அத்தியாயம் – 10
விக்ரம் ரகுவுடன் நின்று பேசிக் கொண்டிருந்தான் “வாழ்த்துக்கள்டா மச்சான் எப்படியோ நீ ஆசைப்பட்ட படியே மித்ராவ கல்யாணம் பண்ணிக்கிட்ட, அப்புறம் ஹனிமூன் க்கு எந்த நாட்டுக்கு போகப்போற”
“ஏன்டா நீ வேற நானே டென்ஷன்ல இருக்கேன், நீ வேற கடுப்பேத்தாம இருடா”
“என்ன விக்ரம் டென்ஷன் உனக்கு”
“பார்த்தல்ல மித்ரா என் முகத்தை பார்த்ததும் எப்படி மயங்கி விழுந்தான்னு, இவ்வளவு நேரம் ஆகியும் என் முகத்தை அவன் நிமிர்ந்து கூட பாக்கலடா, அவ என்ன ஏத்துப்பாலா மச்சான் என் கூட பேசுவலடா” என்றான் விக்ரம் கவலையாக.
” உன் மேல கொஞ்சம் கோவத்துல தான் இருப்பா, பேசுடா உன் பொண்டாட்டி தானே பேசி அவளை சரி பண்ணு”
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்தார் வெங்கடேசன்.
“ஏன் விக்ரம் இப்படி பண்ண, நீ மித்ராவ லவ் பண்றதா என்கிட்ட சொல்லி இருந்தா நானே ஜான்சி கிட்ட பேசி உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருப்பேனே” என்றார்.
“அது வந்து சார்” என்று விக்ரம் ஏதோ சொல்ல வர அங்கு வந்தவர்களை கண்டு அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான்.பின் “மாமா அத்தை நீங்க ரெண்டு பேரும் இங்க எப்படி வந்தீங்க” ஆம் அங்கு வந்தது விக்ரமின் தாய்மாமன் ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது மனைவி சுதா.
“மித்ராவோட கல்யாணத்துக்காக நான்தான் என் ஃப்ரெண்ட் ஸ்ரீனிவாசனை இங்க இன்வைட் பண்ணி இருந்தேன்” என்றார் வெங்கட்.
விக்ரமிற்கு மிகவும் குழப்பமாக இருந்தது. தன் தங்கையை மணந்து கைவிட்டு சென்ற ஒருவருடன் எப்படி இத்தனை வருடம் மாமாவால் நட்பு பாராட்ட முடியும் என்று.
விக்ரமின் முகத்தை வைத்து அவன் நினைத்ததை யோகித்து கொண்ட அவரது மாமா ” நீ நினைக்கிறது கரெக்டு தான் விக்ரம், உங்க அம்மாவ கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே நானும் வெங்கட்டும் நண்பர்கள் தான், இடையில உங்க அம்மா விட்டு இவன் பிரிஞ்சு போனதுல கொஞ்சம் வருத்தம் இருந்தது தான், ஆனா தப்பு வாசுகி மேலன்னு தெரிஞ்ச அப்புறம் என்னால இவன் மேல கோபப்பட முடியல” என்றார் சீனிவாசன் விக்ரம் மிகவும் அமைதியாக இருந்தான்.
“ஏன் விக்ரம் அவசரப்பட்டு இப்படி ஒரு முடிவு எடுத்த உங்க அம்மா பத்தி கொஞ்சமது நீ யோசிச்சு பார்த்தையா, உன்னோட கல்யாணத்த பாக்கணும்னு அவளுக்கு எவ்ளோ ஆசை இருந்து இருக்கும், நீ பண்ண காரியத்தை நினைத்து அவ எவ்வளவு வருத்தப்படுவா” என்றார் சீனிவாசன்.
“என்னங்க எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க, அன்னைக்கு மித்ரா பத்தி பேசினதுக்கே அண்ணி அவ்வளவு கோபப்பட்டு என் கழுத்தை நெரிக்கவந்தாங்க, இப்ப விக்ரம் மித்ராவை கல்யாணம் பண்ணிக்கிட்டது தெரிஞ்சா, என்ன பண்ணுவாங்களோ எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க, அவங்களால மித்ராவுக்கு ஏதாவது ஆபத்து வந்துட்டா” என்றார் சுதா.
