அதி நிவேதா இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்… அப்பொழுது அவனுக்கு அலைபேசி அழைப்பு வந்தது…… அதை பேசுவதற்காக அவன் ஜன்னல் பக்கம் சென்றான்… அவன் பேசி முடிக்க கால் மணி நேரம் ஆனது… அதி பேசி முடித்துவிட்டு பார்க்கும் போது நிவேதா உறங்கி இருந்தாள்…. அவன் அவளை எழுப்பாமல் அவளின் உச்சியில் முத்தம் வைத்துவிட்டு வெளியே வந்தான்…..
அவன் மட்டும் வருவதை பார்த்து பிரியா “என்ன அண்ணா தூங்கிட்டாளா…..?????” என்று என்று சரியாக கேட்டாள்….
“ஆமா டா போன் வந்துடிச்சி பேச போனேன் ஒரு கால்மணி நேரம்…. வந்து பார்த்தா நல்லா தூங்குறா”….. என்று ப்ரியாவிடம் கூறினான்….
அவள் சிரித்து கொண்டே “அண்ணா அவளுக்கு அமைதியா இருந்தா தூக்கம் வரும்… கால் மணி நேரம் இல்ல… நீங்க அஞ்சி நிமிசத்துல வந்து இருந்தாலும் தூங்கி இருப்பா தூங்குமூஞ்சி…. ஆனா எக்ஸாம் ஹால் எவளோ சைலன்டா இருக்கும் மேடம் அங்க மட்டும் தூங்க மாட்டங்க”… என்று கூறினாள்…..
அவனும் சிரித்துக் கொண்டே அரசுவின் எதிர் சோபாவிலே அமர்ந்தான்…. பிரியா சிறிது நேரத்தில் அரசுவிடம் பேசி பழகியிருந்தாள்…. இவள் அண்ணா என்பதும் அவன் தங்கை என்பதும் முடியவில்லை…. அதி அரசுவிடம் பேசாமல் இருப்பதால் அரசு பிரியா இருவரும் அப்பத்தாவுடன் சமையலறை சென்று விட்டனர்….
வசும்மா சாந்தா நிதிஷ் மூவரும் வீட்டுக்கு வந்து இருந்தனர்…. நிதிஷ் பிரியாவை அலைபேசியில் அழைத்தான்…. ஆனால் அவள் அலைபேசி ஹாலில் இருந்தது… அவள் உள்ளே இருந்ததால் அதி தான் எடுத்து பேசினான்…. “ஹெலோ பாப்பு வீட்டுக்கு வந்துட்டோம்… நீ குட்டிமா கூட்டிட்டு வீட்டுக்கு வா” என்று கூறினான்…
அதி சிரித்துக் கொண்டே “நிதிஷ் உன் பாப்பு அப்பத்தா கூட உள்ள இருக்கா….. உன் குட்டிமா தூங்கிட்டா… நீ வீட்டுக்கு வா மதியம் உங்களுக்கு இங்க தான் சாப்பாடு…” என்று கூறினான்…..
நிதிஷ் வசும்மாவிடம் கூறினான்…. அவரோ அவனை மட்டும் போகுமாறு கூறினார்… ஏன்னென்றால் சாந்தா இங்கு இருப்பதால் மாத்திரை எடுப்பதால் அவருக்கு வேறு உணவு தரவேண்டும் என்று கூறினார்… நிதிஷ் அதை அதியிடம் கூறினான்….
அவன் சாந்தாக்கு மட்டும் சமைக்குமாறு கூறினான்.. வசும்மாக்கு இங்கு தான் சாப்பாடு எனக் கூறிவிட்டான்…. அவரும் சரி என சொல்லிவிட்டார்….. நிதிஷ் வசும்மாக்கு உதவி செய்துவிட்டு அதி வீட்டுக்கு சென்றான்…. அங்கு அதி தன்னுடைய லேப்டாப்பில் எதையோ பார்த்து கொண்டு இருந்தான்…. அப்பத்தா பிரியா இருவரும் சமைத்து கொண்டு இருந்தார்கள்…. அரசு இருவரிடமும் அரட்டை அடித்து கொண்டு இருந்தான்….. நிவேதா தூங்கிக் கொண்டு தான் இருந்தாள்…..
நிதிஷ் வீட்டினுள் நுழைந்தான்…. அதி அவனை வரவேற்று தன் அருகில் அமர்த்தி கொண்டான்…. அதி தன்னுடைய லேப்டாப்பை ஆப் செய்துவிட்டு அவனுடன் பேசிக் கொண்டு இருந்தான்…. அரசுவின் பெற்றோர் அதியின் வீட்டுக்கு வந்து இருந்தனர்… அரசுவின் அம்மாவை மட்டும் வரவேற்றுவிட்டு அவனின் அப்பாவை அவன் வரவேற்கவே இல்லை…. அவர் அவனை பார்த்து சிரித்துவிட்டு சோபாவில் அமர்ந்தார்…. பேச்சு சத்தம் கேட்டு மூவரும் வெளியே வந்தனர்…..
