“இப்ப எல்லாம்பெரும்பாலும் யாரும்பொண்ணுவீட்லபோயி, பொண்ணுபாக்கறதில்லபானு.… கோயில், ஏதாவதுபங்ஷன்இல்லைனா ஒருநல்லஹோட்டல்இப்படி தான்பாத்துக்கிறாங்க”.. என ஆனந்த் கூற,
“அது சரி!… உன் கல்யாணமும், என்கல்யாணமும்ஒரு முப்பதுவருஷத்துக்குமுன்னாடிநடந்திருக்குமா, டேய்என்னோடது நாலு வருஷம், உன்னது முடிஞ்சு இரண்டுவருஷம்தான்ஆச்சு… நாம என்ன இப்பிடியா பொண்ணுபாத்தோம்… நாலு வருஷத்துக்குள்ள என்ன மாறிடுச்சு” என மீண்டும்கேட்க,
“ஐயோஅண்ணி,நம்மகல்யாணம்எல்லாம் மாமா பாத்து, முன்னநின்னுநடந்தது.. ஆனாஉங்கசின்ன தம்பி, அவரே பொண்ணுபாத்துட்டுவந்து மாமா கிட்ட சொல்லி,நாம வந்து பாக்குறது.. அது தான்மாறி இருக்கு” என ஆனந்தி நக்கலாககூறி சிரிக்க,
அவனை திரும்பிஒருபார்வைபார்த்தவர்மனதிலோ, பரவாயில்லைஅந்தபுள்ளைக்குநல்ல ரசனைஇருக்கு, மத்தவிங்களாட்டம்பார்க், பீச் னுபோகாமகோயிலுக்குவருபவளை, பார்க்காமலேயேஒரு சின்ன நல்ல எண்ணம்தோன்றியதுமனதில்….
“அது சரி!.. இப்ப என்ன இந்த இடம்எப்படிஇருக்குனுபாக்கவாநாம வந்தோம்.. டேய் பிரணவ், எங்கஅவவந்துட்டாளா, இல்லியா?… இன்னும்எத்தனை நேரம்நாமகாத்திட்டிருக்குறது?”…..
“அதானே!.. இதே நாம் அவங்கவீட்டுக்குபோய் பார்க்கறதாஇருந்தா, இன்னேரம்அவங்ககாத்திருப்பாங்க”…என ஆனந்தி கூற,
“ஆமாண்டாதம்பி,உங்கஅக்காகாரிஅவநாத்தனார உனக்குகட்டி வைக்கபிளான்பண்றா, உன் அண்ணிக்காரிஅவதங்கச்சியகட்டி வைக்கநினைக்கிறா.. உன் கல்யாணம்முடியறதுக்குள்ள, எந்தபிரச்சனையஎங்கஇருந்து கூட்டிட்டுவருவாளுகனேதெரியல”
“ஏம்மா, தம்பிக்குஅவ்ளோடிமாண்டா” என ஆனந்த்கேட்டுக்கொண்டிருக்கும்போதே,..
“ஓஓ.. அப்படிங்களா!, ரொம்பநன்றிங்க” என்றவர்மனதில், அப்பாடி ஒருவழிகிடைச்சிருக்கு, இதவெச்சேஇந்த கல்யாணத்தநல்ல படியாக நடத்தி முடிச்சுடனும், முருகா!….. நீ தான்துணைஇருக்கணும்சாமி என அவசர வேண்டுதல்ஒன்றை வைத்தார்..
“அதுஅப்படிஇல்லீங்கசார்,உதவி செஞ்சவுங்களுக்கு அது சின்ன விஷயம்.. ஆனாஎங்களுக்குஅது எவ்வளவு பெரியஉதவி” என சோமு கூற,கோமதியும் அதை ஆமோதித்தார்.