“என் மகனுக்கும் என் மருமகளுக்கும் அவளால எதுவும் ஆகாது, ஆகவும் நான் விடமாட்டேன், அவ ஒருத்தியோட பிடிவாதத்தால நான் என் மகனை இவ்வளவு வருஷம் பிரிந்து இருந்தது போதும் இனிமேலும் அவளோட ஆட்டம் இங்க பலிக்காது, அவ என்னதான் செய்றான்னு நானும் பாக்குறேன்” என்றார் வெங்கட்.
வெங்கட் கூறியதை கேட்டு விக்ரம் அவரை கட்டிக் கொண்டு அழுக ஆரம்பித்தான் ” ஏம்பா இத்தனை வருஷம் என்ன பாக்க நீங்க வரவே இல்ல, என்கிட்டயும் உங்கள பத்தி யாருமே எதுவுமே சொல்லல பா, நான் சின்னபிள்ளையா இருக்கும்போது என் பிரண்டு எல்லாருக்கும் அவங்க அப்பா கூட ஜாலியா இருக்கிறதா பார்த்தும், அவங்கள டெய்லி ஸ்கூல்ல விட்டுட்டும் கூட்டிட்டும் போகுறப்போ எனக்கு அப்பா இல்லையேன்னு எவ்வளவு நாள் அழுது இருக்கேன் தெரியுமாப்பா, உங்களுக்கு அம்மாவ பிடிக்காத மாதிரி என்னையும் பிடிக்கலையா அப்பா அதான் என்ன பாக்க வரலையா நீங்க” என்று கூறி அழுதான் சிறுப்பிள்ளையை போல்.
“விக்ரம் கண்ணா அப்பாக்கு நின்ன உயிருடா, யாரு சொன்ன அப்பா உன்ன பாக்க வரலன்னு, ஸ்கூல்ல காலேஜ்லலாம் ஃபங்ஷன்ல நீ டான்ஸ் ஆடுனத, பாட்டு பண்ணுனத எல்லாம் கூட்டத்துல ஒரு ஆடியன்ஸா இருந்து பார்த்து கைதட்டி இருக்கேன் டா, ஒவ்வொரு தடவை நீ வின் பண்றத பார்க்கும் போதும் ஓடி வந்து உன்னை கட்டிப்பிடிச்சு என் பையன்னு சொல்லணும்னு ஆசையா இருக்கும்டா ஆன விதி என்ன உன் பக்கத்திலேயே வரவிடாமல் செஞ்சிருச்சு” என்று கூறி கண்ணீர் வடித்தார் வெங்கட்.
அப்பொழுது அவரின் தோளில் தட்டி அவருக்கு ஆறுதல் அளித்தார் அங்கு வந்த ஜான்சி ராணி. “என்ன வெங்கட் இதெல்லாம் சின்ன பையன் மாதிரி கண்ணெல்லாம் கலங்கிட்டு, அதான் நம்ம பையனுக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சே, இவ்வளவு வருஷம் அவனுக்கு கிடைக்காத அப்பா பாசத்தை இனிமேல் நீங்க அவனுக்கு குடுங்க” என்றார் ஜான்சி.
விக்ரம் அவரை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான் “எப்படி உங்களால என்ன உங்க பையன் சொல்ல முடிஞ்சது, உங்களுக்கு கஷ்டமா இல்லையா “
“இதுல கஷ்டப்பட என்ன விக்ரம் இருக்கு, பெரியவங்க பண்ண தப்புக்கு நீ என்ன பண்ணுவ, சொல்லப்போனா நீ எப்போ எங்களை பத்தி தெரிஞ்சு எங்களை தேடி வருவனு நாங்க காத்துக்கிட்டு இருந்தோம், எனக்கு கௌதம் கௌஷிக் மட்டும் பசங்க இல்ல நீயும் தான் சொல்லப் போனா எங்க முத பையனே நீதான் விக்ரம்”
“நான் உங்கள் அம்மானு கூப்பிடலாமா” என்று கேட்டான் கண்களில் கண்ணீர் வடிய.
“தாராளமா கூப்புடு விக்ரம், நீ அப்படி கூப்பிடணுன்னு தான் நானும் ஆசைப்படுறேன்” – ஜான்சி
விக்ரம் அவரைக் கட்டிப்பிடித்து அம்மா அம்மா என்று அழைத்துக் கொண்டே இருந்தான். “என்ன ஏத்துக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் மா” என்றான். ஜான்சியும் ஆனந்த கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டார்.
“ஹலோ ஹலோ இங்கே என்ன நடக்குது அண்ணா வந்ததும் எங்க ரெண்டு பேரையும் மறந்துட்டீங்களா அம்மா” என்றான் கெளதம்.