அப்பத்தா அரசுவின் பெற்றோரை வரவேற்று விட்டு நிதிஷையும் வரவேற்றார்…. நிதிஷிற்கு அம்மூவரையும் அறிமுக படுத்தி வைத்தார்… அரசுவின் அம்மா அபிராமி தான் நிவேதாவைக் கேட்டார்…. அப்பத்தா அவள் தூங்கி கொண்டு இருப்பதாக கூறிக் கொண்டு இருக்கும் போதே அவள் கத்தும் சத்தம் அறையில் இருந்து கேட்டது…..
“ஐயோ சூடு வைக்காதீங்க…. எரியும் வைக்காதீங்க… ஐயோ எரியுதே” என்று கத்திக் கொண்டு இருந்தாள்…. அதி தான் முதலில் அறைக்கு சென்று அவளை எழுப்பினான்… அவள் கனவின் தாக்கத்தில் இருந்து வெளியே வராமல் “பாவா எரியுது பாவா அவங்கள சூடு வைக்க வேண்டாம்னு சொல்லுங்க பாவா ப்ளீஸ்” என்று அழுது கொண்டே கூறினாள்…..
அவளை தன்னுடன் அணைத்து கொண்டு “இல்லை டா இங்க யாரும் இல்லை… நான் இருக்கேன் டா உன்ன யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க டா… தூங்கு” என்று தட்டி குடுத்து தூங்க வைத்தான்… மற்றவர்கள் அனைவரும் ஹாலிற்கு சென்றனர்….
யாரும் எதுவும் பேசவே இல்லை…. அதி அவளை தூங்க வைத்துவிட்டு உச்சியில் முத்தமிட்டு அவளையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்தான்… பிறகு சிறிது நேரம் கழித்து வெளியே வந்தான்… வந்தவன் நேராக சென்றது நிதிஷிடம் தான்… ஆனால் அவனுக்கே சூடு வைத்ததுலாம் தெரியாதே…. அதனால் அவனுமே அதிர்ச்சியாக தான் நின்று இருந்தான்….. பிரியாவும் அதிர்ச்சியாக தான் நின்று இருந்தாள்….
அதி வந்து நின்றவுடனே “சத்தியமா எனக்கு சூடு வெச்சது தெரியாது அதி… அவங்க இவளோ மோசமானவங்களா இருப்பாங்கன்னு நெனச்சி கூட பாக்கல அதி…… எனக்கோ அம்மா அப்பாக்கு அவங்க சூடு வெச்சது தெரிஞ்சி இருந்தா இத்தனை வருசம் அந்த வீட்டுலயே இருக்க விட்டு இருக்க மாட்டோம் அதி..” என்று கூறினான்….
பிரியா அழுதே விட்டாள்…. “அண்ணா ஏஞ்சல் என்கிட்ட கூட சொல்லல ண்ணா… சொல்லி இருந்தா நான் மாமா அத்தைகிட்ட சொல்லி அவளை இங்க மாமா வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லி இருப்பேன் ஆனா அவ சொல்லல ண்ணா…. இன்னும் அவ எத்தனை பிரச்சனை அனுபவிச்சு இருக்கானு தெரியல அண்ணா” என்று கூறினாள்… நிதிஷ் அவளை தன் தோளில் சாய்த்து கொண்டான்….
அதி மீண்டும் அறையினுள் நுழைந்து கொண்டான்…… அப்பத்தா தான் பிரியாவை சமாதானம் செய்ய அவருடைய அறைக்கு அழைத்து சென்றார்… அவருடன் அபிராமியும் சென்றார்…. இங்கு நிதிஷை அரசு மற்றும் மணிகண்டன் இருவரும் தான் சமாதானம் செய்தனர்…… அதி அவளின் கையை பிடித்து கொண்டு அவளையே பார்த்து அமர்ந்து இருந்தான்…. சிறிது நேரத்தில் அவள் தூக்கத்தில் இருந்து எழுந்தாள்…. சோம்பல் முறிக்க தன் கையை மேலே தூக்க பார்க்கிறாள்…. ஆனால் அவளால் முடியவில்லை…. அவள் கை தான் அதியிடம் உள்ளதே… பிறகு தான் அவளுக்கு அதியுடன் பேசிக் கொண்டு இருந்தது… அவன் போன் பேச சென்றபோது தூங்கியது நியபாகம் வந்தது……
அவன் முகத்தை பார்க்காமல் “அச்சோ சாரி பாவா தூக்கம் வந்துடிச்சி தூங்கிட்டேன்… என்னை எழுப்ப வேண்டியது தானு ஏன் எழுப்பல… “என்று கேட்டு கொண்டு இருந்தாள்…. ஆனால் அவன் எதுவும் பேசாமல் தலை குனிந்து அமர்ந்து இருந்தான்…. “பாவா ஏன் தலை கீழ குனிஞ்சி உட்கார்ந்து இருக்கீங்க என்ன பாருங்க”…. என்று அவன் தலையை அவளை பார்க்குமாறு செய்தாள்…. ஆனால் அவன் கண்ணை பார்த்து அதிர்ந்து விட்டாள்… ஏன்னென்றால் அவன் கண் ரத்த சிவப்பாக இருந்தது….
