பிரகாஷ் , அவனே வந்து தன் குடும்பத்தை அழைத்து வந்தான். அவன் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து இருந்தது. ஒரு வருடத்தின் பின் தன் வீட்டில் தன் குடும்பம்… மனம் நிம்மதியாக இருந்தது.
சொந்த வீடு வந்தது எல்லோருக்கும் ஒரு ஆசுவாசம். சாலா யோசனையாகவே இருந்தாள், பெரிதாக ஆர்பாட்டம் எல்லாம் இல்லை. வீட்டை ஒரு முறை கண்களால் அலசினாள். அவ்வளவு தான்…
பிரகாஷ் எங்கும் நகர வில்லை. தன் குடும்பத்தையே தான் சுத்தி வந்தான். அவன் பார்வை மனைவியையே சுற்றி வந்தது. பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்பிட, உறங்க, அரட்டை அடிக்க என்று நிம்மதியாக பொழுதை கழித்தான். மனதின் அலைக்கழிப்பு குறைந்தது.
பயம் என்ற ஒன்று இல்லாமல் நிம்மதியாக வாழ்வது எவ்வளவு சுகமாக இருக்கிறது. மனைவி கையால் சாப்பாடு, பிள்ளைகள் உடன் உறக்கம், சொர்க்கம் கூட தோத்து போகும். சாலா வந்ததும் பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கு ஏற்றினாள். சாம்பிராணி வாசம், மல்லிகை மணம், பளிச்சென்ற விளக்கு ஒளி, கமகமக்கும் சாம்பார், அப்பளம் , வடை என்று வீடு புது பொலிவு தான்.
முன்னவே உணர்ந்தாலும், இன்று தெளிவாக கண்டான். ஒரு வீட்டில் மனைவியின் அவசியத்தை. சாலா விட்டு சென்ற ஒரு வருடத்தில் ஒரு நாளும் வீடு இவ்வளவு மங்களமாக இருந்தது இல்லை. காலையில் வெறும் வயித்துல குடிக்க சீரக தண்ணி தயாராக இருந்தது.
பிள்ளைகள் காலை கடனை முடித்து கொண்ட பின் எடுத்து கொண்டார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்து சென்றார்கள். கிச்சனில் சாப்பாடும், ஃப்ரிட்ஜ்ல் பழமும், பாலும் எப்போதும் இருந்தது. வீடு முழுக்க இறைந்து கிடக்கும் பொருட்கள் எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை. அவ்வளவு நேர்த்தி, சுத்தம்.
இன்று தான் பிரகாஷ் நிம்மதியாக உணர்ந்தான். டென்ஷன் இல்லை, படபடப்பு இல்லை, அரைகுறை பசியில் அலைய வில்லை… தனக்கான வாழ்வு எது என்று தெரிந்தது. நிம்மதியான உறக்கம், வயிறார உண்ணும் உணவும் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை…
இந்த ஒரு வருடமும் ஷாலினி வந்து போவாள். அது ஒரு மாய பிம்மம், ஏதோ ஒரு சுழல் போல தான் இருக்கும். அவர்களின் தேவையும், ஆர்வமும் வேற மாதிரி தான் இருக்கும். இது போல தெளிவான நிரோடையாக கலங்கள் இல்லாமல் இருக்காது.
பிட்சா, பார்க்கர், ஒயின், பியர், பாட்டு, வெப் சீரியஸ் என்று தான் பொழுது போகும்… அது இல்லையா தங்களுக்கான தேடல், அவ்வளவு தான். இது ஒரு நிரந்தரமில்லாத உறவு என்பதாலோ என்னவோ, அவர்களின் தேவை வேற மாதிரி தான் இருந்தது.
சாலா அமைதி, தெளிவு. மண்பானையில் இருக்கும் நீர் போல அவ்வளவு குளிர்ச்சி. ஆனால், ஷாலினி அலை போல பொங்கி எழுபவள். கட்டுப்பாடு என்ற ஒன்று கிடையாது கட்டுப்படுத்தவும் முடியாது… பிரகாஷ் மனம் ஷாலினியை ஒதுக்க நேரம் பார்த்தது. அவளின் ஆர்ப்பரிப்பு அவனில் அடங்கி விட்டது. முழு நேர போதை ஒரு ஒவ்வாமையாக இருந்தது.