“அப்பா இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல பாவம்பா அண்ணா இன்னைக்கு தான் அவருக்கு கல்யாணம் ஆயிருக்கு, அவரே நிறைய ட்ரீம்ஸ்ல இருந்திருப்பாரு அவர புடிச்சு வச்சி இப்படி அழுகாச்சி படம் ஓட்டிட்டு இருக்கீங்களே” என்றான் கௌசிக் சிரித்துக் கொண்டேன்.
“டேய் உங்க ரெண்டு பேருக்கும் சேட்டை அதிகமாயிடுச்சு டா, ஒழுங்கா போங்கடா அங்குட்டு எங்கள டிஸ்டர்ப் பண்ணாம” என்று கூறி அவர்களை செல்லமாக அடித்தார் ஜான்சி.
“டாடி இங்க பாருங்க டாடி பெரிய பையன் வந்ததும் எங்கள அடிக்குறாங்க மம்மி , வாங்க டாடி வந்து மம்மிய என்னனு கேளுங்க டாடி” என்றான் கௌசிக் சிறு பிள்ளை போல் சிணுங்கி கொண்டே.
வெங்கட் அனைவரையும் பார்த்து சிரித்துக் கொண்ட அமைதியாக இருந்தார். உடனே கௌஷிக் அவரிடம் “என்ன டாடி எதுவும் மம்மிய சொல்லாம இருக்கீங்க, இப்படி என் காலை வாரிட்டிங்களே டாடி” என்றான்.
“அம்மா அப்பா நீங்க உங்க பாச மழையை பொழிஞ்சது போதும் கொஞ்சம் தள்ளுங்க எங்களை எங்க அண்ணா கூட பேச விடுங்க” என்று கூறி விக்ரமை கௌதம் கௌஷிக் இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர்.
“எங்களுக்கு ஒரு அண்ணா இருக்காங்கன்னு தெரியும், பட் அது நீங்களா இருப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சே பார்க்கல அண்ணா ஐ லவ் யூ சோ மச் அண்ட் ஐ ரியலி மிஸ் யூ அண்ணா” என்றான் கௌஷிக்.
“எனக்கு ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே விக்ரம் தான் நம் அண்ணனு தெரியுமே” என்றான் கௌதம்.
“உனக்கு எப்படிடா தெரியும்? என்கிட்ட சொல்லவே இல்ல நீ ” என்றனர் ஜான்சி மற்றும் கௌஷிக் இருவரும் ஒன்று போல்.
“ஷாம் காலேஜ் படிக்கும் போது அவ பிரண்ட்ஸ் எல்லாம் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருந்தா இல்ல, அப்போ அண்ணாவும் அங்க வந்து இருந்தாங்க, அப்பதான் அப்பா என்கிட்ட சொன்னாங்க விக்ரம் தான் என்னோட அண்ணானு, நான் உங்ககிட்ட சொல்ல வந்தேன் மாம் டாடி தான் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க” என்றான்.
ஜான்சி மற்றும் கௌஷிக் இருவரும் வெங்கட்டை முறைத்துப் பார்க்க “ஜானுமா நான் வேணும்னு அப்படி பண்ணல, உங்களுக்கு தான் நடந்த பிரச்சனை எல்லாம் தெரியுமே அதனாலதான் நான் யார்கிட்டயும் சொல்லாம அமைதியா இருந்துட்டேன்” என்றார்.
விக்ரம் அவனுடைய தம்பிகள் இருவரிடமும் சென்று “உங்களுக்கு என் மேலயும் அப்பா மேலயும் எந்த கோவமும் இல்லையா” என்றான்.
“கோவம்ல எதுவும் இல்ல அண்ணா, அப்படியே கோவப்படுறதா இருந்தாலும் அப்பா மேல அம்மா, தாத்தா இரண்டு பேரும் தான் கோவப்படனும்”
“நாம ஏதாவது தப்பு பண்ண சின்ன பையன் ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்ட இனிமேல் இப்படி பண்ணாதனு சொல்லி அப்பா மன்னிச்சி விட்டுருவரோ, அது மாதிரி தான் தாத்தாவும் அப்பாவ மன்னிச்சிட்டாங்க”
“அப்பறம் அம்மா சொல்லவே வேண்டாம் அம்மாக்கு அப்பா மேல லவ்வோ லவ்வு,அதுனால அப்பாவை மன்னிச்சுட்டாங்க” என்றான் கௌதம்.
