பருவ மழைக்காலம் தொடங்கும் ஆகஸ்ட் மாதத்தில் 4 நாட்கள் ட்ரிப் அதுவும் மகாராஷ்டிரா வா என உமா சற்று பயத்துடன் வினவ..கோபி..
“மா, இந்த மாதிரி ப்ரேக் எங்களுக்கு ரொம்ப தேவை..உன் பயம் புரியுது..எனக்கு எப்பவுமே சேஃப்டி முக்கியம்..அப்புறம் தான் அட்வென்ச்சர், ட்ரெக்கிங் லாம்..நாங்க பத்திரமா வருவோம்..என் கூட மாதவன், எரிக், டெய்ஸி இன்னும் சில யூ ட்யூபர்ஸ் ம் வராங்க..அதுல நிறைய பொண்ணுங்களும் இருக்காங்க..அவங்கள பாதுகாப்பா கூட்டிட்டு போய் வரது எங்க கடமை, அங்க டவர் அவ்வளவா கிடைக்காது, கிடைக்கும் போது பேசுறேன்..சோ நீ கவனமா இரு..” என அன்னையை ஒரு மனதாக சம்மதிக்க வைத்து குழுவாக சென்னைக்கு பயணமாயினர்.
சென்னையிலிருந்து பகல் 11.00 மணியளவில் கிளம்பிய இரயில் மறுநாள் காலை 8.00 மணிக்கு புனே சென்றடைந்தது. அங்கு கை கால் கழுவி காலை உணவு முடித்து அங்கிருந்து சுமார் 355 கி.மீ தொலைவிலுள்ள நிஜாம்பூருக்கு பஸ்ஸில் பயணமாயினர். அப்போது கோபி பக்கத்தில் வந்து அமர்ந்தவள் தான் அவன் கனவு கன்னி நிர்மலா தேவி. கரும்பச்சை நிற லினன் குர்தி, வெளிர் நீல நிற டெனிம் ஜீன்சுமாய் காதில் இயர்போனுடன் ஒப்பனையில்லா முகத்தில் சிறியதாய் மெரூன் திலகமிட்டு ஒற்றைக்கல் வைர மூக்குத்தியுடன் மதுரை மீனாட்சியோ என வியக்கும் வண்ணம் கோபியை பாந்தமாய் கவர்ந்திழுத்தாள். அவளை விட்டு விழி அகலாது பார்த்தவனை கண்டு இவன் புறம் திரும்பியவள் ஒரு பக்க இயர்போனை எடுத்து,
“இஸ் எனிபடி கமிங் ஹியர்..?” எனக்கேட்க அவனுக்கு கேட்டால் தானே. .தன்னையே பார்த்திருப்பவனை குழப்பமாக பார்க்க பின்னிருந்த டெய்ஸி அவளிடம்..
“நோ யூ கேன் சிட்…” என்று கூறி கோபியின் தோளில் அடிக்க, சற்று தெளிந்தவன் டெய்ஸியை பார்க்க..அவ்ளோ..
“கும்பே வாட்டர் பால்ஸ்க்கு இன்னும் நாம போகவேயில்ல..அதுக்குள்ள நீங்களே இங்க உருவாக்கிடாதீங்க ணா..” என அவன் தலையை ஜன்னல்புறம் திருப்ப உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும் அமைதியாக இருந்தாள் நிர்மலா.
கிட்டதட்ட எட்டு மணி நேர பயணம் மிக இன்றியமையாததாக இருந்தது கோபிக்கு…தங்கை, நண்பர்கள் கும்பே ஏன் தன்னையே மறந்த நிலையில் சுழல வைத்த பெண்ணவளை ஓரக்கண்ணால் பார்த்து அவள் வரிவடிவவை மனதினுள் செதுக்கி கொண்டிருந்தான்.
நிஜாம்பூர் வருவதற்கு சற்று முன்னரே இறங்கி விட்டாள் நிம்மி..அவள் சென்றும் கூட அவள் வாசத்தை உணர்ந்தவன் சட்டென தலையில் அடித்து கொண்டான்..அவளை பற்றி எதுவுமே கேட்காமல் விட்டுவிட்டோமே என. எப்படியும் 4 நாட்கள் இங்கு தானே டேரா, அதற்குள் அவளை பார்த்து விடுவோம் என்ற நம்பிக்கையில் நிஜாம்பூர் இறங்கினான்.
அங்கு பக்கத்தில் உள்ள ரூம் ஸ்டேயில் ரூம்களை புக் செய்து மறுநாள் காலை கும்பே அருவிக்கு செல்ல வாடகைக்கு பைக் கிடைக்குமா என கேட்டு அதையும் புக் செய்த பின்னரே உறங்க சென்றனர்.