“அப்புறம்சார்,இவ என்சம்சாரம்கோமதி, இவன் பெரியவன் ஆனந்த்வாத்தியாராஇருக்கான், அது அவன் சம்சாரம்ஆனந்தி, இவ என் பொண்ணுபானுமதி வீட்ல தான்இருக்கா, மாப்பிள்ளையும்பேத்தியும், வெளியேகடையிலநிக்கறாங்க, அப்பறம்இதோ சின்னவன்உங்களுக்குதான் தெரிஞ்சுருக்கே” என்று கூறினார்.
“இவங்கஎன் மனைவிமாதவி,சொந்தமாஃபேஷன்டிசைனிங்கடை வெச்சுநடத்திட்டுஇருக்காங்க, ஒரே பொண்ணுயாழினி, அதோ அங்க நிக்கறா” என கைகாட்ட,
அவர்காண்பித்ததிசையில்அனைவரும்பார்க்க, அங்கு ஒரு ஏழு, எட்டுவயதில்பத்துசிறுவர்கள், அவளை சுற்றி நின்றுஐஸ்கிரீம்வாங்கி தர சொல்லி கொண்டிருந்தனர்..
இளம் பச்சையும், மாம்பழமஞ்சளும்கலந்த அம்பர்லாசுடிதார்ஒன்றில்,தோளுக்கு கொஞ்சம்கீழே இருந்த கூந்தலைலேயர்கட்செய்திருந்தாள். பார்த்தவுடன்பிடித்துவிடும் குழந்தைத்தனமானமுகம் குறை சொல்ல முடியாத தோற்றம்என இருந்தாலும்… ஒவ்வொருவரின்பார்வையிலும், ஒவ்வொருவிதமாய்தெரிந்தாள்…
ஒருவருக்குஆராய்ச்சி, அடுத்தவருக்குஅன்பாய்,இன்னோருவருக்குதிமிராய், அலட்டலாய் தெரிய ஒருவனுக்குமட்டுமேஅவள்ரசனையாய்தெரிந்தாள்…….
பிரணவின் பார்வை அவள் மீதே இருக்க,ஆனந்த்தான்அவன் தோளை தட்டி, “ஐயாராசா போதும்,இந்தஉலகத்துக்குவா” என்றான்.
“நல்லஅழகானபொண்ணுங்கசார்” என்றார் சோமு.
“ப்பா, இவர்தான்யாழினிஅப்பா” என ப்ரணவ்சுந்தரை காட்ட,
ஒரு நொடிமுழித்தவருக்கு, பிறகேதாங்கள்இந்த கோயிலுக்குவந்த காரணம்ஞாபகம்வந்தது…
“ஓ.. சுந்தரம்சார், அது நீங்கதானா?” என கேட்டவர் முகம் சோர்ந்துபோனது.
“ எங்க பொண்ணுக்குநாங்க அதெல்லாம்சொல்லி குடுத்து தான்வளத்திருக்கோம்” என மாதவிகோபமாய்பேச வர,
“மாது”.. என கண்டிப்பாய்கூறியவர்,
ஒருபுன்னகையுடன், “காதலிச்சுகல்யாணம்பண்றதுதப்பு இல்லமா, நாமதேர்ந்தெடுக்கற துணைநல்லவங்கலாங்கறதுதான்முக்கியம்.ப்ரணவ்தம்பிய எனக்கு மூணு வருஷமா தெரியும்.. ரொம்பநல்ல பையன்.நாங்க பாத்து கல்யாணம் பண்ணிவெச்சாலும் அந்தவாழ்க்கைமேலயும், அந்த பையன்மேலயும்ஒரு காதல் இருந்தாதான்,அந்த வாழ்க்கைநல்லாஇருக்கும். அது ஏன் என் பொண்ணுவிரும்பின பையனா இருக்க கூடாதுனுதான்,நாங்க இன்னிக்குஇங்கவந்தோம்.. பாத்தாசோமுசார்குடும்பம்” என பொதுவாய்கூறியவர்,
