மாலை காற்று சிறு குளிர் கொண்டு முகத்தில் வீச, தனது முகத்தை உரசி செல்லும் இதமான காற்றைத் தன்னுள் நிரப்பிக் கொண்டு அமர்ந்திருந்தான் தம்பிரான், அவனுக்கு அருகில் பாலு.
தன்னிடம் பேச வேண்டும் என்று தேடி வந்து விட்டு அமைதியாக இருக்கும் நண்பனை பார்த்தவாறு சில நொடிகள் கடந்த பாலு.
அதற்கு மேல் முடியாமல் “என்ன தம்பி பேச கூட்டியாந்துட்டு சிவனேனு கிடக்க” என்ற நண்பனை பார்த்து சிறு புன்னகை சிந்தியவன் மெல்ல வந்த நோக்கத்தைத் தொடங்கினான்.
“போன வாரத்துல தொலைவுல உருத்து ஒரு பொண்ணு அமைஞ்சுது. உறுதி பண்ண போன நேரம், பொண்ணு என் தம்பிய கை காட்டி புடுச்சு” தம்பிரான் சாதாரணமாகச் சொல்ல அதிர்ந்தது என்னவோ பாலு தான்.
“என்ன தம்பி சொல்லுற?”
“அதேன் தம்பிக்கு பேசி முடிச்சு புட்டாய்ங்க” என்று சொல்ல சுவரில் அமர்ந்திருந்த பாலு குதித்து இறங்கி தம்பிரான் முன் வந்து,
“அவர் பொண்ணை மச்சானுங்க கண்ணாலத்துக்குப் பார்த்திருக்காய்ங்க” என்றதும் தான் தாமதம் இன்னும் கோபம் பெறுக.
“என்னத்தேன் ஓசனை பண்ணிருக்காய்ங்க உம்ம வூட்டுல? அவீங்களுக்கு மட்டும் சீரும் சிறப்புமா, ஆளும் பேரும் உள்ள வூட்டுல பொண்ணு எடுப்பாய்ங்க கொடுப்பாய்ங்க. நீ மட்டும் நாதியத்த வூட்டுல பொண்ணு எடுக்கணுமா” என்று சீற
“அப்படி சொல்லாத பாலு.அது முறைக்குத் தங்கச்சி தானே உமக்கு.ஆளுங்க இருந்தா மட்டும் என்னத்துக்கு?” என்றவன் பேச்சில் அமைதியாகி விட்டான் பாலு.நூற்றுக்கு நூறு உண்மை அத்தனை ஜீவன்கள் வாழும் வீட்டில் தம்பிரான் தனித்து விட வில்லையா என்ன?
“அதுக்கு வேண்டி கண்ணாலம் பண்ண முடியாது தம்பி. அக்காளுங்க அம்புட்டு பேரு இருந்தும்.அந்தப் புள்ள ஒத்தய்யா கிடந்து அல்லாடுது.பெரிய அக்கா வாணித்தேன் உதவி. அந்தப் புள்ளைக்குச் சீர் செஞ்சு கரையேத்த யாருமில்லை.
உறவு கூடி செஞ்சாலும் அம்புட்டு காசு செய்ய முடியாது டா. எம்ம தங்கச்சியா இருத்தலும் உடைச்சு சொல்லுதேன் அந்தப் புள்ளைய கட்டினா உமக்கு மாமியார் வூடு இல்லாம போயிடும். நல்லது பொல்லது பார்க்க ஆளுங்க யாருமில்லை”
“ஏன் நீ வர மாட்டியா?” என்றதும் அமைதியாகி விட்டான். ‘நான் இருக்கேன்’ என்று வாயால் கூடச் சொல்ல முடியாத நிலையை எண்ணி.