கெளதம் தாத்தா, ஜானசி அம்மா பற்றி கூறியவன் தனது தாய் வாசுகியை பற்றி கூறவில்லை என்று சிறிது வருத்தம் விக்ரமுக்கு ஏற்பட்டது.
“டேய் அண்ணா அம்மா எங்கடா அப்பாவ மன்னிச்சாங்க, அப்பாக்கு தண்டனையா தான மணிக்கர்ணிகா புரிக்குள்ள அம்மா ராணியா இருக்க வரைக்கும் வரக்கூடாதுனு சொல்லி ஒதுக்கி வச்சி இருக்காங்க” என்றான் கௌஷிக்.
கௌஷிக் கூறியதைக் கேட்டதும் வெங்கட்டுக்கு மிகவும் கவலையாக இருந்தது. விக்ரமோ அதிர்ச்சியாக இருந்தான். அவர்கள் இருவர் முகத்தையும் பார்த்த ஜான்சி.
“கௌஷிக் நான் ஒரு மனைவியா எப்பவோ என் வெங்கட்ட மன்னிச்சிட்டேன், ஆனா ஒரு ராணியா பார்க்கும்போது அப்பா கல்யாணம் ஆனத மறைச்சு என்ன கல்யாணம் பண்ணது தப்பு அதுக்கான தண்டனை தான் நான் ராணியா இருக்குற வரைக்கும் என் ஊருக்குள்ள வரக்கூடாதுன்னு சொன்னது” என்றார் ஜான்சி.
கௌஷிக் ஜான்சி கூறியதைக் கேட்ட பின் அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டே இருந்தான்.
“டேய் என்னடா யோசிச்சுகிட்டு இருக்க” கெளதம்.
“அது ஒன்னும் இல்ல ப்ரோ, நம்ம அம்மா எவ்வளவு சைலன்ட்டும் நமக்கே தெரியும் அவங்களே அப்பா பண்ண தப்புக்கு தண்டனையா 20 வருஷமா மணிகர்ணிகாபுரிக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க, அப்போ நம்ம ஷாம் விக்ரம் அண்ணாக்கு என்ன தண்டனை தருவான்னு யோசிச்சிட்டு இருக்கேன்”
“நாம சின்னதா ஏதாவது தப்பு பண்ணினாலே,அந்த ராட்சசி நம்மள பிச்சு தின்னுருவா, அண்ணா பண்ண வேலைக்கு அவர எப்படி எல்லாம் கொடுமைப்படுத்த போறாளோ, கடவுளே அந்த அரக்கி கிட்ட இருந்து எங்க அண்ணனை நீ தான் காப்பாத்தணும்” என்று கௌஷிக் கூற அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.
வெங்கட் ஜான்சி விக்ரம் கௌஷிக் மற்றும் கௌதம் அனைவரும் ஒரே குடும்பமாக நின்று பேசி சிரித்து கொண்டிருப்பதை பார்த்து ஸ்ரீனிவாசன் மற்றும் சுதாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இருந்தும் தனது தங்கை தனிமைப் படுத்தபட்டு விட்டதை எண்ணி சீனிவாசனின் மனம் கலங்கத்தான் செய்தது.
சீனிவாசனின் எண்ண ஓட்டத்தை புரிந்துக் கொண்ட சுதா “என்னங்க வாசுகி அண்ணி நெனச்சி கவலைப் படுறிங்களா, நாம என்னங்க பண்ண முடியும் அழகான ஒரு வாழ்க்கை அவங்களுக்கு அமஞ்சும் அதை அவங்க காப்பாத்திகல, இனிமேலாது மனசு மாறி மித்ராவ ஏத்துக்கிட்ட அண்ணி, விக்ரம், மித்ரா மூணு பேரும் சந்தோசமா இருக்கலாம், அண்ணி என்ன பண்ண போறாங்களோ”
“எனக்கும் அவள நெனச்சி பயமா தான் இருக்கு, அவகிட்ட நான் காதலிக்கிற விஷயத்தை சொல்லலனு என்னோட காதலை பிரிச்சவ, இப்போ அவ புள்ளை அவகிட்ட சொல்லாம கல்யாணமே பண்ணிக்கிட்டான் இனி என்ன என்ன பண்ண போறாளோ, எது நடந்தாலும் நான் என் மருமகனுக்கு துணையா இருப்பேன்” என்று கூறினார் சீனிவாசன்.