“அப்போ நான் போய் பேசறேன்…” என சுனந்தா வேகமாய் திரும்ப கௌரவ்வும் கௌசல்யாவை தூக்கிக்கொண்டு எழுந்து நிற்க சுனந்தாவின் நடை அப்படியே நின்றது.
“இதென்ன ஒரு எட்டுதான் வச்சாங்க. ப்ரீஸ் மோட்?…” என்று அனன்யா பார்க்க, அங்கே கௌரவ் சுனந்தாவை பார்த்த ஒற்றை பார்வையில் அவள் மீண்டும் அமர்ந்துவிட்டாள்.
“இவங்க எப்போ தான் நார்மலா இருப்பாங்க?…” என்ற கேள்வி வேறு.
அனன்யாவும் பிரத்யூக்ஷாவும் ஹைபை அடித்துக்கொள்ள, வெண்ணிலாவிற்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
“தேவையா இது? நான் தான் சொன்னேனே?…” என்றதோடு தலையை திருப்பி பார்க்க அவர்களை நோக்கி தான் வந்துகொண்டிருந்தான் கௌரவ்.
“ஓகே அனுக்கா நாம நம்ம வேலையை பார்ப்போம்…” என பிரத்யூக்ஷா எழுந்துகொள்ள,
“ஆமாமா, நானும்…” என்று அனன்யாவும் எழுந்துவிட்டாள்.
“இதென்ன நீங்களும் ஓடறீங்க?…” என்ற சுனந்தாவை இழுத்துக்கொண்டு அவர்கள் நகர்ந்ததும் கௌரவ் வெண்ணிலாவிற்கு பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்தான்.
“ம்க்கும்…” என தொண்டையை செருமிக்கொண்டு அவன் அமர, அவன் வருவதில் இருந்து வந்து நின்றதில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் விழிகள், தன்னருகில் அமரவும் லேசாய் சாய்ந்தது.
“நீயெல்லாம் கேள்வி கேட்கிற பாரேன்…” என்ற வெண்ணிலா,
“எனக்கு என்ன எடுக்கன்னு தெரியலை. இதை பார்த்தா இன்னொன்னு பெட்டரா தெரியுது. அத பார்த்தா அதைவிட இன்னொன்னு பெட்டரா இருக்கு. இதுல இந்த சில்க், இந்த வகை, இந்த ஜரின்னு சொல்லி எனக்கு குழப்பறாங்க. நான் எப்படித்தான் எடுக்கறது?…” என்று படபடவென்று பேச, கௌரவ்வின் இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகை.
“அதெல்லாம் தெரியும் மிஸ்டர் கௌரவம். ஸ்பேனர், க்ரூஸ், பஸ், டீசல், பெட்ரோல்ன்னு வகை வகையா விதவிதமா தெரிஞ்சவருக்கு புடவை பத்தி என்ன தெரியும்ன்னு கேட்டேன்…” என கன்னத்தில் கைவைத்தபடி கேலியாய் கேட்க,
“ஓஹ்…” என்றான் சிறு தோள் குலுக்களுடன்.
“பொண்ணுக்கு புடவை பிடிக்கனும்ன்னு சொல்லி தான் கூட்டிட்டு வந்தாங்க. ஃபார் எ சேன்ச், ஏன் மாப்பிள்ளை எடுத்து தர கூடாதா? எங்க நீங்க செலெக்ட் பண்ணுங்க பார்ப்போம், பிரஸ்டீஜ் குக்கர் விசில் எப்படி அடிக்குன்னு தெரிஞ்சுக்கறேன்…” என்று இன்னுமே கேலியாய் கூற,
“ஆஹாங்…” என்றவன் பார்வை அங்கிருந்த புடவைகளை அலசியது.
புடவைகள் அனைத்தையும் பார்த்தவன் திரும்பி வெண்ணிலாவையும் பாதாதிகேசம் அளவிட்டான்.
குப்பென்று தீ பற்றிய உணர்வு குளுமையாய். உள்ளங்கால்கள் கூச பாத விரல்களை உள்மடித்து சட்டென்று விழிகளை தாழ்த்தி புடவைகள் பக்கம் திருப்ப கௌரவ் இதழ்களில் குறுஞ்சிரிப்பு.
“பார்த்தாச்சு…” என்றான் அவன்.
“என்ன?…” நிலா திரும்ப, கௌரவ் புடவை எடுத்து போடுபவரை அழைத்து மேலே அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றை காண்பித்தான்.
முழுவதும் ஒரே நிறத்திலான புடவை. வெள்ளியும், ஆங்காங்கே தங்கமுமாய் சரிகை வேலைபாடுகள்.
டீ ப்ளூ நிறத்தில் உடல் முழுவதும் ஜரிகைகள் மின்ன அள்ளிக்கொண்டது அந்த புடவை.
அவர் புடவையை எடுத்ததும் விழிகளால் நிலாவிடம் தரும்படி கண்ணசைத்தவன் அவளை பார்த்தான்.
“பெர்பெக்ட்…” என்று அவள் கையில் வாங்கியதும் கௌரவ் கூற,
“இதை விரிச்சு காமிங்களேன்…” என்றார் அங்கே வந்த கௌசல்யா.
“இதெல்லாம் பேஸ்டல் கலர்ஸ். சட்டிலா இருக்குமேன்னு நான் தான் ப்ரைட் கலர்ஸ் பார்க்கலாம்ன்னு சொன்னேன்…” என்றாள் அனன்யா.