“அப்பா, நாம வெக்கேசனுக்கு டெல்லி தாஜ்மஹால் போவோமா…” என்று அஞ்சு ஆரம்பிக்க.
“இதுக்கு முன்னாடி நீ பார்த்ததே இல்லையா அஞ்சு?… ரெண்டு வருசம் முந்தி கூட நாம போனோம்…” என்று அஜய் சொல்ல. சாலா மெளனம் மட்டுமே…
“ஆமா… ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு எல்லாம் போயாச்சு. அப்புரம் எங்க போலாம்… ஆங், அப்பா… நாம ஒரு தடவை கூட வெளிநாடு போகலை. இந்த டைம் போகலாமா?…”
பிரகாஷ் பார்வை மனைவியை நோக்கி பாய, சாலாவும் கணவனை தான் தீர்க்கமாக பார்த்தாள்.
எச்சிலை விழுங்கி கொண்டவன், “அடுத்த வருடம் போலாம் செல்லம். இந்த வருசம் அப்பா கிட்ட பணம் கொஞ்சம் குறைவா இருக்கு…” குற்ற உணர்வோடு தான் பிரகாஷ் சொன்னான்.
ஷாலினி உடன் ஐரோப்பாவின் எல்லா இடத்திற்கும் போய் வந்து விட்டான். ஆனால், ஒரு முறை கூட தன் குடும்பத்தை அழைத்து செல்ல வில்லை. அது தோணவும் இல்லை. தற்போது மகள் ஆசையாக கேட்கும் போது கையிருப்பு இல்லை.
“பாப்பா… அண்ணன் காலேஜ் போய் படிச்சு, நல்ல வேலைக்கு போய் உன்னை, அம்மாவ எல்லாம் வெளிநாடு கூட்டி போறேன்…” என்று அஜய் பெரிய மனிதனாக சொல்ல.
“நீங்க தான் வெளிநாடு எல்லாம் போய் வாரீங்களே அப்பா… நாங்க தான் ஒரு தடவை கூட போகலை…” மகன் சாதரணமாக தான் சொன்னான்.
குற்றமுள்ள நெஞ்சு குத்தியது. வேலை விசயமாக தனியே சென்றுள்ளான். பல முறை ஷாலினி உடன் சென்று உள்ளான். ஒரு முறை கூட மனைவி, பிள்ளைகள் உடன் செல்ல வேண்டும் என்று ஏன் தோன்ற வில்லை. தன்னையே கேட்டு கொண்டான்.
அடுத்த நாள் காலையில் ஷாலினி வந்து விட்டாள். தொடர்ந்து நான்கு நாள் பிரகாஷ் தன்னை காண வரவில்லை, போனும் எடுக்க வில்லை என்றதும் ஒரு ஆத்திரம். காரணமே இல்லாமல் சாலா மீது ஒரு வெறுப்பு. அப்படி என்ன அவள் உசத்தி?…
“அக்கா…” ஆர்ப்பாட்டமாக அழைத்து உள்ளே வந்தாலும், ஒரு பிரதிபலிப்பும் சாலாவிடம் இல்லை.
ஷாலினியும் கலகலப்பாக பேசினாள், அஞ்சு உடன் விளையாடினாள். ஆனால், பார்வை மொத்தமும் பிரகாஷ் மீது தான். முன்பு சாலா இருந்தாலும் தன்னை ரசிக்கும் மறைமுக கள்ள பார்வை பிரகாஷிடம் இல்லை. ரொம்ப கவனமாக தவிர்த்தான்.
இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தை சாலா கவனித்து தான் இருந்தாள். முன்பானால் தெரிந்து இருக்காது. இப்போது எல்லாம் அறிந்தாள். பிள்ளைகள் வெளியில் சென்று இருக்க, சாலா காய் வெட்டி கொண்டு இருந்தாள். மனைவியின் நேர் எதிரே பிரகாஷ் அமர்ந்து இருந்தான். அவனை மறைத்த படி வந்து அமர்ந்தாள் ஷாலினி.
