கள்.
அவர்கள் இங்கு வரும் போது அப்படியே வினிதா பிரபுவின் கல்யாணத்தை உறுதி செய்து, முடிந்தால் நிச்சயதார்த்தத்தை கூட, 3 மகன்களும் ஒன்றாக கூடியிருக்கும் இந்த சந்தர்ப்பத்திலேயே செய்து விட காஞ்சனா நினைப்பதும் அவருக்கு புரிந்தது!
அவருக்கோ இதில் துளியும் உடன்பாடில்லை!
இந்த அபி பெண்ணைப் பார்த்ததிலிருந்து ஏனோ அவர் மனம் , இவளை பிரபுவிற்கு பார்க்கலாம் என்றே தோன்றுகிறது! என்ன அருமையான பெண் அவள்!
யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ! ஒரு சின்ன ஏக்க பெருமூச்சுடன் அவரும் கண்ணயர்ந்தார்!
************
மறுநாள் காலை.
அபி, ப்ரோகிதர் WhatsApp பில் அனுப்பிய லிஸ்டோடு வந்தாள். வீட்டில் எல்லோர் நம்பரையும் இணைத்து ஒரு குருப் கிரியேட் பண்ணினாள்.
அந்த லிஸ்டை ஷேர் செய்து, யார், யாருக்கு என்னென்ன டாஸ்க் என்பதையும் அதில் போட்டு. கூடவே செக் லிஸ்ட் ஒன்றையும் ஷேர் செய்தாள்.
முதலில் டிரஸ் மற்றும் தாலி பர்சேஸ்.
விஸ்வநாதன் காஞ்சனாவிடம் “இன்று வீட்டில் மைக்க வேண்டாம் ஏதாவது ரெஸ்டாரண்டில் பார்த்துக்கலாம்” என்று விட்டார்.
அபி முதல் முதலாக சாரி கட்டப் போகிறாள்!
அவளும் பிரனிதாவும், போனில் நிறைய tailor மற்றும் பொட்டிக்குகளில் விசாரித்தார்கள், blouse தைக்க! urgent ஆர்டர் எடுக்க மறுத்தார்கள் பலர்!
ஒருவாறு சிங்காரத்தோப்பில் ஒரு கடையை பிடித்து ஆர்டர் கொடுத்தார்கள். blouse தைப்பதொடு, சாரியையும் பிரி ப்ளீட் பண்ணித்தருவதற்கும் ஒப்புக்கொண்டார்கள் அந்த கடையினர்!
ராணிம்மா உட்பட எல்லா பெண்களுக்கும் ஒரே கலரில் ஒரே மாதிரி காஞ்சிபுரம் சாரி எடுக்க முனைந்த போது, அவர் தீர்க்கமாக மறுத்து, வேறு புடவை வாங்கி கொண்டார்!
காவ்யா இன்னும் இங்கே வந்து சேரலை, அவர்கள் வர இன்னும் சில மணி நேரம் ஆகும் என்பதால், அவளை வீடியோ காலில் அழைத்து சாரி கலர் டிசைன் முடிவு செய்தார்கள்.
ராணிம்மா சாமிக்கும், கல்யாணத்திற்குமான பூ மாலைகளுக்கு ஆர்டர் செய்தார். பூஜை சாமான் லிஸ்ட் எடுத்துக் கொண்டு, ஒவ்வொன்றாக collect செய்ய ஆரம்பித்தார்!.
சீர் தட்டு சாமான்கள், ஜமுக்காளம் குத்து விளக்கு முதலியவற்றை மேலேயிருந்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்..
தாலி வாங்கும் போது, விஷ்ணு பரமேஸ்வரனை அழைத்து சொன்ன போது, அவர் உடனே “ஒரு லட்சம் காஞ்சனா அக்கௌன்ட்க்கு ட்ரான்ஸ்பர் செய்கிறேன்” என்று சொன்னார்
உடனே இடையிட்ட மீனாட்சியோ, “என்ன இருந்தாலும் , நாங்களே கடைக்கு வந்து வாங்கி தருவது போல் இல்லை, எல்லாம் அவசர கதியில் முடிவு பண்ணினால் இப்படி தான்” என்று குறை கண்டுபிடிக்க முயல, விஷ்ணுவோ கடுப்பானான்!
பற்றிக் கொண்டு வந்த கோபத்தில், அவனால் ஒன்றும் யோசிக்க கூட முடியவில்லை!
“அல்பம்! தாலிக்கு ஒரு லட்சம் எல்லாம் ஆகாதுன்னு கணக்குப் பார்க்குறா!” என்றார் காஞ்சனாவும் மெல்லிய குரலில் முணுமுணுப்பாக.
உடனே அபி தான் , “அந்த கடையின் QR code ஸ்கேன் செய்து, அவருக்கு WhatsApp பில்அனுப்பி, அவரை UPI பேமென்ட் (கூகிள் பே) பண்ண சொல்லுங்கண்ணா” என்றாள் விஷ்ணுவிடம். அவனும் அப்படியே செய்தான்.