“பாவா ஏன் இவளோ சிவப்பா இருக்கு உங்க கண்ணு என்ன ஆச்சி…. பதில் சொல்லுங்க பாவா” என்று கேட்டாள்……
“நீ இன்னும் எவளோ கஸ்டம் அம்மு அனுபவிச்சு இருக்க….. அவளோ கொடுமை பண்ணாங்கனா நீ வசும்மா வீட்டுக்கு வந்து இருக்கலாம்ல அம்மு….. “என்று கேட்டான்….
“பாவா நான் தூக்கத்துல எதோ பொலம்பினேனா… அத கேட்டு தான் உங்க கண்ணு இவளோ சிகப்பா இருக்கா விடுங்க பாவா… வாங்க வெளிய போலாம்… அப்பத்தா பிரியா மட்டும் தனியா சமைப்பாங்க..” என்று கூறி அவனை வெளியே அழைத்தாள்…
“அம்மு உனக்கு யாரு எப்போ சூடு வெச்சாங்கன்னு எனக்கு சொல்லிட்டு நீ வெளிய போ” என்று கூறி அவள் கையை இறுக்கமாக பிடித்து கொண்டான்… அவள் ஒரு நொடி அதிர்ந்து பிறகு “சூடா சூடுலாம் யாரும் வைக்கல பாவா… தூக்கத்துல கனவு கண்டு புலம்பி இருப்பேன்” என்று அவனின் கண்ணை பார்க்காமல் கூறினாள்….
அவன் எதுவும் பேசாமல் அவளுடைய கையை எடுத்து அவனின் தலையின் மேல் வைத்து “இப்ப சொல்லு அம்மு யாரு சூடு வெச்சாங்க…. உண்மையை சொல்லு அம்மு… இது என் மேல சத்தியம்…” என்று கூறி விட்டான்…
“அது ஒன்பதாவது படிச்சிட்டு இருக்க அப்ப வெச்சாங்க பாவா…. நான் ஏஜ் அட்டென்ட் பண்ணதுல இருந்து நான் தான் சமைப்பேன்….. ஒரு நாள் சாப்பாட்டுல முடி இருந்திச்சி பாவா…. அத பாத்துட்டு ஒழுங்கா சமைக்க மாட்டியானு அம்மா சூடு வெச்சிட்டாங்க….” என்று கூறினாள்….. “எனக்கு முடி அதிகமா இருக்கும் பாவா…. எனக்கு ரொம்ப பிடிக்கும்…. ஆனா நான் வேணாம்னு சொல்ல சொல்ல கேட்காம கட் பண்ணி விட்டுட்டாங்க…. அப்பறம் கால்ல சூடு வெச்சிட்டாங்க…. ” என்று கூறினாள்….
“எங்க வெச்சாங்க அம்மு…???” என்று கேட்டான் இறுக்கமாக…. அவன் முகமே ரத்த சிவப்பாக இருந்தது….
கெண்டை கால்ல பாவா…. என்று தான் போட்டு இருந்த பாவாடையை தூக்கி காட்டினாள்….. அவள் காட்டிய இடத்தில நான்கு இன்ச் அளவில் கருப்பு நிறத்தில் வடுவாக இருந்தது.. அதில் கையை வைத்து தடவினான்… அவளின் காலை தன் மடி வைத்து தடவி குடுத்தான்… குனிந்து அந்த இடத்தில ஊதி முத்தமிட்டான்….