சோமுவிடம்திரும்பி, “சார் உண்மையா சொல்லனும்னா, என் பொண்ணுக்காக தான் நாங்கவந்ததே. ஆனா உங்களைநல்லா தெரியும்.. உங்கபையன்னுதெரிஞ்சதும்நாம ஏன்சம்மந்தம்பண்ண கூடாது? னுஎனக்கு தோனுது.. உங்களுக்குவிருப்பம்இருந்தால்… என கோடிட்டுநிறுத்த,
“இங்க என்ன நியூஸ்சூட்டாநடக்குது,வணக்கம்னு சொல்லி ஆரம்பிக்க,என்ன ஆண்டி நீங்க,எந்த காலத்திலஇருக்கீங்க?”,
“ஏதே, ஆண்டியா?என்ன பார்த்தா உனக்குஆண்டி மாதிரியா இருக்கு?” என மூக்கு விடைக்க,
ஆனந்த், ப்ரணவ், ஆனந்தி என அனைவரும்வாயை மூடிசிரிக்க,
“ஷ்ஸ், பேசாமஇருங்க” என அடக்கினார்கோமதி.
“உன்னவிட ஒருஆறேழுவயசுதான்கூட இருப்பேன். அதுக்குநீ இப்படிசொல்லுவியா, பாருங்கப்பா” என புகார்படிக்க,
“ஐயோசாரி சாரிங்க, நீங்க….. அது.. உங்கடிரஸிங்பாத்து நான் அப்படிநினைச்சுட்டேன். சாரி”.. என்க,
“ம்ம், அப்படிவா வழிக்கு,என்னை என்னனுநினைச்ச?” என எண்ணியவள், “பரவாயில்லை, பரவாயில்லை” என்றாள்,ஏதோ போனாபோகுது என்பது போல்.
அதானபாத்தேன்.. இதோ ஆரம்பிச்சுட்டாளே… இவளாவதுஅமைதியாஇருக்கிறதாவது என எண்ணினான்ப்ரணவ்.
“என்ன கண்ணு படிச்சிருக்க” என கேட்டார் கோமதி.
“நான்எம்காம்முடிச்சிருக்கேன்ஆண்டி,ஒரு ஆசைக்கு **** இந்தபத்திரிகையில வேலை செய்யுறேன்”
“என்ன பத்திரிக்கையில்வேலை செய்யுறியா?… ஐய்யே, இதெல்லாம்நம்ம குடும்பத்துக்குஒத்து வராது” என முகத்தைசுழிக்க,
வந்ததே கோபம்மாதவிக்கு, கணவர் வரும்போதே, சொல்லி அழைத்துவந்திருந்தார். அங்கு வந்துதேவையில்லாதபேச்சுஎதுவும்பேச கூடாதுஎன,அதனாலே இவ்வளவுநேரம்பானுமதிகூறிய விஷயங்களைகாதில்வாங்காமல்காற்றில்விட்டிருக்க, இப்போதோ பொறுக்கமுடியவில்லை. ஏதோ பேச போக சுந்தர்தடுத்துவிட்டார்..
தலை சுற்றிமயங்காதஒருகுறை தான் கோமதிக்கு… “டேய்சின்னவனே, என்னடாநடக்குதுஇங்க?, நாம் எதெல்லாம்பிரச்சினையாகும்நினைச்சோமே அதெல்லாம்ஒன்னுமேஇல்லைனு, உங்கப்பாவே ஊதி தள்ளிட்டார்”…
“நானும்அதை தான் ம்மா, யோசிக்கிறேன்”
“சரிஎது எப்பிடியோ, எந்தபிரச்சனையும்இல்லாம உன்கல்யாணம்நல்லபடியாநடந்தா, அதே போதும்.முருகா நீ தான்காப்பாத்தனும்.” என வேண்டிக்கொண்டார்.