பின் பரமேஸ்வரனை வீடியோ காலில் வர செய்து வாங்கிய தாலியையும் காட்டிவிட்டு pack செய்தார்கள்.
இந்த ஒரு இன்சிடென்ட்டை தவிர, மற்றபடி எல்லோரும் மகிழ்ச்சியாகத்தான் கல்யாணத்திற்கான வேலையில் ஈடுபட்டனர்!
மதிய உணவு ஒரு சைவ உணவகத்தில்!
சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது, அடுத்த டேபிளில் தங்களது 3 வயது பெண் குழந்தைக்கு படாத பாடுபட்டு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தனர் ஒரு இளம் தம்பதியினர். கொழு கொழுவென்று இருந்த அந்த குழந்தை போனை கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருந்தது!
இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த, அர்ச்சனாவின் கண்களில் தென்பட்ட ஏக்கம் அங்கிருந்த எல்லோருக்கும் புரிந்தது!
பின் அபி பேச்சை track மாற்றினாள். அவள் எது சொன்னாலும் பதிலுக்கு பிரபு வாரி விட, இவள் கோபித்து சிணுங்க, காஞ்சனா சமாதானப்படுத்த, என்று ஒருவாறு லஞ்ச் முடித்தனர்!
இதன் நடுவே, நம் ஹீரோ செய்த ஒரு ஊமைக்குசும்பை யாரும் அறியவில்லை!
அவன் நைசாக, அபி சாப்பிட்டுக்கொண்டிருந்த ஐஸ்கிரீம் கப்பை எடுத்து விட்டு தன் கப்பை மாற்றி வைத்து விட்டான், அவளறியாமல்!
காதல் பித்து கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக போய்கொண்டுருக்கு அவனுக்கு!
“அம்மா, இந்த புடவைகளை இப்படியே tailor கடையில் கொடுத்து விட்டு போகலாம்! அப்ப தான், அவர்கள், சீக்கிரம் blouse தைக்க முடியும்” என்றான் விஷ்ணு
“இல்லப்பா, முதலில், தாலி, டிரஸ் எல்லாத்தையும் பூஜை ரூமில் வைத்து கும்பிட்டுதான், கொடுக்கணும். அதுவுமில்லாமல், அளவு blouse வீட்டில் தான் இருக்கு, அதையும் சேர்த்து தான் கொடுக்கணும்” என்றார். காஞ்சனா.
இவர்கள் ஷாப்பிங் முடித்து விட்டு வீடு திரும்பிய போது, விஜயும் காவ்யாவும் வந்து விட்டார்கள்.
வழக்கம் போல் நலம் விசாரிப்புகளுக்கு பதில் அளித்தனர் இருவரும். விஜயும் சரி காவ்யாவும் சரி ரொம்ப பேசாத கொஞ்சம் அமைதியான சுபாவம் கொண்டவர்கள்.
கேட்டால் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்வான் விஜய்.
அவன் முதன் முதலில் அவனாக வாயைத் திறந்து அப்பாவிடம் தானாக வந்து பேசியதே அவன் திருமணத்திற்கு சம்மதம் கேட்பதற்கு தான்!.
மற்றபடி, அவனுக்கும் பாசமெல்லாம் உண்டு, வெளியே சொல்லத் தெரியாது.
அவன் மனைவி காவ்யாவும் அப்படியே இருப்பது கண்டு தான் அவருக்கும் ஆச்சர்யம்! ஒரு வேளை மொழி தான் தடையோ!
அவர்களும் அபியிடம் அறிமுகமாகி சிரித்து ஹாய் சொன்னார்கள்.
அபியோ, அவர்கள் இருவருக்கும் calm and cute அண்ணா and அக்கா. சுருக்கமாக cc அண்ணா cc அக்கான்னு பேரே வைத்து விட்டாள்.
ஆமா ப்ரநிக்கா, இவர்கள் இருவருமே இப்படி calm ஆக இருக்காங்க, விஜய் அண்ணா எப்படி காவ்யா அக்காகிட்ட ப்ரபோஸ் பண்ணி love பண்ணியிருப்பார்? என்று சந்தேகத்துடன் மெல்ல காதில் கேட்டாள். அது அருகிலிருந்த விஸ்வநாதனுக்கும் கேட்டு அவர் வாய் விட்டே சிரித்து விட்டார்! ஏனென்றால் அவர்க்குமே அந்த டவுட் ரொம்ப நாளா இருந்தது!
அதற்குள் காஞ்சனா வாங்கி வந்த எல்லாவற்றையும், பூஜை ரூமில் சிறிது நேரம் வைத்து எடுத்து பின், புடவைகளை எடுத்து தந்தார்.
பின் எல்லோரும் அளவு blouseகளை கொண்டு வந்து கொடுத்தார்கள்.
அபியிடம் அளவு blouse இல்லாதால், அவளுக்கு அளவு எடுத்து தான் தைக்க வேண்டும்.
