“நிலா என் வாழ்க்கைக்குள்ள வந்த மாதிரி. எல்லாத்துக்குமே காரண காரியம் இல்லாம இல்லையே. இந்த பந்தம் எதை நோக்கி போகுதுன்னு தெரியலை. ஆனா என்னை இழுத்துட்டு போகுது. வாழ்க்கை நாம நினைச்சு அமைச்சுக்கிட்டதுன்னு சொல்லிக்கவே கூடாது. அந்த அமைப்புமே மேல இருக்கிறவனால உருவாக்கப்பட்டது தான்…”
“என்னடா ரொம்ப சித்தாந்தம் பேசற?…” ஆகர்ஷன் கௌரவ்வின் அழுத்தம் கண்டு இலகுவாக்க முயன்றான்.
மனதிற்குள் அவன் பிறப்பை நோக்கி அவன் சென்றுகொண்டிருக்கிறான் என நினைக்கத்தான் முடிந்தது ஆகர்ஷனால்.
மனம் வலித்தது. ‘உனக்காக ஒரு உயிர் துடிதுடிச்சு உலகத்தை விட்டு போயிருச்சு கௌரவ். அதுதான் உன்னை இழுத்திட்டிருக்குடா’ என மனம் ஊமையாய் கதறினாலும் சிலைபோல நின்றான் ஆகர்ஷன்.
வெளிப்படையாய் இருவருமே பேசிக்கொள்ளவில்லை இதனை எல்லாம். ஏற்கனவே அழுத்தத்தில் உழன்றுகொண்டிருப்பவன், மேலும் இதனை கூறி அவன் நிம்மதியை கூறு போட விரும்பவில்லை ஆகர்ஷன்.
வெண்ணிலா பேசுகையிலேயே முகம் வெளிறிப்போய் கௌரவ் நின்ற அந்த கணம் மனதிலும் பாரமேறிய உணர்வாக தான் இருந்தது.
சொல்லிவிட்டால் பின்னாளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குறைக்கலாமே என்றுதான் நிலாவிடம் விஷயத்தை தெரியப்படுத்த கூறியதும்.
இப்போது அவனே மறுக்க, ஆகர்ஷன் மேலும் கௌரவ்வை வற்புறுத்தவில்லை.
“நான் பதில் சொல்லிட்டு நிக்கறேன். இதென்ன வச்ச கண் வாங்காம ஒரு பார்வை?…” என்றான் கௌரவ் ஆகர்ஷனின் தோளை குலுக்கி.
“ஹாங்,,,…” என திகைத்தவன்,
“இல்ல சும்மா பார்த்தேன். ஸார் ஸ்பீச் எல்லாம் வேற லெவல்ல இருக்குன்னு….”
“அவரை மார்னிங் நான் பார்த்துட்டேன். எல்லாரும் பார்க்க முடியாது. அப்சர்வேஷன்ல வச்சிருக்காங்க. ரொம்ப பேசினா மூச்சு வாங்குதாம்….” சரளமாய் கௌரவ் கூற,
“ஐயோ என்னண்ணா சொல்றீங்க?…” பதறினாள் சாருலதா.
“பயப்பட எதுவுமில்லை. ஆனா சரியாக டைம் தரனுமே? அதுக்காக தான் எல்லாரையும் அலோவ் பன்றதில்லை. இதை கூட புரிஞ்சுக்க முடியாதா? ஹாஸ்பிட்டல்ல எப்படி பிஹேவ் பண்ணனும்ன்ற சென்ஸ் வேண்டாமா சாரு?…”
நிறுத்தாமல் படபடவென்று கௌரவ் சத்தம் போட்டு பேசிவிட மூச்சில்லை சாருலதாவிற்கு.
இவ்வளவு தூரம் தன் அண்ணன் பெசிவிட்டானே என்னும் பயத்திலும், ஆற்றாமையிலும் மௌனமாகிவிட,
“நீ வீட்டுக்கு கிளம்பு. நான் பார்த்துக்கறேன்….” என்றான் அவன்.
“அண்ணா, அப்பாவை பார்க்கனும்….”
“சொன்னேனே, அவரை டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துட்டு வா. விக்ரம்ட்ட சொல்றேன்…” என கௌரவ் பேசிவிட்டு விக்ரம்மிடம் கூறியவன்,
“ரூம்க்குள்ள போக கூடாது. வெளில நின்னே பார்க்க சொல்லு. நீயும் கிளம்பிடு…” என்றதும் விக்ரம் சரி என்றுவிட்டான்.
பேசி முடித்துவிட்டு ஊஃப் என்னும் பெருமூச்சுடன் நிமிர்ந்து பார்க்க ஆகர்ஷன் வாயில் கை வைத்து நின்றான் கௌரவ்வை பார்த்து.