மறுநாள் காலை சீக்கிரமாகவே எழுந்து தயாராகி வெளியே வந்தனர் ஐவரும்..வாசலில் முன்று பைக்குகள் காத்திருக்க அவற்றில் ஏறி அமர்ந்தவர்கள் கும்பே அருவியை நோக்கி பயணமாயினர்.
செல்லும் வழியெங்கும் பருவமழை உபயத்தில் பூமியின் ஒரு பகுதி மட்டும் பச்சை பட்டாடை உடுத்திக்கொண்டதோ என வியக்கும் வண்ணம் பச்சை பசும் புற்கள், பல வண்ண மலர்கள், ஆங்காங்கே வெள்ளியை காய்ச்சி ஓடவிட்டது போல சிறு சிற்றருவிகள் என சொர்க்கலோகமாக இருந்தது.
அனைத்தையும் அழகாய் படம் பிடித்து வந்தும் ஆங்காங்கே தனக்கு தெரிந்ததை பகிர்ந்தபடி இருந்தாள் கன்யா. கண்ணில் பட்ட நீர்வீழ்ச்சிகளில் கோபியை பைக் நிறுத்த சொல்லி பாறைகளின் மேல் தட்டு தடுமாறி ஏறி வீடியோ எடுத்தாள் கன்யா.
ட்ரோனை பறக்க விட்டபடி தங்கை மேல் ஒரு கண் வைத்து கொண்டும் கேமராவை இயக்கிக்கொண்டிருந்தான் கோபி. மாதவன் எரிக் இரு பெண்களையும் கை பிடித்து பத்திரமாக ஏற்றி இறக்க என களை கட்டியது அப்பயணம். இடையே தன் கனவு தேவதை எங்காவது தென்படுவாளா என ட்ரோனை விட வேகமாய் பார்வையை சுழற்றியபடி இருந்தான் கோபி.
மதிய வாக்கில் கும்பே அருவியை அடைந்தவர்களுக்கு அதன் பிரமாண்டத்தை கண்டு வார்த்தை வர மறுத்தன. வாரிசு படத்தில் நடிகர் விஜய் நின்றிருக்கும் ஒரு இடம் தான் இந்த கும்பே அருவி…படத்தில் சி.ஜி பயன்படுத்தியுள்ளனர் எனினும் அது தான் இவர்கள் இங்கு வர காரணமே.
அடர்ந்த பசுமை கானகத்தின் நடுவே மாசு படியாத குளிர் காற்றுடன் பேரிரைச்சலாய் மலையிலிருந்து மடுவை நோக்கி பாய்ந்து ஓடும் அருவியை காண இவ்விரண்டு கண்கள் போதாது. நொடிக்கு நொடி மாறும் வானிலை, இயந்திர உலகத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு காடு மேடு என கடினமான செங்குத்தான பாதையில் பமணித்தமைக்கு விருந்தாக கண் கொள்ளா இயற்கை பேரழகுடன் ஆர்ப்பரிக்கும் அருவியின் விளிம்பில் மிக மிக கவனமாக கால் வைத்து பார்த்து வழுக்கிவிடுமா என சோதித்து மெல்ல ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் என தெரிந்தும் படு எச்சரிக்கையாக ஒவ்வொருவரும் அருவியை இரசிக்கவும் படம் பிடிக்கவும் தொடங்கினர்.
அவ்வப்போது பனிமூட்டம் சூழ எதிரே ஆளே தெரியாத பட்சத்தில் ஆபத்தில்லாத வழுக்காத பாறையில் இருவர் இருவராய் கைகளை கோர்த்தபடி அமர்ந்து என குழந்தைகளாக மாறி கும்மாளமிட்டனர்.
மாதவனின் கையோடு கோர்த்திருந்த கன்யா அவனிடம்..
“ணா..பனி விலகியதும் ஒரே ஒரு ஸ்டெப் பத்திரமா கீழிறங்கி ஒரே ஒரு ஸ்நாப் எடுத்துக்கிறேன் ப்ளீஸ்..”
“நோ வே தேவி..செம ரிஸ்கான இடம்..லைட்டா சிலிப் ஆனாலும் கீழ பாரு எலும்பு கூட தேறாது..வா மேல போலாம்..“ என அவளை இழுக்க..
“ஒரே நிமிஷம் ணா ப்ளீஸ்..இவ்வளவு தூரம் வந்து இந்த வியூ மிஸ் பண்ணலாமா? என் கையை பிடிச்சிக்கிட்டே நில்லுங்க ஜஸ்ட் ஒன் ஸ்டெப் தான்” என மாதவன் மறுத்தும் கேட்காமல் ஓர் அடி கீழிறங்கி தன் கேமராவை முழுவதும் இயக்கியவளை பயத்துடன் பார்த்து நின்றான் மாதவன்.