“சிங்காரத்தோப்பு ஏரியாவுக்கெல்லாம் காரில் போனால் சரியாக வராது. ரொம்ப டிராபிக் ஆக இருக்கும் பார்கிங் கொஞ்சம் கஷ்டம்.two wheeler தான் சரி வரும்.” என்றார் விஸ்வநாதன்
“ஸ்கூட்டியை ராணிம்மா எடுத்துக் கொண்டு வெளியே போய் விட்டார்களே!’ என்றாள் அர்ச்சனா!
“அப்ப பிரனிதாவும் அபியும் ஒரு ஆட்டோவில் போய் வாங்க” என்றார் காஞ்சனா
“அம்மா எனக்கு periods ஆக இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. ரொம்ப அலைந்தால் எனக்கு சரியா வராது. வேணுமின்னா ப்ரபு அண்ணாவை பைக்கில் போக சொல்லுங்க” என்றாள் ப்ரனிதா!
அபியை எப்படி பிரபுவோடு பைக்கில் அனுப்புவது காஞ்சனா யோசிக்க, விஷ்ணுவோ அதற்குள் “அம்மா..அனுப்பி வைங்க அம்மா, இந்த காலத்தில் போய் இதெற்கெல்லாம் தயங்காதிங்க” என்றான்.
மனதிற்குள் அண்ணாவை வாழ்த்திய பிரபு, அம்மாவின் தலையாட்டுதலுக்காக, காத்திருக்க, “அவரும் போயிட்டு சீக்கிரம் வாங்க” என்றார்.
புடவைகள் அடங்கிய பைகளை எடுத்துக் கொண்டு, அபியும் அவனது KTM பைக் நிற்கும் இடத்திற்கு வந்தாள். அவள் ரொம்ப பைக்கில் யாருடனும் அவ்வளவாக போனதில்லை!
“இந்த வண்டியில் இருபுறமும் கால் போட்டு உட்கார்ந்தால் தான் சரியாக இருக்கும்” என்றான் பிரபு.
அப்படியே உட்கார்ந்து அவன் தோளைப் பிடித்துகொண்டாள் அபி!
தலைவருக்கோ சந்தோசம் தாங்க வில்லை! அவரவர் எடுக்கும் முடிவெல்லாம் எனக்கு சாதகமாகவே அமையுதே! என்று உள்ளுக்குள் ஒரே குஷி! இருக்காதே பின்னே!.
tailor கடைக்கு போன போது, அபியுடனும் பிரனிதாவிடமும் போனில் பேசிய பெண்மணி வெளியே சென்று இருந்தார். இப்போது அவர் மகன் இருந்தான்!
அவனிடம் புடவைகள் மற்றும் அளவு பிளவுசுகளைக் கொடுத்து ரெசிப்ட் கார்டு வாங்கி கொண்டார்கள்.
நாளை மாலை ரெடி ஆகும் என்பதை உறுதிப்படுத்தி கொண்டார்கள்.
“எனக்கு மட்டும் அளவு பிளவுஸ் இல்லை. புதிதாக அளவு எடுத்துத் தான் தைக்க வேண்டும்” என்றாள் அபி.
“சரி வாங்க” என்று நோட்பேட், டேப் சகிதம் வந்து அபியை அழைத்தான் அந்த இளைஞன்!
என்ன இவன் தான் அளவு எடுக்க போகிறானா? கொஞ்சம் ஷாக் ஆனான் பிரபு!
“ஏங்க லேடீஸ் யாரும் இல்லையா, நீங்க எடுக்கறீங்க?” என்றான் சற்று கோபமாக.
“அம்மா இருப்பாங்க ,இப்ப அவங்க வெளியே போயிருக்காங்க, வர கொஞ்சம் லேட் ஆகும். அதனால் தான் நான் எடுக்குறேன்.
இது எங்களுக்கு profession ப்ரோ. தப்பா எதுவும் நினைக்க வேண்டாம்” என்றான் அந்த இளைஞன் பொறுமையாகவே!
“இல்ல, நாங்க வெயிட் பண்றோம். உங்க அம்மா வரட்டும்.”
“இல்ல ப்ரோ, அவங்க வர இன்னும் ஒன்னவர் ஆகும். உங்க ஆர்டர் வேற urgent ஆர்டர். சீக்கிரம் கட்டிங்குக்கு அனுப்பினா தான் சொன்ன டைம்ல டெலிவரி கொடுக்க முடியும்!”
லேட் பண்ணாதீங்க.” என்றான் அந்த இளைஞன் இப்போதும் பொறுமையாகவே!
பின் பிரபுவின் முகத்தைப் பார்த்து விட்டு,
“ஒன்னு வேணா செய்யுங்க. உங்க பியான்சிக்கு நீங்களே அளவு எடுத்து சொல்லுங்க, எப்படி எடுக்கணும்னு நான் guide பண்றேன்” என்றான் சற்று குறும்பாக!
“என்னது! பியான்சியா? “ஆனந்த அதிர்ச்சி பிரபுவிடம்! முடிவே பண்ணி விட்டார்களா?
அபியும் கூட அதிர்ந்து விட்டு, “இல்லைண்ணா அது வந்து .. “ என்று ஏதோ சொல்ல முயல, அவளை முந்திக் கொண்டு, “ஓகே” என்றான் பிரபு அவனிடம்!