அவளின் கோபம் ஏனென்றும் கவனிக்கத்தானே செய்தான். அத்தனை சிரிப்பு.
“நிலா எங்க போற?…” என நின்ற இடத்திலிருந்தே கேட்க,
“இப்ப பார்த்தீங்களே அந்த படகுக்கு தான். உங்களுக்கு தான் என்னை பார்க்க நேரமில்லையே. பொண்டாட்டின்ற நினைப்பு இருந்த அதானே? நான் யாராம் உங்களுக்கு? நீங்க யார் எனக்கு? அதுவாவது ஞாபகம் இருக்கா?…” என்று பொரிந்துகொண்டே பார்த்தாள்.
அத்தனை ஆதங்கம் அவளிடம். என்னென்னவோ ஏகத்திற்கும் எதிர்பார்ப்புகள். சிறுபிள்ளை போல அவனிடம் அதிகமாய் தேடியது அவள் மனது.
சாவித்ரி தன்னை எப்போதும் கொண்டாடுபவர் தான். ஆனாலும் பெற்றோர் என்று யோசிக்கையில் அந்த ஏக்கம் எப்போதும் அவளின் அடிமனதில் ததும்பியே கிடந்தது.
அவளுக்கென்று முழுமையாய் ஒருவன் வந்திருக்க, தன் சின்ன சின்ன அசைவுகளையும் கூட கவனிக்காமல், அதிலும் இத்தனை ஆசையாய் திருமணம் செய்து ஒரே நாளில் இப்படி யோசிக்க செய்துவிட்டானே என கௌரவ்வின் மீது கோபமான கோபம்.
“நான் சொல்லனுமா என்ன?…” என்றான் புன்சிரிப்புடன்.
“தேவையில்லை. யாருன்னு கேட்டா என்ன சொல்லுவீங்கன்னும் தெரியும். அதுவும் தேவை இல்லை. செம்ம டென்ஷன்ல இருக்கேன். ப்ளீஸ், இன்னும் என்னை ப்ரவோக் பண்ணவேண்டாம்…” என்றவள் ஒன்றும் சொல்லாமல் அங்கேயே கடைகளை அருகில் மடிந்து அமர்ந்துவிட்டாள்.
சிலநொடிகள் அவளை தனிமைத்து விட்டு தள்ளியே நின்றவன் ஹோவென்னும் சத்தத்தில் திரும்பி பார்க்க, வந்திருந்த கல்லூரி பேருந்து கிளம்ப எத்தனித்தது.
அதனை பார்த்துக்கொண்டே தானும் வந்து வெண்ணிலாவின் அருகில் அமர்ந்துகொண்டான்.
“எவ்வளோ கோவம்? இன்னைக்கு ரொம்பவே டென்ஷனாகிட்டே இருக்க நீ…”
“ப்ச், அதெல்லாம் இல்லை. சின்னதா அதான்…” மெலிதாய் முணுமுணுப்பாய் வந்தது வார்த்தைகள்.
“ஓகே, எப்படி?…” ரகசிய குரலில் அவனை நெருங்கி வந்து கேட்க,
“உன்னை மாதிரி நீ என்னை பார்க்கன்னு நான் தெரிஞ்சுக்கறதுக்கு பேர் சைட் இல்லை….”
“ஹ்ம்ம்…” நிலா தலையசைக்க,
“யாரோ நம்மை கவனிக்கிறாங்கன்னு உள்ளுணர்வால உணர வைக்கனும். நீ என்னை பார்வையில தொடர்ந்து வர்றதை நான் கண்டுபிடிக்க முடியாம என்னை யாரோ பார்க்கிறாங்கன்ற ஃபீலோட தேடி தவிக்கிறப்போ உனக்குள்ள ஒரு எதிர்பார்ப்பு வருமே. எங்க நான் கண்டுபிடிப்பேனா இல்லையான்னு….”
“சின்னதா ஒரு கண்ணாம்பூச்சி. நீ கண்ணை கட்டிக்காம என்னோட ஒரு விளையாட்டு. கண்ணியமா, காதலா, கலப்படமில்லாத நேசத்தோட தேடலா அதை தேடி நான் உன்னை நெருங்கி வரும் வரைக்கும் உன்னோட காத்திருப்பு. இதெல்லாம் தான் நீ சொல்றியே சைட்…”
“இது ஆளுங்களை பொருத்து மாறுபடும். நானுமே சைட் அடிப்பேன். நீ பார்க்காதப்போ, உனக்குள்ள நான் பார்த்தேனா இல்லையான்ற எதிர்பார்ப்பை குடுத்துட்டே தான் இருக்கேன். இதெல்லாம் சொல்லியா தெரியனும்? ஆனா அவங்களுக்கானவங்கட்ட மட்டுமே காமிக்க கூடிய உணர்விது…”
“இப்போலாம் சைட்டோட டெபினிஷனையே மாத்திட்டாங்க. சும்மா பார்த்தா சைட்டாம். போங்கடா நீங்களும் உங்க சைட்டும்ன்னு இருந்துச்சு. இப்போ கூட பார்த்தியே காலேஜ் கேர்ள்ஸ் பார்த்ததை. அது சும்மா, ஒரு பொருள் பார்க்க நம்ம கண்ணை பறிச்சு கவரும் இல்லையா. அப்படி பார்க்கிறது. அதெல்லாம் இந்த கேட்டகிரில வராது….”