அவளுக்கு ஏனோ பிரகாஷ் பார்வை மனைவியை தொடர்வதை ஏற்று கொள்ள முடியவில்லை. விசாலாட்சி கணவனை தான், நாம் எடுத்தோம் கொண்டோம் என்பது மறந்து… தன்னையே சுற்றி வந்தவன் பார்வை சாலாவை பார்ப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை. பிரகாஷ் ரசனை தனக்கு மட்டுமே உரியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.
“அக்கா… நீங்க ஊர்ல இல்லாதப்ப நான் தான் மாமாவை பார்த்துகிட்டேன்…” பல்லை படித்தான் பிரகாஷ்.
“ஓ…” என்றாள் சாலா.
“ஒரு நாள் மாமாக்கு உடம்பு முடியாம போச்சு. பக்கத்துல யாரும் இல்லை. உங்க இடத்துல இருந்து நான் தான் அவரை கவனிச்சேன்…” பிரகாஷை பார்த்து கொண்டே ஷாலினி சொல்ல, அவனுக்கு படபடப்பு எகிறியது.
அவனிடம் இவள் ஏதோ கண்ணை காட்டினாள், அவன் அதிர்ந்து போய் அமர்ந்து இருந்தான். சாலா , தன்னை மிக பெரிய முட்டாளாக, ஏமாளியாக உணர்ந்தாள். இந்த மெளன நாடகம் முன்பும் தொடர்ந்து இருக்க வேண்டும். தனக்கு தான் எதுவும் தெரியவில்லை…
அவர்களின் கண் ஜாடை தொடர, சாலா கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தத்தை, வலியை ஏற்றாள். ஷாலினி ஆப்பிள் எடுத்து கட் பண்ணிய படி பிரகாஷை பார்த்தாள்.
பிரகாஷ் ஓர பார்வை மனைவி மீது தான். ஷாலினி அவனை முறைத்தவாறு ஆப்பிளை வேகமாக வெட்ட, பக்கத்தில் இருந்த காயை எடுக்க கை நீட்டிய சாலாவின் மணிக்கட்டில் ஆழமாக வெட்டு பட்டது.
ஆ… ஒரு பெரிய அலறல் சத்தம். ஐயோ… பயந்து நடுங்கி போனாள் ஷாலினி. பிரகாஷ் வேகமாக வந்து மனைவியின் கையை பிடிக்க, அவன் கையை தட்டி விட்டவள்…
“ஏன் இப்படி பண்ணீங்க… உங்க ரெண்டு பேரோட அசிங்கம் தெரிஞ்சும் வாய மூடி தான இருந்தேன். எங்கக்கா மாதிரி நானும் செத்து போன எம் பிள்ளைக அனாதையா போகும்ன்னு பயந்து தான் உயிரை கையில பிடிச்சு ஊர விட்டு போனேன். அப்படி இருந்தும் இவளோட கூத்தடிக்க என்னை கொலை பண்ண பாக்குறீங்களா?…” பெருங்குரலில் சாலா கத்த.
அது ஒரு அபார்ட்மெண்ட் என்பதால் வாசலில் நின்று இருந்த சுதா காதில் தெளிவாக விழுந்தது.
“ஐயோ! சாலா…” என்று பதறி அடித்து உள்ளே ஓட, அவளை பார்த்த இன்னும் சிலரும் எட்டி பார்த்தார்கள்.
சாலா கையில் இரத்தம் ஒழுக நிக்க, அடுத்து தாமதிக்காமல் உள்ளே வந்து விட்டார்கள்.
ஆட்கள் வந்தது, கூட்டம் கூடியது என்று எதுவுமே பிரகாஷ் நினைவில் இல்லை. தன் அந்தரங்க வாழ்க்கை மனைவிக்கு வெட்ட வெளிச்சம் என்பதிலேயே உறைந்து நின்று விட்டான். அதே நிலை தான் ஷாலுவோடதும், கூடுதலாக அவள் கையில் கத்தியும் இருந்தது.