இவர்கள் இன்னும் ஏன் மேலே வரவில்லை என யோசித்தவாறே அவர்களை நெருங்கிய கோபிக்கு ஒரு நொடி மூச்சே நின்று போனது. இன்னும் ஒரு இன்ச் எடுத்து வைத்தால் யோசிக்கவே தலை சுற்ற இயல்பாய் பேச்சு கொடுத்தபடி கன்யாவை நெருங்கவும் அவள் இடறி விழவும் அனைவருக்கும் முகம் வெளுத்து போனது. மாதவன் அவள் கையை கெட்டியாக பற்றியிருக்க டெய்சியும் எரிக்கும் அவனை அழுந்த பற்றி மேலே இழுக்க, உறைந்த பீதியுடன் தன்னை நோக்கும் கன்யாவை பார்த்த கோபி..
“தேவி மா..ஒன்னுமில்ல…யூ ஆர் பிரேவ் கேர்ள்..இங்க பாரு பானிக் ஆகாம மெல்ல உன்னோடு இன்னொரு கையால பாறைய பிடி டா..” என அழுகுரலில் கூறவும், கன்யா முயன்று அவனிடம்..
“வழுக்குது ணா..” என கீழே பார்க்க தலை குனிய, சட்டென கோபி..
“தேவி மா..கீழ பார்க்காத..அந்த பாறையை பிடிக்க ட்ரை பண்ணு..” எனக்கூறவும் மேலிருந்து விஷ்வாவின் குரல் கேட்டதும் யானை பலம் வந்தது கோபிக்கு.
மிகுதியான அச்சத்தில் இருந்த கன்யா விஷ்வாவை கவனிக்கவில்லை.
“இதான் நீங்க அவள பாத்துக்கற லட்சணமா?..இவ ஒருத்தி இடியட்..என்னை பார்த்ததும் ஷாக் ல கை விட்டாலும் விட்டுறுவா..நான் அந்த வழியா மெல்ல அவளுக்கு கீழ போறேன்..நீங்க அவக்கிட்ட பேச்சு குடுத்திட்டே இருங்க..” என கிளை பாதையில் சென்ற நண்பனை கட்டியணைத்த நிம்மி..
“நீயும் பத்திரமா மேல வந்து சேரணும்..என் ப்ராமிஸ்” என அவள் தலையில் கை வைக்க..அவள் தலையை ஆட்டியபடி..
“டேக் கேர் ஆஃப் ஆல் இஃப் எம் நாட் அலை…” என்றவனை..
“ஷ்…மை ப்ராமிஸ் போய் கூட்டிட்டு வா..” என அனுப்பினாள் நிம்மி.
இங்கு கன்யாவோ..
“ணா, கன்பார்ம் சாகப்போறேன் னு தெரியுது..எனக்காக ரிஸ்க் எடுத்து எல்லாரும் மாட்டிக்காதீங்க..உங்க பேச்சை கேட்காம வியூ னு வந்தது என் தப்பு தான்…ஐ லவ் யூ மோர் ணா..”
“பாப்பா உனக்கு ஒன்னும் ஆகாது டா..”
“இல்ல இது தான் என் லாஸ்ட் டைம் னு தெரிஞ்சிடுச்சி..அம்மாவை பத்திரமா பார்த்துக்கோ..அப்புறம் என் புருஷன்..” என சற்று நிறுத்தி..கன்னங்களில் கண்ணீர் கோடாய் இறங்க..
“என்னை விட ரொம்ப பிடிக்கும் அந்த ஐயனார..ஆனா வெளிய சொன்னதில்ல..இன்னும் ஒன் இயர் ல படிச்சு என் பர்ஸ்ட் ப்ளை(fly) ல அதை மட்டும் தனியா எங்கேயாவது குட்டித்தீவுக்கு கடத்திட்டு போகனும், என் காதலை சொல்லனும் னு இருந்தேன்..” என மெல்ல மாதவனின் கையை விட அவனோ அவள் கையை இன்னும் கெட்டியாக பிடித்து…
“நானும் உன் கூட வந்து விழுந்துடுவேன் தேவி, ஒழுங்கா என் கையை பிடி..” என மிரட்டினான் அவன். மாதவனை மூவரும் மேலும் கெட்டியாக பற்றிக்கொள்ள அவர்கள் பையிலுள்ள துணிகளை ஒன்றோடு ஒன்றாய் இணைத்து நீள கயிறு போல கட்டத் தொடங்கினாள் நிம்மி.