புடவை விரிக்கப்பட்டு காண்பிக்கப்பட அதன் அழகு அனைவரையும் அசத்தியது.
அதிலும் வெண்ணிலாவை நிற்கவைத்து அதனை மேலோட்டமாய் கட்டி காண்பிக்கவேறு செய்ய கண்ணாடி பிம்பத்தில் கௌரவ்வின் பார்வை.
இப்போதும் சாதாரணம் போன்ற பார்வை தான். ஆனாலும் அவனுக்கு பிடித்து அவன் எடுத்து தந்தது என்பதிலேயே வெண்ணிலா திருப்தியானாள்.
“இதை பேக் பண்ணிடுங்க…” என்று கௌரவ் கூறவும் அந்த புடவையை மடித்து வைக்கப்பட அதன் மீது நான்கைந்து ஆசை மிட்டாய்கள் வைக்கப்பட்டது குழந்தை கௌசல்யாவின் கையினால்.
“கௌவாப்பா ஸ்வீட்…” என்று அதில் வைத்துவிட்டு தனக்கு ஒன்றுமட்டும் எடுத்துக்கொள்ள, என்னவோ மனம் நெகிழ்ந்தது காரணமே இன்றி.
ஆசிர்வதிக்கப்பட்டதை போல் ஒரு உணர்வு. கௌரவ் அதில் தானும் ஒன்றை எடுத்துக்கொள்ள, வெண்ணிலாவும் உணர்வுக்குவியலாய் அதனை எடுத்துக்கொண்டாள்.
அந்த இடத்தில் தன்னை பெற்றவர்களும் இருப்பதை போலொரு உணர்வு அவளிடம். கண்கள் கலங்கி போனது.
“அச்சோ, அழறாங்க மூன். பேபி இருக்கேன்ல…” என்ற குழந்தை கௌரவ்விடமிருந்து வெண்ணிலாவிடம் தாவ, தானும் அள்ளி அணைத்துக்கொண்டாள் பிள்ளையை.
“கௌவப்பாக்கு பேபி அம்மா. கோல்ட் மூனுக்கு அம்மா இல்ல. வேணா அம்மாவா பேபி வரட்டா? தாச்சு, இங்க தாச்சு…” என்று கேட்டு தன் தோளில் சாய்ந்துகொள்ள கூறி அவளின் கன்னம் பற்றி குழந்தை கௌசல்யா சாய்த்துக்கொள்ள, உடைந்து போனாள் வெண்ணிலா.
பார்த்தவர்கள் அனைவருமே கலங்கி போயினர். விழிகளில் மெல்லிய நீர் படலம் பரவியது.
இதனை எல்லாம் வெறுப்புடன் பார்த்தபடி நின்றிருந்தார் ராம்நாத். மனதில் கருவிக்கொண்டே நயவஞ்சகமாய் திட்டமிட்டபடி.
திருமணத்தை நிறுத்தவேண்டிய பிரம்மாஸ்திரமாய் அவர் எதை நினைத்தாரோ அதனையே அஸ்திரமாய் திருப்பி அவரின்றி கௌரவ்வின் ஆசைபடி அவனின் திருமணம் கோலாகலமாய் அரங்கேறியது.
முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசிகளுடன், எங்கோ காற்றில் கலந்திருக்கும் அவன் தாயின் ஆன்மாவுடன், தன்னை சுற்றிலும் தனக்கென வாழும் ஜீவன்களுடன் அவனுக்கானவளை தன் கரம் சேர்த்துக்கொண்டான் கௌரவ்.
“மிஸ்டர் கௌரவ் தங்கவெண்ணிலா…” என்று கண் சிமிட்டி புன்னகைத்த வெண்ணிலவை அளவான புன்னகையோடு கையில் வைத்திருக்கும் திருமாங்கல்யத்தோடு அவன் நெருங்கி முதல் முடிச்சிட்டான்.
“எனக்கு கட்டிக்கனும் போல இருக்கு…” நிலா கூற, கௌரவ்வின் முகத்தில் சட்டென்று ஒரு திகைப்பு.
“ப்ச், தாலியை சொன்னேன். ஏன் நான் கட்டினா வேணாவா?…” என்றதும் சட்டென்று வரிசைப்பற்கள் மின்ன கௌரவ்வின் இதழ்களில் ஒரு விரிந்த புன்னகை.
அவனின் கைகள் வகிட்டில் பொட்டு வைக்க என்று நிலாவின் கழுத்தை சுற்றி வளைத்திருக்க, அவனுக்கேற்ப முகம் திருப்பியவள் விழிகளில் புதுமயக்கம்.
இருவரின் மனமும் நிறைந்திருக்க, அதன் தாக்கம் முகத்தில் பொலிவை கூட்டியிருந்தது.
வகிட்டில் அழுத்தமாய் குங்குமத்தை கௌரவ் சூட்டியதும் மீண்டும் அட்சதை பூக்கள் அவர்கள் மேல் பூமாரியாய்.
“கௌவாப்பா…” என்று குழந்தை இரு கைகளிலும் அட்சதை பூக்களை அள்ளி தூவ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே, லேசாய் தலை குனிந்து குழந்தையின் ஆசிர்வாதத்தை ஏற்றுக்கொண்டனர்.