“ போலீஸ்க்கு போன் பண்ணுங்க… ஏன் பிரகாஷ் ஏதோ தப்பு நடந்து போச்சு திருந்துவீங்கன்னு பார்த்தா… கடைசில உங்க கள்ள காதலிய, பொண்டாட்டியா மாத்த சாலாவா கொலை பண்ற அளவுக்கு போயிட்டீங்களா…” என்று சுதா கத்த
“ஐயோ இல்லங்க, நான் எப்படி சாலாவ… அவ என் பொண்டாட்டி…” என்று பிரகாஷ் சொல்லும் போதே,
“அட நிறுத்து ப்பா… எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னா நினைச்சியா… ஒன்னா வண்டில போறதும், ராத்திரியில இவளை வீட்டுக்கு கூட்டி வாராதும், ஒரே மாதிரி சட்டை போடுறது, கை பிடிக்கிறதுன்னு எல்லாம் நாங்களும் பார்த்து தான் வாறோம். அவங்க குடும்பம்ன்னு ஒதுங்கி நின்ன, ஒரு அப்பாவி பொண்ணை கொலை பண்ற அளவுக்கு போவீங்களா…” பக்கத்து வீட்டு சாரதா பாட்டி எகிற
“இவங்க பண்ண அக்கிரமம் தாங்க முடியாம தான் அந்த பொண்ணு ஊரை விட்டே போச்சு போல…” என்று ஒருத்தரும்
“கிளி மாதிரி பொண்டாட்டி இருக்க, குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி தேவையா…”
“பாவம் சாலா… ரொம்ப அப்பாவி. அவளுக்கு போய் எப்படி துரோகம் பண்ண மனசு வந்துச்சு…”
“வாழ்க்கைய இழந்து வந்தவன்னு சாலா பாவம் பார்த்து உள்ள விட்டதுக்கு, அவ அடி மடியிலே கையை வச்சுட்டாளே…” என்று அடுத்தடுத்து கூட்டம் கூடி இவர்கள் விசயம் பேசு பொருள் ஆனது.
இதற்கு இடையில் அதிக வலியிலும், இரத்த போக்கிலும் சாலா மயங்கி விழ, விசயம் கை மீறி போனது. மருத்துவமனையில் அனுமதிக்கும் போதே போலீஸ் கேஸ் என்று பதிவு செய்து தான் உள்ளே விட்டார்கள்.
சுதா எதையும் மறைக்க வில்லை. சாலாவின் நிலை பார்த்து கொதித்து போனவள், தான் பார்த்ததை ஒன்று விடாமல் சொல்லிவிட்டாள். விளைவு, பிரகாஷ், ஷாலினி இருவரும் போலீஸ் கஸ்டடியில் இருந்தார்கள்.
பிரகாஷ் கைகளால் தலையை தாங்கி அமர்ந்து இருந்தான். முதற் கட்ட அதிர்ச்சியில் இருந்து வெளி வந்தவனுக்கு, அடுத்து எல்லாம் மீள முடியாத அதிர்ச்சி தான். ஷாலினி நடுங்கி போய் சுவரோடு ஒன்றி போனாள். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. விசாரணைக்கு இன்னும் எடுக்க வில்லை.
பிரகாஷ் நண்பன் வசந்தன் அவசரமாக உள்ளே வந்தான்.
“டேய் பிரகாஷ், என்னடா இது?…”
“நான் ஒன்னுமே பண்ணாலட… சாலாவ போய் நான் எப்படிடா. என்னை வெளிய விட மாட்றாங்க டா…”
“விசயம் கேள்வி பட்டு தான் ஓடி வந்தேன்… அங்க எல்லாரும் என்னன்னவோ சொல்றாங்க… நீ, இந்த பொண்ணு… ம்ச்ச் என்ன கண்றாவி…” என்று வசந்த் கேட்க.
மெளனமாக தலை குனிந்தான் பிரகாஷ்.