தன்னவள் தனக்காக ஏங்கியதை தெரிந்தும் தள்ளி நின்றவன் இன்று அவள் வாய்மொழியில் அவனுக்கான நேசத்தை தெரிவிக்க மனதிற்குள்ளும் சாரல் அடித்தாலும் விஷ்வாவோ பக்கவாட்டில் இறங்கி பாறைகளில் காலை பல முறை வைத்து வழுக்கிறதா என சோதித்து பார்த்து மனைவியின் நிலை கணித்து கணக்காய் அவளை கைகளில் தாங்கிக்கொள்ள வேண்டும் இறைவா என கடவுளிடம் வேண்டுதல் வைத்தான்.
மேலிருக்கும் அனைவருக்கும் கண்கள் கலங்க எப்படி இருவரையும் பத்திரமாக மீட்பது என யோசிக்கும் வேளையில் அவளுக்கும் சற்று கீழே வந்து தன்னை நிலைபடுத்தியவன் தலையை சற்று உயர்த்தி அவர்களுக்கு கையை காட்ட..தன் கணவன் இருப்பை உணராது..
“என் புருஷனை அப்படியே விட்றாத..கொஞ்ச கொஞ்சமா தேத்தி அவருக்கு..”என மென்று முழுங்கி..
“இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சிடு..ஐ லவ்ட் ஹிம் டு தி கோர் னு சொல்லிடு..என்னோட உயிர்பலி போதும்..” என மாதவனின் கையை உறுவியவள் கீழே வேகமாக சரிய கண்ணை மூடிக்கொண்டவளை தன் கைகளில் தாங்கியவன் சற்று தடுமாறினாலும் அங்கிருந்த பாறை இடுக்கில் அவளை நிற்க வைக்க, கண்களை திறந்து பார்த்தவளுக்கு தன் முகத்தருகே தன்னவனின் முகத்தை கண்டு விழிகள் விரிந்தது. அது ஒரு சிறு குகை போல உள்ளே இருவர் சிரமமின்றி அமர மட்டுமே இடமிருக்க அவளை உட்காரவைத்தவன், சற்று மேலேறி கட்டை விரலை உயர்த்தி காட்ட கோபிக்கு மூச்சே வந்தது. அடி மேல் அடி வைத்து கவனமாய் இறங்கி அவளருகே அமர்ந்தான் விஷ்வா.
இந்த நொடி நிஜமா, நான் உயிருடன் இருக்கிறேனா, அதுவும் தன்னவன் கைகளில் என அவள் கண்கள் அதிர்ச்சியில் அவனையே இமைக்காது பார்க்க, அவள் செயலால் உள்ளுக்குள் எரிமலையாய் கொதித்தாலும் காட்டிக்கொள்ளாமல்..
“யூ ஆர் சேஃப்..டோன்ட் வொர்ரி..” என முடிக்கும் முன் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள் கன்யா.
மழை சாரலாக தொடங்கி வலுவாக பெய்ய மீண்டும் பனிமூட்டம் படர்ந்தது.
திகைப்புடன் அருவியின் விளிம்பில் கவனமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த கோபியின் தோளை பற்றி நிர்மலா..
“விஷ்வா பத்திரமா கூட்டிட்டு வருவான்..வாங்க..” என அவனை இழுத்து அமரவைத்து அனைவருக்கும் நீர் பாட்டிலை கொடுத்தாள். கோபி..
“மான்சூன் சீசன் இல்லியா, கொஞ்சம் டைம் ஆகும்..இப்ப ட்ரை பண்றது ரிஸ்க்” என்ற நிம்மி மீண்டும் அவர்களிடமிருந்த துணிகளை ஒன்றோடு ஒன்று இணைத்து நீளமான கயிறாய் கட்டத்தொடங்கினாள்.
கோழிக்குஞ்சாய் தன்னுள் ஒடுங்கியவளை தட்டிக்கொடுத்தபடி சற்று விலகி அவளுக்கு அணையாய் இன்னும் நகர்ந்தான்.
தன் மேல் சாரல் படாதவாறு அவன் தலை மேல் தெளித்து விழும் அருவி நீரை தன் துப்பட்டாவால் போர்த்தி..
“இன்னும் கொஞ்சம் உள்ள வாங்க..” என அவனை இழுக்க..
“அப்புறம் உன் மேல தான் விழனும்..அப்படி என்னடி உன் சேஃப்டி பார்க்காம இப்படி விழுந்து வைப்ப..? இதுல என்க்கூட காலங்காலமா வாழ்ந்த மாதிரி தியாகம் வேற பண்றா இடியட்..” என கடுமையாக அவளை திட்டியவனை கண்களில் நீர் கோர்க்க அமைதியாக பார்த்தாள் கன்யா.