அவள் “பாவா என்ன பண்றிங்க கால விடுங்க… எனக்கு இப்ப அது எரிய கூட இல்லை…” என்று கூறினாள்… “இது மட்டும் தான் இருக்கா… இல்லை வேற இடத்துல சூடு வெச்சி இருக்காங்களா அம்மு… என் மேல சத்தியமா உண்மையை மட்டும் தான் சொல்லணும்” என்று கேட்டான்…
அவள் தயங்கி கொண்டே முட்டிக்கு மேல ஒரு அஞ்சு இன்ச் அளவுல இருக்கும் பாவா கூறினாள்… அவளின் காலிலேயே முகத்தை புதைத்து கொண்டு “எப்படி அம்மு தாங்குன…. அந்த வீட்டை விட்டு வெளிய வந்து இருக்கலாம்ல….” என்று கேட்டான்…
“ஐயோ பாவா எந்திரிங்க முதல்ல எந்திரிங்கனு சொல்றேன்ல அது என் பாஸ்ட்(past) அத இனிமே நினைக்க கூடாதுனு இருக்கேன்… அத பத்தி பேசாதீங்க” என்று கூறினாள்… அவனும் அவள் காலை கீழே விட்டுவிட்டு அவளின் அருகில் அமர்ந்தான்… அப்படியே அவளை தன்னுள் புதைத்து கொண்டான்… அவள் எதுவும் சொல்லவில்லை… அவன் ரொம்ப உணர்ச்சிகரமாக இருந்ததால் அவனின் தலைமுடியை கோதிக்கொடுத்தாள்… சிறிது நேரம் கழித்து தான் நார்மலாக இருந்தான்…
“ஆர் யூ ஓகே பாவா?????” என்று கேட்டாள்…. அவன் ஆம் என தலை ஆட்டினான்…. “எவளோ கோவக்காரரு நீங்க இப்டி எதுக்கு எடுத்தாலும் எமோஷனல் ஆகலாமா” என்று கேட்டாள்…
“என்ன தான் கோவக்காரனா இருந்தாலும்….எனக்கு பிடிச்சவங்களுக்கு எதோ கஷ்டம்னா நான் எமோஷனல் ஆவேன் அம்மு” என்று கூறினான்….
அவளும் சரி என தலை ஆட்டிவிட்டு “கொஞ்சம் சிரிங்களேன் பாவா ஏன் இப்படி இருக்கீங்க” என்று கேட்டாள்…
அவனும் அவளின் உச்சியில் முத்தமிட்டு அவளை பார்த்து சிரித்தான்…. அவளும் முதல் முறையாக அவனின் நெற்றியில் முத்தமிட்டு அவனை அணைத்துக்கொண்டான்….. சிறிது நேரம் கழித்து வெளியே சென்றனர்….
வெளியே அவள் சென்றவுடன் பிரியா ஓடிச்சென்று அணைத்து கொண்டாள்.. நிதிஷும் அவளின் தலையை தடவி கொடுத்தான்…. பிறகு மணிகண்டன் அபிராமி இருவரிடமும் அறிமுகம் நடந்தது… அனைவரிடமும் நன்றாக பேசினாள்…. அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்…. நிதிஷ் வசும்மாக்கும் எடுத்து கொண்டு போய் குடுத்து வந்தான்.. சாந்தா அறையில் தூங்கி கொண்டு இருந்தார்… நிதிஷ் நிவேதாவிற்கு சாந்தா சூடு வைத்ததை சொல்லிவிட்டான்…. வசும்மா சாந்தாவை திட்டிவிட்டு நிவேதாவை பார்க்க வேண்டும் என்று கூறினார்… “இல்லை ம்மா கொஞ்ச நேரம் அவ அங்கயே இருக்கட்டும்…. நான் கூட்டிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அதி வீட்டுக்கு சென்றுவிட்டான்….
அங்கு அனைவரும் ஜாலியாக பேசிக் கொண்டு இருந்தனர்… ஆறு மணி அளவில் அரசு மற்றும் அவனின் பெற்றோர் இருவரும் அவர்களின் வீட்டுக்கு சென்றனர்… மணிகண்டன் மற்றும் அரசு இருவரும் போகும் போது தன் அலைபேசி எண்களை நிதிஷ் பிரியா நிவேதா மூவருக்கும் குடுத்துவிட்டு சென்றனர்….
இரவு உணவு அங்கு சமைத்து எடுத்து வருகிறோம் என ப்ரியா நிவேதா இருவரும் அப்பத்தாவிடம் கூறிவிட்டு வசும்மா வீட்டிற்கு நிதிஷோடு சென்றனர்…..
இரவு உணவு சமைத்து நிதிஷிடம் கொடுத்துவிட்டு அவர்களும் சாப்பிட்டுவிட்டு அனைவரும் தங்கள் அறைக்கு சென்று தூங்க ஆயத்தம் ஆகினர்…. அடுத்த நாள் காலை வழக்கம் போல் அனைவருக்கும் விடிந்தது… மதியம் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு அதி பெங்களூர் புறப்பட்டான்….
அடுத்து ஒரு மாதம் எந்த பிரச்சனை இல்லாமல் சென்றது… ஆனால் அதி பெங்களூரு சென்ற நாற்பது நாட்களில் சாந்தாவால் பிரியா மற்றும் நிவேதா இடையில் சற்று பிரிவு ஏற்பட்டது…. அனைவரும் கோவமாக இருக்க பிரியா அழுது கொண்டு நடு கூடத்தில் நின்று இருந்தாள்….