“டேய் நிஜமாவாடா… நீயாட இப்படி, சாலாக்கு என்னடா குறை. அப்போ இது எல்லாம் நிஜம் தானா…”
“ஐயோ இல்லை வசந்த். எப்படி சொல்ல, நான் தப்பு தான். தப்பு பண்ணிட்டேன்டா, ஒத்துகிறேன். ஆனா, சாலாவ நான் ஒன்னுமே பண்ணலடா… என் மனைவியை நான் எப்படி கொலை செய்வேன். பிளீஸ் வசந்த் என்னை நியாவது புரிஞ்சுக்கோ, நான் எதுவும் பண்ணலடா…” கண்களின் நீர் நிறைந்த நின்றது.
“நீ சொல்றத யாருடா நம்புவா…”
“என்னை எப்படியாவது வெளிய கொண்டு வாடா… பிளீஸ் நான் சாலாவ பார்க்கணும்…” என்று பிரகாஷ் சொல்லும் போதே, ரெண்டு லேடி போலீஸ் உள்ளே வந்தார்கள்.
“சார், அந்த அம்மா இன்னும் கண்ணு முழிக்கல… உசுரோட வந்தா தான் விசாரிக்க முடியும்…” என்று சொல்லி கொண்டிருக்க
பிரகாஷ் அருகில் வந்தவன், “சார் நான் எந்த தப்பும் பண்ணல. என்னை வெளிய விடுங்க. நான் என் மனைவியை பார்க்கணும். தெரியாம கத்தி பட்டு காயம் வந்துருச்சு சார். இதுல பிளான் எதுவுமில்லை. என் மனைவியவே நான் ஏன் சார் கொலை பண்ணனும்…”
அந்த போலீஸ் அதிகாரி “அப்போ அவங்க யாரு…” என்று ஷாலியை பார்த்து கேட்க.
அது என்று தயங்கியவன், “எங்க அத்தை பொண்ணு…”
“அது மட்டும் தானா…”
பிரகாஷ் மெளனமாக நிற்க.
“ கள்ள காதலா…” என்று கேட்க. பிரகாஷ் வெட்கி தலை குனிந்தான்.
“உங்களை மாதிரி ஆயிரம் கேஸ் நாங்க தினமும் பாக்குறோம்… எங்களுக்கு தெரியாததா, இப்போ எல்லாம் இந்த மாதிரி கேஸ் தான் நிறைய வருது. கள்ள காதலுக்காக புருசனை கொல்றது, பெத்த பிள்ளையை கொல்றது, பொண்டாட்டியை கொல்றது… நாடே சீர் கெட்டு போச்சு போ…”
“உனக்கு எல்லாம் என்னையா குறைச்சல். நல்ல வேலை, சம்பளம், பொண்டாட்டி, பிள்ளைன்னு நல்லா தான இருக்க. அப்புறம் எதுக்கு இந்த அசிங்கம் புடிச்ச வாழ்க்கை…”
“சார் நான் எந்த தப்பும் பண்ணல. நான் என் மனைவியை பார்க்கணும் பிளீஸ் என்னை வெளிய விடுங்க…” கெஞ்சி நின்றான் பிரகாஷ்.
“ யோவ், என்ன நடக்குதுன்னு உனக்கு புரியுதா இல்லையா… நீ கொலை கேஸ்ல மாட்டி நிக்கிற. அதுவும் கள்ள தாதலுக்காக, சொந்த பொண்டாட்டியவே கொலை பண்ண முயற்சி பண்ணி இருக்க. அதுக்கு உனக்கு உடந்தை உன் கள்ள காதலி தான்…”
“சாதாரண குடும்ப சண்டையா இருந்தா கூட நாங்களே பேசி சரிகட்டலாம். இது கொலை கேஸ். அதுவும் பொண்ணுக விசயம். தீயா பரவும், பின் வாங்க முடியாது. நம்ம நாட்டுல பொண்ணுங்களுக்கு தனி சட்டம், தண்டனை எல்லாம் உண்டு. நீ தப்பிக்க முடியாது… அந்த பொண்ணு எழுந்து வந்தாலும், விசாரணை, கேஸ்ன்னு போக தான் செய்யும்… ஏதாவது லாயரை ஏற்பாடு பண்ணி போ…” என்று விரட்ட…
அடுத்து என்ன என்பது தெரியாமல் திகைத்து நின்றான் பிரகாஷ். போன் பேசி வந்த வசந்த்,