மூச்சுவிடாமல் அவன் மொத்தமாய் பேசி தீர்க்க வாய்மூடாமல் பார்த்திருன்தவள் இறுதியாய் அவன் சொல்லியதில் மூச்சுவாங்கினாள்.
“அவ்வா, அப்போ அந்த பொண்ணுங்க பார்க்கறாங்கன்னு தெரிஞ்சே விதவிதமான ஆங்கிள்ல ஆர்ம்ஸ் காமிக்க நின்னிருக்கீங்க. இவர் பெரிய கவர்ச்சி கண்ணன்னு அவளுங்களும் கவர்ந்து இழுத்தா மாதிரி பார்த்துட்டே போறாளுங்க…” என்று உலுக்காத குறையாய் வெடித்தாள்.
“சரி பார்த்தா இப்போ என்ன?…” என கௌரவ் எழுந்துவிட, மழையும் தூற துவங்கியது.
“வேணாம், சத்தியமா வெறுப்பாயிருவேன்…” என்றவள் எழுந்து நின்று முறைக்க முறைக்க கௌரவ் பின்னே நகர்ந்தான்.
“ஹலோ பிரஸ்டீஜ் கிட்ட வாங்க…” என முன்னேற, குறுஞ்சிரிப்புடன் மறுப்பாய் தலையசைத்து அவன் பின்னே செல்ல நிலா அவனை துரத்த ஆரம்பித்தாள்.
துரத்திய வேகத்தில் நடைபோட்டுக்கொண்டிருந்த கௌரவ்வின் கால்கள் ஓட்டத்தில் கலக்க, நிலா துரத்த என்று மெல்லிய மூச்சிரைப்புடனான அவனின் நிறுத்தத்தில், புயலாய் அவன் மீது மோதி நின்றாள் வெண்ணிலா.
கை சேர்ந்த நிலவை அள்ளி தன்னுயரம் தூக்கி நிறுத்தியவனின் இதழ்கள் அவளில் இளைப்பாற சின்ன சின்ன நொடிகளும் அவர்களின் இதழணைப்பினுள் சிக்கி சிதறி தொலைந்தது.
மெதுவாய் அவனிலிருந்து பிரிந்தவள் பார்வையும் குறும்பாய் மாற கௌரவ்வின் முகம் பார்த்து புருவம் உயர்த்தினாள்.
“ஹ்ம்ம், பார்ரா, பிரஸ்டீஜ் பார்க்காம கௌரவம் நடு ரோட்டுல கிஸ் பன்றதை?…” என சீண்டலாய் கேட்க,
“இது நடுரோடும் இல்லை. இங்க யாரும் இல்லை. சுத்தி பாரு….” என்றதும் தான் பார்க்க, தூரத்திலிருந்த மீனவர்கள் கூட இல்லை என்பது புரிந்தது.
“அன்ட் வெண்ணிலா, ஸ்டார்ட்டிங் மட்டும் தான் நான். டேக்கோவர் பண்ணினது நீ தான். ஸோ ஃபுல் கிரெடிட் உனக்கு தான்…” என்றும் கௌரவ் கண் சிமிட்டி கூற,
“ரொம்ப தாராளம்…” என்றவளை மீண்டும் இழுத்தணைத்துத்து கொண்டான் கௌரவ்.
“வீட்டுக்கு கிளம்ப வேண்டாமா? இங்கயே இருக்கோமே. மழை வேற பெருசாகிடுச்சு…”
“அவசரமில்லை. போகலாம்…” என்றவனுக்கு அங்கிருந்து செல்ல மனதில்லை.
“என்னை விட்டு போகனுமா வெண்ணிலா?…” என சில நொடிகளில் அவன் கேட்க அந்த ஆழ்ந்த குரலுக்கு பின்னிருந்த உணர்வை அவளால் வரையறுக்க முடியவில்லை.
ராம்நாத்தின் செயலால் தான் எதுவும் நினைப்பேனோ என்று மருகுகிறானோ என்றுதான் தோன்றியது.