“நான் இருக்கேனு எப்படி சொல்ல? வாய் இனிக்க பேச முடியாது தம்பி.எம்ம பாடு உமக்குத் தெரியும் தானே,இரண்டு புள்ளைங்க சரியான வேலையில்ல மாசத்துக்குப் பாதி நாள் பஞ்ச பாடுதேன்”
“ப்ச் நீ காசு பணம் செய்ய வேணாம் பாலு, ஆளா இரு எமக்கு உழைக்க வலு இருக்குப் பணக் காசு சம்பாரிச்சு புடுவேன்.
வாயார வானு சொல்லி அணைச்சுக்கக் கையும், பாசமா பேசி, ஒரு வேளை சோறு போட ஆளும் சம்பாரிக்க வேணும்” என்றவனது எண்ணம் விளங்க தோளோடு அவனை அனைத்தவன்.
“போதும் பொண்ணு நல்ல புள்ள நீ மூணு வேளை அதுக்குச் சோறு போட்டினா போதும் அதுவே அதுக்கு பெருசு.
தேவைக்குக் கூட அடுத்தவய்ங்க கைய எதிர்பார்க்காது.கணிசமா சம்பாரிக்குது சிக்கனமான புள்ள அது போக நல்ல படியா பார்த்துக்கிடும். எங்க பெரியப்பாவையே புள்ள கணக்கா தாங்குது”
“சோத்துக்கு வேண்டி சொல்லாத பாலு அன்புக்கு வேண்டி கண்ணாலம்.ஏன்னா நானும் கொஞ்சம் சுயநலமா மாறலாம்னு இருக்கேன்” என்றதும் கண்கள் விரிய நண்பனை பார்த்த பாலு பளீர் புன்னகையுடன்.
“பாரேன் எப்போதுல இருந்து இந்தப் புத்தி”
“உம்ம தங்கச்சிய கண்டதுல இருந்து”
“அடி சக்கை” என்றவன் கண்ணில் எதிர்பார்ப்பு மின்ன
“நெசமா அந்தப் புள்ளைய புடிச்சிருக்கா தம்பி? கட்டிக்கப் போறியா?
“நெசந்தேன் அவ தேன் பொஞ்சாதி ஒரே ஒரு குறை தேன் ஆளு அநியாயத்துக்குச் சிறுசா கிடக்கு”
“கவனிக்க ஆளு கிடையாது. அம்மா எகனையாவது பார்த்துச்சுனா திட்டும். இருக்குறதை தின்னு நல்லா இருப் புள்ளன்னு. அதுக்கு ஒரு சிரிப்பு சிரிச்சிக்கிடும் அம்புட்டுதேன்… பேச்சு குறைவு”
“பேச்சுக் குறைவு, ஆனா பார்வை கூர்” என்றதும் மீண்டும் கண்கள் விரிய பார்த்த பாலு.
“நீ எப்போ பார்த்த?”
“மச்சானுக தூக்கிட்டு போயிட்டாய்ங்க. அங்கன போயித்தேன் செய்தி தெரியும். பார்த்த ஜோருள தடுமாறி நிண்டவ,
பெரிய மச்சான் உட்காருன்னு சொன்னதும். ஜம்னு உட்காந்து புட்டு. மயிறு காம்புல தொடங்கி கால் நகம் வரை அலசி புட்டா” என்றதும் அப்படி ஒரு சிரிப்பு பாலுக்கு.
“அது சரி உமக்கு எப்படி அவ பார்த்தது தெரியும்?” பாலு சிரிப்புடன் கேட்க முகத்தைத் திருப்பிக் கொண்டவன்.
“நானும் அவளை மட்டுந்தேன் பார்த்தேன்” அவன் செயலும் சொன்ன தோரணையும் மீண்டும் சிரிப்பை கொடுக்க மனம் விட்டு சிரித்த பாலு.
“சரியான சோடி தேன் போ”
“ஹ்ம்ம்!… சரி பாலு இதைப் பேசத்தேன் வந்தேன் நான் கிளம்புறேன்”
“ராவுக்கு இருந்து ஒரு வாய் தின்னுட்டு போ”
“இல்ல மச்சானுங்க கூடப் பேசனும்”
“என்ன இருந்தாலும் அவீங்க மேல கசப்பு வருது தம்பி”
“அப்படி சொல்லாத பாலு அவீங்க ஓசனை பண்ணி தேன் இந்தப் புள்ளைய பார்த்திருக்காய்ங்க.அவீங்க பேச்சு எடுக்கலனு வை எம்ம கண்ணாலம் கனவு தேன்” என்றவனை வேதனை பொங்க பார்த்தவன்.
“உமக்கு உடுப்பு உருவம் சரியில்லைன்னா என்ன? மனசு தங்கமுய்யா. உம்ம மனசுக்கு ராசா கணக்கா வாழுவ பாரு” என்றதும் இன்னும் பளீர் புன்னகையுடன்.
“சரித்தேன் உம்ம வாக்குப் பொன்னா போக” என்றவன் சில நொடிகள் பேசி விட்டு பாலுவிடம் விடை பெற்றுக் கொண்டான்.
“கோலாரா போயிட்டு வா”
“சரி பாலு”
தம்பிரான் அடுத்து நேராகச் சென்றது அன்னை மீனாட்சியிடம் தான். கண் மூடி சில நொடிகள் நின்றவன்.மன நிறைவுடன் தனது மச்சான்களின் கடையை நோக்கி சென்றான்.
வழமைக்கு மாறாகப் புன்னகையுடன் வந்து நின்ற மச்சானை பார்த்து அதிர்ந்த சிறுசும் பெருசும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்க.
அவர்களை மேலும் அதிர்ச்சியாக்கும் பொருட்டு “மச்சான் ராவுக்குத் தோட்டத்துக்கு வாங்க” என்று சொல்லி,அவர்களது பதிலை எதிர்பார்க்காமல் செல்ல.
நெஞ்சில் கை வைத்த சிறுசு, “ஆத்தி ராவுக்குத் தோட்டத்துக்குக் கூப்புடுதே, ஒரு தினுசா வேற சிரிக்கிது” சிறுசு தோரணையில் சிரிப்பு வர கட கடவெனச் சிரித்த பெருசு.
“பயந்துக்காம வா சிறுசு எல்லா நல்ல செய்தித்தேன்”
“திடுதிப்புனு வந்து பல்லைக்காட்டி தோட்டத்துக்கு வான்னா நான் என்னத்த கண்டேன்” குறும்பாகச் சொன்னவனை.
“ரொம்ப வம்பு செய்யாத சிறுசு அது பாவம்”
“அது சரி மச்சான் போதையாகி போச்சு உமக்கு”
“கொக்க மக்க வெளுத்தி விட்டுருவேன் வீயாக்கானாம பேசாம வெள்ளுன்னு மாமாவ கூட்டியா இதுதேன் சரியான நேரம் பேசி புடலாம்” என்றதும் விளையாட்டைக் கைவிட்ட சிறுசு.
“சரி அண்ணே!” என்று வேலனை பார்க்க செல்ல கடை கணக்கை முடிக்க அமர்ந்து கொண்டான் பெருசு.
தம்பிரான்தோட்டத்தில்…
வேலன், சிறுசு, பெருசு மற்றும் தம்பிரான் மூவரும் தரையில் தார்பாயை விரித்து அமர்ந்திருந்தனர்.
வேலன்,”என்ன சங்கதி மாப்புள பேசணும்னு கூட்டியாந்துட்டு ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து கிட்டு கிடகீக” என்று தொடங்க. இது தான் சமயம் என்று தம்பிரான் திருமணப் பேச்சை தொடங்கினான் பெருசு.
வேலன் வருவதற்குச் சற்று முன்பு தான் தம்பிரான் திருமணத்திற்கு முழுச் சம்மதம் தெரிவிக்க. இன்னும் வலு பெற்றது திருமண உறுதி.
“நீங்க எந்தக் குடும்பம் சாமி அங்கனையும் அதே இரத்தம் தேன்”
“இந்தாரு மாமா மல்லுக்கு நிக்காத புள்ள தங்கம் மச்சானை தங்கமா பார்த்துக்கிடும்”
“ப்ச் புள்ள தங்கந்தேன் நான் பார்த்து வளர்ந்த புள்ள” என்றவர் எதையோ எண்ணி தயங்க .அவரது தயக்கத்தைச் சுக்கு நூறாக உடைத்து போட்டான் தம்பிரான்.
“பொண்ணு புடிச்சிருக்கு உரசலை சரி கட்டி கண்ணாலம் பண்ணி வைங்க. வேற எதுவும் பேச வேணாம்.
எம்ம நல்ல பார்த்துக்கிடுவா நானும் அவளை பார்த்துக்கிடுவேன்” என்றவனை அதிர்ந்து பார்த்தனர் மூவரும்.
சில நிமிடங்கள் மௌனத்தில் கரைய எழுந்து கொண்ட வேலன் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு “நாளை மக்கா நாள் சூழ்நிலை சறுக்கி நின்டா கை கொடுக்க மாமியார் வூடு ,மாமன் மச்சானு ஆளுங்க இருக்க வேண்டி தேன் அந்தப் புள்ளைய வேண்டான்னு தயங்கி நின்டேன். மத்த படி உம்ம மனசுக்கு புடிச்சு இருந்தா பண்ணிப்புடலாம்.
முத முதல புள்ள வாய் விட்டு கேட்டிருக்கு இதையாவது அப்பனா நடத்தி கொடுக்கனும் கொடுப்பேன்” என்றவர் விறு விறுவெனத் திரும்பி நடக்க.
போகும் அவரைச் சிறு புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான் தம்பிரான்.
அவர் தலை மறையவும்,ஆமா நீ என்ன ரகம் அப்பாவியா? அடப்பாவியா? நல்லவனா? கெட்டவனா? சூது வாது தெரியுமா? தெரியாத? ட்ரொஸ்ர் போட்ட காலத்துல இருந்து உம்மப் பின்னாடி திரியிறேன் இப்போ வரை விளங்கள?” என்று புலம்பிய சிறுசை பார்த்து சிரிக்க.
“அய்ய பல்ல காட்டாத” சிறுசு கடுப்பாக. அவனது முகப் பாவனையில் சிரித்த பெருசு.
“காலம் கிடக்கு பொறுமையா மச்சானை படிச்சுக்கலாம் வுடு” என்றவன் தம்பிரானை பார்த்து
“சரி மச்சான் பேசிக்கிடலாம் எல்லாம் நல்ல நடக்கும் நான் வாரேன்… நீ வூட்டுக்கு போகல”
“இல்ல இங்கன தேன்” என்றதும் சிறு மௌனம் கொண்டு ஓர் நொடி தயங்கிய பெருசு.
“இங்கன தேன் உனக்குத் தோதுனு தெரியுதுல.ஓரு காரை வூடு கட்டி ஓடு போட்டா என்ன?” படுக்கக் கூட இடமில்லாத தோட்டத்தில் நித்தமும் வாசம் செய்பவனை எண்ணி மனம் கலங்க செய்தது.
“நாளை மக்கா நாளு ஆளுங்களை வர சொல்லு மச்சான் கட்டி புடலாம்” என்றதும் நெஞ்சில் கை வைத்து சிறுசு அலற, சிரித்தவாறு வண்டியை எடுத்தான் பெருசு.
“என்ன அண்ணே! நடக்குது”
“எழும்பி சாச்சு புட்டா டா! இனி இப்படித்தேன் போல”
“அது சரி…” அண்ணன் தம்பி இருவருக்கும் அப்புடி ஒரு மலர்ச்சி.